தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Go down

சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர்      :     திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ்  நூல் விமர்சனம்   :     கவிஞர் இரா. இரவி. Empty சிறிய மாற்றம் பெரிய வெற்றி நூல்ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Post by eraeravi Fri Apr 04, 2014 10:32 pm

சிறிய மாற்றம் பெரிய வெற்றி
நூல்ஆசிரியர்      :     திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் carunbharat@gmail.com
நூல் விமர்சனம்   :     கவிஞர் இரா. இரவி.
கண்ணதாசன் பதிப்பகம், கண்ணதாசன் சாலை, 
தியாகராய நகர்,சென்னை - 600 017.    kannadhasanpathippagam@gmail.com
                                              விலை: ரூ.140/-

*****
நூல் ஆசிரியர் : திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் வருமான வரித்துறையில ஆணையராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருகிறார்கள்.  இந்த நூலின் தலைப்பே "சிறிய மாற்றம் பெரிய வெற்றி" மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது.  இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதற்கு ஏற்ப மாற்றங்களை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்தும் நூல். 


இனிய நண்பர் பொறியாளர் சுரேஷ் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இந்த நூல் வாங்கி வந்தேன். குயின் மீரா  பள்ளியில் மாநாடு போல் நடந்தது.  கலைமாமணி கு. ஞானசம்பந்தன், தியாகராசர் கல்வி குழுமத்தின் தலைவர் கருமுத்து கண்ணன் உள்ளிட்ட பலரும் வந்து பாராட்டினர்.


"வெற்றியின் ரகசியம்" என்ற தலைப்பில், தினமலர் நாளிதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. வாராவாரம் கட்டுரைகளாக படித்த போதும் ஒட்டுமொத்த நூலாக படித்த போது பரவசம்.  பழரசம்.  இந்த நூலை நூலாசிரியரின் தந்தை புலவர் அ. சின்னன் அய்யாவுக்கும், தாயார் தெய்வத்திருமதி  அமிர்தம் அம்மாளுக்கும், அவரது அருமை மனைவி அகிலா பரத் அவர்களுக்கும், புதல்வன் அர்ஜுன் பரத்துக்கும் காணிக்கையாக்கி உள்ளார்.  30 கட்டுரைகள் முத்தாய்ப்பாக உள்ளது.
நூலாசிரியர் தன்னுரையே தன்னம்பிக்கை உரையாக உள்ளது.


"நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம்.  நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே. "
 இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்".  இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது.
திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம்.  பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.


அக்னி சிறகுகள் நூலின் மூலம் விற்பனையில் சாதனை நிகழ்த்திய கண்ணதாசன் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கவியரசு  கண்ணதாசனின்  புதல்வர்  பதிப்பாளர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களும் மதுரையில் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள்.  உரையாடி மகிழ்ந்தேன்.  நூலின் அச்சு உள்ளே உள்ள பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக உள்ளன.  பாராட்டுக்கள்.
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்றார்.  அந்க் கருத்தை வழி மொழியும் விதமான கருத்து மிக நன்று.  
"ஒவ்வொரு நிகழ்வும் இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகிறார்கள். ஒன்று மனத்திரையில் இன்னொன்று நிஜத்தில்".
"நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி."
கட்டுரைகளில் முக்கியமான கருத்துக்கள் உள்ள பகுதியில் எழுத்து வேறுபடுத்திக் காட்டி இருப்பதால் நூல் படிக்கும் போது அவற்றைத் திரும்பவும் படித்தால் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.  இந்த நூல் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலையும், இந்த நூல் படித்ததற்கு பின் வாசகர் மனநிலையும் உள்ள மாற்றம் முன்னேற்றமே நூலாசிரியர் திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ். அவர்களின் வெற்றி.
இதயேந்திரன் மூலமாக உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு நன்கு விதைக்கப்பட்டது.    தன் முன்னேற்ற நூலாக இருந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ள பல கருத்துக்கள் நூலில் உள்ளன. 
"இறந்த பின்னும் சமுதாயத்திற்கு நாம் பயன்பட வேண்டும் என்ற பொறுப்புணர்வு உள்ளவர்கள் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்கிறார்கள்".
ஆம். இறந்த பின் தீக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளை   பார்வையற்ற  இருவருக்குக் வழங்கி  இறந்த பின்னும் இயற்கையை  ரசிக்க  உதவும் நல்ல கருத்துக்கு நன்றி.
காதலித்து கரம் பிடித்தவர்களே விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடும் அவலம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன.  உறவுகள் பேனா வேண்டிய புத்திகளையும் நூலில் விளக்கி உள்ளார்.
"உறவுகளில் விரிசல் உருவாவதற்கு முக்கியமான காரணம் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையாமை. ஆரோக்கியமான உறவு, சம்பந்தப்பட்ட இரு சாராரையும் உயர்த்தி விடும்"
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட  நூலாசிரியரின் இயற்பெயர் 
சி. தமிழ் திருமொழியன்.  இயற்பெயருக்கு ஏற்றபடி செந்தமிழில் மொழிந்து நல்ல கருத்துக்களை எழுதி உள்ளார்.  கணிப்பொறியாளர், சட்டம் பயின்றவர், தடகள விளையாட்டுவீரர், தேசியமாணவர்படைஅனுபவம், அமெரிக்கா சென்ற அனுபவம் இப்படி பன்முக ஆற்றலின் வெளிப்பாடே இந்த அரிய நூல். பாராட்டுக்கள்.


.
நூல்ஆசிரியர்      :     திரு. சி. அருண் பரத் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பரபரப்பான வருமானவரித்துறையில் ஆணையராகப் பணி புரிந்து கொண்டே இலக்கியத்திற்கும் நேரம்   ஒதுக்கி நூல்கள் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .உங்கள் எழுத்து இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை விதைக்கும் எழுத்து .
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum