தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
+2
ramkumark5
கவியருவி ம. ரமேஷ்
6 posters
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூலை
Page 1 of 1
சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி அனைவரும் பதிவிட கேட்டுக்கொள்கிறோம்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 31, 2012 5:53 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
வாழ்க்கை
வாழ்க்கை
எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது. குரு தன் சீடர்களுக்கு உபதேசங்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது ஆசிரம வாயிலில் ஒரு தங்க பல்லக்கு வந்து இறங்கியது. பல்லக்கில் இருந்து தர்கூர் மாகாணத்தின் அரசன் போகாலன் வெளியே வந்து குருவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டான்.
அவன் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தை கவனித்த குரு, அரசனை தனியே அழைத்து சென்று அவன் பதற்றத்திற்கான காரணத்தை வினவினார்.
“என் வாழ்வில் நிம்மதியே இல்லை. எந்த நேரமும் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது ஏன்னு தெரிஞ்சுக்க தான் இங்கே வந்தேன் குருவே” என்று தன் சோகத்தினை குருவிடம் கூறினான் போகாலன்.
குரு போகாலனை அழைத்து கொண்டு ஆசிரமத்திற்கு வெளியே சென்றார். மிக நீண்ட நடை பயணத்திற்கு பின் சற்று தொலைவில் தெரியும் ஒரு மரத்தினை காட்டி அந்த மரத்தில் என்ன தெரிகிறது என்று போகாலனிடம் கேட்டார்.
அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த போகாலன் “ஒரு மரம் தெரியுது. அப்புறம் அதிலிருந்து நிறைய சருகுகள் பூமியில் விழுகிறது” என்றான். அப்போது அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவனை அழைத்த குரு, அவனிடம் மரத்தை காட்டி அதே கேள்வியை கேட்டார்.
அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த விவசாயி “மரத்தில் பூத்திருக்கும் பூக்கள் , கிளையில் அமர்ந்திருக்கும் வெண்ணிற புறாக்கள், மரத்தில் தொங்கும் கனிகள் தெரியுது” என்றான். இதைக் கேட்டவுடன் குரு அந்த விவசாயியை திருப்பி அனுப்பி விட்டு போகாலன் பக்கம் திரும்பினார்.
“இப்ப தெரியுதா உன் மன உலைச்சலுக்கு என்ன காரணம் என்று!!?? உனக்கு அந்த மரத்தில் இருந்து விழுந்த காய்ந்த சருகுகள் தான் தெரிந்தது. ஆனால் அந்த விவசாயிக்கு பூக்கள், பறவை, கனிகள் எல்லாம் தெரிந்தது. எல்லாமே நம்ம பார்வையிலே தான் இருக்கு.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சி தரும் தருணங்களை மட்டும் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். சோகங்களையும் துக்கங்களையும் எப்பவும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சருகாய் தான் போகும்.
குருவின் பேச்சை கேட்ட போகாலனின் மனதில் புது வெளிச்சம் பிறந்தது. குருவுக்கு நன்றிகளை கூறி விட்டு தன் அரண்மனைக்கு கிளம்பினான் புத்தம் புதிய வாழ்க்கையை வாழ.
அவன் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தை கவனித்த குரு, அரசனை தனியே அழைத்து சென்று அவன் பதற்றத்திற்கான காரணத்தை வினவினார்.
“என் வாழ்வில் நிம்மதியே இல்லை. எந்த நேரமும் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது ஏன்னு தெரிஞ்சுக்க தான் இங்கே வந்தேன் குருவே” என்று தன் சோகத்தினை குருவிடம் கூறினான் போகாலன்.
குரு போகாலனை அழைத்து கொண்டு ஆசிரமத்திற்கு வெளியே சென்றார். மிக நீண்ட நடை பயணத்திற்கு பின் சற்று தொலைவில் தெரியும் ஒரு மரத்தினை காட்டி அந்த மரத்தில் என்ன தெரிகிறது என்று போகாலனிடம் கேட்டார்.
அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த போகாலன் “ஒரு மரம் தெரியுது. அப்புறம் அதிலிருந்து நிறைய சருகுகள் பூமியில் விழுகிறது” என்றான். அப்போது அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவனை அழைத்த குரு, அவனிடம் மரத்தை காட்டி அதே கேள்வியை கேட்டார்.
[You must be registered and logged in to see this image.]
அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த விவசாயி “மரத்தில் பூத்திருக்கும் பூக்கள் , கிளையில் அமர்ந்திருக்கும் வெண்ணிற புறாக்கள், மரத்தில் தொங்கும் கனிகள் தெரியுது” என்றான். இதைக் கேட்டவுடன் குரு அந்த விவசாயியை திருப்பி அனுப்பி விட்டு போகாலன் பக்கம் திரும்பினார்.
“இப்ப தெரியுதா உன் மன உலைச்சலுக்கு என்ன காரணம் என்று!!?? உனக்கு அந்த மரத்தில் இருந்து விழுந்த காய்ந்த சருகுகள் தான் தெரிந்தது. ஆனால் அந்த விவசாயிக்கு பூக்கள், பறவை, கனிகள் எல்லாம் தெரிந்தது. எல்லாமே நம்ம பார்வையிலே தான் இருக்கு.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சி தரும் தருணங்களை மட்டும் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். சோகங்களையும் துக்கங்களையும் எப்பவும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சருகாய் தான் போகும்.
குருவின் பேச்சை கேட்ட போகாலனின் மனதில் புது வெளிச்சம் பிறந்தது. குருவுக்கு நன்றிகளை கூறி விட்டு தன் அரண்மனைக்கு கிளம்பினான் புத்தம் புதிய வாழ்க்கையை வாழ.
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat
பேர் சொல்லும் சருகுகள்...!
வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு கோசலை என்ற பெண் தன் கணவனால் கைவிடப்பட்டு ஊருக்கு ஓராமாய் உள்ள தன் நிலத்தில் சிறு குடிசை அமைத்து அங்கே மாடு,ஆடு வாங்கி பால் பண்ணை ஒன்றையும் மற்ற இடங்களில் மா, தென்னை ,சப்போட்டா, கொய்யா என்று பலரக கனிகளை வளர்த்து தன் இரண்டு மகன்களையும் காப்பாற்றி வந்தாள். கனிகள் அற்ற நேரத்தில் காயிந்த சருகுகளை விறகு.விளக்கமார், என்று விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தினாள்.வாயிக்கும் வயிற்றிக்கும் போக மிஞ்சவே இல்லை.கடன் வாங்கி மகன்களை நல்ல படிப்பு படிக்க வைத்தாள்.
காலம் செல்ல செல்ல மகன்கள் இருவரும் பெரியவனாக அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தல், அதே போல் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது மகன்கள் இருவரும் தனது மனைவியுடன் நகரத்திற்கு குடியேறிவிட்டார்கள். தனது அம்மாவையும் கூட அழைத்தும் அவள் போகவில்லை. காரணம் செழிப்பான நேரத்தில் மரங்கள் கனி தரும் செழிபற்ற நேரத்தில் இலைகள் வழிகள் தரும் இதை விடுத்துச் சென்றால் அவை நன்றி அழிவைத் தரும் என்றாள்.
உடனே மகன்கள் இருவரும் சரி அம்மா நாங்கள் மாதம் ஒரு முறை வருகிறோம் என்று சென்றனர்.
இப்படியே காலங்கள் செல்லச் செல்ல மகன்கள் வரவில்லை,அவர்களின் ஆசையை நோக்கியே கண்கள் பயணித்தது கால்கள் போக மறுத்தது
வாயிகள் பேசியது அவள் வளர்த்த மரங்களுக்கிடையே பிள்ளையை பெற்றால் கண்ணீரு தென்னையை பெற்றால் இளநீரு என்று கூறுவது போல் அங்குள்ள செடி கொடிகள் மரங்கள் அனைத்தையும் தனது மகன்,மருமகள்,பேத்தி என்று சொந்தம் கொண்டாடி மகிழ்ந்து வந்தாள்.
ஓர் நாள் திடிரென்று மாடுகள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் நிறைஞ்ச அம்மாவாசை ஒரே இருட்டு தொழுவத்தில் இருந்து இரண்டு பாம்புகள் தனது நவரத்தினங்களை அருகில் வைத்துவிட்டு நடனமாடியது. இவள் காலடி சத்தமும், மாடுகள் சத்தமும் கேட்டு பாம்புகள் இரண்டும் அந்த காட்டில் கிடக்கும் சருகுகளுக்கிடையே ஓடிவிட்டது.
நவரத்தினத்தை எடுத்த்தாள் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றாள் இறவா இது என்ன சோதனை நான் வறுமையில் தவித்தபோது நீ வரவில்லை, என் வறுமையை கண்டு பிள்ளைகள் அருகில் இல்லை. இந்த மண்ணும் சருகும் தான் எனக்கு சொறுபோட்டது.இப்போது என் இதயம் சருகாகி இறந்த காலத்தை நோக்கி பயணிக்கும் போது நவரத்தினம் எதற்கு இதை நீயே வைத்துக்கொள் என்று திரும்பினாள்
நில் கணவனை இழந்தும் கற்பு மாறா பெண்மையே நீ செடி கொடுத்தாய் மரம் வளர்த்தாய் ஈ எறும்புக்கும் தீனி போட்டாய் ,பசியென வருவோருக்கு ருசியாக கனி கொடுத்தாய், பிறர் உதவி பேணாமல் வலியவருக்கும் வாழ வழி வகுத்தாய் உன்னால பூமி செழித்தது, உன் பிள்ளைகள் அழைத்தும் போகாமல் என்னையே கெதியாக எண்ணி வறுமையிலும் வழி தவறாத நீ உண்மையேல் கடவுள்
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள்
இறைவா உன்குரல் கேட்டு என் செவிகள் மோட்சம் பெற்றது போல் என் கண்களும் மோட்சம் பெற வேண்டும் என்றாள்
உடனே கடவுள் அவள் முன் தோன்றி எண்ணை கண்ட நொடியில் உன் மரணம் மோச்சமாகும் மகளே, உன் இறுதி ஆசைப்படியே நீ வளர்த்த மரங்களின் சருகுகள் கொண்டே ஐய்ம் பூதங்களும் வாழ்த்துக்கள் பாட இறுதி சடங்கு நடைபெறும் என்று மறைந்தார்.
அவ்வாறே அவள் இறுதிப்பயணம் முடிந்தது தனது இரண்டு பிள்ளைகளும் அந்த நவரத்தின கற்களை கொண்டு அந்த கோயிலை வெகு சிறப்பாக கட்டி முடித்தும் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். ஊர் மக்கள் அனைவரும் அந்த குடும்பத்திற்கே மாலை மரியாதையும்,பட்டாபிசேகம் கட்டியும் பேற்றினார்கள். இருவரும் பேர் சொல்லும் சருகுகளாய் ஊரெங்கும் பரவி ஜொலித்தார்கள்.
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
சருகுடன் உதிர்ந்த சோம்பல்
சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின் பூசாரி. அவனது ஒரே மகன் கணேசன்... தலை பிரசவத்திலேயே தன் மனைவியை பறிகொடுத்தவன். அதன் பின் அரசமரத்து கணேசனும், மகன் கணேசனும் மட்டுமே இவன் வாழ்க்கை என்று ஆனது... தன் மகனை அம்மா இல்லாத குறை தெரியாமல் வளர்க்க பெரும்பாடு பட்டான். அவனும் சுட்டி தனம் மிக்கவனாகவே வளர்ந்தான். மகனுக்கு படிப்பின் மேல் பெரிதாக ஆர்வம் இல்லை என தெரிந்து மகனை கோவிலின் பராமரிப்புகளில் ஈடுபடுத்த எண்ணினான்..
வழக்கமாகவே சேவுகன் தான் கோவிலின் அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வான். மரத்தடி பிள்ளையார் என்பதால் சருகுகள் கொட்டிக் கொண்டே இருக்கும். அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பான். சின்ன கோவில் தான் என்றாலும் பக்தர்கள் கூட்டம் காலையிலும் மாலையிலும் இருந்த வண்ணமே இருக்கும். கோவிலின் அருகிலே வீடு என்பதால் அவனுக்கு வசதியாகவே இருந்தது.
ஒரு நாள் தன் மகனை அழைத்து தனக்கு பின் கோவிலை கவனித்து கொள்ளும் பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி கொண்டு இருந்தான். அப்பொழுதும் விளையாட்டு புத்தியுடன் தலையை மட்டும் ஆட்டி கொண்டு அருகில் இருக்கும் மந்தையில் விளையாடி கொண்டு இருந்த பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று முதல் கோவிலை பெருக்கி சுத்தம் செய்யும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் செய்வான். மறுநாள் ஏதாவது ஒரு காரணம் தேடி தந்தையிடமே ஒப்படைத்து விடுவான். இப்படியே நாட்கள் நகர்ந்தது. சேவுகனும் நாள் ஆக நாளாக பொறுப்பு வந்துவிடும் என்று எண்ணி மனதை தேற்றி கொள்வான். ஒரு நாள் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேவுகன் இறந்து விட கோவிலின் முழு பொறுப்பும் கணேசனிடம் வந்தது.
தந்தையின் கடைசி ஆசைப்படி கோவிலை நன்கு கவனித்து கொண்டு இருந்தான். ஒரு மாதம் கடந்தது. அவனுக்குள் ஏதோ சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தனக்குள் முடங்கி கிடந்த விளையாட்டு தனம் தலை தூக்க ஆரம்பிக்க கோவிலை கவனிக்க முடியாமல் விளையாட செல்ல ஆரம்பித்தான். காலையில் அரை குறையுமாக பெருக்கி செல்ல கோவிலில் சருகு நிறைந்து இருந்தது.
அன்று கோவிலுக்கு கிராமத்தின் நாட்டாமை வர கோவிலின் நிலைமையை கவனித்து கணேசனுக்கு அன்றைய தினம் நல்ல அர்ச்சனை செய்தார். மனம் உடைந்த போன அவன் அன்று இரவு உறங்க போகும் முன் கடவுளிடம் சென்று “உன்னை நானும் என் தந்தையும் கவனித்து கொண்டதற்கு பரிகாரமாக நாட்டமையிடம் என்னை இப்படி என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே? உண்மையிலே உன் பக்தர்கள் மீது உனக்கு அக்கறை இருக்கிறதா? நான் என்ன செய்வேன். எல்லாம் இந்த சருகினால் வந்த வினை. எத்தனை முறை பெருக்கினாலும் சருகு கொட்டி கொண்டு தானே இருக்கிறது. இதற்கு தீர்வே கிடையாத?” என்று புலம்பி பார்த்தான். “ஏன் பேசாம இருக்க? ஏதாச்சும் பதில் பேசு ?” என்று கடவுளை திட்ட ஆரம்பித்தான்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார் அவன் முன் தோன்றி “மகனே !! என்ன உன் பிரச்சனை ? என்று கேட்க, அவனும் “இவ்வளோ நேரம் கதையா கேட்டு கிட்டு இருந்த சாமி. நான் பொலம்புறது உனக்கு வேடிக்கையா இருக்கா” என அலுத்துக் கொண்டு “ இந்த சருகு கொட்டிக்கிட்டே இருக்க கூடாது. இதான் என் பிரச்சனை என்று கூற “சரி மகனே அப்படியே ஆகட்டும். காலையில் நீ எழுந்து பார்க்கும் போது உன் பிரச்சனை தீர்ந்து இருக்கும்” என்று கூறி மறைந்தார்.
நிம்மதியுடன் உறங்கி போனான் கணேசன். அதிகாலை வழக்கம் போல எழுந்து கோவிலை பெருக்க துடைப்பத்துடன் வெளியில் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். கோவிலின் மரமே வீழ்ந்து கிடந்தது. மரமே வீழ்ந்து போனதால் பிள்ளையார் சிலையையும் அந்த கிராமத்தின் பெரிய கோவிலுக்கு மாற்றி விட்டனர். கணேசனுக்கு இருந்த கோவில் வேலையும் பறிபோனது. வந்த வருமானமும் நின்று போனது. நம் வேலையை சரி வர செய்யாமல் கடவுளை பழிக்க கூடாது. செய்யும் தொழிலே தெய்வம். சோம்பல் தான் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என்பதை புரிந்து கொண்டு வேலை தேட ஆரம்பித்தான் கணேசன்.
வழக்கமாகவே சேவுகன் தான் கோவிலின் அனைத்து வேலைகளையும் கவனித்து கொள்வான். மரத்தடி பிள்ளையார் என்பதால் சருகுகள் கொட்டிக் கொண்டே இருக்கும். அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பான். சின்ன கோவில் தான் என்றாலும் பக்தர்கள் கூட்டம் காலையிலும் மாலையிலும் இருந்த வண்ணமே இருக்கும். கோவிலின் அருகிலே வீடு என்பதால் அவனுக்கு வசதியாகவே இருந்தது.
ஒரு நாள் தன் மகனை அழைத்து தனக்கு பின் கோவிலை கவனித்து கொள்ளும் பொறுப்பை செவ்வனே செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி கொண்டு இருந்தான். அப்பொழுதும் விளையாட்டு புத்தியுடன் தலையை மட்டும் ஆட்டி கொண்டு அருகில் இருக்கும் மந்தையில் விளையாடி கொண்டு இருந்த பையன்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று முதல் கோவிலை பெருக்கி சுத்தம் செய்யும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார். ஒரு நாள் செய்வான். மறுநாள் ஏதாவது ஒரு காரணம் தேடி தந்தையிடமே ஒப்படைத்து விடுவான். இப்படியே நாட்கள் நகர்ந்தது. சேவுகனும் நாள் ஆக நாளாக பொறுப்பு வந்துவிடும் என்று எண்ணி மனதை தேற்றி கொள்வான். ஒரு நாள் தீடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேவுகன் இறந்து விட கோவிலின் முழு பொறுப்பும் கணேசனிடம் வந்தது.
தந்தையின் கடைசி ஆசைப்படி கோவிலை நன்கு கவனித்து கொண்டு இருந்தான். ஒரு மாதம் கடந்தது. அவனுக்குள் ஏதோ சலிப்பு தட்ட ஆரம்பித்தது. தனக்குள் முடங்கி கிடந்த விளையாட்டு தனம் தலை தூக்க ஆரம்பிக்க கோவிலை கவனிக்க முடியாமல் விளையாட செல்ல ஆரம்பித்தான். காலையில் அரை குறையுமாக பெருக்கி செல்ல கோவிலில் சருகு நிறைந்து இருந்தது.
அன்று கோவிலுக்கு கிராமத்தின் நாட்டாமை வர கோவிலின் நிலைமையை கவனித்து கணேசனுக்கு அன்றைய தினம் நல்ல அர்ச்சனை செய்தார். மனம் உடைந்த போன அவன் அன்று இரவு உறங்க போகும் முன் கடவுளிடம் சென்று “உன்னை நானும் என் தந்தையும் கவனித்து கொண்டதற்கு பரிகாரமாக நாட்டமையிடம் என்னை இப்படி என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே? உண்மையிலே உன் பக்தர்கள் மீது உனக்கு அக்கறை இருக்கிறதா? நான் என்ன செய்வேன். எல்லாம் இந்த சருகினால் வந்த வினை. எத்தனை முறை பெருக்கினாலும் சருகு கொட்டி கொண்டு தானே இருக்கிறது. இதற்கு தீர்வே கிடையாத?” என்று புலம்பி பார்த்தான். “ஏன் பேசாம இருக்க? ஏதாச்சும் பதில் பேசு ?” என்று கடவுளை திட்ட ஆரம்பித்தான்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையார் அவன் முன் தோன்றி “மகனே !! என்ன உன் பிரச்சனை ? என்று கேட்க, அவனும் “இவ்வளோ நேரம் கதையா கேட்டு கிட்டு இருந்த சாமி. நான் பொலம்புறது உனக்கு வேடிக்கையா இருக்கா” என அலுத்துக் கொண்டு “ இந்த சருகு கொட்டிக்கிட்டே இருக்க கூடாது. இதான் என் பிரச்சனை என்று கூற “சரி மகனே அப்படியே ஆகட்டும். காலையில் நீ எழுந்து பார்க்கும் போது உன் பிரச்சனை தீர்ந்து இருக்கும்” என்று கூறி மறைந்தார்.
நிம்மதியுடன் உறங்கி போனான் கணேசன். அதிகாலை வழக்கம் போல எழுந்து கோவிலை பெருக்க துடைப்பத்துடன் வெளியில் சென்றவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். கோவிலின் மரமே வீழ்ந்து கிடந்தது. மரமே வீழ்ந்து போனதால் பிள்ளையார் சிலையையும் அந்த கிராமத்தின் பெரிய கோவிலுக்கு மாற்றி விட்டனர். கணேசனுக்கு இருந்த கோவில் வேலையும் பறிபோனது. வந்த வருமானமும் நின்று போனது. நம் வேலையை சரி வர செய்யாமல் கடவுளை பழிக்க கூடாது. செய்யும் தொழிலே தெய்வம். சோம்பல் தான் முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை என்பதை புரிந்து கொண்டு வேலை தேட ஆரம்பித்தான் கணேசன்.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
முதலிடம்
by ramkumark5 on Mon Jul 09, 2012 9:51 pm
வாழ்க்கை
எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது.
இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Jul 16, 2012 5:35 pm
வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு…
மூன்றாமிடம்
by ருக்மணி on Tue Jul 24, 2012 10:10 am
சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின்…
முதலிடம்
by ramkumark5 on Mon Jul 09, 2012 9:51 pm
வாழ்க்கை
எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது.
இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Jul 16, 2012 5:35 pm
வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு…
மூன்றாமிடம்
by ருக்மணி on Tue Jul 24, 2012 10:10 am
சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின்…
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
தமிழ்தோட்டம்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
கவியருவி ம. ரமேஷ் wrote: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
முதலிடம்
by ramkumark5 on Mon Jul 09, 2012 9:51 pm
வாழ்க்கை
எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது.
இரண்டாமிடம்
by ஹிஷாலீ on Mon Jul 16, 2012 5:35 pm
வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு…
மூன்றாமிடம்
by ருக்மணி on Tue Jul 24, 2012 10:10 am
சேவுகன் அந்தியூர் கிராமத்தின் அரசமரம் பிள்ளையார் கோவிலின்…
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai
Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: சருகு(கள்) - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவுகள்
நன்றி. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
ramkumark5- மல்லிகை
- Posts : 131
Points : 175
Join date : 24/04/2012
Age : 38
Location : Surat
Similar topics
» சருகு(கள்) - நகைச்சுவை போட்டி முடிவுகள்
» சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
» காதலி - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
» ஐம்பூதங்கள் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
» சருகு(கள்) - ஹைக்கூ போட்டி - முடிவுகள்
» சருகு(கள்) - கவிதை போட்டி முடிவுகள்
» காதலி - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
» ஐம்பூதங்கள் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: ஜூலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|