தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்

2 posters

Go down

அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன் Empty அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்

Post by eraeravi Fri Sep 12, 2014 8:07 pm

அருவி !
கவிதை இலக்கியக் காலாண்டிதழ் !
நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்.இதழ் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.



14,  நேரு பஜார், திமிரி 632 512, ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்,
மின் அஞ்சல் aruvisrinivasan@gmail.com
அலைபேசி 9600898806.
தனி இதழ் ரூ. 25, ஆண்டு சந்தா ரூ. 100

*****
‘அருவி’ பெயருக்கேற்றபடி கவிதை அருவியாக கொட்டி வருகின்றது.  144 பக்கங்களில் மரபு, புதியது, ஹைக்கூ என மூன்றும் தாங்கி வரும் முத்தாய்ப்பு இதழாக உள்ளது.  இதழாசிரியர் கவிஞர் காவனூர் ந. சீனிவாசன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது.  உலகம் முழுவதுமுள்ள முன்னணிக் கவிஞர்களிடமிருந்து கவிதைகளைப் பெற்று தேர்ந்தெடுத்து தொகுத்து இதழாக்கி வருகிறார்கள்.  நூல் விமர்சனங்களும் இடம் பெற்று இருந்தது.  படைப்பாளிகள் அனைவரின் அலைபேசியும் உள்ள ஆவணமாக இருந்தது.  படித்து விட்டு தூக்கிப்போடும் சராசரி இதழ் அல்ல இது.  படித்து விட்டு பாதுகாக்க வேண்டிய இதழாக உள்ளது.  பாராட்டுக்கள்.
மரபுக் கவிதையிலிருந்து சிறு துளிகள்.
பாவலர் இராம. இளங்கோவன்
மாற்றமில்லா மாத்தமிழே அமுதமென்பேன்
       மற்றெதிலும் திகட்டாத அமுதம் காணேன்

கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்
தலை உள்ளோர் அனைவருமே
       தமிழ் அருமை அறியுமட்டும்
       தளர மாட்டேன்.

கவிதைக்கான விளக்கமும் மிக நன்று.
கவிஞர் விக்ரமாதித்தன்
ஒரு கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும். சந்தோஷப்படுத்த வேண்டும் அல்லது கலவரப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்.
மேலே சொன்ன வைர வரிகளை வளரும் கவிஞர்கள் யாவரும் மனதில் கொள்ள வேண்டும்.
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் சிறப்பாக உள்ளன.  நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளையும் மேற்கோள் காட்ட இயலாது.  பதச்சோறு சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ!  நீண்ட கவிதைகளாக இருந்த போதும் மனதை நெகிழ்ச்சி அடைய வைத்த சில வரிகளை மட்டும் எழுதி உள்ளேன்.
 
மன்சூர் அலி, சவுதி அரேபியா, ரியாத்.
கண்களை
       விரலில் வைத்த
       கடவுளிடம் தான் கேட்க வேண்டும்
       யார் ஊனமுற்றவன் என்று.

பார்வையற்றவர்கள் விரல்களால் தடவியே உணர்கிறார்கள்.  அவர்களுக்கு விரல்களே விழியாக உள்ளது. அதனை மிக நுட்பமாக கவிதையில் உணர்த்தி உள்ளார்.
கவிஞர் அ. பிரமநாதன்
பண்டிகை நாளில் / பலகாரம் செய்யும் / அம்மாவிடம்
       எல்லாமும் எனக்கு என / அடம்பிடித்து / அழுகிறது குழந்தை
       சாமி / கண்ணைக் குத்திடும் / சாமி கும்பிட்ட பிறகு / சாப்பிடலாமென
       சமாதானம் சொல்லித் / தூளியில் தூங்க விடுகிறாள் / அம்மா
       தூளியில் / தூங்கி விடுகிறது / குழந்தை / சாமியும் /
       சாப்பிடவில்லை / கடைசி வரை.

கடவுளுக்கு படைக்கிறேன், பூஜை என்ற பெயரில் சிறு குழந்தை கேட்கும் போது கொடுக்காமல் இருப்பது தவறு என்பதை உணர்த்துகின்றார். 
புதுக்கவிதை எழுதுவதில், புதிதாக சிந்திப்பதில் தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது.
கவிஞர் வீ. உதயக்குமரன், வீரன்வயல்.
காதலியின் வருகையைத் / தடுத்து விட்டதே என / மழையைக்
       கோபித்தேன் / நனைந்தபடி / வந்தாள் / என் / காதல் தேவதை 
       ரசித்தேன் / மழையில் நனைந்த / காதலியையும் / மழையையும்.

கவிதையைப் படிக்கும் போது, வாசகர்கள் மனதில் சில அதிர்வலைகளை உருவாக்க வேண்டும்.  அப்படிக் கவிதைகள் நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றன.  இந்தக் கவிதை படித்த போது எனக்கு என்னுடைய பால்ய நினைவுகள் வந்து போயின.  அது தான் ஒரு கவிஞனின் வெற்றி. 
கவிஞர் வ.பி. எட்வின், திருநின்றவூர்
வலதுகையால் / இடது காதைத் / தொட்டபின் சேர்ந்த
       ஆரம்பப் பள்ளி / ஆரஞ்சு மிட்டாய் / கொடுத்த பின் / உட்காரக் கிடைத்த 
       பள்ளியின் முதல் நட்பு / ஆசிரியர் / கைபிடித்து / எழுதப் பழகித் தந்த 
       உயிர் எழுத்துக்கள் / புரிந்து கொள்ளாமல் / சண்டைப் போட்ட 
       பள்ளி நாட்கள் / தாமதமாய் வந்ததால் / வகுப்பிற்கு வெளியே
       போட்ட முழங்கால் / மழலை அன்பில் / காக்கா கடி / கடிச்சுத் தின்ன
       கடலை மிட்டாய் / அன்பிற்கினிய / அந்த நாட்களை / மறக்க முடியுமா?

திருமணமானதும் பெண் பெற்றோர்களை மறப்பதே இல்லை. ஆனால் ஆண் திருமணமானாலும் பெற்றோரை மறந்து விடுகிறான்.  வளர்த்த பாசத்தை, செய்த தியாகத்தை எளிதில் மறந்து சுயநலவாதியாக மாறி, தன் மனைவி, தன் குழந்தைகள் என்று சுருங்கி விடுகிறான்.  அதனை உணர்த்திடும் கவிதை மிக நன்று.
கவிஞர் கு. ராம்குமார், வாடாமங்கலம்
பாத்திரங்கள் கழுவி / பத்திரமாய் வளர்த்து / ஆளாக்கினாள் அம்மா
       படிக்காமல் இருந்தும் / பட்டபடிப்பு படிக்க / வைத்தார் அப்பா
       படிப்பைப் பாதியில் / நிறுத்திவிட்டுக் குடும்பத்தைச் / சுமந்தான் தம்பி
       திருமண வயதைத் / தியாகம் செய்து / வேலையில் சேர்ந்தாள் அக்கா
       பதினைந்து சவரனோடு / பந்தமாகி பத்தே நாளில் / தனிக்குடித்தனம்
       வைத்தாள் மனைவி.

இந்த இதழில் எனது 7 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
இதில் உள்ள ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் தேர்ந்தெடுத்த முத்துக்களாக உள்ளன.  சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
இரா. பூபாலன், பொள்ளாச்சி
வறண்ட குளக்கரை
இன்னுமிருக்கிறது
வலை!

முனைவர் மித்ரா
வீட்டில் வறுமை
தூங்கும் பசியோடு
பூனை!

கவிஞர் அமுதபாரதி, சென்னை.
கொஞ்சம் பொறுங்கள்
பிறகு கழுவலாம்
கோப்பைக்குள் எறும்பு.

இந்த ஹைக்கூ படித்தவுடன் கேரளாவில் நடந்த உண்மை நிகழ்வு என் நினைவுக்கு வந்தது, 
குழியில் பெரிய தூணை யானையை வைத்து போட முயன்ற போது யானை மறுத்தது.  பாகன் அடித்து துன்புறுத்தி போராடியும் யானை, தூணை பள்ளத்தில் போடவில்லை.  என்ன காரணம் என்று பார்த்த போது அந்த குழியில் ஒரு பூனை இருந்ததாம்.  பூனை இறந்துவிடக் கூடாது என்பதற்காக யானை தூணை போட மறுத்ததாம்.மனிதாபிமானம் என்கிறோம் .இது விலங்காபிமானத்திற்கு  எடுத்துகாட்டு .இது தான் ஒரு ஹைக்கூவின் வெற்றி.  ஒன்று படிக்கும் போது அதனோடு தொடர்புடைய மற்றொன்று வாசகர் நினைவிற்கு வர வேண்டும்.
கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்
சிந்தாமல் / எடுத்துச் செல்ல முடியவில்லை / என்னால் / ஒரு
       துளிக் கவிதையை / கோப்பையில் நிரப்பி.

இயற்கையை நன்கு பாடி உள்ளார்.  இதழை நன்கு தொகுத்துள்ளார்.  அடுத்த அருவியை ஆவலோடு எதிர் நோக்குகின்றேன்.
.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன் Empty Re: அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 29, 2014 2:49 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன் Empty Re: அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்

Post by eraeravi Mon Sep 29, 2014 11:45 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன் Empty Re: அருவி ! கவிதை இலக்கியக் காலாண்டிதழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் காவனூர் ந. சீனிவாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» விச்சுவை! (புதுக்கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார் ! ஆசிரியர் : “கவிதை உறவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum