தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமிழ் இலக்கிய சுவைகள்

Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:11 am

தமிழிலக்கிய வினா – விடை
--------------
செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு – 1903
செந்தாமரை நாவல் ஆசிரியர் – மு.வரதராசன்
செம்பியன் தேவி நாவலாசிரியர் – கோவி.மணிசேகரன்
செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
சேயோன் – முருகன்
சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
சைவசமயக் குரவர்கள் – நால்வர்
சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க
சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுபிள்ள
சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
சோழ நிலா நாவலாசிரியர் – மு.மேத்தா
ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
ஞானக் குறள் ஆசிரியர் – ஔவையார்
ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர்
டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
-=============================================
முனைவர் நா.சிவாஜிகபிலன்

நன்றி ;ராம் மலர் ஐயா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:12 am

கொம்பை வெட்டிக் காலை நடு!

இலக்கியம்

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவராய் பிறந்திருந்தும்
தமிழ்ப் புலமை நிரம்பியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார்.
இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை.
ஒருமுறை இவர் சந்திரவாணன் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார்.


மாலே நிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே

பாலேரியாயத் தேன்மாரி பெய்யநற்

பாகுகற்கண்டாலே

யெருவிட முப்பழச் சேற்றின அமுதவயன்

மேலே முளைத் தகரும்

போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே!

இந்தச் செய்யுளை கவிஞர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை
ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த
திருப்பனைங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை
“கவிராயருக்குக் கண்தான் கெட்டது – மதியும் கெட்டதோ? கரும்பு
சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையே” எனச் சொன்னார்.

இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து
சரி எனப்படத் தன் மாணவனிடம் “கொம்பை வெட்டி காலை நடு’
என்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின
என்பதனைச் சாற்றின என மாற்றம் செய்து படித்தார்.
கேட்டுக் கொண்டிருந்த புலவர்கள் யாவரும் களிப்பெய்தனர்.

திருமாலுக்கு நிகரான சந்திரவாணன் வாழுமிடத்தே ஏரிகளிலெல்லாம்
பாலாகப் பாய்ந்து செழிக்க மாரி தேனாகப் பொழிகிறது.
கற்கண்டால் வயல்களுக்கு எருவிட்ட அந்நிலத்தில் முப்பழங்களாலான
சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின்
மேனியெங்கும் எனச் சுவைபடப் பாடல்
அமைந்ததற்கு புலவர்கள் யாவரும் கவிராயரை வாழ்த்தினர்.

இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர் பாடலைக் கேட்க
வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது
பணிவைக் காட்டுகிறது.

—————————————–
-புலவர் ப.சோமசுந்தரவேலாயுதம்

தமிழ்மணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:14 am

மங்கையின் போராட்டம்!
--------------
 இலக்கியம்

மக்களாட்சி இல்லாத ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலம் மன்னனின்
கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டாள் பெண் ஒருத்தி எ
ன்பதை அகநானூறு கூறுகிறது.

பசுமை நிறைந்த அந்தக் காட்டை முதுகோசர்கள் என்னும்
நில உரிமையாளர்கள் எருதுகள் பூட்டி, உழுது, நீர்ப்பாய்ச்சி,
பண்பட்ட நிலமாக்கி, பயிறு விதைகளை விதைத்து சிறந்த
தோட்டமாக்கிப் பாதுகாத்து வந்தனர்.

ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று மேய்ந்து விடுகிறது.
அதுகண்ட முதுகோசர்கள் அப்பசுவிற்குரியவனை அழைத்து
விசாரிக்கின்றனர். அவன் தன்னுடைய கவனக்
குறைவால்தான் இப்படி நேர்ந்தது என்று தன் குற்றத்தை ஒப்புக்
கொள்கிறான். அதற்காக வருந்துகிறான்.

ஆயினும் முதுகோசர்கள் சினம் அடங்கினாரில்லை.
தம் கண்ணிலும் மேலாகக் காத்த அத்தோட்டம் அழிவதற்கு
இவனே காரணம் எனக் கூறி அவன் கண்களைப் பிடுங்கி
விடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற அவன் மகள் அன்னிமிஞிலி
கொதித்தெழுகிறாள். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட
கொடுமைக்கு நியாயம் கிடைப்பதற்காக உண்ணாவிரதப்
போராட்டத்தைத் தொடங்குகிறாள்.

உண்கலத்தில் உணவிட்டு உண்ணாமலும், தன்னை அழகுப்
படுத்திக்கொள்ளாமலும், தூய உடை உடுத்தாமலும்
இருக்கிறாள். இப்போராட்டம் பல நாள்கள் தொடர்கிறது.

போராட்டத்தைக் கைவிடும்படி கேட்கும் ஊராரிடம்
“தன் தந்தையைக் கொடுமை படுத்தியவர்களை மன்னன்
ஒடுக்கும் வரை ஓயாமல் போராடுவேன்’ என்று கூறிப்
போராட்டத்தைத் தொடர்கிறாள். இச்செய்தி நாடெங்கும் பரவி,
மன்னன் திதியனின் செவிக்கும் எட்டுகிறது. போராடும்
அப் பெண்ணை அழைத்து, அவளை உசாவி, உண்மை நிலையை
அறிந்து கொள்கிறான்.

இக்கொடிய செயலைக்கேட்ட மன்னன் கொதிப்படைகிறான்.
தன் குடிக்கீழ் வாழும் ஒருவனுக்கு இக்கொடுஞ்செயல் செய்த
அந்த முதுகோசரைக் கொன்றொழிக்கிறான்.

இச்செய்தியைக் கேட்ட அன்னிமிஞிலி தனது உண்ணாவிரதப்
போராட்டத்தைக் கைவிடுகிறாள். மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மக்களாட்சியில் ஏழையின் குரலுக்கு மதிப்பளிப்பதில்
வியப்பொன்றுமில்லை. ஏழைப் பெண்ணின் உணர்வுகளுக்கும்
முடியாட்சியில் மன்னர்கள் மதிப்பளித்து ஆண்ட தமிழகம் இது
என்பதைக் காட்டும் சங்க இலக்கியப் பாடல் இதுதான்:

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்

பகடுபல பூண்ட உழுவுறு செஞ்செய்

இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப்

பாசிலை அமன்ற பயறுஆ புக்கென

வாய்மொழித் தந்தையைக் கண்களைத் தருளாது

ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்

கலத்தும் உண்ணாள் வாலிது மூடாஅள்

சினத்தில் கொண்ட படிவ மாறாள்

மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்

செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர்

இன்னுயிர் செகுப்பக் கண்டுசின

– மாறியஅன்னிமிஞிலி போல”

(அகம்.மணி.262,1-12)

——————————————-

-சு.சொக்கலிங்கம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:16 am

முத்தான முத்தம்

இலக்கியம்




நவமணிகளில் ஒன்று முத்து.
“துன்னரிய தரளம், நித்திலம், ஆரம், முத்து ஆம்’ என்று முத்தின்
பெயர்களைக் கூறுகிறது ஆசிரிய நிகண்டு.

அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியம் முத்துச் சனிக்கும்
(பிறக்கும்) இடங்கள் என ஒரு பட்டிலைத் தருகிறது. இதழோடு இதழ்
சேர்த்து இனிக்க இனிக்கத் தருவதும் பெறுவதும் முத்தம்.
என்றாலும், முத்தைக் குறிக்கும் இன்னொரு சொல்தான் முத்தம்.

“முறிமேனி, முத்தம் முறுவல், வெறிநாற்றம்

வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு”

(குறள்.1113)

என்று திருக்குறள் தலைவன், தலைவியின் நலம்புனைந்து
உரைக்கிறான். கடவுளரையும் பெரியோரையும் குழந்தையாகப்
பாவித்துப் பாடும் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தில்,
முத்தப்பருவம் என ஒன்றுண்டு.

பகழிக்கூத்தர் என்ற புலவர் இயற்றிய திருச்செந்தூர்ப் பிள்ளைத்
தமிழின் முத்தப்பருவப் பாடல், பல்வேறு இடங்களில் பிறக்கும்
முத்துக்களைப் பற்றிக்கூறி, “அந்த முத்துக்களுக்கு எல்லாம் முருகா!
உன் கனிவாய் முத்தம் ஈடாகுமோ, முத்தம் தருவாய் முதல்வா’ என்று
சொல்கிறது.

“இடைவிடாது எந்நேரமும் ஓசை முழங்கும் பெருங்கடலில்
அடுத்தடுத்துக் கரைமோதும் அலைகள், வலம்புரி சங்குகளை
வாரிக் கடற்கரையில் இறைக்கின்றன. அந்தச் சங்குகளின் சூல்
முற்றி முத்துக்களாக உதிர்கின்றன.

அந்த முத்துக்களுக்கு விலை கூறிவிடலாம். பருத்த யானைகளின்
பிறைநிலா போல் வளைந்த தந்தங்களில் பிறக்கும் தரளத்திற்கு
விலையுண்டு. தழைத்து வளர்ந்து முற்றிச் தலைசாயும் செந்நெல்லில்
பிறக்கும் குளிர்ந்த முத்துக்கும் விலையுண்டு.

கடல் நீரை முகந்து இந்தப் பார் செழிக்கப் பொழியும் கார்மேகத்தில்
தோன்றும் முத்துக்கும் விலையுண்டு. நீலத் திரைகடல் எந்நேரமும்
தன்னில் பிறந்த முத்துக்களை எல்லாம் வாரி வாரிக் கடற்கரையில்
குவிக்கின்ற பெருமைமிகு திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள
செந்திலாதிபனே, உன் செங்கனிவாய் முத்தத்திற்கு விலையுண்டோ?
உன் கொவ்வைச் செவ்வாயின் குமிழ்முத்தம் தந்தருள்வாய்’ என்று
வேண்டும் பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்ப் பாடல்
இதுதான்:


“கத்துந் தரங்கம் எடுத்தெறியக்

கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்திற்

கான்ற மணிக்கு விலையுண்டு;

தத்துங் கரட விகடத் தடத்

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

தரளந்தனக்கு விலையுண்டு;

தழைத்துக் கழுத்து வளைந்த மணிக்

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர் முத்தினுக்கு விலையுண்டு;

கொண்டல் தரு நித்திலர் தனக்குக்

கூறுந்தரமுண்டு; உன் கனிவாய்

முத்தந் தனக்கு விலையில்லை

முருகா முத்தந் தருகவே!

முத்தஞ் சொரியும் கடல் அலைவாய்

முதல்வா முத்தந் தருகவே!

———————————-

-கண்ணையன் தட்சிணாமூர்த்தி
நன்றி- தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 11:19 am

தோழியின் ஊடல்
இலக்கியம்


தமிழில் அன்பின் இணையரிடம் ஏற்படும் சிறு பிணக்கு
ஊடல் எனப்படும். அன்பினருக்குள் ஏற்படும்
இந்த ஊடல் மேலும் அன்பினை மிகுவிக்கக்கூடியது.
சங்ககால களவு வாழ்க்கையில் தலைவன்-தலைவி இருவரும்
சந்திப்பதற்குக் குறியிட்ட இடத்துக்கு காதலி வரத் தவறிய
போது காதலன் ஊடுவான்.

கற்பு வாழ்க்கையில் தலைவனின் பரத்தை ஒழுக்கத்தைக்
கண்டிக்கும் விதமாகத் தலைவி ஊடுவாள். தலைவியின்
ஊடலைத் தீர்க்கத் தலைவன் தூது விடுவான். பாங்கன்
தூதாகச் செல்வான். தலைவி ஊடல் நீங்கத் தூது விட்டதாகக்
குறிப்புகள் இல்லை.

இவ்வகை ஊடலை உணர்த்தும் பல பாடல்கள் சங்க அக
இலக்கியங்களில் உள்ளன.

களவு, கற்பு எனும் இரு அக வாழ்க்கை நிலையிலும் தலைவன் –
தலைவி இருவருக்குள் ஏற்படும் ஊடலைத் தோழி பக்குவமாக
எடுத்துரைத்து ஊடல் நீக்குவாள்.

தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்
தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச்
செய்யும்.

தலைவன், தலைவிக்குள் ஏற்படும் ஊடலை நீக்கும் தோழிக்கே
ஊடல் ஏற்பட்டதை வெளிப்படுத்தும் கபிலர் பாடிய ஒரு பாடல்
நற்றிணையில் உள்ளது. தலைவனுக்குக் குறைநேர்ந்தபோது
தலைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, தலைவன்
நிலையை உணரச் செய்யலாம் என்று தோழி எண்ணுகிறாள்.

தலைவி, தோழியின் சொல்லைக் கேட்டும் மனநிலையில்
இல்லாது அவள் சொல்வதை கண்டும் காணாததுபோல்
இருக்கிறாள். தாம் சொல்லும் கருத்தைக் கேட்கும் நிலையில்
இல்லாத தலைவியை நோக்கிப் பலவாறு கூறிவிட்டு ஊடுகிறாள்
தோழி.


“”மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்

வலியோன் அன்ன வயங்குவெள் அருவி

அம்மலை கிழவோன் நம்நயந்து என்றும்

வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்

நீயும் கண்டு நும்மரோடும் எண்ணி

அறிவறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு

அரிய வாழி தோழி பெரியோர்

நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே” (நற்-32)

“மாயோனைப் போன்ற கரிய பெரிய மலைப்பக்கம்;
கண்ணனுக்கு முன்னவனாகிய பலதேவன் போன்று
வெண்மையான அருவிகள்; அத்தகு மலைக்குரிய தலைவன்
நாள்தோறும் நம் தினைப் புனத்தின் அருகில் வந்து நம்மை
விரும்பி வருந்தி நிற்கிறான் என்று நான் கூறும்
உண்மையான உரையை நீ ஏற்றுத் தெளிந்து கொள்ளவில்லை.
அவன் கூற்றும் மறுத்தற்குரியது இல்லை.

நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றாலும் உன்னிடத்து
அன்பு கொண்ட தோழியரிடம் கேட்டாவது ஆராய்ந்து இது
தக்கது, இது தகாதது என்பதை அறிந்து கொள்வாயாக.
அறிவுமிக்க சான்றோர் தம்மொடு நட்புக் கொள்ள
விரும்பியவர்களின் குணங்களை முதலில் ஆராய்ந்து பார்த்த
பின்னரே நட்புக்கொள்வர்.

நட்பு கொண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்க மாட்டார். நீ அவ்வாறு
தலைவனோடு நட்புக் கொள்ளவில்லை. முதலில் நட்புக் கொண்டு
விட்டு இப்போது வெறுத்தல் தகாது என்பதை அறிக” என்று
தோழி தலைவியிடம் ஊடல் கொண்டுவிட்டுச் செல்கிறாள்.

சங்க இலக்கியங்களில் தோழி, தலைவியோடு ஊடல் கொள்வதாக
இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளதாகத் தெரிகிறது.
தோழி ஊடல் கொள்ளும் வகையிலமைந்த இப்பாடல்,
467(எண்ணித் துணிக), 791 (நாடாது நட்டலிற்) ஆகிய இரு
குறட்பாக்களை நினைவுகொள்ளச் செய்கிறது.

————————————
-முனைவர் இரா. வெங்கடேசன்
நன்றி- தினமணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தமிழ் இலக்கிய சுவைகள்  Empty Re: தமிழ் இலக்கிய சுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் இலக்கிய ஒலிக்கோப்புகள்.
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum