தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 26, 2013 6:38 pm

பத்துப்பாத்திரம் தேய்த்து 
பத்திரமாய் வளர்த்தேன் 
என் தங்க மகளை ....!!!

படிப்பு  நேரம் தவிர 
என்னுடனேயே 
பணிபுரிவாள் - என் 
தங்க மகள் ....!!!

நண்பர்களுடன் வீண்வம்பு 
இல்லை ...
சுற்றி திரியும் வயதில் 
வரும் காதல் நோய் 
என் மகளிடம் இல்லை ..

படித்தாள் 
பட்டதாரியானாள்
பாட்டிஎன்று அழைக்கவைத்தாள் 
என் மகள் தங்க மகள் தானே ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 27, 2013 10:42 am

கை 
வண்டியிழுத்து பிழைத்தேன் 
ரிட்சா வந்தது 
வண்டி பிழைப்பு போனது 

ரிச்சா வாங்கினேன் 
டாக்சி வந்தது 
ரிச்சா பிழைப்பு போனது 

டாக்சி வாங்கினேன் 
ஆட்டோ வந்தது 
டாக்சி பிழைப்பு போனது 

புதுமையை நானும் 
விரும்புகிறேன் 
புதியத்தற்கு என்னையும் 
தயார் படுத்துகிறேன் 
வீடுதான் பழையதாக 
இன்னும் இருக்கிறது ....

சேமியுங்கள் சேமியுங்கள் 
என்கிறார்களே எப்படி சேமிப்பது 
புதுமையின் வேகத்துக்கு ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 27, 2013 11:08 am

நினைத்து பார்க்கிறேன் 
கோயில் திருவிழாவை 
பத்து நாள் திருவிழாவில் 
படாத பாடு பட்டத்தை ...!!!

முதல் நாள் திருவிழாவிற்கு 
குளித்து திருநீறணிந்து 
பக்திப்பழமாய் சென்றேன் 
பார்ப்பவர்கள் 
கண் படுமளவிற்கு....!!! 

இரண்டாம் நாள் திருவிழாவில் 
நண்பர்களுடன் கோயில் வீதி 
முழுவதும் ஓடித்திரிவதே வேலை 
பார்ப்பவர்கள் எல்லோரும் 
திட்டும் வரை ....!!!

மூன்றாம் நாள் திருவிழாவில் 
மூண்டது சண்டை நண்பர்கள் 
மத்தியில் - கூட்டத்துக்குள் 
மறைந்து விளையாட்டு ....!!!

நாளாம் நாள் திருவிழாவில் 
நாலாதிசையும் காரணமில்லாது 
அலைந்து திரிவேன் ...!!!

ஐந்தாம் நாள் திருவிழாவில் 
சேர்த்துவைத்த காசை 
செலவளித்து விட்டு 
வெறும் கையோடு இருப்பேன் ...!!!

ஆறாம் நாள் திருவிழாவை 
ஆறுதலான நாளாக கருதி 
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!

காத்திருப்பேன் 
தேர் திருவிழாவை -அப்பாவின் 
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு 
அப்பாவும் படியளர்ப்பார் 
அம்மாவும் படியளப்பா ....!!!

தேர் திருவிழா இறைவனின் 
அழித்தல் தொழிற்பாடாம் 
அழித்துவிடுவோம் 
முன்னர் ஏற்பட்ட 
நண்பர் பகையையும் 
கொண்டு சென்ற காசையும் ...!!!

காலம் தான் மாறினாலும் 
அந்த நினைவுகள் -காலம் காலமாய் 
திருவிழா வரும் போது 
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 29, 2013 12:05 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 8:35 am

நன்றி தொடருகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 31, 2013 9:15 am

கொண்டாட்டத்தின் திண்டாட்டம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 31, 2013 9:17 am

உண்மைதான் 
இன்றுவரை திண்டாட்டம் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 6:29 pm

தலைவர் ... 
மேடையில் முழக்கம் 
குழந்தை தொழில் ஒழிக 
தலைவர் கார் கதவு திறந்தது 
சிறுவன் ...!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 17, 2013 5:11 pm

அதிகாலை எழுந்து 
அம்மாக்கள் படும் பாடு 
அம்மாடியோ சொல்லமுடியாத 
அத்தனை துன்பம் ...!!!

அவசர அவசரமாக 
உணவு தயாரிப்பு -அதை 
பொட்டலமாக கட்டும் அவசரம் ,,,,!!!
கட்டிய பொட்டலத்தையும் 
பிள்ளையையும் அவசர அவசரமாய் 
பஸ்ஸில் ஏற்றி பிள்ளை வளர்க்கும் 
அம்மாக்கள் படும் பாடு அப்படியோ 
சொல்லமுடியாத கதைதான் 

என் இந்த அவலம் ...?
கூட்டு குடும்ப சிதைவுதான் 
தனிக்கையாய் அவஸ்தை படுகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 5:31 pm

அதிகாலையில் துயில் எழுந்து 
அகமுகத்துடன் ஆரம்பித்தால் 
அகத்தில் ஆண்டவன் குடியிருப்பான் 

ஆலயம் செல்ல தேவையில்லை 
ஆலயமாக வீட்டை நோக்கினால் 
ஆனந்தம் பெருகும் வாழ்வில் 

இல்லறம் என்பது என்றும் 
இன்பமாய் வாழ்வதற்கே 
இதை உணர்ந்தால் உனக்கு வெற்றி 

ஈசன் பாதம் நினைத்திடு 
ஈகை பண்பை வளர்த்திடு 
ஈரேழு ஜென்மமும் இன்பமே 

உண்டியை அளவோடு உண் 
உழைப்பையும் அளவோடு செய் 
உயிராற்றல் வழுவாய் பெருகும் 

ஊர் வம்பு பேசாமல் 
ஊன் உண்பதை தவிர்த்தால் 
ஊர் போற்றும் அரசன் நீ 

எறும்பு போல் உழைத்திடு 
எடுத்தெறிந்து பேசாதே 
என்றும் இனிமையாக வாழ்வாய் 

ஏர்பிடித்தவன் இறைவன் 
ஏகாந்தம் பேசியே காலத்தை கழிக்காதே 
ஏன் பிறந்தோம் என்று நினைக்காதே 

ஐம்பொறியை  அடக்கு 
ஐம் பூதங்களை மதி 
ஐயம் இன்றி வாழ்வாய் 

ஒற்றுமையோடு உறவாடு 
ஒன்று பட்டு உழைத்திடு 
ஒரு நாள் நீ அரசன் 

ஓர்மம் கொண்டு உழைத்திடு 
ஓதுவதை தொடர்ந்திடு 
ஓர் இனமே வாழ்ந்திடு 

ஔவை சொன்னதை கேள்
ஔடதம் இன்றி வாழ்ந்திருவாய் 
அஃதே நீடூடி வாழ்வாய் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 25, 2013 1:04 pm

நன்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 10:51 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 11:16 pm

உன்னை மணர்ந்தபின் 
பூக்களில் வாசம் இல்லை
உன்னை அடைந்தபின் 
வாழ்கையில் வீணாக்குவதில்லை 
யார் நெஞ்சில் யார் இருப்பார்
என்று ஆண்டவன் போட்ட 
முடிச்சு திருமணம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by Muthumohamed Wed Sep 25, 2013 11:19 pm

வாழ்க்கை கவிதைகள் சூப்பருங்க தொடரட்டும்
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 11:21 pm

நன்றி நன்றி முத்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 9:48 am

வறுமை  யாருக்கும் அழிவதில்லை 


பசித்த வயதில் உணவில்லை..... 
மாற்றியுடுக்க உடையில்லை .....
கிழிந்த காற்சட்டையுடன் இடுப்பில்..... 
நிற்காத காற்சட்டையுடன் ஓடிய போது..... 
வறுமையின் கொடுமை பசித்தால்.... 
மட்டும் புரியும் -உணவு கிடைத்தால்..... 
அடங்கிவிடும் உணவு வறுமை .....!!!

படித்த வயதில் மக்கு மண்டைக்கு..... 
படிப்பதில் வறுமை - எல்லோரும் .....
திட்டினாலும் அகங்காரம் விடாது .....
படிக்க யார் எனக்கு என்ன சொல்வது .....
என்ற இறுமாப்பு - நண்பன் படித்தான் .....
நானும் படித்தேன் -படிப்பு கிடைத்தது .....
அடங்கி விடும் படிப்பு வறுமை ....!!!

உழைக்கும் வயதில் வருமானத்துக்கு.... 
வறுமை - வீட்டில் இருந்து சாப்பிட்டால் .....
மரியாதைக்கு வறுமை - அலைந்து திரிந்து..... 
வேலையை பெற்றவுடன் -வருமானம் கிடைத்தது.. 
அடங்கி விடும் வருமான வறுமை ....!!!

திருமணமான பின் அன்புக்கு வறுமை ....
உறவுகள் வார்த்தையால் துளைபோடும்....  
இருக்கின்ற அன்பிலும் மிகப்பெரிய வறுமை.... 
வேசம் போட்டு நாடகமாடினேன் -அன்பு கிடைத்தது 
அடங்கி விடும் அன்பு வறுமை ...!!!

கிடைக்கவில்லை ....
கிடைக்க போவதுமில்லை ...
நஞ்சில்லாத உணவு ....
மனதை வளப்படுத்தும் கல்வி ...
தூய உள்ளத்தின் அன்பு ....
இறக்கும் போதும் இவை கிடைக்காததால் 
வறுமையுடனேயே இறக்கப்போகிறேன் 
வறுமை  யாருக்கும் அழிவதில்லை 
எப்படி பிரித்தார்கள் உலகை ...?
வறியநாடு செல்வந்த நாடு என்று ....?
வருமானம் படும் தான் உலகில் வறுமையா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 3:57 pm

தோல்வியென்னும் மாலையை 
அணியத்தெரிந்தவன் தான் -வெற்றி 
என்னும் பூவை சூடமுடியும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 4:04 pm

பூமி கோளவடிவமே தவிர
கோழை வடிவம் அல்ல ...
நீ அதன் மீது இருந்து கோழையாகிடாதே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 06, 2013 4:04 pm

நேற்றைய தோல்வியின் 
இன்றைய பயிற்சி 
நாளைய வெற்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 29, 2013 7:59 pm

சிறுவயதில் பேசிவைத்த திருமணம் 
****************************

சிறுவயதில் பேசிவைத்த 
பெருவயது திருமணம் 
பருவவயதுவரை -பள்ளி 
தோழிகளின் கிண்டலும் 
கேலியும் சின்ன இன்பத்தை 
தந்ததது  மறுப்பதத்கில்லை

கல்லூரி வயதில் 
கண்ணில் பட்டான் -காளை 
ஒருவன் -கண்மூடி திறக்கமுன் 
காதல் விதை வந்துவிட்டதும் 
உண்மைதான் -என்றாலும் 
உறவுகளின் எதிர்பார்ப்பு 
பெற்றவர்களின் நம்பிக்கை 
காதல் விதைக்கு சுடுநீர் 
ஊற்றி விட்டேன் .....!!!

திருமணம் முடிந்தது 
குழந்தைகள் பிறந்தன 
இன்பமான குடும்பவாழ்க்கை 
அமைதியாக ஓடுகிறது ....
என் பிள்ளைக்கு முறைமாமன் 
எனக்குப்போல் முறைகேட்டு 
சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை 
ஆரம்பித்தார் - வைத்து விட்டேன் 
முற்றுப்புள்ளி .....!!!

பெற்றோரே உறவுகளே ...
சிறுவயதில் பேசிவைக்கும் 
திருமண முறையை தயவு 
செய்து நிறுத்திவைப்போம் ...!!!
உறவுகள் பிரியக்கூடாது 
உடமைகள் பிரியக்கூடாது 
என்பதற்காக உறவுத்திருமணம்
வேண்டாம் -அது 
உளத்துக்கும் உடலுக்கும் கேடு 
சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!!
**********************************************************
(மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளின் 
பல ஆற்றல்கள் மழுங்கும் என்று விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 30, 2013 5:08 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 30, 2013 7:24 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 5:57 pm

பழமை என்றால் சிறுமையோ ...?

வாடி 
விழுந்த மலரொண்டின் 
சோகக்கதை கேளீர் 
வாடி விழுந்தது என் குற்றமா ..?
தாங்கி வைத்திருந்த காம்பு 
தள்ளி விட்டது குற்றமா ...?
இளமையாக இருந்த போது 
உவமைக்கு என்னை 
பயன்படுத்திய -கவிஞரே 
பதில் கூறுங்கள் .....!!!

தேய்ந்து 
அறுந்த செருப்பொன்றின் 
சோகக்கதை கேளீர் 
தேய்ந்தது என் குற்றமா ..?
தேய்த்தவர் கால் குற்றமா ...?
என் சோடியை இழந்த நான் 
தெருவோரத்தில் 
வீசப்பட்டுள்ளேன் -தவிக்கும் 
என் மனசை யாரறிவார் 
பராபரமே ....!!!

கிழிந்த சட்டையின் 
சோகக்கதை கேளீர் 
கிழிந்தது என் குற்றமா ...?
கிழிக்க வைத்த உடலின் 
வியர்வை குற்றமா ...?
உடலுக்கு அழகுசெய்த
என் வாழ்க்கை இப்போ 
துடைப்பு துணியாக 
மாறிவிட்ட என் வாழ்க்கை ...!!!

பழமையானால் பாராமுகம் 
காட்டும் எம் சமுதாய 
பாரம் பரியம் -இதில் மட்டும் 
பழமை பேணும் கோட்பாட்டை 
காலத்தால் கடைப்பிடிப்பது 
விந்தையிலும் விந்தைதான் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 06, 2013 4:48 pm

அழகு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:32 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்  Empty Re: கே இனியவன் வாழ்க்கை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum