தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா

2 posters

Go down

நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா Empty நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா

Post by eraeravi Thu May 12, 2011 10:34 pm

நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம்
நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன்
திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா
தோரண வாயில்:
வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம்
நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு.நாம் அறிந்தவரை
ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி;சமூக நல இணையர்
காந்திஜி கஸ்தூரி பாய்.நாமெல்லாம் வாழும் காலத்தில் இலக்கியத்துறையில் இணையராகத்
திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்இரா.மோகன் - நிர்மலா மோகன் எனலாம்.வியாசமுனிவருக்கு
,விநாயகரே முன்வந்து,தன் தந்தம் ஒடித்து, மஹாபாரதம் எழுதியது இதிகாச
காலம்!இரா.மோகனின் படைப்புக்களை தமிழறிஞர் சேதுபாண்டியனின் உறுதுணையுடன்
மோகனப்பிரியையான நிர்மலா அம்மையார் பகுத்து தொகுத்திருப்பது இக்காலம்.
நவரத்தின மாலை:
இலக்கியமுத்துக்களா?சிந்தனைத்து
ளிகளா?கருத்துக்குவியலா?தத்துவ
மழையா?ஆய்வுச்சுரங்கமா?வரலாற்றுக் கோர்வையா?தகவற் களஞ்சியமா?நவீனத்தின்
பிரதிபலிப்பா?பொது அறிவு பெட்டகமா?- என உய்த்துணர முடியாத அளவிற்கு,மோகனக்
குவியலிலிருந்து வைரம்,பவளம், வைடூரியம், ,கோமேதகம்,நீலம் எனத் தேர்வு செய்து
,அவற்றை அன்பெனும் அற்புத இழை கொண்டு கோர்த்து தமிழன்னைக்கு நவரத்தின
மாலையைச்சூட்டியிருக்கின்றார் நிர்மலா மோகன்.
பிறைநிலவும் நிறை நிலவும்:
நாற்பது ஆண்டுகால இலக்கிய வாழ்வில் எண்பது நூல்கள் படைத்த இரா.மோகனின்
நூல்களுக்கு பெருங்கல்வியாளர்களும்,அருங்கவிஞர்களும்,மூதறிஞர்களும்
வழங்கியிருக்கும் அணிந்துரைகள் விண்ணை அழகூட்டும் முகில் கூட்டங்களின் ஊர்வலமாய்
நூலின்முதற்பகுதியை கவின்பெறச் செய்கின்றன. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மாணிக்கப்
பரல்கள் அனைத்தையும் எடுத்து,பசும்பொன் சிலம்பில் இட்டு அதனை
இரா.மோகன்,தமிழன்னையின் கமலத்திருவடிகளுக்கு அணிவித்து அழகு பார்த்த பகுதியே
தொகுப்பாசிரியர்களால் நூலின் இரண்டாம் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. தற்கால
இலக்கியங்களான சிறுகதை,நாவல்,கட்டுரை-இவற்றில் தலைசிறந்த
புதுமைப்பித்தன்,மு.வரதராசனார்,கு.ப,ரா-போன்றவர்களின் படைப்புக்களை பேரா.மோகன்
உள்வாங்கி,உணர்ந்து,அவற்றைப் பகுத்து,தொகுக்க,பின் பதிப்புச் செம்மல் திரு.
மெய்யப்பன்,இலக்கியப்பண்ணைக் காவலர் திரு அருணாசலம் இவர்களது சீரிய துணையுடன் இவரே
பதிப்பிக்க, இவையே படைப்புலகம் எனும் இந்நூலில் இரண்டாம் பகுதியாக இழையோடுகிறது.
தராசும் தட்டும்:
மோகன் அவர்களின் இலக்கிய அனுபவப்
பகிர்வுகளையும்,பத்திரிகைப்பதிவுகளையும் நூலை வாசிப்போர் அலுக்காத வண்ணம்
தொகுப்பாசிரியர்கள், நூலின் இடைப்பட்டப் பகுதியாக வைத்திருப்பது
பாராட்டுக்குரியது.தன் வரலாறோடு,தமிழறிஞர்களின் வரலாறும் கூறுகின்ற இப்பகுதி
அடிக்கரும்பின் இன்சுவையை ஒத்துள்ளது. இரட்டையர்களில் துவங்கி இணையரில்
முடியும்மதிப்புரை மாலை பகுதி மூத்தப்பத்திரிகையாளர்களும் ,சாகித்ய அகாதமி,
உயராய்வு மைய உறுப்பினர்களுமான தமிழன்னையின் பூரண ஆசி பெற்றவர்கள் முனைவர் மோகனது
நூலை இலக்கிய தராசில் இட்டு எடை போட்ட பகுதியாகும்.
இரசித்ததும் ருசித்ததும்:
தொல்காப்பியர் துவங்கி துளிப்பா வரை,ஆத்திச்சூடி முதல் அக்னி சிறகு
வரை,கம்பன் தொடங்கி கந்தர்வன் வரை,குமரகுருபரர் முதல் கு.ப.ரா வரை,மு.வ. முதல்
முனைவர் இறையன்பு வரை ,பண்டிதமணி முதல் பரந்தாமனார் வரை ,கல்கி தொடங்கி கலைஞர் வரை
-என மூத்த தலைமுறையினர் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வாளர் வரை அலசி ஆராயும் இலக்கிய
அமுதசுரபி என்று இரா.மோகனின் படைப்புலகம் நூலைக் கூறலாம்.முனைவர் மோகனது
கட்டுரைகள் அனைத்தும் கற்கண்டு!ஆய்வுரைகளோ கோலார்த்தங்கச் சுரங்கம்!நூலில்
இடம்பெறும் இவரது நேர்காணல்களோ பாயாசத்தில் இடையிடையே பரவிக்கிடக்கும்
முந்திரிப்பருப்பு!மேற்கோள்களாய் சுட்டப்படும் உள்,அயல்நாட்டு அறிஞர்களின்
பழமொழி,புதுமொழிகள் எல்லாம் பச்சைக்கற்பூரமாய் நூல் முழுவதும் நறுமணம்
பரப்புகின்றன.
தோற்றமும் ஏற்றமும்:
இரா.மோகனின் படைப்புலகம் எனும்இந்நூலின் வழி குமரிக்கடலில்
கொலுவிருக்கும் ஐயன் வள்ளுவன் சிலை போல் கம்பீர நடை, காஞ்சிப் பட்டின் இழையோட்டமாய்
மொழியோட்டம்,செட்டி நாட்டு சமையலாய் நகைச்சுவை நறுமணம்,பழனி பஞ்சாமிர்தமாய் சொல்
இனிமை -என ஆசிரியரின் எழுத்தாற்றலைஉணரலாம்..ஒருவருக்கொருவர் போட்டியாய் இருக்கும்
எழுத்துலக சமூகத்தில் இரு நூற்றாண்டு இலக்கியவாதிகளோடு நேசத்துடன் கை குலுக்கும்
முனைவர் மோகனின் பெருந்தன்மை பாராட்டத்தக்க ஒன்று.அறுபது அகவையிலும் எண்பது நூல்கள்
படைத்துவிட்டோம் என்ற ஏற்றம் சிறிதுகூட இன்றி,இன்னும்ஏகலைவன் போல் மோகன் அவர்கள்
குருவணக்கமும் பணிவும் கொண்டிருப்பது இலக்கிய உலகம் வியக்கத்தக்க ஒன்று.
மனதார..
ஓராயிரம் நூல்களைக் கற்று ,அவற்றை அமிர்தமாய்க் குழைத்து,அழகியப் பளிங்கு
குவளையில் இட்டு, இலக்கிய ஆர்வலர்களுக்கு ஊட்டியிருக்கும் முனைவர் மோகன்
அவர்களுக்கு முதலில் நன்றி.மூன்றாம் பிறையாய் மிளிரும் மோகனப் படைப்புக்களை, நிறை
நிலவாம் நிர்மலா அம்மையார் அறிஞர் சேதுபாண்டியனின் துணையுடன் தொகுத்து,
படைப்புலகம் நூலை வெளியிட்டிருப்பதற்கு அடுத்த நன்றி.ஒரு கும்பாபிஷேகம் பார்த்தால்
பன்னிரு ஆண்டுகள் திருக்கோவில் தரிசனம் செய்த புண்ணியம் உண்டு என்பர்.இரா.மோகனின்
படைப்புலகம் நூலைப் படித்தால் அவரின் எண்பது நூல்களையும் வாசித்துணர்ந்த அனுபவம்
உறுதியாக கிட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை!இந்த இணையரின் இலக்கிய வாழ்வு
முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் பகவதிஅம்மனின் மூக்குத்தி
போல் ஒளிர என்போன்ற இலக்கிய வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா Empty Re: நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 11:21 am

நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா 281552 நூலின் பெயர்:பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூலாசிரியர்:முனைவர் இரா.மோகன் திறனாய்வாளர்:முனைவர் ச.சந்திரா 281552
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» நூல் விமர்சனம் நூலின் பெயர்:சாகாவரம் (நாவல்) நூலாசிரியர் :வெ.இறையன்பு இ.ஆ.ப. திறனாய்வாளர் :முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்:என்னோடு நீ நூலாசிரியர்:சு.சோலைராஜா நூல் மதிப்புரையாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆகாய தாமரை நூலாசிரியர்:டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி. மதிப்புரை:முனைவர்.ச.சந்திரா
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum