தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

2 posters

Go down

இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி Empty இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

Post by eraeravi Wed Jun 23, 2010 2:40 pm

இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் திரு.நா.மம்மது .
தரமான நூல்களை, அறிவார்ந்த நூல்களை பதிப்பிக்கும் முன்னணி பதிப்பகம் தென்திசையின் மூலம் வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு மிகச்சிறப்பு. முன் அட்டையில் இசைக்கருவிகளின் ஓவியமும், பின் அட்டையில் நூல் ஆசிரியர் திரு.நா.மம்மது அவர்களின் புகைப்படத்துடன் நன்றாக உள்ளது.

தசாவதாரம் படத்தில் �கடவுள் இல்லை என்று சொல்லவில்லை : இருந்திருந்தால் நல்லாயிருக்கும்� என்ற புகழ்பெற்ற வசனத்திற்கு சொந்தக்காரரான பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு நூலை காணிக்கையாக்கி இருப்பது போற்றுதலுக்குரியது. மதுரையில் அனைவராலும் பேராசிரியர் தொ.ப என அன்பாக அழைக்கப்படும் மாமனிதரின் வழிகாட்டுதலில் நிறைய முனைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

நூலாசிரியர் என்னுரையில் மிகச்சிறப்பாக பதிவு செய்து உள்ளார். உலகின் முதன்மொழி தமிழ்மொழி என்பது ஆய்வில் கண்ட உண்மை. அது போல உலகின் முதல் இசை, தமிழ் இசை என்பதை மிகச்சிறந்த ஆய்வின் மூலம் நிருபணம் செய்துள்ளார். அவரது மொழியிலேயே இதோ!

வேர் எது? விழுது எது? என்று பிரிந்து அறிய முடியாத 5000 ஆண்டுகளுக்கு முன்பான பழமையுடைய தமிழர் இசை, தமிழர் ஆடல் என்ற விண்ணளாவி மண்ணளாவிய பெரும் ஆலமரத்திற்கு வேர் வடநாட்டிலும், காசுமீரத்திலும் இருப்பதாக ஆய்வு (!) செய்து நம்மை மயக்கும் நிலை இன்று தொடர்கிறது.

புதிய காற்று உள்பட பல்வேறு உரத்த சிந்தனை விதைக்கும், சிற்றிதழ்கள் அல்ல சீரிய இதழ்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளனர். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பார்கள். பதினாறு கட்டுரைகளும் நேர்காணலும் அடங்கி உள்ளது. நூல் ஆசிரியர் சங்க இலக்கியம் நன்கு கற்ற பெருமகனார் என்பதால் பாடல் வரிகளைச் சொல்லி விளக்கி உள்ளார்கள். கர்நாடக இசை என்பதற்கான விளக்கம் மிக நன்று. இசையால் பயிர்கள் வளர்கின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. பயிரே வளரும் போது மனித உயிரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? இசையால் வசமாகாத இதயம் எது? மொழிகள் கடந்து இசை ரசிக்கும் போது, தாய்மொழி இசையான தமிழ்மொழி இசை பற்றி கூறவும் வேண்டுமோ? இசை இன்பம் தரும், பரவசப்படுத்தும், கவலைகளைக் காணாமல் போக வைக்கும். தமிழிசையின் தொன்மை விளக்கும் சிறந்த நூல் இது.

சங்க இலக்கியம் காட்டும் தமிழ் இசை வரலாறு கட்டுரை ஒன்று போதும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கியமான சங்க இலக்கியத்தில் உள்ள தமிழிசைப்பற்றிய சொற்களை ஆதாரப் ப+ர்வமாய விளக்கி உள்ளார். யாரும் மறுப்புக்கூற முடியாது. தமிழிசைக்கு மிகவும் பிந்திய கர்னாடக இசையை தலையில் வைத்து கூத்தாடுவது மட்டுமின்றி, தமிழிசைக்கு எதிராகவும் தவறான கருத்துக்கூறி வருவோரின் தலையில் கொட்டும் வண்ணம் மிகச்சிறப்பான கட்டுரைகளை வடித்து உள்ளார் நூல் ஆசிரியர்.

தமிழிசையை ஆய்வு செய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இந்த நூலை பாடநூலாக்கலாம். தகவல் களஞ்சியமாக உள்ளது. நூலாசிரியரின் ஆராய்ச்சிக்கான கடின உழைப்பை நன்கு உணர முடிகின்றது. சான்றுக்குறிப்புகளைப் பட்டியலிட்டு கருத்தை ஆணித்தரமாக விதைத்து உள்ளார். தமிழிசைக்கான மறுமலர்ச்சிக்கு இந்த நூல் வழிவகுக்கும் என்பது முற்றிலும் உண்மை. கையிலே வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாய் தமிழன் தரமான தமிழிசையை வைத்துக் கொண்டு கர்னாடக இசை தேடி அலையும் அவலத்திற்கு வேட்டு வைக்கும் சிறந்த நூல் பாராட்டுக்கள்.

இழை இழையாய் இசைத்தமிழாய் நெய்து தமிழாடை தந்து உள்ளார். தமிழிசை சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் வரிகள் ஏராளம் உள்ளது. நூலில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதோ.

சிறுநா நண்மணி விளரி ஆர்ப்ப-குறுந்தொகை,336 சிறுநா ஒண்மணி தௌ; இசை கடுப்ப - நற்றிணை,267 விளரி உறுதரும் தீந்தொடை நினையாத் தளரும் நெஞ்சம் தலைஇ மனையோன்-புறநானூறு,260
ஏற்பாடு நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும் - தொல்காப்பிய நூற்பா ,954

இப்படி தமிழிசைக்கு ஆதாரமாக உள்ள சொற்றொடர்கள் உள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து தொகுத்து பாமாலை போல தமிழன்னைக்கு சூடி உள்ளார். பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் மெய்யாகி விடும் என்று ஒரு கூற்று உண்டு. அதற்கு ஏற்பத்தான் சிலர் தமிழ் அல்லாமல் பிறமொழியை முதல்மொழி என்றும், தமிழிசை அல்லாத பிற இசையை முதல் இசை என்றும், பொய் கூறி வரும் பொய்யர்களின் முகத்திரையை கிழிக்கும் வண்ணம் வந்துள்ள சிறந்த நூல் இது. உலகத்தமிழர்கள் அனைவரும் வாங்கிப்படித்து. தமிழின் பெருமையை தமிழிசையின் தொன்மையை உணர வேண்டிய ஒப்பற்ற நூல்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி Empty Re: இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

Post by Aathira Wed Jun 23, 2010 3:05 pm

விமர்சனக் கட்டுரை என்பது எந்நூலைப் பற்றி எழுகிறதோ அந்நூலைப் படிக்கும ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைய வேண்டும். அத்தகு ஆவலை ஏற்படுத்திய இப்பதிவுக்கு மிக்க நன்றி,
Aathira
Aathira
மல்லிகை
மல்லிகை

Posts : 124
Points : 177
Join date : 06/01/2010

Back to top Go down

இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி Empty nandri

Post by eraeravi Thu Jul 01, 2010 11:54 am

வணக்கம் நூல் மதிப்புரையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி

கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2638
Points : 6350
Join date : 18/06/2010

Back to top Go down

இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி Empty Re: இழை இழையாய் இசைத்தமிழாய் - நூல் விமர்சனம் - கவிஞர் இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மகரந்தச் சேர்க்கை நூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum