தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
5 posters
Page 1 of 1
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
கடவுளுக்குத்தான் வெளிச்சம்
By தினமணி
First Published : 02 February 2013 02:58 AM IST
பெட்ரோலிய எண்ணெய் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறது. டீசல் விலை 55 காசுகள் உயர்த்தப்படும்போதும், பெட்ரோல் விலை 50 காசு கூடும்போதும் பெருமூச்சு விடும் இந்தியர்கள், சமையல் எண்ணெய் விலை உயரும்போது அதைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்தக் கவலை, பெருமூச்சு எல்லாமும் பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆக உயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும் ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) பருவமழை பொய்த்துப்போனதால் எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறை அரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரே நிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500 அமெரிக்க டாலர்!
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும் சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
[You must be registered and logged in to see this link.]
By தினமணி
First Published : 02 February 2013 02:58 AM IST
பெட்ரோலிய எண்ணெய் மட்டுமே நம் கவனத்தை ஈர்க்கிறது. டீசல் விலை 55 காசுகள் உயர்த்தப்படும்போதும், பெட்ரோல் விலை 50 காசு கூடும்போதும் பெருமூச்சு விடும் இந்தியர்கள், சமையல் எண்ணெய் விலை உயரும்போது அதைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்தக் கவலை, பெருமூச்சு எல்லாமும் பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை சுமார் ரூ.90 ஆக இருந்தது. இப்போது ரூ.120 ஆக உயர்ந்துவிட்டது. நல்லெண்ணெய் விலை ரூ.145 லிருந்து ரூ.170 ஆக உயர்ந்துவிட்டது. விலை உயர்வுக்குச் சொல்லப்படும் ஒரே காரணம்: எண்ணெய் வித்துகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அமைச்சரவையில் ஜனவரி 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, வணிகமுத்திரை உள்ள, 5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றுமதி ஆண்டுக்கு 20,000 டன்கள் மட்டுமே என்ற வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தேங்காய் எண்ணெயை இதுவரை கொச்சி துறைமுகத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, எந்தத் துறைமுகத்திலிருந்தும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2008-ஆம் ஆண்டு முதலாகவே தடை உள்ளது. ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் காரணம் காட்டி சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் பல்வேறு நிபந்தனைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. "5 கிலோவுக்கு மிகாமல், பைகளில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட' என்ற நிபந்தனையே அபத்தமான ஒன்று!
2012 காரீப் பருவத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) பருவமழை பொய்த்துப்போனதால் எண்ணெய் வித்துகள் உற்பத்தி 20 விழுக்காடு குறையும் என்று வேளாண் துறை அரசுக்கு அறிக்கை அளித்ததால், சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு 2012 ஆகஸ்ட் மாதம் அரசு தடை விதித்தது. உள்நாட்டில் சமையல் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால் அடுத்த இரு மாதங்களில் இந்தத் தடை தளர்த்தப்பட்டு 10,000 டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்தார்கள். அதன் பிறகு இதை 20,000 டன் வரை ஏற்றுமதி செய்யலாம் என்றார்கள். இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏற்றுமதி செய்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரே நிபந்தனை - குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஒரு டன் 1,500 அமெரிக்க டாலர்!
இந்த நிபந்தனையின் காரணமாக, எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம் என்று அரசு அனுமதிப்பதால், ஏற்கெனவே உள்நாட்டில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் விலை உயராமல் இருக்கும் வகையில் இந்த குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் அரசு, குறைந்தபட்ச விலையைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு குழுவையும் அமைத்திருக்கிறது.
இந்த நிபந்தனையை வைத்துப் பார்க்கும்போது, இது கடலை எண்ணெயை மட்டுமே கருத்தில்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம். தற்போது சர்வதேசச் சந்தையில் கடலை எண்ணெய்க்குத்தான் இந்த அளவுக்கு விலை கிடைக்கும். மற்ற சமையல் எண்ணெய்க்கு விலை குறைவு.
இத்தகைய ஏற்றுமதி நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவால் உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் அளவும் குறைவு என்று அரசு கூறுகிறது. அப்படியானால், 2012 ஆகஸ்ட் மாதம் பதறிப்போய்த் தடை விதிக்கக் காரணம் என்ன?
இந்த ஆண்டு எண்ணெய் வித்துகள் வரத்து மிகையாக இருக்கிறதா? இந்த ஆண்டு எண்ணெய் உற்பத்தி அதிகமா? என்ற கேள்விகளை எழுப்பினால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
120 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில் தனிநபர் சமையல் எண்ணெய் பயன்பாடு 13.60 கிலோ. கொலஸ்ட்ரால் அச்சுறுத்தல்களை மீறி, எல்லா வகை சமையல் எண்ணெயும் சந்தையில் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பயன்பாட்டு அளவு ஆண்டுதோறும் கூடிக்கொண்டு வருகிறதே தவிர, குறையவில்லை. இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய்த் தேவை 171 லட்சம் டன். ஆனால் சமையல் எண்ணெய் உற்பத்தி வெறும் 68 லட்சம் டன் மட்டுமே. குறைந்தது 100 லட்சம் டன் சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தாக வேண்டும்.
உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். உலகிலேயே அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்.
இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் 90 விழுக்காடு பாமாயில் மலேசியா மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பாமாயில் விலை, நம் உள்நாட்டு சமையல் எண்ணெய் விலையைக் காட்டிலும் குறைவுதான். அதற்காக எத்தனை காலம் நாம் இறக்குமதி எண்ணெயை நம்பிக்கொண்டிருக்க வேண்டும்? உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற நம்மால் முடியவில்லை. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை விரிவு செய்ய முயற்சிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
எண்ணெய் வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; அது தெரிந்தும், ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது ஏனாம்?
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கடவுளுக்குத்தான் வெளிச்சம்
பெருமூச்சு எல்லாமும் பெண்களின் வேலையாக சமையலறையில் முடிந்து போகிறது.
எல்லாமே ஒரு நாடகம் தான் ஏற்றுமதி யென்ற பெயரில்...
வருட கணக்கு காட்டவே இது ...
எல்லாமே ஒரு நாடகம் தான் ஏற்றுமதி யென்ற பெயரில்...
வருட கணக்கு காட்டவே இது ...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» வெளிச்சம்…
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» இருளிலும் வெளிச்சம்
» நீ வெளிச்சம் தந்தால் சரி
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» வெளிச்சம்!!!!!!!!!!!!
» இருளிலும் வெளிச்சம்
» நீ வெளிச்சம் தந்தால் சரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|