தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

2 posters

Go down

மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி Empty மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Tue Jun 22, 2010 12:10 pm

மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி
வேளியீடு : முள் சிற்றிதழ் விலை ரூ.10

நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பொதுவாக சிற்பங்கள் மிதக்காது. வித்தியாசமான தலைப்பு எல்லா கவிஞர்களின் முதல் கவிதை காதல் கவிதையாகத்தான் இருக்கும். அந்த வகையில் நூலாசிரியர் கவிஞர் பரிமளாதேவியின் காதல் கவிதை தொகுப்பு இந்நூல். கவிதை குறித்த நன்கு புரிதல் இருப்பதால் நூலில் உள்ள கவிதைகள் அவரவர்களின் காதல் நினைவுகளை தோற்றுவிக்கின்றது. சங்க காலத்தில் நிறைய பெண் கவிஞர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று அந்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. கவிஞர் பரிமளாதேவியின் கவிதைகள் சிறப்பாக உள்ளது. இனிவரும் காலங்களில் சமுதாயத்திற்கான கவிதைகளை வடிக்க வேண்டும். நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

எனக்கு பதில்
உன்னில் என்னைத் தொலைத்தப் பின்
என் கண்ணாடி கூட எனக்கு பதில்
உன் பிம்பத்தையே பிரதிபலிக்கிறது
எதிர்காலம் தொலைத்த நிகழ்காலமாய்
மௌனத்தின் வார்த்தைகள் கூட எனக்கு மறந்து விட்டது.

காதலித்தவர்களுக்கு இந்தக் கவிதை நன்கு விளங்கும். காதலில் லயித்த காலத்தில் காதலன் கண்ணாடி பார்த்தால் காதலி தெரிவாள். காதலி கண்ணாடி பார்த்தால் காதலன் தெரிவான். காலங்காலமாய் தொடரும் உணர்வுகளை நன்கு பதிவு செய்துள்ளார்.

நீயும்,நானும் நிலவினை ரசித்தோம்
நீ நிலவை ரசிக்கும் அழகில் மயங்கி
நான் உனக்கே ரசிகையாகிப் போனேன்

நிலவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. அத்தனை அழகு நிலா. அதனை ரசிப்பதே ஒரு அழகு என்கிறார். ரசிப்பதை ரசிப்பதும் தனி சுகம் தான்.

உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர் மழலைகள் பற்றி அற்புதமாக திருக்குறள் வடித்து இருப்பார்.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்

அதுபோல மழலையின் சிறப்பை விளக்கும் கவிதை இதோ!

மழலை
நடமாடும் நூலகமாய் நவீன ஓவியமாய்
நூதன சிந்தனையில் எதற்கும் இணையற்ற
உலா வரும் உயிர்ச்சிலை

இன்றைய மழலைகள் நம்மை விட அறிவாளிகளாக இருக்கின்றனர் என்பது உண்மை. மிகச் சுருக்கமான சொற்களின் மூலம் மழலைகளின் பெருமையை பறைசாற்றி உள்ள கவித்துவத்திற்கு பாராட்டுக்கள்.

உன்கவிதை
உன் கவிதைப் புத்தகத்திற்கு
நான் பூக்களையே அடையாளம் வைக்கிறேன்
உன் கவிதை அத்தனை மென்மையானது
உன் மனதைப் போல்.

காதலன் கவிஞனாக இருந்து நூலும் எழுதி, காதலிக்கு தந்து இருந்தால் இந்த நிகழ்வு கட்டாயம் நடந்து இருக்கும். காதலன் நினைவு வருகையில் அவனது நூலை படிப்பார்கள்.

நாளை
தினம் தினம் புத்தம் புதிய தகவல்களோடு
விந்தையான விடியல்களின் அறிய முடியா ரகசியம்
நாளையைப் பற்றி யார் அறிவார்கள்? என்பார்கள், ஆனால் கவிஞர் பரிமளாதேவி நாளையைப் பற்றி நன்கு அறிந்துள்ளார்.

மீன்களைப் பற்றி மிக வித்தியாசமாக சிந்தித்து உள்ளார்.

கற்பனை
மீன்களுக்கு ஆடையாக தண்ணீர் இருப்பதனால்
தன் ஆடை இழந்தபின் மீன்கள் உயிர் வாழ்வதில்லையோ?

அடுத்த கவிதையில் மிகவும் ரசனை மிக்க வரிகள்

நீ
மறக்க முடியாத நாட்களின் மறுபதிப்பாக நீ இருக்கின்றாய்
உன் பார்வை பரிமாற்றத்திற்கு பின் என் வார்த்தைகளுக்கு வறுமை கூடித் தான் போனது
உன்னை ஞாபகப்படுத்தும் அந்த நிமிடங்களில் நான் தொலைந்து போகிறேன்.

உன்னை மறந்து விட்டேன் என்னைப் பார்க்க வராதே என உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் ஒரு ஓரத்தில் நினைவுகள் இருப்பது நிஜம்.

ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது
புவிஈர்ப்பு விசையைப் போல உன் ஞாபகம்
காலச்சக்கரம் முன்னோக்கிச் செல்ல
என் ஞாபக வாகனம் மட்டும்
உன்னைக் காண பின்னோக்கியே செல்கிறது
காயங்கள் எல்லாம் ஆறிவிட்டது
ஆனால் வடுக்கள் மட்டும் மறயவே இல்லை

காதலித்தவர்களுக்கு சூழ்நிலை காரணமாக இணையாதவர்களுக்கு ஆறதலாக உள்ளது இந்தக் கவிதை.

சருகாக
உன் ஞாபகத்தீயில் என்னை சருகாகவாவது
இணைத்துக் கொள்வாயா?
சக்திமிக்க சாம்பலாக உன்னோடு கலந்திடுவேனே
நீ பாராட்டும் வார்த்தைக்கு முன்
விருதுகள் கூட வெறும் துகள்களே
காதல் துணையின் பாராட்டிற்கு முன்னே எத்தனை பெரிய விருதுகளும் தூசி தான் என்பதை நன்கு உணர்த்துகின்றது. நல்ல கவிதைகளின் தொகுப்பு நூல் இது. கவிதைகளை படிக்கும் போது படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் அவரவர் காதலை மலரும் நினைவுகளாக தோற்றுவிக்கின்றது. இது தான் படைப்பாளியின் வெற்றி.கவிஞர் உணர்ந்த உணர்வுகளை வாசகனும் உணருகின்றான். தொடர்ந்து பல நூல்கள் எழுதி சாதனை படைக்க நூலாசிரியர் கவிஞர் பரிமளதேவிக்கு வாழ்த்துக்கள்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி Empty Re: மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

Post by eeranila Sun Jul 11, 2010 3:42 pm

அழகாக தொடுக்கப்பட்ட காதல் கவிதைகள், அழகிய எடுத்தாய்வு
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி Empty Re: மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

Post by eraeravi Mon Jul 19, 2010 12:02 am

வணக்கம் மிக்க நன்றி
இரா .இரவி
www.kavimalar.com
http://eraeravi.wordpress.com/
http://eraeravi.blogspot.com/
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி Empty Re: மிதக்கும் சிற்பங்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum