தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
2 posters
Page 1 of 1
பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
நினைவாற்றல்!
மகாத்மா காந்தியின் ஞாபகசக்தி ஆச்சரியமானது.
ஒரு சமயம் நவசக்தி ஆசிரியர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் காந்தியடிகளைப் பார்க்கச் சென்றபோது, ""முதன் முதலில் சென்னையில் என்னுடைய சொற்பொழிவை மொழிபெயர்த்துக் கூறியவர் நீங்கள்தானே! அப்போது, ஒரு சொற்றொடரை நீங்கள் விட்டு விட்டீர்கள். நான் அதைத் திருத்தினேன். நினைவிருக்கிறதா?'' என்று கேட்டார்.
இது 1921-இல் நிகழ்ந்தது. அதற்குப்பின் ஆறு வருடங்கள் சென்றுவிட்டன. காந்திஜியும் பல நூறு கூட்டங்களில் பேசியிருக்கிறார். எத்தனையோ ஆயிரம் பேரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எனினும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டமொன்றில் தனது உரையை மொழிபெயர்த்தவரையும், இடையில் அவர் ஒரு சொற்றொடரை விட்டு விட்டதையும் நினைவு வைத்திருந்தாரென்றால் அவரது ஞாபக சக்தி எப்பேர்ப்பட்டது என்பது புரியும்.
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.
dinamani
மகாத்மா காந்தியின் ஞாபகசக்தி ஆச்சரியமானது.
ஒரு சமயம் நவசக்தி ஆசிரியர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் காந்தியடிகளைப் பார்க்கச் சென்றபோது, ""முதன் முதலில் சென்னையில் என்னுடைய சொற்பொழிவை மொழிபெயர்த்துக் கூறியவர் நீங்கள்தானே! அப்போது, ஒரு சொற்றொடரை நீங்கள் விட்டு விட்டீர்கள். நான் அதைத் திருத்தினேன். நினைவிருக்கிறதா?'' என்று கேட்டார்.
இது 1921-இல் நிகழ்ந்தது. அதற்குப்பின் ஆறு வருடங்கள் சென்றுவிட்டன. காந்திஜியும் பல நூறு கூட்டங்களில் பேசியிருக்கிறார். எத்தனையோ ஆயிரம் பேரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். எனினும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கூட்டமொன்றில் தனது உரையை மொழிபெயர்த்தவரையும், இடையில் அவர் ஒரு சொற்றொடரை விட்டு விட்டதையும் நினைவு வைத்திருந்தாரென்றால் அவரது ஞாபக சக்தி எப்பேர்ப்பட்டது என்பது புரியும்.
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
விளையும் பயிர்!
ஒரு மெலிந்த சிறுவனை ஒரு முரடன் அடித்துக் கொண்டு இருப்பதைத் தெரு வழியே நடந்து வந்து கொண்டிருந்த மற்றொரு சிறுவன் பார்த்துப் பரிதாப்பட்டு, அருகில் சென்றான். முரடனைச் சமாளிக்கும் வலிமை அவனிடம் கிடையாது.
அவன் முரடனிடம், ""இந்த அப்பாவிச் சிறுவனுக்கு எத்தனை அடி கொடுக்கப் போகிறாய்?'' என்று கேட்டான்.
உடனே அந்த முரடன், ""நீ எதற்கடா அதைக் கேட்கிறாய்? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!'' என்று சீறினான்.
உடனே அந்தச் சிறுவன் கண்கள் கலங்க, ""அவனுக்குத் தரும் அடிகளில் பாதியை எனக்குக் கொடுத்துவிடு. பாவம் அவன் தாங்க மாட்டான்...'' என்று கெஞ்சினான்.
இதைக் கேட்ட முரடனின் கல் மனம் கரைந்தது. மிகவும் வெட்கமுற்று அங்கிருந்து சென்று விட்டான்.
முரடனின் மனதை இளக வைத்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கவிஞர் பைரன்!
-ஆச்சா, செவல்குளம்.
dinamani
ஒரு மெலிந்த சிறுவனை ஒரு முரடன் அடித்துக் கொண்டு இருப்பதைத் தெரு வழியே நடந்து வந்து கொண்டிருந்த மற்றொரு சிறுவன் பார்த்துப் பரிதாப்பட்டு, அருகில் சென்றான். முரடனைச் சமாளிக்கும் வலிமை அவனிடம் கிடையாது.
அவன் முரடனிடம், ""இந்த அப்பாவிச் சிறுவனுக்கு எத்தனை அடி கொடுக்கப் போகிறாய்?'' என்று கேட்டான்.
உடனே அந்த முரடன், ""நீ எதற்கடா அதைக் கேட்கிறாய்? உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ!'' என்று சீறினான்.
உடனே அந்தச் சிறுவன் கண்கள் கலங்க, ""அவனுக்குத் தரும் அடிகளில் பாதியை எனக்குக் கொடுத்துவிடு. பாவம் அவன் தாங்க மாட்டான்...'' என்று கெஞ்சினான்.
இதைக் கேட்ட முரடனின் கல் மனம் கரைந்தது. மிகவும் வெட்கமுற்று அங்கிருந்து சென்று விட்டான்.
முரடனின் மனதை இளக வைத்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கவிஞர் பைரன்!
-ஆச்சா, செவல்குளம்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
தவறு!
முகலாயச் சக்ரவர்த்தி ஒளரங்கசீப், சத்ரபதி சிவாஜியை நட்பு முறையில் அழைத்து ஏமாற்றிக் கைது செய்து சிறையிலிட்டார்.
சிவாஜி மாறுவேடத்தில் அந்தச் சிறையிலிருந்து தந்திரமாகத் தப்பி தன் நாடு வந்து சேர்ந்தார்.
பின்பு தனது தாய் ஜீஜாபாயைச் சந்தித்தார். மகனைக் கட்டித் தழுவி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய ஜீஜாபாய் தன் மகனைப் பார்த்து, ""மகனே, நீ ஒரு தவறு செய்துவிட்டாய்...'' என்றார்.
""என்ன தவறு, அம்மா அது?'' சிவாஜி பணிவாகக் கேட்டார்.
""மகனே, முகலாயச் சக்ரவர்த்திகளைச் சந்திக்கச் செல்பவர்கள் செலுத்தும் வணக்கமான, முன்புறமாகச் சிறிது குனிந்து, இடதுகையைப் பின்புறமாக வைத்துக் கொண்டு வலது கையால் மூன்று முறை சலாம் செய்யும் வணக்கத்தை நீ செலுத்தவில்லை. நீ சென்றது நட்பு முறையில்தானே! நண்பனாகச் சென்ற நீ அந்த வணக்கத்தைச் செலுத்தத் தவறிவிட்டாயே...'' என்றார் தாய்.
""தவறுதான் அம்மா...'' என்று சிவாஜி, தன் தாய் நட்பின் பெருமையை உணர்த்தியதைப் புரிந்து கொண்டு தனது தவறை ஒப்புக் கொண்டார்.
-க.பரமசிவன், மதுரை.
dinamani
முகலாயச் சக்ரவர்த்தி ஒளரங்கசீப், சத்ரபதி சிவாஜியை நட்பு முறையில் அழைத்து ஏமாற்றிக் கைது செய்து சிறையிலிட்டார்.
சிவாஜி மாறுவேடத்தில் அந்தச் சிறையிலிருந்து தந்திரமாகத் தப்பி தன் நாடு வந்து சேர்ந்தார்.
பின்பு தனது தாய் ஜீஜாபாயைச் சந்தித்தார். மகனைக் கட்டித் தழுவி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய ஜீஜாபாய் தன் மகனைப் பார்த்து, ""மகனே, நீ ஒரு தவறு செய்துவிட்டாய்...'' என்றார்.
""என்ன தவறு, அம்மா அது?'' சிவாஜி பணிவாகக் கேட்டார்.
""மகனே, முகலாயச் சக்ரவர்த்திகளைச் சந்திக்கச் செல்பவர்கள் செலுத்தும் வணக்கமான, முன்புறமாகச் சிறிது குனிந்து, இடதுகையைப் பின்புறமாக வைத்துக் கொண்டு வலது கையால் மூன்று முறை சலாம் செய்யும் வணக்கத்தை நீ செலுத்தவில்லை. நீ சென்றது நட்பு முறையில்தானே! நண்பனாகச் சென்ற நீ அந்த வணக்கத்தைச் செலுத்தத் தவறிவிட்டாயே...'' என்றார் தாய்.
""தவறுதான் அம்மா...'' என்று சிவாஜி, தன் தாய் நட்பின் பெருமையை உணர்த்தியதைப் புரிந்து கொண்டு தனது தவறை ஒப்புக் கொண்டார்.
-க.பரமசிவன், மதுரை.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
பெருந்தன்மை!
பிரம்மாண்டமான பக்ராநங்கல் அணைக்கட்டை, அன்றைய பாரதப் பிரதமர் நேருஜி திறந்து வைக்க ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேரு அணையைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்தார். விழா மேடையிலிருந்து தனக்கு முன்னே கூடியிருந்த மக்களை ஒரு கணம் பார்த்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.
""உண்மையில் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க அணையைத் திறந்து வைக்கும் தகுதி, இந்த அணையின் பெருமையோடு தங்களது பெயர்களையும் பதித்துக் கொள்ளும் தகுதி, இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த பாட்டாளி மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இந்த அணையை எழுப்பப் பாடுபட்ட தொழிலாளர்கள் இப்போது பார்வையாளர்களாக எனக்கு முன் அமர்ந்திருக்கிறீர்கள், இது எனக்கு மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்திய நாட்டை வாழ்விக்கப் போகும் இதுபோன்ற பிரமாண்டமான அணைகளையும் பெரிய பெரிய தொழிற்சாலைகளையும்தான் நான் தேடிச் செல்லும் வழிபாட்டுத் தலங்களாக, கருதி மிகவும் மதிக்கிறேன்.'' என்று கூறி முடித்தார்.
-சமூகசிற்பி, தக்கோலம்.
dinamani
-
------------------------------
-
தள்ளாதவர்...
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பேருந்து நின்று போனதால் பயணிகள் பலர் கீழே இறங்கிப் பேருந்தைச் சிறிது தூரம் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
வயதான ஒருவர் மட்டும் பேருந்திலேயே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து ஒருவன், ""ஐயா, நீங்கள் மட்டும் பேருந்தைத் தள்ளாமல் உட்கார்ந்திருக்கிறீர்களே?'' என்று சற்று கோபமாகவே கேட்டான்.
அதற்கு அருகிலிருந்த நாமக்கல் கவிஞர், ""தம்பி, அவர் தள்ளாதவர்... அவரை ஒன்றும் சொல்லாதேப்பா'' என்றார்.
கோபப்பட்ட வாலிபன் உட்பட அனைவரும் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டனர்.
-தேனி முருகேசன்.
dinamani
-
---------------------------------------------
-
அகரம் இகரம்!
கவிதை எழுதிக் கொண்டிருந்தார் பாரதியார். கவலையோடு நடமாடிக் கொண்டிருந்தார் அவரது மனைவி செல்லம்மாள். நேரம் போய்க் கொண்டிருந்தது. அவரை எப்படிக் கேட்பது என்ற தவிப்புடன், பொறுமை இழந்து, பாரதியார் அருகில் வந்து தயக்கத்துடன் நின்றார்.
""என்ன வேண்டும்? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?'' என்று கேட்டார் பாரதியார்.
""என்ன வேண்டுமா... எதுதான் வேண்டாம்? முதலில் நமது பசிக்குத் தேவையான சாதம் வடிக்க அரிசி இல்லை; அதை எப்படிச் சொல்வது என்றுதான் வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்...'' என்றார் செல்லம்மாள்.
கடகடவென்று சிரித்தார் பாரதியார்.
""அரிசி இல்லை என்பதை எப்படிச் சொல்வது என்று கேட்கிறாயா? நீ திருமகள்! உன் வாயில் இல்லை என்ற சொல் வரக்கூடாது. அகரம் இகரம் என்று சொன்னால், நான் புரிந்து கொள்வேன்!'' என்றார்.
ஆனால் வெளியே சிரித்த பாரதியாரின் உள்ளம் வெந்து கொண்
டிருந்தது!*
-முக்கிமலை நஞ்சன்
dinamani
-
------------------------------------------
-
எம்மதமும் சம்மதம்!
டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, ஓர் அரசு நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு வருகை தந்தார்.
விழாக் குழுவினர் அவரைக் குத்து விளக்கேற்றி, விழாவைத் தொடங்கி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
அவ்வாறே குத்து விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் அவ்விழாவில் உரை நிகழ்த்தினார்:
""இங்கே ஒரு நல்ல திட்டம் தொடங்கப் பெற்றுள்ளது. நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்று'' என்று கூறிச் சற்று நிறுத்தினார்... பின்னர் தொடர்ந்து, ""இங்கு ஏற்றப்பட்ட குத்துவிளக்கு இந்து மதத்தின் அடையாளம். அதை ஏற்ற உதவிய மெழுகுவர்த்தி கிறிஸ்துவ மதத்தின் பொதுவான அடையாளம். இதை ஏற்றி வைத்த அடியேன் இசுலாமிய சமயத்தில் பிறந்தவன். நமக்கு எம்மதமும் சம்மதமம்தான்'' என்றார். அவரது பேச்சை அனைவரும் ரசித்தனர்.
-அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani
-
----------------------------------------------
-
நான் வளர்வேன்...
டென்சிங் நார்கே இமயமலையிலுள்ள எவரெஸ்டின் உச்சிக்கு ஏற முயன்று பலமுறை தோல்வியுற்றார்.
இப்படிப் பலநாட்கள் முயற்சித்தார். ஆனாலும் அவர் துவண்டு போகவில்லை. மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டே இருந்தார்.
மற்றொரு முறை தனது முயற்சியில் தோல்வியுற்றபோது, எவரெஸ்டைப் பார்த்துக்
கூறினார்-
""உன் வளர்ச்சி இவ்வளவுதான். இதற்கு மேல் இனி நீ வளர மாட்டாய். ஆனால் எனக்கு இன்னும் வளர்ச்சி இருக்கின்றது. நான் இன்னும் வளர்ந்து, அடுத்த முறை மீண்டும் உன்மேல் படையெடுப்பேன்''
அது போலவே மீண்டும் முயற்சி செய்து மலையின் உச்சிக்கு ஏறி உலக சாதனை படைத்தார்.
-சுகந்தாராம், சென்னை.
dinamani
-
--------------------------------------------
-
மை!
ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் கல்கியிடம் ""எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை!'' என்றார்.
அதற்கு கல்கி, ""அப்படியென்றால் நான்கு மை வேண்டுமே!'' என்றார்.
""என்னென்ன கலர்களில்?'' என்று கேட்டார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அதற்கு கல்கி சொன்ன பதில் -
""திறமை, பேனா மை, தனிமை, பொறுமை'' என்று குறிப்பிட்டதும், ""நீங்க சொன்னது மிகமிக அருமை!'' என்று முடித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
-தேனி முருகேசன்.
dinamani
-
-----------------------------------------------
பிரம்மாண்டமான பக்ராநங்கல் அணைக்கட்டை, அன்றைய பாரதப் பிரதமர் நேருஜி திறந்து வைக்க ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நேரு அணையைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்தார். விழா மேடையிலிருந்து தனக்கு முன்னே கூடியிருந்த மக்களை ஒரு கணம் பார்த்தார். பிறகு பேச ஆரம்பித்தார்.
""உண்மையில் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க அணையைத் திறந்து வைக்கும் தகுதி, இந்த அணையின் பெருமையோடு தங்களது பெயர்களையும் பதித்துக் கொள்ளும் தகுதி, இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த பாட்டாளி மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. இந்த அணையை எழுப்பப் பாடுபட்ட தொழிலாளர்கள் இப்போது பார்வையாளர்களாக எனக்கு முன் அமர்ந்திருக்கிறீர்கள், இது எனக்கு மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்திய நாட்டை வாழ்விக்கப் போகும் இதுபோன்ற பிரமாண்டமான அணைகளையும் பெரிய பெரிய தொழிற்சாலைகளையும்தான் நான் தேடிச் செல்லும் வழிபாட்டுத் தலங்களாக, கருதி மிகவும் மதிக்கிறேன்.'' என்று கூறி முடித்தார்.
-சமூகசிற்பி, தக்கோலம்.
dinamani
-
------------------------------
-
தள்ளாதவர்...
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு சமயம் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று பேருந்து நின்று போனதால் பயணிகள் பலர் கீழே இறங்கிப் பேருந்தைச் சிறிது தூரம் தள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
வயதான ஒருவர் மட்டும் பேருந்திலேயே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து ஒருவன், ""ஐயா, நீங்கள் மட்டும் பேருந்தைத் தள்ளாமல் உட்கார்ந்திருக்கிறீர்களே?'' என்று சற்று கோபமாகவே கேட்டான்.
அதற்கு அருகிலிருந்த நாமக்கல் கவிஞர், ""தம்பி, அவர் தள்ளாதவர்... அவரை ஒன்றும் சொல்லாதேப்பா'' என்றார்.
கோபப்பட்ட வாலிபன் உட்பட அனைவரும் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டனர்.
-தேனி முருகேசன்.
dinamani
-
---------------------------------------------
-
அகரம் இகரம்!
கவிதை எழுதிக் கொண்டிருந்தார் பாரதியார். கவலையோடு நடமாடிக் கொண்டிருந்தார் அவரது மனைவி செல்லம்மாள். நேரம் போய்க் கொண்டிருந்தது. அவரை எப்படிக் கேட்பது என்ற தவிப்புடன், பொறுமை இழந்து, பாரதியார் அருகில் வந்து தயக்கத்துடன் நின்றார்.
""என்ன வேண்டும்? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?'' என்று கேட்டார் பாரதியார்.
""என்ன வேண்டுமா... எதுதான் வேண்டாம்? முதலில் நமது பசிக்குத் தேவையான சாதம் வடிக்க அரிசி இல்லை; அதை எப்படிச் சொல்வது என்றுதான் வெகுநேரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்...'' என்றார் செல்லம்மாள்.
கடகடவென்று சிரித்தார் பாரதியார்.
""அரிசி இல்லை என்பதை எப்படிச் சொல்வது என்று கேட்கிறாயா? நீ திருமகள்! உன் வாயில் இல்லை என்ற சொல் வரக்கூடாது. அகரம் இகரம் என்று சொன்னால், நான் புரிந்து கொள்வேன்!'' என்றார்.
ஆனால் வெளியே சிரித்த பாரதியாரின் உள்ளம் வெந்து கொண்
டிருந்தது!*
-முக்கிமலை நஞ்சன்
dinamani
-
------------------------------------------
-
எம்மதமும் சம்மதம்!
டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, ஓர் அரசு நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு வருகை தந்தார்.
விழாக் குழுவினர் அவரைக் குத்து விளக்கேற்றி, விழாவைத் தொடங்கி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
அவ்வாறே குத்து விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் அவ்விழாவில் உரை நிகழ்த்தினார்:
""இங்கே ஒரு நல்ல திட்டம் தொடங்கப் பெற்றுள்ளது. நம் நாடு மதச்சார்பற்ற நாடு என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்று'' என்று கூறிச் சற்று நிறுத்தினார்... பின்னர் தொடர்ந்து, ""இங்கு ஏற்றப்பட்ட குத்துவிளக்கு இந்து மதத்தின் அடையாளம். அதை ஏற்ற உதவிய மெழுகுவர்த்தி கிறிஸ்துவ மதத்தின் பொதுவான அடையாளம். இதை ஏற்றி வைத்த அடியேன் இசுலாமிய சமயத்தில் பிறந்தவன். நமக்கு எம்மதமும் சம்மதமம்தான்'' என்றார். அவரது பேச்சை அனைவரும் ரசித்தனர்.
-அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani
-
----------------------------------------------
-
நான் வளர்வேன்...
டென்சிங் நார்கே இமயமலையிலுள்ள எவரெஸ்டின் உச்சிக்கு ஏற முயன்று பலமுறை தோல்வியுற்றார்.
இப்படிப் பலநாட்கள் முயற்சித்தார். ஆனாலும் அவர் துவண்டு போகவில்லை. மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டே இருந்தார்.
மற்றொரு முறை தனது முயற்சியில் தோல்வியுற்றபோது, எவரெஸ்டைப் பார்த்துக்
கூறினார்-
""உன் வளர்ச்சி இவ்வளவுதான். இதற்கு மேல் இனி நீ வளர மாட்டாய். ஆனால் எனக்கு இன்னும் வளர்ச்சி இருக்கின்றது. நான் இன்னும் வளர்ந்து, அடுத்த முறை மீண்டும் உன்மேல் படையெடுப்பேன்''
அது போலவே மீண்டும் முயற்சி செய்து மலையின் உச்சிக்கு ஏறி உலக சாதனை படைத்தார்.
-சுகந்தாராம், சென்னை.
dinamani
-
--------------------------------------------
-
மை!
ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் கல்கியிடம் ""எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை!'' என்றார்.
அதற்கு கல்கி, ""அப்படியென்றால் நான்கு மை வேண்டுமே!'' என்றார்.
""என்னென்ன கலர்களில்?'' என்று கேட்டார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அதற்கு கல்கி சொன்ன பதில் -
""திறமை, பேனா மை, தனிமை, பொறுமை'' என்று குறிப்பிட்டதும், ""நீங்க சொன்னது மிகமிக அருமை!'' என்று முடித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.
-தேனி முருகேசன்.
dinamani
-
-----------------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: பிரபலங்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில் - சுவையான சம்பவங்கள்
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
» சுவையான வரலாற்று சம்பவங்கள்
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
» சுவையான வரலாற்று சம்பவங்கள்
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|