தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்

Go down

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள் Empty “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்

Post by KavithaMohan Mon Dec 11, 2017 5:34 pm

ஒகி புயல், கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தொழிலாளர்களின் கனவுகளை நாசமாக்கிவிட்டது. ரப்பர் தடிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. புயலுக்கு முன்புவரையிலும் ஒரு டன் ரப்பர் மரத்தடிகள் 6,500 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. தற்போது 5,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது . குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய 3 தாலுகாக்களில் 115 ஆண்டுகளாக அதிகளவில் ரப்பர் சாகுபடியாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட ரப்பருக்கு சர்வதேச மார்க்கெட்டில் தனி மவுசு உண்டு. 

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதியிலிருந்து வீசிய ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி  மாவட்டத்தில் லட்சக்கணக்கான ரப்பர் மரங்கள் பாதிப்படைந்தன. இதையடுத்து ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் தொழில் மற்றும் ரப்பர் தொடர்பான தொழில்துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

ரப்பர் தடிகளுக்கு கேரளாவில் அதிக வரவேற்பு உண்டு. இலகு ரக மரமான ரப்பரை பதப்படுத்தி ரசாயனக் கலவையில் ஊறவைத்துக் கடினத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது. ரசாயன முறையில் பதப்படுத்தப்படும் ரப்பர் தடிகள் தேக்கு மரங்களுக்கு இணையான பலம் கொண்டவை. அதற்குப்பிறகு கேரளாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம், பெரும்பாவூர் பகுதியில் இந்திய அளவிலான ரப்பர் சந்தை உள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படும் ரப்பர் தடிகள் இந்தச் சந்தைகளில்தான் வியாபாரிகளால் போட்டிபோட்டு வாங்கப்படுகிறது.

ஒகி புயலில் சேதமாகிப்போன ரப்பர் மரங்களை இப்போது வெட்டினால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்பதால், ரப்பர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் (ரப்பர் தடிகள் உலர்ந்த பிறகு அது வெறும் விறகாக மட்டுமே பயன்படும்). புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒரேநேரத்தில் அதிகளவிலான ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டுவருவதால், அம்மரங்களை விற்பனை செய்வதற்கு விவசாயிகள், வியாபாரிகளைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் வைத்த விலை இல்லாமல், வியாபாரிகள் வைக்கும் விலையிலேயே ரப்பர்  தடிகள் விற்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி வருகின்றனர். புயலுக்குப் பிறகு கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ரப்பர் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், கேரள மாநிலத்திலும் குமரி மாவட்ட ரப்பர் தடிகளின் விலை சரிந்துள்ளது. 

[You must be registered and logged in to see this image.]
சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் உள்ள தீக்குச்சி ஆலைகளுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ரப்பர் தடிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. எனவே, அங்கும் அளவுக்கதிகமான ரப்பர்  தடிகள் குவிந்துள்ளன. அதனால், தமிழகச் சந்தையிலும் கன்னியாகுமரி மாவட்ட ரப்பர் தடிகள் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. தற்போதையச் சூழலில், ரப்பர் தடிகளை வாங்க யாரும் முன்வரவில்லை. கடந்த வாரம் விறகுக்காக ஒரு டன் ரப்பர் மரங்கள் 2,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 1,500 ரூபாய்க்கு ரப்பர் மரங்களை வாங்க ஆளில்லாமல், விவசாயிகள் திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ''இந்த நிலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்'' எனக் கவலை தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள்.

[You must be registered and logged in to see this image.]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமான ரப்பர் அதிக அளவு உற்பத்தியாகிறது. ஆனால், இப்பகுதியில் இதுவரை கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை.வேறு தொழில் வாய்ப்பு இல்லாத குமரி மாவட்டத்தில், ரப்பர் தொழிற்சாலை அமைந்தால், மாவட்டத்திலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுகுவதோடு, விவசாயிகளுக்கும் நல்ல பயன் கிடைப்பதால், மாவட்டம் நல்ல வளர்ச்சி பெறும். 1992-ம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'கன்னியாகுமரி மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் செலவில், கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும்' என அறிவித்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்தக் குமரி மாவட்ட மக்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து,  ரப்பர் தொழிற்சாலை அமைக்க செண்பகராமன்புதூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யும் பணியும் தொடங்கியது. ஆனால், இந்த அறிவிப்பும், ஆரம்பக் கட்டப்பணிகளுடன் சிறிது நாள்களில் முடங்கிப்போனது. பின்பு  தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வந்து சென்றாலும், கனரக ரப்பர் தொழிற்சாலைத் திட்டம் மட்டும் இப்பகுதிக்கு வரவேயில்லை. இந்நிலையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான கனரக ரப்பர் தொழிற்சாலைத்திட்டம் சுருங்கி 210 கோடி ரூபாய் செலவில், 'ரப்பர் பூங்காத் திட்டமாக' தி.மு.க. ஆட்சியில் மாறியது.

நன்றி
விகடன்
KavithaMohan
KavithaMohan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 36
Points : 108
Join date : 25/11/2017
Age : 34
Location : Chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum