தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
3 posters
Page 1 of 1
படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
படித்ததில் பிடித்தது !
உள்ளொளிப் பயணம் !
நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப . முதன்மைச் செயலர் .iraianbuv@hotmail.com
நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
viji.masi@gmail.com
நூல் ஆசிரியர் வெ .இறையன்பு அவர்கள் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர். மெத்தப் படித்தவர். படித்தவற்றை எல்லாம் " தன் உள்" வாங்கி , அதன் பயனை அனுபவிப்பவர். தனது வாழ்க்கைப் பயணத்திற்கு அவை எவ்வாறெல்லாம் உதவின என்பதில் அவர் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கவேண்டும்! இது என்னுடைய கருத்து. அவரது உள்ளொளிப் பயணம் படித்ததன் பயனாக எனக்குள் ஏற்ப்பட்ட கருத்தாகவும் இதைக் கொள்ளலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாகக் கருதி ஆசிரியர் பல அரிய கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கிறார் என்பதைவிட , இந்நூலில் கொட்டிக் குவித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
பிறப்பு, இறப்பு, இதனிடையே இருக்கும் வாழ்க்கை இவற்றில் உள்ள தத்துவங்களைக் கூற , ஜென் ,ஈசாப் கதைகளிலிருந்தும் ,ஜே.கே., கபீர் ,ஓஷோ ,கன்ஃ பூசியஸ் போன்றோர்களின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு நமக்கு ஒரு தெளிவான வழியைக் காண்பிக்கிறார். நமது உள்ளொளிப் பயணம் நன்றாக அமையவேண்டும் என்ற கருத்தில்!
எல்லோருக்கும் பிறப்பு அவரவர் தாய் வழி! இது முதல் பிறப்பு . இன்னொரு பிறப்பு இருக்கிறது.அது எது தெரியுமா? "தன்னிலிருந்து தன்னைப் பிரசவிப்பது" எவ்வளவு ஆழமான செய்தி ! திருவள்ளுவரின் , "தோன்றின் புகழோடு தோன்றுக " என்பதற்கான அடித்தளமே , 'தன்னிலிருந்து தன்னைப் பிரசவிப்பது' தானோ?
முதல் பிறப்பு ஒரு மனிதனுக்கு, உடலியல் சம்மந்தப்பட்டது; இரண்டாவது பிறப்பு,மன ரீதியான இலட்சியங்களைக் கொண்டதாகும். இது அவனது வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயனுள்ள பிறப்பாகும். இப்பிறப்புதான் அவனது வாழ்க்கையின் தொடர்ந்த செயல்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது ஆகும்.
ஆசிரியரின் இப்பிறப்புதான் .....அவரது இரண்டாவது பிறப்புத்தான் நமக்கு ' உள்ளொளிப் பயணம்' கிடைக்க மூலாதாரமாக இருந்திருக்குமோ?
அவரது இந்தப் பயணத்தை வழித்துணையாகக் கொண்டு நாம் எப்படி "நம்முள் பயணம் செய்வது?". ஆசிரியர் கூறும் கருத்துக்களைக் கூர்ந்து படித்துச் சிந்தித்து செயலாற்றினால் நாமும் பயணம் மேற்கொள்ளலாம்!
அரிய ஆற்றல்களைத் தனக்குள்ளே வைத்திருக்கும் மூளையை நாம் எப்படிப் பயன்படுத்தி
உலகம் பயனுற வாழவேண்டும் என்பதை அடிப்படைக் கருத்தாக வைத்து, 'மனித மூளை' என்ற தலைப்பில்
மூளையைப் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகிறார். மூளைதானே நமது செயல்களின் தலைமைச் செயலகம்!
ஆனால் , அதன் இயக்கங்களுக்கு மூல காரணமான நரம்பு செல்கள் பழுதுபட்டால், புதிய செல்கள் உருவாகாது.
இதற்கான செயலைச் செய்ய மூளைக்கே தெரியாது. இதுதான் மூளையின் மர்மம்! பிறப்புக்கு முன்னும் , இறப்புக்குப் பின்னும்
அறிய முடியாத மர்மம் வாழ்க்கை என்பதைப் போல !
ஆகவே, பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம் கையில் இருக்கும் வாழ்க்கையை நமது மூளையைக் கொண்டு சிறந்த முறையில்
வாழவேண்டும் என்ற கருத்தில் , மூளையின் இயக்கமே மனித குலப் பயணத்திற்கு அடித்தளமாக இருக்கிறது என்ற கருத்தை விளக்குகிறார் நமது
இந்திய ஆட்சிப் பணியாளர்.
தன்னம்பிக்கையை நன்னம்பிகையாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய ஆசிரியர், தன்னம்பிக்கை பற்றிய தனது பயணப் பார்வையை
இன்றைய இளைஞர்களுக்கு எடுத்தியம்புகிறார்".உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் " வெள்ளத்தனைய மலர்நீட்டம்" என்ற வள்ளுவனாரின் கருத்துக்களை
உள்வாங்கி , தனது கருத்துக்களை அவற்றோடு அலசிப் பார்க்கிறார்.வானத்தை இலக்காகக் கொண்டு, மரத்தின் உச்சியையாவது எட்டிப் பிடிப்போம்
என்று நம்மை அவரது பயணத்தில் நம்மை இழுக்கிறார்!
இதுபோன்று , நிறையக் கருத்துக்களை , நிறையத் தலைப்புகளில், நிறைந்த பெரும் அறிஞர் பெருமக்களின் துணையோடு நமக்கு விளக்குகிறார்.
நம் மனம் முழுக்க நல்ல விதைகளைத் தூவியிருக்கிறார். நம் மனம் பூத்துக்குலுங்கினால் , நமது வாழ்க்கைப் பயணம் நமக்கு மட்டுமல்லாது, கலங்கரை
விளக்காக உலகோருக்கும் பயன்படும்.
அருமையான நூல்! அனைவரும் படிக்க வேண்டிய நூல்!
நூலின் முத்தாய்ப்பு , பின் பகுதியில் தொகுத்திருக்கும் அறிஞர் பெருமக்களைப்பற்றிய குறிப்பு , வாசகரின் வசத்திக்காக விரித்திருக்கும் "படித்துப் புரளும் இரத்தினக்
கம்பளமாகும் !
ஆசிரியரை வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.
.
உள்ளொளிப் பயணம் !
நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப . முதன்மைச் செயலர் .iraianbuv@hotmail.com
நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
viji.masi@gmail.com
நூல் ஆசிரியர் வெ .இறையன்பு அவர்கள் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர். மெத்தப் படித்தவர். படித்தவற்றை எல்லாம் " தன் உள்" வாங்கி , அதன் பயனை அனுபவிப்பவர். தனது வாழ்க்கைப் பயணத்திற்கு அவை எவ்வாறெல்லாம் உதவின என்பதில் அவர் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்திருக்கவேண்டும்! இது என்னுடைய கருத்து. அவரது உள்ளொளிப் பயணம் படித்ததன் பயனாக எனக்குள் ஏற்ப்பட்ட கருத்தாகவும் இதைக் கொள்ளலாம்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாகக் கருதி ஆசிரியர் பல அரிய கருத்துக்களைக் கூறிச் சென்றிருக்கிறார் என்பதைவிட , இந்நூலில் கொட்டிக் குவித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
பிறப்பு, இறப்பு, இதனிடையே இருக்கும் வாழ்க்கை இவற்றில் உள்ள தத்துவங்களைக் கூற , ஜென் ,ஈசாப் கதைகளிலிருந்தும் ,ஜே.கே., கபீர் ,ஓஷோ ,கன்ஃ பூசியஸ் போன்றோர்களின் கருத்துக்களையும் எடுத்துக் கொண்டு நமக்கு ஒரு தெளிவான வழியைக் காண்பிக்கிறார். நமது உள்ளொளிப் பயணம் நன்றாக அமையவேண்டும் என்ற கருத்தில்!
எல்லோருக்கும் பிறப்பு அவரவர் தாய் வழி! இது முதல் பிறப்பு . இன்னொரு பிறப்பு இருக்கிறது.அது எது தெரியுமா? "தன்னிலிருந்து தன்னைப் பிரசவிப்பது" எவ்வளவு ஆழமான செய்தி ! திருவள்ளுவரின் , "தோன்றின் புகழோடு தோன்றுக " என்பதற்கான அடித்தளமே , 'தன்னிலிருந்து தன்னைப் பிரசவிப்பது' தானோ?
முதல் பிறப்பு ஒரு மனிதனுக்கு, உடலியல் சம்மந்தப்பட்டது; இரண்டாவது பிறப்பு,மன ரீதியான இலட்சியங்களைக் கொண்டதாகும். இது அவனது வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயனுள்ள பிறப்பாகும். இப்பிறப்புதான் அவனது வாழ்க்கையின் தொடர்ந்த செயல்களுக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது ஆகும்.
ஆசிரியரின் இப்பிறப்புதான் .....அவரது இரண்டாவது பிறப்புத்தான் நமக்கு ' உள்ளொளிப் பயணம்' கிடைக்க மூலாதாரமாக இருந்திருக்குமோ?
அவரது இந்தப் பயணத்தை வழித்துணையாகக் கொண்டு நாம் எப்படி "நம்முள் பயணம் செய்வது?". ஆசிரியர் கூறும் கருத்துக்களைக் கூர்ந்து படித்துச் சிந்தித்து செயலாற்றினால் நாமும் பயணம் மேற்கொள்ளலாம்!
அரிய ஆற்றல்களைத் தனக்குள்ளே வைத்திருக்கும் மூளையை நாம் எப்படிப் பயன்படுத்தி
உலகம் பயனுற வாழவேண்டும் என்பதை அடிப்படைக் கருத்தாக வைத்து, 'மனித மூளை' என்ற தலைப்பில்
மூளையைப் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகிறார். மூளைதானே நமது செயல்களின் தலைமைச் செயலகம்!
ஆனால் , அதன் இயக்கங்களுக்கு மூல காரணமான நரம்பு செல்கள் பழுதுபட்டால், புதிய செல்கள் உருவாகாது.
இதற்கான செயலைச் செய்ய மூளைக்கே தெரியாது. இதுதான் மூளையின் மர்மம்! பிறப்புக்கு முன்னும் , இறப்புக்குப் பின்னும்
அறிய முடியாத மர்மம் வாழ்க்கை என்பதைப் போல !
ஆகவே, பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம் கையில் இருக்கும் வாழ்க்கையை நமது மூளையைக் கொண்டு சிறந்த முறையில்
வாழவேண்டும் என்ற கருத்தில் , மூளையின் இயக்கமே மனித குலப் பயணத்திற்கு அடித்தளமாக இருக்கிறது என்ற கருத்தை விளக்குகிறார் நமது
இந்திய ஆட்சிப் பணியாளர்.
தன்னம்பிக்கையை நன்னம்பிகையாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய ஆசிரியர், தன்னம்பிக்கை பற்றிய தனது பயணப் பார்வையை
இன்றைய இளைஞர்களுக்கு எடுத்தியம்புகிறார்".உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் " வெள்ளத்தனைய மலர்நீட்டம்" என்ற வள்ளுவனாரின் கருத்துக்களை
உள்வாங்கி , தனது கருத்துக்களை அவற்றோடு அலசிப் பார்க்கிறார்.வானத்தை இலக்காகக் கொண்டு, மரத்தின் உச்சியையாவது எட்டிப் பிடிப்போம்
என்று நம்மை அவரது பயணத்தில் நம்மை இழுக்கிறார்!
இதுபோன்று , நிறையக் கருத்துக்களை , நிறையத் தலைப்புகளில், நிறைந்த பெரும் அறிஞர் பெருமக்களின் துணையோடு நமக்கு விளக்குகிறார்.
நம் மனம் முழுக்க நல்ல விதைகளைத் தூவியிருக்கிறார். நம் மனம் பூத்துக்குலுங்கினால் , நமது வாழ்க்கைப் பயணம் நமக்கு மட்டுமல்லாது, கலங்கரை
விளக்காக உலகோருக்கும் பயன்படும்.
அருமையான நூல்! அனைவரும் படிக்க வேண்டிய நூல்!
நூலின் முத்தாய்ப்பு , பின் பகுதியில் தொகுத்திருக்கும் அறிஞர் பெருமக்களைப்பற்றிய குறிப்பு , வாசகரின் வசத்திக்காக விரித்திருக்கும் "படித்துப் புரளும் இரத்தினக்
கம்பளமாகும் !
ஆசிரியரை வணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010
Re: படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
வாழ்த்து பெற தகுதியானவரே
நூலின் ஆசிரியர்...
-
நூலின் ஆசிரியர்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: படித்ததில் பிடித்தது ! உள்ளொளிப் பயணம் !நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப.நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2635
Points : 6341
Join date : 18/06/2010
Similar topics
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
» சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சுட்டும் விழி ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
» மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
» சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|