தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீ வருவாயென ..........

+5
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்1981
9 posters

Go down

நீ வருவாயென .......... Empty நீ வருவாயென ..........

Post by தமிழ்1981 Thu Feb 23, 2012 4:58 pm

என் இனியவளே,,

வெயில் கொளுத்தும்
சாலையில் ஆறுதல் தரும்
மரம் போன்று என்
வாழ்வின் போராட்டத்தில்
என்னுடன் பங்கிட வந்தவளே........

நான் உன்னை
நேசிக்கின்றேன்.... விரும்புகின்றேன்
ஆனால் நீயோ
நானுன் அடிமையாக வில்லையென்று
சொல்கின்றாய்.......

இன்பத்திலும் துன்பத்திலும்
நானிருப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ ‍
துன்பமே நானானேன்
என்று சொல்லி சென்றாய்.....

உந்தன் வாழ்வை
உயரவைப்பேன் என்றாய்
ஆனால் இன்றோ
என் மதிப்பையும்
பாழாக்கிச் சென்றாய்........

மண‌மாலையிட்டு வந்தவள்
மரணத்தில் தான் பிரிவாள் என்றேன்
ஆனால் நீயோ
என்னினைவுகளுக்கு மரண மாலையிட்டு
சென்று விட்டாய்........

விட்டுக் கொடுத்தலும்
அன்பின் பகுதிதான் என்றேன்....
ஆனால் நீயோ
என்னை விட்டே
சென்று விட்டாய்..

நான் விதைக்கும்
தூய அன்பின் விதை
உன்னில் மட்டும்
நரகலான பலனைத்
தருகின்றதே எப்படி??????????

உன்னை நேசித்தேன்
கவிமொழி பாடினேன்
ஆனால் நீயோ
பொய் உதடுகளின்
பின்னால் சென்று விட்டாய்......

உன்மேல் கோபங் கொண்டேன்
கோபத்தில் தான்
அதிகமதிகமாய் நேசித்தேன் உன்னை
ஆனால் நீயோ
என்மேல் வெறுப்பை
உமிழ்ந்து சென்று விட்டாய்.......

உனக்கு அதிர்ந்து
பேசக்கூட தெரியாதென்றேன்
ஆனால் நீயோ
மன வன்மத்துடன்
புனித உறவுகளைக் கூட‌
கொச்சைப்படுத்தி சென்று விட்டாய்..........

சென்று மாதங்கள்
இரண்டானாலும் நீயோ
என்னைப் பற்றி
அவதூறுகளும் பொய்களும்
ஆனால் நானோ
உதடுகளில் பொய் புன்னகையுடனும்
உள்ளத்தில் அழுகையுடனும்
உன்னை நேசிக்கும் அன்பிலும்
என் நேசம் கொஞசம் கூட‌
குறைவில்லை மாசில்லை.......

அன்பே
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......

நானுன்னை நேசிக்கின்றேன்....
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........

என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........

என் இனியவளே
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........

அந்த ஒரு நாள்
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........

காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Thu Feb 23, 2012 6:42 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by அரசன் Thu Feb 23, 2012 7:16 pm

உணர்வுகளின் பிரதிபலிப்பு .இக்கவிதை .. வருவாங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தமிழ்1981 Thu Feb 23, 2012 7:30 pm

நன்றி அரசன், கார்த்தி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 23, 2012 10:10 pm

உணர்வுகள் வரிகளில் நம்பிக்கையோடு இருங்க வருவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by அ.இராமநாதன் Thu Feb 23, 2012 10:17 pm

வாதியின் வார்த்தை ஜாலத்தை வைத்து
ஒன்றும் கூற இயலாது...!
-
பிரதிவாதி கருத்தும் தேவை..!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தமிழ்1981 Fri Feb 24, 2012 12:46 pm

தமிழ் தோட்ட நண்பர்களுக்கு என் நன்றி..... ஐயா... இது என் பார்வையில் நான் எழுதியது.... பிரதிவாதியின் கருத்தை அறிய எனது நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.. எனில அவளின் செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது... நேரில் சென்றாலும் அவளது தகப்பனார் தான் பேசுகின்றார்... நான் என்ன செய்வது???
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by sarunjeevan Fri Feb 24, 2012 12:54 pm

அன்பே
விட்டுக் கொடுத்து
வாழ்வதில் தவறில்லை.....
ஆனால்
விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால்
அதன் பெயர்
வாழ்க்கையில்லை...
அது அடிமைத்தனம்......

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by ஹிஷாலீ Fri Feb 24, 2012 1:30 pm

அந்த ஒரு நாள்
என் கடைசி நாளாயிருந்தாலும்
பரவாயில்லை.......
என்னை நேசித்து
என்னை நம்பி
என்னை விரும்பி
என்னை புரிந்து
என்னை வழியனுப்ப
வந்தால் போதும்.........

காலமெல்லாம் காத்திருப்பேன்
என் காதலியாய்
என் அன்பாய்
என் மனைவியாய்
என் தோழியாய்
என் அன்னையாய்
நீ வருவாயென....................


சூப்பர் அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by sarunjeevan Fri Feb 24, 2012 1:38 pm

தமிழ்1981 wrote:தமிழ் தோட்ட நண்பர்களுக்கு என் நன்றி..... ஐயா... இது என் பார்வையில் நான் எழுதியது.... பிரதிவாதியின் கருத்தை அறிய எனது நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.. எனில அவளின் செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது... நேரில் சென்றாலும் அவளது தகப்பனார் தான் பேசுகின்றார்... நான் என்ன செய்வது???

நீங்கள் கவிஞன்..
உங்கள் மீது எந்த தவறும் இருக்காது என்று நம்புகிறேன்..

பிரிந்தது உங்கள் காதலியா? மனைவியா?

மனைவியாக இருந்தாலும்
காதலியாக இருந்தாலும் குறிப்பிட்ட காலம் காத்திருங்கள்..
ஒரு குறிப்பிட்ட காலம் வரை..
என்னை பொறுத்த வரை ஒரு வருடம்..

உங்கள் காதலை திரும்பி வருவார்கள்..

சண்டை கோவம் இல்லாத உறவுகள் இல்லை..
உண்மை காதலில் அதேல்லாம் ஒரு நாளுக்கும் முடிந்து விடும்..
சந்தோஷம் மட்டும எப்பவும் நிலைத்திருக்கும்..

ஒரு பெண்ணால் நீங்கள் முன்னேறினால்,
அப்பெண்ணுக்காக காத்திருங்கள்..
வலி கொடுக்கும் பெண்ணும் காதலும்
எப்போதும் தேவை இல்லை..

மனிதன் காத்திருக்க வேண்டும்..
மிக பெரிய கண்டுபிடிப்புக்களுக்காக...
உயரிய சாதனைகளுக்காக..

பல சோதனைகள் செய்ய வேண்டும்
சோதனைகளுக்க உள்ளாக வேண்டும்
சாதனைகளுக்காக..

உங்க life, உங்க rules, உங்க சந்தோஷம்..

எல்லாத்தையும் உங்க கையில் வைத்துக்கொள்ளுங்கள்..

யாரென்று தெரியாத உங்களுக்கு,
என் வேலைகளை ஒதுக்கி வைத்து,
உங்களுக்கு பதிலளிக்கிறேன்..

ஏனேன்றால், உங்கள் வலிகளை கவிஞசனாக உணர்கிறேன்..
பொறுக்க முடியததால் பதிலளிக்கிறேன்..

அதுபோல்,
உங்கள் வலிகளை உணர்ந்தவள்
அடுத்த நிமிடம் ஓடி வந்து இருப்பாள்..

நீங்கள் திருப்பி அழைக்க வழி கேட்கீறிர்கள்..
வலிகளை மறவாதீர்கள்..
வாழ்க்கையை நோக்கி நடங்கள்.
இந்த உலகம் பெரியது..

எல்லாவற்றிற்கும் மனது தான் காரணம்..
உங்கள் மனதிடம் பேசி பாருங்கள்..

உங்களுக்குள் இரண்டு மனிதன் இருக்கீறிர்கள்..
ஒன்று காதலன்..
இரண்டு மனிதன்...

மனம் சொல்வதை கேளுங்கள்..
உங்களுக்கும் மூன்றாவது மனிதனை உருவாக்குங்கள்..
அவன் முடிவு சரியாக இருக்கும்..

மூன்று சாதனையாளன்...

வாழ்க்கையே இல்லாத போது,
எதற்கு சாதிக்க வேண்டும் என்று நினைத்தால்,

ஏன் மனிதனாக பிறந்தோம் என்று யோசிங்கள் நண்பரே..

whatever happens life goes on..

-MY LIFE MY RULES
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தமிழ்1981 Fri Feb 24, 2012 2:21 pm

அவள் என் மனைவி நண்பரே.... தங்கள் கருத்திற்க்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே.......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by sarunjeevan Fri Feb 24, 2012 2:57 pm

தமிழ்1981 wrote:அவள் என் மனைவி நண்பரே.... தங்கள் கருத்திற்க்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே.......

நல்லது நண்பரே..

உங்கள் வாழ்க்கையை நான் வாழவில்லை..

உங்களை தவிர வேற யாரும் சரியான முடிவு சொல்ல இயலாது..
ஆலோசனையாக எடுத்து கொள்ளுங்கள்
முடிவு உங்களுடையதாக இருக்கட்டும்...

நாம் வாழ்க்கையின் பின்னால் போவோம்..
வாழ்க்கை நாம் பின்னால் கண்டிப்பாக வரும்..
இது நம்பிக்கை இல்லை... அது தான் வாழ்க்கை..

உங்கள் மனைவி மட்டும் உங்கள் வாழ்க்கை என்று நினைகீறிர்களா??
அப்படி என்றால், அவர்கள் வரும் வரை எந்த முன்னேற்றமும் இருக்காது..
நீங்களே உங்கள் வாழ்க்கை எதுவேன தீர்மானியுங்கள்

நம் தைரியம் மற்றவர்களுக்கு பயமாக இருக்க வேண்டும்..
நாம் ஆண்வர்க்கம்..
ஆள பிறந்தவர்கள்..
அடிமையாக இல்லை..

அன்பில் கூட அடிமையாக்காத ஆள பிறந்தவரே..

நீங்கள் யாரென்று நீங்களே மறந்து விட்டீர்கள்..

உங்களது தின வேலையை எந்த குறையும் இல்லாமல் பாருங்கள்..
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிங்கள்..
வாழ்க்கையின் போக்கில் போங்கள்..

வந்தால் கை கொடுங்கள்..

இறங்கி போனால் இளகரமாய் ஆகலாம்..
அவர்கள் தந்தையிடம் அவ்வவ்போது பேசுங்கள்..

ஒரு வேளை சிறு இடைவேளை தேவைப்படலாம்
புரிந்து கொள்ள..

எல்லாவற்றிக்கும் அவகாசம் கொடுங்கள்
அதற்கென்று வாழ்க்கையை கொடுத்து விடாதீர்கள்..

நிமிர்ந்து நில்லுங்கள்..

நல்லதே நடக்க வாழ்த்துக்கள்..

இதுக்கு பிறகு சும்மா,

ஆணுக்கு ஆயிரம் பொண்ணு அண்ணா..
60 வயது ஆனாலும்..

பயம் இருக்கனு பொண்ணுகளுக்கு..

பாசமான பொண்ண பிரிந்த தான் கஷ்டம்..

நீங்க கஷ்ட படாதீங்க.
உங்கள நீங்க குழப்பிக்காதீங்க..
பண்ற விஷயத்த தெளிவ பண்ணுங்க
நல்லதே நடக்கும்..[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by sarunjeevan Fri Feb 24, 2012 2:59 pm

நானுன்னை நேசிக்கின்றேன்....
என் அன்புக் கூட
உன்னை அடிமையாக்க கூடாது
என்பதில் நான்
தெளிவாக உள்ளேன்...
ஆனால் நீயோ
என்னை மிரட்டி
உன்னை நேசிக்க வைக்கலாம்
என்று நினைக்கின்றாய்.........

என்னவளே,
மிரட்டி உருட்டி
அடிமையாக்கலாம்......ஆனால்
தூய அன்பை வாங்க முடியாது...........
[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by sarunjeevan Fri Feb 24, 2012 3:00 pm

என் இனியவளே
வாழ்க்கை என்பது
எது வரை என்பது
எனக்குத் தெரியாது.....
ஆனால் வாழ்வது
ஒரு நாளாக இருந்தாலும்
அந்த ஒரு நாளில்
உண்மையும்
அன்பும் காதலும்
நட்பும்
பணிவும் திமிரும்
ஊடலும் கூடலும்
புதிதுபுதிதாய் ஊறிக்
கொண்டேயிருக்க வேண்டும்
என்று எண்ணுபவன் நான்........
[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தமிழ்1981 Fri Feb 24, 2012 3:14 pm

வணக்கம் ஜீவன் அவர்களே,

நண்பரே தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி........ உண்மையில் தங்களின் வார்த்தைக்கள் எனக்கு ஆறுதலையும், புதியதை சிந்திக்கவும் வைக்கின்றது.... மிகவும் நன்றி....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by sarunjeevan Fri Feb 24, 2012 3:31 pm

தமிழ்1981 wrote:வணக்கம் ஜீவன் அவர்களே,

நண்பரே தங்கள் கருத்திற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி........ உண்மையில் தங்களின் வார்த்தைக்கள் எனக்கு ஆறுதலையும், புதியதை சிந்திக்கவும் வைக்கின்றது.... மிகவும் நன்றி....

நன்றி அண்ணா....

மிகவும் சந்தோஷம்.... [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by dhilipdsp Fri Feb 24, 2012 3:52 pm

மிக்க மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தங்கை கலை Fri Feb 24, 2012 3:54 pm

ஜோஷி அண்ணா எப்பூடி இருக்கீங்க ,நலமா

அவ்ங்க நிறைய தப்பு செய்தாலும் நீங்களும் கொஞ்சம் தப்பு செய்து இருக்கீங்க தானே ,,,ரெண்டு பெரும் பண்ணுவது தவறு ...

நீங்க பழையபடி சேர்ந்து வாழ இறைவன் நிடம் ம் வேண்டுகிறேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தமிழ்1981 Fri Feb 24, 2012 6:05 pm

வணக்கம் கலை....

நான் எந்த தவறும் செய்யவில்லை என்று நான் ஒரு போதும் சொல்லியது இல்லை..... நான் செய்த தவறு என்னவென்று தெரியுமா?


1. அவளை முழுவதும் நேசித்து " அவள் என் மனைவி" என்பதில் மிகவும் பெருமைக் கொண்டேன்......
2. அவளை பெண் பார்த்துவிட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக என் உறவுகள் "தயங்கிய போது" அதன் உண்மை நிலை என்னவென்று விசாரிக்காதது
3. பார்க்கும் முதல் பெண்ணையே திருமணம் முடிக்க வேண்டுமென்று நினைத்ததால், அவள் குடும்பத்தினரை பற்றி நான் முழுவதும் தெரிந்துக் கொள்ளாதது........
4. திருமணத்திற்குப் பின்.... அவளை மட்டுமே நேசித்து என் இதயத்தை முற்றும் அவளுக்கு கொடுத்தது....
5. என் தாயாய் அவளை மருமகளாய் நடத்தாதது, மகளைப் போல் நேசித்தது.......
6. திருமணத்திற்கு முன்னரே எவ்வித ஒளிவு, மறைவு இலலாமல் என் குடும்பததாரைப் பற்றி சொன்னது.....

இன்னும் பல தவறுகள் என் மீதும் என் குடும்பத்தார் மீதும்..........

கலை.... ஒரு சகோதரனாய் நான் உன்னிடம் ஒன்று சொல்கின்றேன்.....

இன்னும் அவள் என்னுடன் வாழவில்லை என்றுச் சொல்லி சென்றுவிட்டாள்.... ஆனால் நான் இன்றும் அவளை வெறுக்கவில்லை... அவரின் குடும்பத்தார் செய்த தவறுகளுக்கும், தவறான் செயல்களுக்கும் இவள் துணையாய் நின்றாளே என்று தான் கோபம்.... அவள் அதை தவறு என்று கூட உணரவில்லை...... நான் அவள் செய்த தவறைத் தான் வெறுக்கின்றேன்... அவளை அல்ல.........

அவள் என்னுடன் பேசாது, நானும் பேசக் கூடாது என்றும் செல்லிடப் பேசியை ஆப் செய்து விட்டாள் இரண்டு மாதங்களுக்கு மேல்.... ஆனால் இன்றும் நான் அவளை நினைப்பது என் பெரிய தவறா.... நீயே சொல்......???????????

தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தங்கை கலை Fri Feb 24, 2012 9:05 pm

வணக்கம் annaa ,

எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல ...ஆனால் நீங்களும் கஷ்டப்படுறீங்க ..அவகளும் மனசுல கஷ்டத்தை தான் சுமந்து இருப்பங்கன்னு தோணுது ...எந்த பொன்னும் வாழ தான் ஆசைப்படுவாங்க ...

நீங்களும் அவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் அண்ணா ,,,எங்களுக்கு உங்க தரப்பு நியாயம் புரியுது ...அவர்களுக்கும் புரிய வையுங்கள் அண்ணா ...
புரிய மாட்டுக்குறாங்க தளராதிங்க ...avanga மனம் விட்டு பேசுற வங்ககிட்ட நீங்க பேசி புரிய வைக்க வையுங்க ...அவங்க சின்னப் பிள்ளைதானமா செய்யுராங்கன்னு அவங்க புரிஞ்சா ரெண்டு பெரும் சந்தோஷமா இருக்காளம் ..


நீங்க நிம்மதியா சந்தோஷமா வாழ இரிவனை வேண்டுகிறேன் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by தமிழ்1981 Fri Feb 24, 2012 10:55 pm

நன்றி கலை ......... நான் இப்போது நம்புவது இறைவனை மட்டுமே .....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நீ வருவாயென .......... Empty Re: நீ வருவாயென ..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum