தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
3 posters
Page 1 of 1
தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தனக்கு வந்தால் தெரியும்!
கிருஷ்ணாவரம் என்ற சிற்றூரில் கோபு என்ற
சிறுவன் வசித்து வந்தான். அந்த ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்த அவனிடம்
கெட்டபழக்கம் ஒன்று இருந்தது. நல்ல பழக்கங்கள் ஒருவனை உயர்த்திவைக்கும் மாறாக
தீயபழக்கங்கள் ஒருவனிடம் குடி கொண்டால் அவனை வீழ்த்திவிடும் அல்லவா? ஆனால்
நல்லவனான கோபுவிடம் எப்படியோ இந்த தீயபழக்கம் குடி கொண்டு விட்டது.
அந்த பழக்கம் எது என்று கேட்கிறீர்களா? மற்றவர்களின் உடைமைகளை ஒளித்து
வைத்து அவர்கள் தேடும்போது மகிழ்ச்சி அடையும் குணம் தான் அந்த தீய குணம்.
மற்றவர்கள் பொருட்கள் காணாமல் தவிக்கும் போது துள்ளி குதிக்கும் அவனது உள்ளம்.
அவர்கள் படும் அவஸ்தைகளை ரசித்துவிட்டு சாவதானமாக பொருட்களை கண்டெடுப்பது போல
நடித்து அவர்களிடம் ஒப்படைப்பான் கோபு.
இது அவர்களுக்குத் தெரியாது பொருட்களை
தேடித் தந்தமைக்கு பாராட்டிச் செல்வார்கள் பொருள் கிடைத்தவர்கள் உள்ளூர
மகிழ்ந்துகொள்வான் அவன். இந்த விளையாட்டு விபரீதமானது என்று அவன் உணரவில்லை. அவனது
நண்பன் மணி இந்த விளையாட்டை கண்டித்தான்.
அடப் போடா வாழ்க்கையில ஒரு த்ரில் வேணும்டா! நான் தான் பொருளை
எடுத்துக்கிறது இல்லையே திருப்பிக் கொடுத்துவிடுகிறேனே! திருடினாத் தான் தப்பு!
ஒளிச்சு விளையாடினா ஒண்ணும் தப்பில்லை! போடா நீயும் உன் அட்வைசும்! என்று அவனை
கிண்டலடித்து கேலி செய்தான் கோபு.
டேய் கோபு ஒருநாள் நீ கட்டாயம் அவஸ்த்தை படுவே நீ அப்ப நான் சொல்றது உனக்கு
புரியும் என்று கழன்று கொண்டான் மணி. ஆனால் அவனையும் விடவில்லை கோபுவின்
விளையாட்டு!
முக்கியமான கணக்கு பாடவேளையில் மணியின் பென்சிலைஎடுத்து ஒளித்து வைத்து
விட்டான். கணக்காசிரியர் பென்சிலையும் நோட்டையும் எடுக்கச் சொன்னபோது பென்சிலை
காணாது தவித்தான் மணி. அவனை அடித்து துவைப்பதை மகிழ்ச்சியுடன் ரசித்துக்
கொண்டிருந்த கோபு பின்னர் மணியிடம் பென்சிலை தந்தான்.
கோபு நான் அடிவாங்குவது உனக்கு என்ன அவ்வளவு சந்தோஷமா? நீ திருந்தவே மாட்டாயா?
என்றான் மணி! அடப் போடா! நீ அடி வாங்கறப்ப எவ்வளவு ஜாலியா இருத்தது தெரியுமா?
என்று சிரித்தான் கோபு.
தம்மை அழவைத்த கோபுவை எப்படியாவது திருத்த முடிவு செய்தான் மணி. அதற்கான
நேரம் வந்தது. பள்ளியின் அரையாண்டுத் தேர்வு துவங்கியது. தேர்வுக்கு முன் தினம் கோபுவின்
தமிழ் புத்தகத்தை எடுத்துஒளித்துவைத்துவிட்டான் மணி. தேர்வுக்கு முந்தின தினமே
படிக்கும் வழக்கமுள்ள கோபு புத்தகத்தை காணாது தவித்தான். நாளை தேர்வுக்கு என்ன
செய்வது? ஒன்றுமே படிக்கவில்லையே? தமிழில் பெயிலானால் அதைவிட அவமானம் வேறு ஒன்றூம்
இல்லையே? ஆசிரியர் அடிப்பது இருக்கட்டும் வீட்டில் அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது
என்று பல்வேறு கேள்விகள் அவனைத் துளைத்து எடுத்தது.
எங்கு தேடியும் புத்தகம் கிடைக்க வில்லை. இரவலும் யாரும் கொடுக்க முன்
வரவில்லை! அழுதே விட்டான் கோபு. அப்போது அங்கு வந்த மணி ஒன்றும் தெரியாதவன் போல
கோபு ஏன் அழுகிறாய்? பிறரை அழவைக்கும் நீ இன்று அழுதுகொண்டு இருக்கிறாயே? என்று
கேட்டான்.
மணி நீ வேறு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறாயா? நான் என் புத்தகம்
காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஒன்றுமே படிக்கவில்லை! நாளைக்கு தமிழ் தேர்வு
என் நிலையை நானே நொந்து கொண்டிருக்கிறேன் என்றான் கோபு.
இப்படித்தானே கோபு பொருள்களை தொலைத்தவர்கள் மனம் வேதனைப் பட்டிருக்கும்!
அப்போது நீ எப்படி கைகொட்டி சிரித்து மகிழ்ந்தாய்! இப்போது உன் பொருள் காணாததும்
துடிக்கிறாயே! என்று ஊசியாய் குத்தினான் மணி.
கோபு தலை குனிந்தான். ஆம் மணி இப்போதுதான் என் தவறு எனக்கு உரைக்கிறது.
அவர்கள் இட்ட சாபம்தான் இன்று என்னை பிடித்துவிட்டதோ? நாளை நான் எப்படி தேர்வு
எழுதுவேன்! என்று விசும்பினான் கோபு.
இந்தா கோபு உன் தமிழ் புத்தகம்! நீ திருந்தவே நான் இவ்வாறு செய்யும் படி
ஆயிற்று! இனி பிறர் பொருளை ஒளித்து வைக்க மாட்டாயே? என்று அவனிடம் புத்தகத்தை
தந்தான் மணி.
எல்லாம் உன் வேலைதானா? இன்று எனக்கு புத்தி வந்தது! இனி இந்த தவறை
ஒருபோதும் செய்ய மாட்டேன்! என்னை திருத்திய நீதான் என் நல்ல நண்பன் என்று அவனை
அணைத்துக் கொண்டான் கோபு.
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Re: தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தனக்கு வந்தால் தெரியும்! பாப்பா மலர்!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» ஏதுடா பட்டாசு?! பாப்பா மலர்!
» பேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
» தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!
» வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!
» பீமனின் கர்வம்! பாப்பா மலர்!
» பேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
» தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!
» வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!
» பீமனின் கர்வம்! பாப்பா மலர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|