தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

5 posters

Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by gunathamizh Sat Oct 30, 2010 4:31 pm

சங்க இலக்கியங்கள் சங்ககால வரலாற்றுக் கருவூலங்களாகவே திகழ்கின்றன. சங்ககால மக்களின் நடைமுறை வாழ்வியலை எடுத்தியம்புவன சங்கப்பாடல்களே. அக, புற வாழ்வியலின் நாட்குறிப்புகளாக இப்பாடல்கள் விளங்குகின்றன.

தலைவன் தலைவியைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று மணந்துகொண்டான். தலைவியைப் பார்த்துவரலாம் என்று தோழியும் அவன் வீட்டுக்குச் சென்றாள். தலைவியின் புதிய அழகினைக் கண்டு வியந்தாள் தோழி. பாடல் இதோ...


“தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி! வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரையகம் தொறும்
தொன்று உரை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானை கோடு கண்டன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே!

-புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்க்கிழான்

நற்றிணை -294 (குறிஞ்சி)

மண மனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.


(தலைவன் தலைவியைக் கொண்டு சென்று தன்னகத்து மணந்தமை அறிந்த தோழி, தலைவனின் வீட்டுக்குச் சென்று தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து தலைவனின் மார்பு முன்பு நோயும், பின்பு இன்பமும் தந்தது என்று கூறியது.)

(காதலிக்கும்போது (களவுக்காலத்தில்) தலைவியை நீங்கி தலைவிக்கு நோய் தந்த தலைவன் இப்போது சேர்ந்திருப்பதால் இன்பம் தந்தான் இதனையே இத்துறை இயம்புகிறது)


தோழி....
மூங்கில்கள் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவியுள்ள பெரிய மலையின் உள்ளிடந்தோறும் பழமையான அறிவுடன் வலிமையுடன் மிகுந்த சினமும் கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற் போல செவ்விய புறப்பகுதியைக் கொண்ட செழுமையான அரும்பவிழ்ந்த காந்தள் மணம் கமழும். அத்தகைய மணம் வீசும் சாரல் விளங்கும் மலைநாடனின் அகன்று விரிந்த மார்பு “தீ, காற்று“ எனும் இரு முரண்பட்ட ஆற்றல்களைக் கொண்டுள்ள ஆகாயம் போன்று நோயும், இன்பமும் தரத்தக்கனவாயிருந்தது. இது மாயமல்ல உண்மையே ஆகும் என்றாள்.


பாடல் வழி..


 வீட்டுக்குத் தெரியாமல் தாம் விரும்பும் பெண்ணைத் தலைவன் தம் ஊருக்கு அழைத்துச் சென்று தம் வீட்டில் மணந்துகொள்ளும் மரபு சங்காலத்தில் இருந்தமை இப்பாடலால் புலனாகிறது
 நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐந்து கூறுகளால் ஆனது நம் உடல் இறுதியில் இக்கூறுகளுடனேயே இரண்டறக் கலந்துபோகிறது. இதனை உணர்ந்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.
 தலைவனின் மார்பு தீ, காற்று ஆகிய கூறுகளைத் தம்மகத்தே கொண்ட வானின் பண்புகளைக் கொண்டது என்பதைப் புலவர் சுட்டுகிறார்.


 காந்தள் மலரின் தோற்றத்தைச் சொல்லவந்த புலவர், யானையின் தந்தத்தைப் போன்றது என்று நேரடியாகக் கூறாமல்...

பழமையான அறிவும், வலிமையும், மிகுந்த சினமும் கொண்டது யானை என்றும் அந்த யானை வலிமைமிக்க புலியையும் கொல்லும் தன்மையது என்றும் கூறி அத்தகைய யானையின் தந்தத்தைப் போன்றது காந்தள் என்ற புலவரின் கற்பனைத் திறன் அவரின் அழகுணர்ச்சியைக் காட்டுவதாகவுள்ளது.

யானை புலியைக் கொன்றால் அதன் தந்தத்தில் இரத்தம் தோய்ந்திருக்கும்.இரத்தம் தோய்ந்த யானையின் தந்தம் எப்படியிருக்கும்....?
காந்தள் மலரைப் போல இருக்கும்...!

புலவரின் ஒப்புநோக்கும் திறன்
சங்ககால மக்களுக்கு இருந்த விலங்கியல்
மற்றும் தாவரவியல் அறிவுக்கும்
கற்பனை நயத்துக்கும் சங்ககால பழக்கவழக்கங்களுக்கும் தக்கதொரு சான்றாக இப்பாடல் அமைகிறது

இடுகையிட்டவர். முனைவர்.இரா.குணசீலன்

http://gunathamizh.blogspot.com/2010/10/blog-post_29.html[img][/img]
gunathamizh
gunathamizh
ரோஜா
ரோஜா

Posts : 251
Points : 374
Join date : 08/12/2009

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty Re: மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by RAJABTHEEN Sun Oct 31, 2010 1:08 am

எனக்கு மிகவும் பயனலித்த கட்டுரையை தந்தமைக்கு அன்புபாராட்டுக்கள்தோழரே.மேலும் தொடர அன்பாய் வேண்டுகிறென்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty நன்றி

Post by gunathamizh Sun Oct 31, 2010 1:27 pm

கருத்துரைக்கு நன்றி அன்பரே.
gunathamizh
gunathamizh
ரோஜா
ரோஜா

Posts : 251
Points : 374
Join date : 08/12/2009

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty Re: மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by வ.வனிதா Wed Jan 05, 2011 3:58 pm

அருமை அன்பரே ! தமிழுக்கு தலையசைக்க நாணலாய் இருக்கிறீர்கள் ! நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty Re: மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by gunathamizh Thu Jan 06, 2011 5:31 pm

நன்றி வனிதா!
gunathamizh
gunathamizh
ரோஜா
ரோஜா

Posts : 251
Points : 374
Join date : 08/12/2009

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty Re: மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by வ.வனிதா Thu Jan 06, 2011 5:34 pm

நன்றி தோழரே ! மிக்க நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty Re: மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by அரசன் Thu Jan 06, 2011 6:30 pm

அசத்தல் பதிவு ... நல்லா இருக்குங்க தொடருங்க ,,,,
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty Re: மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 07, 2011 11:24 am

உங்கள் பதிவுகள் அனைத்துமே அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை) Empty Re: மாயமல்ல… (சங்க இலக்கியக் கட்டுரை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum