தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
கை திறந்து காட்டேன்..
4 posters
Page 1 of 1
கை திறந்து காட்டேன்..
ஓர் ஆரணங்கு.
அந்த இளம் பெண்ணின் கண்களிலே தீராத ஏக்கம்;
நடக்கும் நடையிலும் தளர்ச்சி; பேசுகின்ற பேச்சிலும்
துக்கம்; அடிக்கடி அவள் பெருமூச்செய்துகின்றாள்.
இந்த நிலை திடீரென ஏற்பட்டதுதான். வழக்கத்திற்கு
மாறாக ஒருநாள் வாடி வதங்கிய உருவோடு சென்று
மஞ்சம் மேவினாள்; மஞ்சமோ, மலர்களால் ஒப்பனை
செய்யப்பட்டிருந்தது. அவள் அதில் ஏறிப்படுத்தாள்.
அயர்ந்து தூங்கத் தொடங்கிவிட்டாள்.
பொழுது புலர்ந்தது. காலைக் கதிரவனின் பொற்
கிரணங்கள் சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்து,
மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த அம் மங்கையின்
பொன்னிற மேனியில் பட்டுத் தெறித்தன.
ஆனால், அவள் மஞ்சத்தை விட்டு எழவேயில்லை.
அவளுடைய செவிலித்தாயர்கள், இன்னும் அவள்
துயில் எழாததைக் கண்ணுற்று ஓடிவந்தனர்.
ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோது, முகத்திலே
முறுவலை முறுவலித்துக்கொண்டே, அவ்வழகி
மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய வதனத்தில் என்றுமில்லாத ஒரு வனப்பும்
கலையும் தேங்கியிருந்தன. இதனைக் கண்ட
அவர்களுக்கு, நேற்றுவரை சிலகாலமாக அவள்
முகத்திலே ஊசலாடாத கலையழகு, அவள்
உறக்கத்தில் இருக்கும்பொழுது எப்படி ஏற்பட்டது? -
என ஒரு புறம் வியப்பும் மறுபுறம் ஐயமும் ஏற்பட்டன.
ஆகவே, அவர்கள் அவளுடைய மூக்கில் தங்கள்
விரலைவைத்துப் பார்த்தனர். காற்று உயிர்ப்பு இருந்தது;
அவளுடைய மார்பகத்தில் தங்கள் காதுகளை வைத்துப்
பொதித்துப் பார்த்தனர். இருதயம் வேலை செய்து
கொண்டுதான் இருந்தது. ஆனால், கண்களை மூடிய
அவள் கைகளை மட்டும் எடுக்கவேயில்லை;
படுக்கையைவிட்டு எழவும் இல்லை.
அனைவரும் சேர்ந்து அவளுடைய கைகளைப் பற்றி…
இழுத்தனர்; அக் கைகளிலிருந்து வளையல்கள் உடைந்து,
சிதறினவே தவிர, மூடிக்கொண்டிருந்த கண்களினின்றும்
அவளுடைய கைகளை, அவர்களால் அகற்ற இயலவில்லை.
அவர்களுடைய செய்கைகளுக்கெல்லாம் பதில் தருவது
போன்று மெல்ல எழுந்து அமர்ந்தாள். அவளுடைய
உதட்டில் ஒரு புன்னகை தவழ்ந்தது. தன்னுடைய
கண்களைக் கைகளால் மூடிக்கொண்டே அவள் சொல்கிறாள்:
“தளையவிழும் பூங்கோதையரே! என்னுடைய அருமை
ஆவி, அழகு உடலினின்றும் பிரிந்திடினும், என் கைகளைத்
திறந்து காட்டமாட்டேன். காரணம் என்ன தெரியுமா?
எத்தனையோ காலமாக ஏங்கிக்கிடந்த என் வற்றிய
இதயத்தில் நீருற்றிய – என் இதய வீணையில் இன்பநாதம்
எழுப்பிய என் உள்ளங்கவர்ந்த கள்ளக்காதலன்,
இரவில் தன் யானையின் மீதேறி வந்தான்.
வந்த அப் பாண்டியன், கண்களினூடே இதயத்தில்
நுழைந்து இடம் பிடித்துக்கொண்டான்; அதனால் எனக்கு
விளைந்த இன்பத்திற்கு எல்லையேது?
நான் ஏங்கிக்கிடந்த என் ஏக்கத்தின் தவிப்பும் துன்பமும்;
இன்று நான் பெற்ற உவப்பும் இன்பமும் எனக்கல்லவோ
தெரியும்?
அப்படி இருக்க, என் கண்களைத் திறக்கச்
சொல்லுகிறீர்களே இது நியாயமா?
கைகளை எடுப்பதன் மூலம் நான் என்னுடைய கண்களைத்
திறந்து காட்டினால், நேற்றிரவு என் இதயத்தில் இடம்பிடித்த
அத் தென்னவன், திறந்த அக் கண்களின் வழியாக வெளியே
போய்விடமாட்டானா? ஆகவே, நான் என் உயிரே, உடலை
விட்டுப்பிரிந்தாலும், என் கண்களைத் திறக்கப் போவதுமில்லை;
கைகளை அகற்றப்போவதுமில்லை!” என்றாள்.
இந்த அரிய நிகழ்ச்சி, முத்தொள்ளாயிரத்தில் காணக்கிடைக்கிறது.
பாடலைச் சுவைப்போம்!
“தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும்என் கைதிறந்து காட்டேன்;
வளைகொடுபோம்
வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை
தன்னுடன்வந்து
என்கண் புகுந்தான் இரா” (பா.25)
-
======================================
(கவிஞர் தெசிணியின் “கலித்தொகையும்
முத்தொள்ளாயிரமும்’ நூலிலிருந்து…)
=
நன்றி: தினமணிகதிர்
அந்த இளம் பெண்ணின் கண்களிலே தீராத ஏக்கம்;
நடக்கும் நடையிலும் தளர்ச்சி; பேசுகின்ற பேச்சிலும்
துக்கம்; அடிக்கடி அவள் பெருமூச்செய்துகின்றாள்.
இந்த நிலை திடீரென ஏற்பட்டதுதான். வழக்கத்திற்கு
மாறாக ஒருநாள் வாடி வதங்கிய உருவோடு சென்று
மஞ்சம் மேவினாள்; மஞ்சமோ, மலர்களால் ஒப்பனை
செய்யப்பட்டிருந்தது. அவள் அதில் ஏறிப்படுத்தாள்.
அயர்ந்து தூங்கத் தொடங்கிவிட்டாள்.
பொழுது புலர்ந்தது. காலைக் கதிரவனின் பொற்
கிரணங்கள் சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்து,
மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த அம் மங்கையின்
பொன்னிற மேனியில் பட்டுத் தெறித்தன.
ஆனால், அவள் மஞ்சத்தை விட்டு எழவேயில்லை.
அவளுடைய செவிலித்தாயர்கள், இன்னும் அவள்
துயில் எழாததைக் கண்ணுற்று ஓடிவந்தனர்.
ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோது, முகத்திலே
முறுவலை முறுவலித்துக்கொண்டே, அவ்வழகி
மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய வதனத்தில் என்றுமில்லாத ஒரு வனப்பும்
கலையும் தேங்கியிருந்தன. இதனைக் கண்ட
அவர்களுக்கு, நேற்றுவரை சிலகாலமாக அவள்
முகத்திலே ஊசலாடாத கலையழகு, அவள்
உறக்கத்தில் இருக்கும்பொழுது எப்படி ஏற்பட்டது? -
என ஒரு புறம் வியப்பும் மறுபுறம் ஐயமும் ஏற்பட்டன.
ஆகவே, அவர்கள் அவளுடைய மூக்கில் தங்கள்
விரலைவைத்துப் பார்த்தனர். காற்று உயிர்ப்பு இருந்தது;
அவளுடைய மார்பகத்தில் தங்கள் காதுகளை வைத்துப்
பொதித்துப் பார்த்தனர். இருதயம் வேலை செய்து
கொண்டுதான் இருந்தது. ஆனால், கண்களை மூடிய
அவள் கைகளை மட்டும் எடுக்கவேயில்லை;
படுக்கையைவிட்டு எழவும் இல்லை.
அனைவரும் சேர்ந்து அவளுடைய கைகளைப் பற்றி…
இழுத்தனர்; அக் கைகளிலிருந்து வளையல்கள் உடைந்து,
சிதறினவே தவிர, மூடிக்கொண்டிருந்த கண்களினின்றும்
அவளுடைய கைகளை, அவர்களால் அகற்ற இயலவில்லை.
அவர்களுடைய செய்கைகளுக்கெல்லாம் பதில் தருவது
போன்று மெல்ல எழுந்து அமர்ந்தாள். அவளுடைய
உதட்டில் ஒரு புன்னகை தவழ்ந்தது. தன்னுடைய
கண்களைக் கைகளால் மூடிக்கொண்டே அவள் சொல்கிறாள்:
“தளையவிழும் பூங்கோதையரே! என்னுடைய அருமை
ஆவி, அழகு உடலினின்றும் பிரிந்திடினும், என் கைகளைத்
திறந்து காட்டமாட்டேன். காரணம் என்ன தெரியுமா?
எத்தனையோ காலமாக ஏங்கிக்கிடந்த என் வற்றிய
இதயத்தில் நீருற்றிய – என் இதய வீணையில் இன்பநாதம்
எழுப்பிய என் உள்ளங்கவர்ந்த கள்ளக்காதலன்,
இரவில் தன் யானையின் மீதேறி வந்தான்.
வந்த அப் பாண்டியன், கண்களினூடே இதயத்தில்
நுழைந்து இடம் பிடித்துக்கொண்டான்; அதனால் எனக்கு
விளைந்த இன்பத்திற்கு எல்லையேது?
நான் ஏங்கிக்கிடந்த என் ஏக்கத்தின் தவிப்பும் துன்பமும்;
இன்று நான் பெற்ற உவப்பும் இன்பமும் எனக்கல்லவோ
தெரியும்?
அப்படி இருக்க, என் கண்களைத் திறக்கச்
சொல்லுகிறீர்களே இது நியாயமா?
கைகளை எடுப்பதன் மூலம் நான் என்னுடைய கண்களைத்
திறந்து காட்டினால், நேற்றிரவு என் இதயத்தில் இடம்பிடித்த
அத் தென்னவன், திறந்த அக் கண்களின் வழியாக வெளியே
போய்விடமாட்டானா? ஆகவே, நான் என் உயிரே, உடலை
விட்டுப்பிரிந்தாலும், என் கண்களைத் திறக்கப் போவதுமில்லை;
கைகளை அகற்றப்போவதுமில்லை!” என்றாள்.
இந்த அரிய நிகழ்ச்சி, முத்தொள்ளாயிரத்தில் காணக்கிடைக்கிறது.
பாடலைச் சுவைப்போம்!
“தளையவிழும் பூங்கோதைத் தாயரே! ஆவி
களையினும்என் கைதிறந்து காட்டேன்;
வளைகொடுபோம்
வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை
தன்னுடன்வந்து
என்கண் புகுந்தான் இரா” (பா.25)
-
======================================
(கவிஞர் தெசிணியின் “கலித்தொகையும்
முத்தொள்ளாயிரமும்’ நூலிலிருந்து…)
=
நன்றி: தினமணிகதிர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: கை திறந்து காட்டேன்..
நல்ல விவரிப்பு... பாராட்டுகள் அவருக்கு.
பகி்ர்வுக்கு மகிழ்ச்சி ஐயா
பகி்ர்வுக்கு மகிழ்ச்சி ஐயா
![மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/737607.gif)
![மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/737607.gif)
![மகிழ்ச்சி](/users/3113/15/39/48/smiles/737607.gif)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: கை திறந்து காட்டேன்..
பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துகள் தொடுத்த கைகளுக்கு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79
Re: கை திறந்து காட்டேன்..
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
![-](https://2img.net/i/empty.gif)
» கண்ணைத் திறந்து விட்டவர்
» தண்ணீரைத் திறந்து விடு...!
» திருக்குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம்
» மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!
» அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க
» தண்ணீரைத் திறந்து விடு...!
» திருக்குர்ஆனை தினமும் திறந்து ஓதுவோம்
» மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!
» அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|