தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...

2 posters

Go down

வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...  Empty வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...

Post by krpsenthil Mon Nov 22, 2010 2:58 pm

If you were just intent on killing people you could do better with a bomb made of agricultural fertilizer. -Ian Hacking

நகரத்தின் புழுதிகளை சுமந்து சுமந்து என் கைகளும், முகமும் எங்கள் கிராமத்து வயல்களில் வேலை பார்த்த மகளீரின் கரங்கள் போல் ஆகிவிட்டன. அன்றாடம் இரு சக்கர வாகனத்தில் சென்னை வீதிகளில் சர்க்கஸ் பழகும் அத்தனை பேருக்கும் இப்படித்தான் ஆகிவிட்டது, அதுவும் மழைவிட்ட மறுநாள் அடிக்கும் வெயிலில் கிளம்பும் புழுதி இலவசமாய் எங்கள் தலைகளுக்கு டை அடித்துவிட்டுப்போகும், அதனால் ஷாம்பூ கம்பெனிகள்தாம் வாழ்கின்றன. சமீபத்தில் என் நண்பன் விக்கிரவாண்டி அருகே ஒரு அரைகிரவுண்டு வாங்கப்போவதாக சொன்னான். அங்க வாங்கி என்னடா பண்ணுவே என்றேன். சும்மா ஒரு முதலீடு செஞ்சு வைக்கத்தான் என்றான். நான் ஊருக்கு போகிறபோதெல்லாம் செங்கல்பட்டு தாண்டியபின் இரு புறமும் சவுக்கு காடுகளையும், திண்டிவனம் தாண்டியபின் முந்திரிக்காடுகளையும், சேத்தியாதோப்பு தாண்டியபின் பசேலென நெற்பயிர்களையும் பார்ப்பேன், பகலில் பயணம் செய்யும்போது இதனை வழிநெடுக பார்க்கையில் மனதிற்கு இதமாக இருக்கும். ஆனால் கடந்த இருபது வருடத்தில் மெல்ல பொலிவிழந்து பொட்டல் காடுகளாய் கற்தூண்கள் நட்டுவைக்கப்பட்டு வீட்டுமனைகள் ஆக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலும் நகர வாசிகள் தங்கள் முதல் முதலீடுகளை தங்கத்திலும், அதற்கடுத்த முதலீடுகளையும் வீட்டுமனைகளிளும்தான் போடுகிறார்கள். தங்கம் அதன் விலையில் பல மடங்கு ஆகிவிட்ட நிலையிலும், அதன் ஸ்திரத்தன்மை என்பது கேள்விக்குறிதான்,காரணம் சமீபத்தில் மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை தூக்கப்போவதாக சொன்னதும், அதன் விலை கிராமுக்கு Rs.1200 க்கு வந்துவிடும் என வியாபாரிகள் சொன்னதை நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் நிலம் அப்படி அல்ல போட்ட காசுக்கு மேல் கண்டிப்பாக கிடைக்கும். காரணம் ஒரு நிலம்போல் மற்றொரு நிலத்தை நாம் உருவாக்கவே முடியாது.

ஒரு காலத்தில் எங்கள் ஊரில் சர்க்கரை வள்ளிகிழங்கு விளைவித்து அதனை வண்டி கட்டி பக்கத்து ஊர்களில் எடுத்து சென்று விற்ப்பார்கள். நெல்லை வாங்கிக்கொண்டு கிழங்கை தருவார்கள், பின்னர் சிங்கப்பூர் சம்பாத்தியம் அதனை நிறுத்திவிட்டது. படிப்படியாக எல்லா நிலங்களிலும் தென்னை மரம் நடப்பட்டு விட்டது. இதனால் தற்போது நாடு திரும்பிவிட்ட எங்கள் ஊர்க்காரர்கள் பாலங்களில் அரட்டைகச்சேரிகளும்,மாலையானால் டாஸ்மாக் பார்களிலும் பொழுதை கழிக்கிறார்கள். மற்றவர்களும் தங்கள் வயல்களை குத்தகைக்கு விட்டுவிட்டு நகரங்களுக்கு நகர்ந்துவிடார்கள். நான் உட்பட, நானும் விவசாயத்தை மறந்து தொழிலதிபர் கனவுக்கு மாறி, நிரந்தரமாக சென்னைவாசியாகிவிட்டேன், ஆனால் தற்போது வியாபாரம் பற்றிய விசயங்களை தேடித்தேடி படிக்க படிக்க இனி இந்த உலகின் நடக்கபோகும் அடுத்த புரட்சி என்பது, தண்ணீருக்கும், உணவுக்கும் நாம் கொடுக்கபோகும் விலைதான். நீங்கள் கவனமாக பார்த்தீர்கள் என்றால் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்புக்கு நாம் செலவிட்ட தொகை இன்றைய கணக்கில் பைசாக்களாக குறைந்துவிட்டது. ஆனால் இன்றைக்கு ஒரு கிலோ சர்க்கரை விலை எக்கச்சக்கமாக ஏறி விட்டது. இதற்க்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று பணவீக்க விகிதம், இன்னொன்று உணவுப் பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகத்துள் கொண்டுவந்தது. சர்க்கரை மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் நம் வீட்டிற்க்கு வாங்கிகொண்டிருக்கும் மளிகை பொருட்களின் விலை அதிகமாகிகொண்டே வருவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

நம் உணவுத்தேவை என்பது மிகுந்துவிட்டது, ஆனால் உற்பத்தியோ குறைந்துகொண்டே வருகிறது. இதற்க்கு முக்கியமான காரணம் எல்லா விளைநிலங்களும் இன்றைக்கு மொத்தமாக அரசியல்வாதிகளின் கைக்கு மாறிவருகிறது. இன்னும் நில உச்சவரம்பு சட்டம் உயிரோடு இருக்கிறது. ஆனால் எல்லா அரசியல்வாதிக்கும் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வளைக்கபட்டுவிட்டன. விவசாயிகளும் அதிக விலை கிடைக்கிறதே என தங்கள் நிலங்களை விற்றுவிட்டார்கள். சமீபத்தில் மானாமதுரைக்கு போயிருந்தேன் அங்கு ஒரு வட இந்திய சேட்டிடம் ஆயிரத்து முந்நூறு ஏக்கர் நிலங்கள் கைவசம் வைத்திருப்பதாக சொன்னார். அவர் ஒரு சென்ட் நிலத்தை ஐம்பது ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இப்பொது சென்ட் ஐந்நூறுக்கு விற்க தயாராக இருப்பதாக சொன்னார். நான் இடத்தை சென்று பார்வையிட்டேன், அருமையான விளைநிலம் ஆனால் ஆண்டுக்கணக்காக அவை விவசாயம் செய்யபடாமல் இருந்தது. அதற்கான காரணத்தை விசாரித்த போது அங்கு வசிக்கும் மக்கள் மிக சொற்பம், அவர்களுக்கான தேவைகளும் மிக குறைவு அதனால் சும்மா கிடக்கும் நிலம்தானே என விற்றுவிட்டு நகைகள் வாங்கிவிட்டனர்.

ஆனால் இவர்களுக்கு போதுமான வழிப்புணர்வு இருந்தால் அந்த நிலத்தை விற்றிருக்கமாட்டார்கள். அமெரிக்காவில் ஐநூறு ஏக்கர் நிலத்தை மூன்று பேர் மட்டுமே உள்ள குடும்பத்தினர் நிர்வாகிப்பார், காரணம் அவர்களுக்கு கிடைக்கபெற்ற அரசு மானியங்களும், கடனில் கொடுக்கப்பட்ட விவசாய எந்திரங்களும், ஆனால் குடும்பத்தில் ஐந்து பேருக்கு மேல் இருக்கும் நம் ஆட்கள் வெறும் ஐந்து ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என புலம்புவார்கள். ஒரு காலத்தில் முறையாக கூட்டு விவசாயம் செய்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை கால மாற்றத்தில் வயலில் இறங்காமலே சாப்பிட நினைப்பதால்தான் இந்த நிலைமை. கூட்டு விவசாயம் என்பது ஒரு குழுவாக சேர்ந்துகொண்டு ஒருவர் வயலில் மற்றவர்கள் வேலை செய்து கொடுப்பது. இப்போதோ ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை (தஞ்சை, நாகை, திருவாரூர்) எடுத்துகொண்டால் ஒரே நேரத்தில் அத்தனை பேரும் ஒரே பயிரை விவசாயம் செய்வார்கள். பின் ஆட்கள் எப்படி கிடைப்பார்கள். அதிலும் இலவச மின்சாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள். அதிலும் ஒழுங்காக பட்டம் பார்த்து விதைக்காமல் பருவ மாற்றங்களில் சிக்கி நிவாரண நிதி கேட்டு அரசிடம் கையேந்துவார்கள். அரசு ஒதுக்கிய தொகையை கிராம நிர்வாக அதிகாரி, கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் பங்கிட்ட பிறகு கிடைக்கும் மிச்சத்தை வாங்கி சரக்கடிச்சுட்டு உலக அரசியல் பேசுவார்கள்.

உங்களுக்கு விவசாய ஆர்வம் இருந்தால் விவசாயம் செய்ய வாருங்கள், நம் மரபு விதைகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யுங்கள். நம்மிடம் இருந்த அற்புதமான விதைகளை நாம் இணைந்து மீண்டும் உருவாக்கி ஒரு புதிய புரட்சியை செய்வோம். எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற ஏமாற்றுக்காரர்களின் முகமூடியை கிழிப்போம். நம்மாழ்வார் போன்ற சமூக சிந்தனையாளர்களின் வழி நடந்து தரமான, ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விளைய வைப்போம். குறைந்த தண்ணீரை பயன்படுத்தி ஏக காலத்தில் நிறைய உணவு பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகளை அநேக விவசாய ஆர்வலர்கள் இலவசமாக நமக்கு சொல்லித்தருகிறார்கள். எங்கோ ஒரு நாட்டில் பிறந்து புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில்லில் குடிவந்து நம் மரபு விதைகளை பாதுகாக்கும் வெளிநாட்டவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்திய விகடன் தீபாவளி மலரில் வந்துள்ளது.மேலும் விகடன் வெளியீடான "பசுமை விகடன்" முழுக்க முழுக்க இயற்க்கை விவசாயத்தை பற்றி மட்டும் கட்டுரைகள் கொண்ட தமிழின் தலை சிறந்த இதழ். அதனை நாம் தொடர்ச்சியாக வாசித்து வந்தாலே நமக்குள் விவசாய ஆர்வம் ஊற்றெடுக்கும். இன்னும் சில வருடங்களில் நானும் முழுநேர விவசாயியாக மாறுவேன். நீங்களும் மாற ஆயத்தமாகுங்கள். கரங்களை இணைத்துகொள்வோம்.

அடுத்த கட்டுரையில் விவசாயம் எந்ததெந்த வகையில் நமக்கு லாபகரமாக இருக்கும் என்பதனைப்பற்றி எழுதுகிறேன்
avatar
krpsenthil
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 6
Join date : 20/11/2010

Back to top Go down

வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...  Empty Re: வியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 22, 2010 3:15 pm

விவசாயத்தைப் பற்றி அறிய தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum