தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

3 posters

Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Nov 06, 2012 9:51 pm

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!

கவிஞர் இரா .இரவி .

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் !
உலகம் முழுவதும் பரவியுள்ள
மொழி தமிழ் !


[b]உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை
உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் !

பன்னாட்டு ஆட்சிமொழியான
[/b][b][b]மொழி [/b][/b][b][b]தமிழ் !
பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் !

[/b][/b]
இணையத்தில் வாகை சூடிய மொழி தமிழ் !
இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் !

மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் !
மூத்த புலவர்கள் கட்டிக் கா
த்த மொழி தமிழ் !


[b][b][b]எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் !
இணையில்லா திருக்குறளை
[/b][/b][/b][b][b][b][b][b][b][b]ஈ[/b][/b]ந்த[/b][/b][/b][/b][/b][b][b][b][b][b][b][b][b]மொழி[/b][/b][/b] தமிழ் !


[/b]மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ்
மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் !

[/b][/b][/b][/b]செம்மொழி நம் மொழி உணர்வாய் தமிழா !
செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா !

கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் !

கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் !

கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் !
கலப்படம் மொழியில்புரிவதும் குற்றமே !

இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் !

எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் !

இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் !
இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் !

[b][b][b]தமி[b]ங்கிலப் பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் !

தமிழை தமி
ழாகவேப் பேசிட முயலுங்கள் !

ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது

[/b][/b][/b][/b]தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து !
தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து !




இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் !
இருப்பவன் பிச்சை எடுத்ல் நியாயம் !

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 8:19 am

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் !
ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!
--

தமிழ் மொழியில் வாழ்வியல் உள்பட அனைத்தும் இருக்கிறது. தமிழில் கல்வி கற்றால் வேலைதான் நிறைய கிடைக்க மாட்டேன் என்கிறது. தமிழைத் தவிர பிற பாடங்கள் படித்தால் உடனே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. எடுத்துக்காட்டுக்கு... நாங்களே (தமிழ் துறையில் படித்தவர்களே) சாட்சி.

யாண்டா தமிழைப் படிச்சோமுன்னே ஆயிடுச்சி...

இன்று கல்வி என்பது சம்பாதியத்துக்கே தான்... அந்த சம்பாதியத்தை தமிழ் மொழி தரவில்லை... தர முடியாது என்பது என் கருத்து.

பேச்சுக்கு வேண்டுமானால் தமிழ் தமிழ் என்று பேசலாம்... வேலைக்கும் வாழ்க்கைக்கும் தமிழ் உதவாது. அரசியல்வாதிகள் இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனில் அடுத்த தலைமுறையினர் தமிழ் கற்பதை விட்டுவிட்டு ஆங்கிலத்துக்கே சென்று விடுவார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 4:09 pm

வேலைக்கும் வாழ்க்கைக்கும் தமிழ் உதவாது..
இது ஒரு கசப்பான உண்மையே
-
எனது தம்பி கணிதம் (M.Sc) முடித்தவுடன், அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் 1972 ல் லெக்சரர் ஆக பணியில்
சேர்ந்தார். (செலவு ஏதுமின்றி..)
-
அவருடன் பள்ளி இறுதி வரை படித்த நண்பர், தமிழில்
புலவர் பட்டம் பெற்று பத்தாண்டுகள் வேலை வாய்ப்பில்லாமல்
தவித்தார். இது அப்போதைய நிலை
-
அது இன்றும் தொடர்கிறது...
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Nov 07, 2012 7:11 pm

தமிழ் படித்து விட்டு ஏன் வேலைக்கு போக வேண்டும் .பலருக்கு வேலை கொடுங்கள் .தமிழில் படித்தவர்தான் அப்துல் கலாம் .தமிழில் படித்தவர்தான் மயில்சாமி அண்ணாதுரை தமிழில் படித்தவர்தான் சாலமன் பாப்பையா ,தமிழில்
படித்தவர்தான் கு .ஞானசம்பந்தம் தமிழில் படித்தவர்கள் தான் திரைப்படத்
துறையில் முத்திரை பதித்த இயக்குனர்கள் ,இசை அமைப்பாளர்கள் ,நடிகர்கள் .எனவே தமிழை தமிழர்களே குறைத்து ப் பேசாதீர்கள் .இந்தி
படித்தால் வேலை கிடைக்கும் என்பது மாயைவட மாநிலகளில் இந்தி
தெரிந்தவர்களுக்கு வேலை இன்றி தமிழகதிற்கு வேலை தேடி வந்த வண்ணம் உள்ளனர் ..ஆங்கிலம் உலக மொழி என்கின்றனர் .ஆங்கிலம் அறிந்து அமெரிக்காவில் வேலையின்றி
வாடுகின்றனர் பலர் .தமிழில் படித்தால் பண்பாடு வரும் ஒழுக்கம் வரும் நல்ல
சிந்தனை வரும் வாழ்வில் முன்னேற்றம் வரும் ."தமிழ் படித்தால் வேலை
கிடைக்காது என்பது பழைய புலம்பல்" தமிழ் படித்தால் மனிதன் மனிதானாக வாழலாம் .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 7:45 pm

தொலைக்காட்சியினர் மாற வேண்டும்
-
தொலைக்காட்சிகளில் ஷோ டைம்,
டாப்டக்கர்,
ஸ்டார்ஸ் ஸ்டைல்,
சூப்பர் ஹிட் படம்,
கிளைமாக்ஸ்,
சூப்பர் டூப்பர்,
சூப்பர் காமெடி,
சூப்பர் டாப்டென், என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.

தொலைக்-காட்சிகளில் எல்லாம் தமிழ் முழுக்க வரவேண்டும்.
அதற்கு தொலைக்காட்சி நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 7:51 pm

தமிழக்கல்வியின் இன்றைய நிலை
------------------------
தமிழகத்தில் உள்ள 96 பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவ,
மாணவியருக்கு திறனறி தேர்வு நடத்தப்பட்டது. அதில்
மாணவர்கள் தமிழில் பிழையி்ன்றி எழுதவும், தடையின்றி
வாசிக்கவும் சிரமப்படுவது கண்டறியப்பட்டது.

தமிழ் மொழியை வாசிக்க திணறும், .மற்ற பாடங்களை
படிப்பது கடினமாகும்.
-

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 7:57 pm

தொலைக்காட்சி சேனல்கள் லாப நோக்கத்திற்காகச் செயல்படுவது. அது எப்படியாவது நடந்துகொண்டு போகட்டும்...

தமிழக அரசு... தமிழில் படித்தவர்களுக்கும் தமிழில் கல்வியல் பட்டம் பெற்றவர்களுக்கும் கூட வேலைவாய்ப்பில் குறைவான இடத்தைத்தான் நிரப்புகின்றன...

என்னுடன் தமிழில் படித்து கல்வியல் பட்டம் பெற்றவர்கள் அரசு வேலையில் சேர்ந்துவிட்டார்கள்... அப்படிச் சேராதவர்கள் கூட தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளில் சேர்ந்து பத்தாயிரத்துக்கும் மேலாகச் சம்பளம் பெறுகிறார்கள்... தமிழில் பயின்றவர்கள் 3500 முதல் 6000 ரூபாய்க்குத்தான் வேலைக்குப் போகிறார்கள்... கல்லூரியில் அதைவிட கொடுமை... தமிழில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் 5000 முதல் 8000 வரை கூட கொடுக்க யோசிக்கிறார்கள்...

தமிழ்தானே என்ற மெத்தன போக்கே காரணம்...

தமிழ் வாழ்வியலை கொடுக்கிறது. வாழ்க்கைக்கு - வேலைக்கு கை கொடுப்பது இல்லை...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 07, 2012 8:02 pm

eraeravi wrote:இந்தி
படித்தால் வேலை கிடைக்கும் என்பது மாயைவட மாநிலகளில் இந்தி
தெரிந்தவர்களுக்கு வேலை இன்றி தமிழகதிற்கு வேலை தேடி வந்த வண்ணம் உள்ளனர் ..ஆங்கிலம் உலக மொழி என்கின்றனர் .ஆங்கிலம் அறிந்து அமெரிக்காவில் வேலையின்றி
வாடுகின்றனர் பலர் .தமிழில் படித்தால் பண்பாடு வரும் ஒழுக்கம் வரும் நல்ல
சிந்தனை வரும் வாழ்வில் முன்னேற்றம் வரும் ."தமிழ் படித்தால் வேலை
கிடைக்காது என்பது பழைய புலம்பல்" தமிழ் படித்தால் மனிதன் மனிதானாக வாழலாம் .

தமிழில் படித்து தமிழாலே வாழ்பவனே சொல்கிறேன்... தமிழால் (தமிழ் பயின்றவர்கள்) 10 க்கும் குறைவான சதவிதத்தினர்தான் நன்றாக வாழ முடிகிறது. மற்ற... துறையினர் 90 சதவீதம் நன்றாக செல்வாக்குடன் - வேலைவாய்ப்புடன் வாழ வைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Nov 07, 2012 9:50 pm

தமிழ் படித்து விட்டு எந்த முயற்சியும் இன்றி அரசு வேலைக்காக
காத்திருந்து வருந்துபவர்10 சவிகிதம் பேர் தான் ..தமிழ் படித்து விட்டு மற்ற
90சவிகிதம் பேர் வாழ்வில் சாதனை புரிந்து வருகின்றனர் .ஆங்கிலத்தில் பொறியியல் படித்து விட்டு வேலையின்றி பாடுபவர்களும் இருக்கிறர்கள் என்பதை உணருங்கள்
.தமிழையும், தமிழ் படிப்பையும் குறை சொல்வதை தமிழ் மாணவரான நீங்கள் செய்யாதீர்கள் .
உங்கள் கேள்விகளுக்கு விடை பதிலில் உள்ளது .
தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா நேர்முகம் கண்டு மகிழுங்கள் .

[You must be registered and logged in to see this link.]
--
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Wed Nov 07, 2012 10:09 pm

தமிழில் போதிய (அறிவியல் / சமூக அறிவியல்) நூல்கள் இல்லாத
காரணத்தால்தான் அனைத்து நிலையிலும் தமிழ்வழிக் கல்வியை
நடைமுறைப்படுத்த முடியாமல் நொண்டிக் கொண்டிருக்கிறோம்.


மேனிலைப் பள்ளிப் படிப்புவரை தமிழ்வழி பயின்றுவிட்டுக்
கல்லூரிக்குச் செல்கையில் ஆங்கிலவழியிலேயே மிகப்பெரும்பாலும்
கற்கவேண்டியுள்ளது என்பதால், பள்ளியிலேயே ஆங்கிலவழி
பயின்றவர்களுக்கு அது பெரும் வசதியாகிவிடுகிறது.

எனவே, பொருட் செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளை
ஆங்கிலவழிக் கல்வியில் சேர்த்து விடும் பெற்றோருடைய
மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.


தமிழ்வழிக் கற்றோருக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம்கூட வேண்டாம்.
முன்னுரிமையாவது தரப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை,


அவ்வளவு ஏன், ஆட்சியின் தலைமையிடமான தலைமைச் செயலகத்தில்
குறைந்த பட்சம் தமிழ் பேசத் தெரியாதவர்களுக்கு இடமில்லை என்று
சட்டமியற்ற முடியுமா?


இப்படியொரு கேள்வியைக் கேட்ட உடனே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு
பீறிட்டுக் கிளம்பிவிடும்.


1978லேயே அரசு ஊழியர்கள் தமிழில் ஒப்பமிட வேண்டும் என அரசாணை
பிறப்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், அதை மீறுபவர்களை எதுவும் செய்ய
இயலா நிலையிலேயே இன்றுவரை அரசு உள்ளது.

-
============================================
(முனைவர் ச. ராஜநாயகம், லயோலா கல்லூரி)
(கட்டுரையிலிருந்து)
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Wed Nov 07, 2012 10:22 pm

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆயவு நடத்தி அறிவுரை வழங்கி தமிழக அரசுப் பணியாளர்கள் அனைவரும் தமிழில்தான் ஊதியத்திற்கு கையொப்பம் இட்டு வருகின்றனர் .

என் இணையத்தில் நான் எழுதிய கட்டுரைதமிழ் ஆட்சி மொழி
[You must be registered and logged in to see this link.] படித்துப் பாருங்கள்
.
தமிழை உயர்த்தி தமிழ் நாட்டில் தமிழ் இணையத்தில் ஒரு கவிதை எழுதியதற்கு தமிழர்களின் விமர்சனம் பாருங்கள்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும்  பிற மொழியில்!   கவிஞர் இரா .இரவி  Empty Re: என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum