தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

4 posters

Go down

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Mon Apr 01, 2013 11:09 pm

நெஞ்சத்தூண்கள் !
நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்
இராம..இளங்கோவன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
சுலோச்சனா பதிப்பகம் . 26,2ND D GROSS,SIR.M.V.NAGAR,RMAIAH COCONUT GARDEN,RAMAMURTHY NAGAR,BANGALORE.560016.
CELL 09845526064. விலை ரூபாய் 110.

நூலின் பின் அட்டையில் தேனிரா .உதய குமார் அவர்கள் எழுதியது முற்றிலும் உண்மை ."தமிழன்னைக்குக் கிடைத்த தலையாய சேவகர் " நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் .

தமிழ் பற்றி தமிழர் பற்றி பெண்ணுரிமை பற்றி மரபுக் கவிதைகளில் கவிதை வடித்து ,தமிழ் விருந்து வைத்துள்ளார் .இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அணிந்துரையில் "ஒரு மரபுக் கவிதைப் புத்தகத்திற்கு ,புதுக் கவிதையால் அணிந்துரை ஆசிரியருக்கு மாணவன் பொன்னாடை போர்த்துவது மாதிரி !"என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார் .
பலரின் வாழ்த்துரையும் ,அணிந்துரையும் நூலிற்கு பெருமை சேர்க்கின்றது .இந்த நூலில் நிறைய தமிழ் பற்றிய கவிதைகள் உள்ளது .நூல் ஆசிரியர் இராம .இளங்கோவன் அவரது அன்பு மகன் நவீன் இளங்கோ 26 வயதில் காலம் சென்றதை நினைத்து வருந்தி சோகக் கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் மனதையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார் .மகன் மீது அவர் வைத்து இருந்த பாசத்தை நேசத்தை உணர முடிகின்றது .இந்த நூலை அவரது அன்பு மகன் நவீன் இளங்கோவிற்கு படையல் வைத்துள்ளார் .

.கவியரங்களில் பாடிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .நெஞ்சத்தூண்கள் தமிழ்த்தூண்களாக உள்ளது . மரபுத்தூண்களாக உள்ளது . கவித்தூண்களாக உள்ளது .பாராட்டுக்கள் .கர்னாடக மாநிலத்தில் வாழ்ந்தபோதும் தாய்த் தமிழை மறக்காமல் கவிதைகள் வடித்து தமிழ் அன்னைக்கு மரபுக் கவிதைகளால் மணி மகுடம் சூட்டி உள்ளார் .தமிழ்ச் சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .தமிழனாகப் பிறந்ததற்காக உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் மார் தட்டிக் கொள்ளும் விதமாக நூல் உள்ளது .
.
தமிழ் வணக்கம் !
தாயே ! தமிழே ! உயிரே ! உன்றன்
சேயாம் என்றான் நாவில் நின்று
வாயும் மணக்க தமிழ்ப்பால் மொண்டு
தாயும் நீயும் தருவாய் ;மண்ணில்
மாய்ந்தும் நிலைத்து வாழ்வேன்
தாய்மை மாறா தமிழுனை வணங்கியே !

எழுச்சி ,மலர்ச்சி ,உணர்ச்சி, புத்துணர்ச்சி தரும் கவிதைகளாக உள்ளது .

எழுகவே !
எழுக ,எழுக,எழுகவே !-தமிழர்
எழுத்து விட்டால் இமயமும் தாழ்வே !
உழுக , உழுக, உழுகவே !-தமிழா
உள்ளம் முழுதும் தமிழால் உழுகவே !

தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்து பேசி தமிழ்க் கொலை நடத்துவோரைக் கண்டிக்கும் விதமாக கவிதைகள் உள்ளது .

தமிழா துணிவாய் !
தமிழா நீ என் குருதியடா - ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளையடா !
அமிழ்து தமிழே நம்மொழியடா - அயல்
மொழியைக் கல்ப்பதேனடா ?

உரிமைக்கு உரக்க குரல் கொடுத்து உள்ளார் .உனக்குஉள்ள எல்லா உரிமையும் எனக்கும் உண்டு .உயர்ந்தவன் , தாழ்ந்தவன் எவனும் இல்லை .இந்த நாட்டில் எல்லோரும் சரி நிகர் சமமாக நடத்தப் பட வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

உரிமை நாள் !
வந்திட வேண்டு மென்றால் நாட்டில்
வந்திட வேண்டும் தனித்தனி உரிமை !
உரிமை என்பது தான மல்ல ;
உரிமை தம்மை யாசித்து வாங்க !
நானும் உன் போல் சரசம மாக
நாளும் உரிமை பெற்றிட வேண்டும் !

உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் வழியில் நல்ல நட்பின் சிறப்பையும் தீய நட்பின் தீமையையும் கவிதைகளில் விதைத்து உள்ளார் .

சான்றோர் நட்பு !
நட்பிலா வாழ்வும் துன்பம் தானடா !- நல்ல
நட்பை நெஞ்சில் ஊன்றி வையடா !
நட்பை உணரா உணர்வும் தீமை -தானடா !
நட்பை உணர்த்த நடந்து காட்டடா !
பொல்லாத் தீய நட்பு கொண்டால் -மெல்ல
நல்ல பெயரும் நழுவி ஓடும் !
நல்ல சான்றோர் நட்பு கொண்டால் - இந்த
நாடே உன்னைப் போற்றிப் புகழும் !

பெண்ணுரிமைக்காக உரத்த சிந்தனையாக சிந்தித்து ,ஆணாதிக்க சிந்தனையை அகற்றிட கவிதை வடித்துள்ளார் .

பெண்களே வாரீர் !
நீரின்றி இவ்வுலகம் அமைவ தில்லை
நிலமின்றி எவ்வுயிரும் வாழ்வ தில்லை ;
வேரின்றி எம்மரமும் நிற்ப தில்லை ;
வேற்றுமையில் எவ்வுறவும் நிலைப் பதில்லை ;
பாரினிலே பெண்ணின்றி வாழ்வு மில்லை ;
நாரிணைந்த பூக்களாலே நார்ம ணக்கும் ;
நன்குணர்ந்து ஆடவர்காள் பெண்மை காப்பீர் !

அவரது அன்பு மகன் நவீன் இளங்கோ பற்றிய கவிதை உருக்கம் ,நெகிழ்ச்சி ,சோகம் அனைத்தும் உள்ளது .

காவல் தெய்வம் நீ எங்கே !
தேடாத இடமில்லை ;தேடித் தேடிப்
போகாத ஊருமில்லை ;போயிப் போயிப்
பார்க்காத நாடுமில்லை ;பார்த்துப் பார்த்துக்
கேட்காத ஆளுமில்லை ;கேட்டுக் கேட்டு
நோகாத என்நெஞ்சு நோகுதய்யா !
சேராத இடம்சென்றா சேர்ந்து விட்டாய் ?
போகாத ஊருக்கா பயணப் பட்டாய் ?
பாவியென்னைப் புலம்பவிட்டு நீ ஏன் சென்றாய் ?

கவியசு கண்ணதாசன் போல எந்த நாளும் எனக்கு இறப்பு இல்லை என்று படைப்பாளி மார் தட்டி உரைப்பது போல உரைத்து உள்ளார் .பாராட்டுக்கள் .

என் கவிதை !
பிறப்பிற்கும் இறப்பிற்கும் - இடையே
இருப்பதுவோ வாழ்க்கையடா !
இரண்டினையும் வெல்லுவது - என்றும்
இறவாத கவிதையடா !
வேண்டும் வேண்டும் என்று வாழ்வியல் கூறும் கருத்துக்களை கவிதையில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
.
வாழ்தல் வேண்டும் !
முளைத்தாலும் ஆல்போல் முளைத்தல் வேண்டும் !
முனைந்தாலும் சான்றோனாய் முனைதல் வேண்டும் !

இளைத்தாலும் புலிபோல இருத்தல் வேண்டும் !
இருந்தாலும் இறந்தாலும் உயிர்த்தல் வேண்டும் !

வளைந்தாலும் வென்றிடவே வளைதல் வேண்டும் !
வருந்தினாலும் பிறருக்காய் வருந்தல் வேண்டும் !

கிளைத்தாலும் கிளைகள்போல் கிளைத்தல் வேண்டும் !
கிடந்தாலும் கணிமம்போல் கிடத்தல் வேண்டும் !

திரை உலகைச் சாடி கவிதைகள் உள்ளது .திரை உலகில் சிலர் நூல் ஆசிரியரை ஏமாற்றி உள்ளனர் .அந்த வருத்தையும் பதிவு செய்துள்ளார் .திரைப்படப் பாடல்களில் ஆங்கிலச் சொற்கள் கலக்கும் அவலத்தையும் கண்டித்து உள்ளார் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 7:00 am

பெண்களே வாரீர் !
நீரின்றி இவ்வுலகம் அமைவ தில்லை
நிலமின்றி எவ்வுயிரும் வாழ்வ தில்லை ;
வேரின்றி எம்மரமும் நிற்ப தில்லை ;
வேற்றுமையில் எவ்வுறவும் நிலைப் பதில்லை ;
பாரினிலே பெண்ணின்றி வாழ்வு மில்லை ;
நாரிணைந்த பூக்களாலே நார்ம ணக்கும் ;
நன்குணர்ந்து ஆடவர்காள் பெண்மை காப்பீர் !

- சிறப்பாகப் படைத்துள்ளார்... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 02, 2013 1:27 pm

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Wed May 22, 2013 7:17 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by கலைநிலா Thu May 23, 2013 1:28 pm

மிக்க மகிழ்ச்சி அன்பு மலர்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi Sat Sep 21, 2013 2:09 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Empty Re: நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குத்தூசி ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதிய முகம் ! நூல் ஆசிரியர் : நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
»  "ஹைக்கூ 500" நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை -"நெருப்பலைப் பாவலர் ", இராம இளங்கோவன்;பெங்களூரு.
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» குழந்தையுடன் குழந்தையாய் ! (சிறுகதைகள்) நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum