தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
4 posters
Page 1 of 1
பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
பார்த்தால் சிணுங்கி
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் thabushankar@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 70
விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை .1 .தொலைபேசி 2394614
கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகளின் மூலம் காதலர்கள் இடையே பிரபலமாகி ,காதல் பரிசாக இவரது நூலே பரிசளித்து வருகின்றனர் காதலர்கள்.அதனால்தான் இவரது நூல்கள் குறுகிய காலத்தில் அடுத்த பதிப்புகளும் வெளி வந்து கொண்டு இருக்கிறது . காதலர்கள் காதலுக்கு அடுத்த படியாக, நேசிப்பது தபூ சங்கர் கவிதைகள் என்றால் மிகை அன்று .அட்டைப்பட வடிவைப்பு ,கட்டமைப்பு, அச்சு என அனைத்தும் மிக நேர்த்தியாக
உள்ளது .நூலை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக
உள்ளது. பதிப்பித்த விஜயா பதிப்பகதாருக்கு பாராட்டுக்கள் .நூலின்
பெயரே சிந்திக்க வைக்கின்றது .தொட்டால் சிணுங்கி கேள்வி பட்டு இருக்கிறோம்
."பார்த்தால் சிணுங்கி "வித்தியாசமாக உள்ளது .காதலித்தவர்களுக்கு இதன் பொருள் நன்கு விளங்கும் . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக் குமார் அவர்களின்
அணிந்துரை அழகுரையாக உள்ளது .காதலர் தின பரிசாக இந்த நூலை வழங்கலாம் என்று
பரிந்துரை செய்து முடித்துள்ளார் .
மரங்கள் அசைய வில்லை என்றால் காற்று வர வில்லை என்று நினைப்போம் .இது சாதாரண பார்வை .மரங்கள் அசைய வில்லை என்றால் கவிஞர் தபூ சங்கரின் காதல் பார்வை என்னவெண்டு கவிதையில் பாருங்கள் .
நூலின் முதல் கவிதையே காதல் உணவுடன் தொடங்குகின்றது .
உங்கள் வீதியில் மரங்கள்
அசைய வில்லை என்றால்
அங்கே
எங்கோ ஒரு காதல்
புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .
காதலியை புகழ்வது காதலன் கடமைகளில் ஒன்று .மிக அதிகமாக புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வாள் காதலி .கவிஞர் தபூ சங்கர் காதலியை புகழும் அழகு தனி அழகு .தனி நடை .
ஒரு வருட
உலக அழகிகளே
ஒதுங்கி நில்லுங்கள்
ஆயுள் கால
உலக அழகி
வருகிறாள் .
இன்றைய இளம் பெண்கள் இன்று அவ்வளவாக அணிவதே இல்லை .ஆனால் கவிஞர் தபூ சங்கர் காதலி அணியும் வழக்கம் உள்ளதை பார்த்தால் வடித்த கவிதை இது .
கொலுசு
வளையல்
பூ
இதெல்லாம்
உன் அழகுபரப்புச்
செயலாளர்கள் .
கொள்கை பரப்புச் செயலாளர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுபரப்புச் செயலாளர்கள் இப்போதுதான் கேள்விப் படுகிறோம். வித்தியாசமான சிந்தனை .பாராட்டுக்கள் .
காதலி அமைதியானவள் ஆனால் அவளது அழகோ மிகவும் ஆர்ப்பாட்டமானது என்பதை எப்படி ? எழுதுகிறார் பாருங்கள் .
நீ ரொம்ப ரொம்ப
அமைதியான
பெண்தான்
ஆனால்
உன் அழகுதான்
அடங்கப் பிடாரி .
"இமைக்காமல் பார்க்கும் போட்டியில் என்னை வென்றவள் அவள் "என்று நான் எழுதிய கவிதையை நினைவூட்டிய கவிதை ஒன்று .
கண்கள் கூசாமல்
சூரியனைப் பார்ப்பதற்குக் கூட
கண்ணாடி உதவுகிறது .
ஆனால்
உன்னைக்
கண்கள் கூசாமல் பார்க்க
எதுவுமே
உதவுவதில்லை .
காதலி தந்த ஒன்றை மிக சாதரணமானதாக இருந்தாலும் அதை பத்திரப் படுத்துவது
காதலன் கடமை .அந்த வகையில் ஒரு கவிதை. படிக்கும் வாசகர்களுக்கு அவரவர்
காதல் நினைவை மலர் விக்கும் விதமாக ஒரு கவிதை .
பேருந்தில்
நீ எனக்காக
எடுத்துக் கொடுத்த
பயணச்சீட்டு
இன்னும்
பயணித்துக்
கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் காதலர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கும் கவிதைகள் ஏராளமாக உள்ளது.
இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளைப்
பார்த்திருக்கிறது
ஆனால்
உன்னை மாதிரி ஒரு
சர்வ அழகுக்காரியை
இப்போதுதான்
பார்க்கிறது .
காதலியை சர்வாதிகாரி என்று சொல்ல வருகிறாரோ என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் .என்பதே உண்மை .சர்வ அழகுக்காரியை என்று எழுதி வியப்பில் ஆழ்த்தி விட்டார் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .
காதலன் கனவு காண்பது இயல்பு .அதனை உணர்த்தும் கவிதை .
தினமும்
நான் தூங்கிய
உடனேயே
என் கனவில்
வந்து விடுகிறாயே
நான் எப்போது
தூங்குவேன் எண்டு
நீ எங்கிருந்து
கவனிக்கிறாய் .
காதலியிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு வேண்டுகோள் வைக்கிறார் பாருங்கள் .
நீ என்னை
காதலிக்கக் கூட
வேண்டாம்
உன் தோழிகளில்
ஒருத்தியிடமாவது
அவன் என்னைக்
காதலிக்கிறான் தெரியுமா
என்று
ஒரே ஒருமுறை சொல்
அது போதும் .
இப்படி நூல் முழுவதும் அட்டை முதல் அட்டை வரை காதல் ரசம் சொட்டச் சொட்ட
கவிதைகள் வடித்துள்ளார் .விமர்சனம் எழுத மேற்கோள் காட்ட எனக்குப் பிடித்த
கவிதைகளை மடித்து அடையாள படுத்தினேன் .கடைசியில் எல்லாம் பக்கமும் மடித்து
விட்டேன். பிறகு மறு முறை படித்து மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை தவிர்த்து
எழுதி உள்ளேன் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூலை படித்து முடித்தவுடன் நாமும்
காதல் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்து விடும் .சில நாட்களில்
நானும் காதல் கவிதை எழுதி இணையத்தில்பதிப்பித்து விடுவேன் . கவிஞர்
தபூ சங்கர் காதலர்களை மட்டும் மகிழ்விக்க வில்லை .கவிஞர்களையும்
மகிழ்வித்து இளமையாக இருக்க சிந்திக்க உதவுகின்றார் கவிதைகள் மூலம் .
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் .காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறீர்கள் .
உங்களுடைய கவித் திறமையை சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் எழுதவும் பயன்
படுத்துங்கள்
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் thabushankar@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விலை ரூபாய் 70
விஜயா பதிப்பகம் 20.ராஜ வீதி ,கோவை .1 .தொலைபேசி 2394614
கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகளின் மூலம் காதலர்கள் இடையே பிரபலமாகி ,காதல் பரிசாக இவரது நூலே பரிசளித்து வருகின்றனர் காதலர்கள்.அதனால்தான் இவரது நூல்கள் குறுகிய காலத்தில் அடுத்த பதிப்புகளும் வெளி வந்து கொண்டு இருக்கிறது . காதலர்கள் காதலுக்கு அடுத்த படியாக, நேசிப்பது தபூ சங்கர் கவிதைகள் என்றால் மிகை அன்று .அட்டைப்பட வடிவைப்பு ,கட்டமைப்பு, அச்சு என அனைத்தும் மிக நேர்த்தியாக
உள்ளது .நூலை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக
உள்ளது. பதிப்பித்த விஜயா பதிப்பகதாருக்கு பாராட்டுக்கள் .நூலின்
பெயரே சிந்திக்க வைக்கின்றது .தொட்டால் சிணுங்கி கேள்வி பட்டு இருக்கிறோம்
."பார்த்தால் சிணுங்கி "வித்தியாசமாக உள்ளது .காதலித்தவர்களுக்கு இதன் பொருள் நன்கு விளங்கும் . திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் நா .முத்துக் குமார் அவர்களின்
அணிந்துரை அழகுரையாக உள்ளது .காதலர் தின பரிசாக இந்த நூலை வழங்கலாம் என்று
பரிந்துரை செய்து முடித்துள்ளார் .
மரங்கள் அசைய வில்லை என்றால் காற்று வர வில்லை என்று நினைப்போம் .இது சாதாரண பார்வை .மரங்கள் அசைய வில்லை என்றால் கவிஞர் தபூ சங்கரின் காதல் பார்வை என்னவெண்டு கவிதையில் பாருங்கள் .
நூலின் முதல் கவிதையே காதல் உணவுடன் தொடங்குகின்றது .
உங்கள் வீதியில் மரங்கள்
அசைய வில்லை என்றால்
அங்கே
எங்கோ ஒரு காதல்
புழுங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .
காதலியை புகழ்வது காதலன் கடமைகளில் ஒன்று .மிக அதிகமாக புகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வாள் காதலி .கவிஞர் தபூ சங்கர் காதலியை புகழும் அழகு தனி அழகு .தனி நடை .
ஒரு வருட
உலக அழகிகளே
ஒதுங்கி நில்லுங்கள்
ஆயுள் கால
உலக அழகி
வருகிறாள் .
இன்றைய இளம் பெண்கள் இன்று அவ்வளவாக அணிவதே இல்லை .ஆனால் கவிஞர் தபூ சங்கர் காதலி அணியும் வழக்கம் உள்ளதை பார்த்தால் வடித்த கவிதை இது .
கொலுசு
வளையல்
பூ
இதெல்லாம்
உன் அழகுபரப்புச்
செயலாளர்கள் .
கொள்கை பரப்புச் செயலாளர்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம் .அழகுபரப்புச் செயலாளர்கள் இப்போதுதான் கேள்விப் படுகிறோம். வித்தியாசமான சிந்தனை .பாராட்டுக்கள் .
காதலி அமைதியானவள் ஆனால் அவளது அழகோ மிகவும் ஆர்ப்பாட்டமானது என்பதை எப்படி ? எழுதுகிறார் பாருங்கள் .
நீ ரொம்ப ரொம்ப
அமைதியான
பெண்தான்
ஆனால்
உன் அழகுதான்
அடங்கப் பிடாரி .
"இமைக்காமல் பார்க்கும் போட்டியில் என்னை வென்றவள் அவள் "என்று நான் எழுதிய கவிதையை நினைவூட்டிய கவிதை ஒன்று .
கண்கள் கூசாமல்
சூரியனைப் பார்ப்பதற்குக் கூட
கண்ணாடி உதவுகிறது .
ஆனால்
உன்னைக்
கண்கள் கூசாமல் பார்க்க
எதுவுமே
உதவுவதில்லை .
காதலி தந்த ஒன்றை மிக சாதரணமானதாக இருந்தாலும் அதை பத்திரப் படுத்துவது
காதலன் கடமை .அந்த வகையில் ஒரு கவிதை. படிக்கும் வாசகர்களுக்கு அவரவர்
காதல் நினைவை மலர் விக்கும் விதமாக ஒரு கவிதை .
பேருந்தில்
நீ எனக்காக
எடுத்துக் கொடுத்த
பயணச்சீட்டு
இன்னும்
பயணித்துக்
கொண்டிருக்கிறது.
நூல் முழுவதும் காதலர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கும் கவிதைகள் ஏராளமாக உள்ளது.
இந்த உலகம்
எத்தனையோ
சர்வாதிகாரிகளைப்
பார்த்திருக்கிறது
ஆனால்
உன்னை மாதிரி ஒரு
சர்வ அழகுக்காரியை
இப்போதுதான்
பார்க்கிறது .
காதலியை சர்வாதிகாரி என்று சொல்ல வருகிறாரோ என்று எதிர்பார்த்து ஏமாந்தேன் .என்பதே உண்மை .சர்வ அழகுக்காரியை என்று எழுதி வியப்பில் ஆழ்த்தி விட்டார் நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .
காதலன் கனவு காண்பது இயல்பு .அதனை உணர்த்தும் கவிதை .
தினமும்
நான் தூங்கிய
உடனேயே
என் கனவில்
வந்து விடுகிறாயே
நான் எப்போது
தூங்குவேன் எண்டு
நீ எங்கிருந்து
கவனிக்கிறாய் .
காதலியிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு வேண்டுகோள் வைக்கிறார் பாருங்கள் .
நீ என்னை
காதலிக்கக் கூட
வேண்டாம்
உன் தோழிகளில்
ஒருத்தியிடமாவது
அவன் என்னைக்
காதலிக்கிறான் தெரியுமா
என்று
ஒரே ஒருமுறை சொல்
அது போதும் .
இப்படி நூல் முழுவதும் அட்டை முதல் அட்டை வரை காதல் ரசம் சொட்டச் சொட்ட
கவிதைகள் வடித்துள்ளார் .விமர்சனம் எழுத மேற்கோள் காட்ட எனக்குப் பிடித்த
கவிதைகளை மடித்து அடையாள படுத்தினேன் .கடைசியில் எல்லாம் பக்கமும் மடித்து
விட்டேன். பிறகு மறு முறை படித்து மிகவும் சிரமப்பட்டு சிலவற்றை தவிர்த்து
எழுதி உள்ளேன் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் நூலை படித்து முடித்தவுடன் நாமும்
காதல் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்து விடும் .சில நாட்களில்
நானும் காதல் கவிதை எழுதி இணையத்தில்பதிப்பித்து விடுவேன் . கவிஞர்
தபூ சங்கர் காதலர்களை மட்டும் மகிழ்விக்க வில்லை .கவிஞர்களையும்
மகிழ்வித்து இளமையாக இருக்க சிந்திக்க உதவுகின்றார் கவிதைகள் மூலம் .
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் .காதல் கவிதைகள் மட்டுமே எழுதி வருகிறீர்கள் .
உங்களுடைய கவித் திறமையை சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் எழுதவும் பயன்
படுத்துங்கள்
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
-
சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் எழுதவும்
கவித்திறமையை பயன் படுத்துங்கள்...
-
விமர்சனம் நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
பார்த்தால் சிணுங்கி
பெண்ணே நீ ஒரு கவிதை
உனக்கு நான் ஒரு கவிதை எழுதினேன்
எழுதிய கவிதை உன் போல் அழகாக இல்லை
என்று கண்ணீர் விடுகிறது பெண்ணே...
உனக்கு நான் ஒரு கவிதை எழுதினேன்
எழுதிய கவிதை உன் போல் அழகாக இல்லை
என்று கண்ணீர் விடுகிறது பெண்ணே...
vickramhx111- புதிய மொட்டு
- Posts : 2
Points : 2
Join date : 27/08/2012
Age : 35
Location : Coimbatore
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
அழகு சொல்ல வார்த்தையே இல்லை என்னால் இப்படி எழுதமுடியவில்லையே கொஞ்சம் பொறாமை (வருத்தம் )
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: பார்த்தால் சிணுங்கி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|