தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்ரியுவாய்த் திருக்குறள் 25

+3
ஹிஷாலீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 10, 2012 10:10 am

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

ம. ரமேஷ் சென்ரியு

ஐம்புலன்
அடக்கியவன்
இந்திரன்


ஹிஷாலீ சென்ரியு

அடங்கா ஆசைக்கு
அடங்குபவர்
இந்திரன்...!

புலன் வழி
அறுத்தவன்
உலகின் கோமான்...!

ஐய்புலன்
ஒழித்தவன்
வான்புகழ் மன்னன்...

தளிரின் சென்ரியு

ஐம்பொறிகளை
ஐயிக்கியவன்
ஐயன்.

ஐம்புலன்களை அடக்கியவன் உலகின் தலைவன்.

புலனடக்கம்
கொடுக்கும்
பூவுலக தலைமை!

புலனடக்கம் இப்புவியின் தலைவனாக்கும்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Mon Mar 26, 2012 8:19 pm; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 10, 2012 10:37 am

பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 2:29 pm

ஹிஷாலீ சென்ரியு

அடங்கா ஆசைக்கு
அடங்குபவர்
இந்திரன்...!

புலன் வழி
அறுத்தவன்
உலகின் கோமான்...!

ஐய்புலன்
ஒழித்தவன்
வான்புகழ் மன்னன்...
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தங்கை கலை Fri Feb 10, 2012 2:30 pm

ஸுபேரா இருக்கு அண்ணா அண்ட் ஹிசாலி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 2:32 pm

தங்கை கலை wrote:ஸுபேரா இருக்கு அண்ணா அண்ட் ஹிசாலி

எங்கள் இருவர் சார்பாக மிக்க நன்றிகள் கலை அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 10, 2012 2:35 pm

நல்லா இருக்கு பாராட்டுக்கள் ஹிஷாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 3:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா இருக்கு பாராட்டுக்கள் ஹிஷாலி

மிக்க நன்றி யூஜின்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 10, 2012 5:08 pm

ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

அடங்கா ஆசைக்கு
அடங்குபவர்
இந்திரன்...!

புலன் வழி
அறுத்தவன்
உலகின் கோமான்...!

ஐய்புலன்
ஒழித்தவன்
வான்புகழ் மன்னன்...

ம்... சிறப்பு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Fri Feb 10, 2012 5:11 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ சென்ரியு

அடங்கா ஆசைக்கு
அடங்குபவர்
இந்திரன்...!

புலன் வழி
அறுத்தவன்
உலகின் கோமான்...!

ஐய்புலன்
ஒழித்தவன்
வான்புகழ் மன்னன்...

ம்... சிறப்பு... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பரே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by manisen37 Sat Feb 11, 2012 1:36 pm

ரமேஷ் உங்களுக்கு நிறைய திறமை இருக்கு. உங்களுடைய படைப்புகளில் காதல் கவிதைகள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தாக உள்ளது.பிற சென்ரியு,ஹைக்கூ கவிதைகளில் கவித்துவம் மிகவும்
குறைவாகவே உள்ளது.குறுங்கவிதைகளின் வரலாறு வளர்ச்சி தனித்தன்மைகள் குறித்த தங்களின் கருத்துக்கள் பயனுள்ளவை.கவிதைகளுக்கு விளக்கம் அளிப்பதும் புரிதல் அற்ற தன்மைகளுடன் உங்கள் கவிதைகள் குறிப்பாக சென்ரியு(நகைப்பா) எவ்வித நகைத்தன்மையும் இல்லாது வெறும் வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்கு உரியதாகிறது. இக்கடிதத்தை படிக்கும் பொழுது உங்கள் மனதில் எவ்வளவு வருத்தம் இருக்குமோ அதைவிட பன்மடக்கு வருத்தத்துடன் குறுங்கவிதைகளின் மீது உள்ள ஆர்வத்தினால் இக்கடிதத்தை எழுதியுள்ளேன்

கவிதைபுத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்...
கிடைக்கவில்லை கவிதை
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தங்கை கலை Sat Feb 11, 2012 1:45 pm

manisen37 wrote:ரமேஷ் உங்களுக்கு நிறைய திறமை இருக்கு. உங்களுடைய படைப்புகளில் காதல் கவிதைகள் மட்டுமே தனித்துவம் வாய்ந்தாக உள்ளது.பிற சென்ரியு,ஹைக்கூ கவிதைகளில் கவித்துவம் மிகவும்
குறைவாகவே உள்ளது.குறுங்கவிதைகளின் வரலாறு வளர்ச்சி தனித்தன்மைகள் குறித்த தங்களின் கருத்துக்கள் பயனுள்ளவை.கவிதைகளுக்கு விளக்கம் அளிப்பதும் புரிதல் அற்ற தன்மைகளுடன் உங்கள் கவிதைகள் குறிப்பாக சென்ரியு(நகைப்பா) எவ்வித நகைத்தன்மையும் இல்லாது வெறும் வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்கு உரியதாகிறது. இக்கடிதத்தை படிக்கும் பொழுது உங்கள் மனதில் எவ்வளவு வருத்தம் இருக்குமோ அதைவிட பன்மடக்கு வருத்தத்துடன் குறுங்கவிதைகளின் மீது உள்ள ஆர்வத்தினால் இக்கடிதத்தை எழுதியுள்ளேன்

கவிதைபுத்தகத்தில்
கடைசி பக்கம் வரை தேடல்...
கிடைக்கவில்லை கவிதை

ம்பாராட்டுக்கு நன்றி
நீங்க என்ன சொல்ல வாரீங்கா ...ரமேஷ் அண்ணா ஸுபேரா தானே எழுதுராங்க ...

கவித்துவம் குறைவா இருக்குதா ....ஏன் இப்புடிலாம் .....நல்ல தான் எழுதுராங்க ....

நான் உங்களை குறை சொல்லவில்லை அண்ணா ...

ஆனா ரமேஷ் அண்ணா அவர் மட்டும் எழுதுறது இல்லை ...அவர் மற்றவங்களை motivate பண்ணுறவர் ...

நிறைய சென்றியு போடுவார் ...அவ்ரோட கற்பனை வித்த்யாசமா இருக்கும் ...

உண்மையை சொல்லுறேன் எனக்கு நிறைய கவிதை புரியாது ..சிலது அர்த்தம் கேப்பேன் ...அப்போ அவங்க சொல்லுற அர்த்தம் ரொம்ப பிரமிப்பா இருக்கும் ....

எப்பூடி யோசிக்கிறாங்கன்னு நான் நினைப்பேன் ...கவித்துவம் இருப்பதாய் எனக்கு தெரிகிறது ...

தங்களது கருத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ...

அவர் விளக்கமும் கீழ போட்டால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் நு நினைக்கிறேன்

இது என் கருத்து
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by manisen37 Sat Feb 11, 2012 2:27 pm

அண்ணா அவர் மட்டும் எழுதுறது இல்லை ...அவர் மற்றவங்களை motivate பண்ணுறவர் ...


அவருக்கு பிறரை ஏற்றிவிடும் நல்ல உள்ளம் இருக்கிறது.ஆனால் கவிதையில் தான் கவித்துவம் இல்லை.எடுத்துகாட்டாக,



”உண்மையை
சொல்லுறேன் எனக்கு நிறைய கவிதை புரியாது ..சிலது அர்த்தம் கேப்பேன்
...அப்போ அவங்க சொல்லுற அர்த்தம் ரொம்ப பிரமிப்பா இருக்கும் ....”
உங்களுடைய வாதம். சென்ரியு சாமுதாயத்தை பற்ரி விவரிப்பது.பாமரமக்களுக்கும் புரியும் வண்ணம் படைக்கப்படுவது.ஆனால்,உங்களுக்கு புரியவில்லை,அவர் விளக்கினால் மட்டுமே புரிகிறது எனில் அது சென்ரியுவாக இருக்க இயலாது.


ம. ரமேஷ் சென்ரியு

ஐம்புலன்
அடக்கியவன்
இந்திரன்

எண்ணிக்கை
முரணாக அதிகரிக்கிறது
பற்று அற்றவர்கள்

மெய்
இன்பம்
ஒழுக்கம்



ஐம்புலன்
அடக்கம்
இன்பம்

இறைவன் இருக்கிறான்
கடவுள் இல்லை
இருவரும் நலமுடன்



இவை சென்ரியுவா ....
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Sat Feb 11, 2012 4:27 pm

manisen37 wrote:அண்ணா அவர் மட்டும் எழுதுறது இல்லை ...அவர் மற்றவங்களை motivate பண்ணுறவர் ...


அவருக்கு பிறரை ஏற்றிவிடும் நல்ல உள்ளம் இருக்கிறது.ஆனால் கவிதையில் தான் கவித்துவம் இல்லை.எடுத்துகாட்டாக,



”உண்மையை
சொல்லுறேன் எனக்கு நிறைய கவிதை புரியாது ..சிலது அர்த்தம் கேப்பேன்
...அப்போ அவங்க சொல்லுற அர்த்தம் ரொம்ப பிரமிப்பா இருக்கும் ....”
உங்களுடைய வாதம். சென்ரியு சாமுதாயத்தை பற்ரி விவரிப்பது.பாமரமக்களுக்கும் புரியும் வண்ணம் படைக்கப்படுவது.ஆனால்,உங்களுக்கு புரியவில்லை,அவர் விளக்கினால் மட்டுமே புரிகிறது எனில் அது சென்ரியுவாக இருக்க இயலாது.


ம. ரமேஷ் சென்ரியு

ஐம்புலன்
அடக்கியவன்
இந்திரன்

எண்ணிக்கை
முரணாக அதிகரிக்கிறது
பற்று அற்றவர்கள்

மெய்
இன்பம்
ஒழுக்கம்



ஐம்புலன்
அடக்கம்
இன்பம்

இறைவன் இருக்கிறான்
கடவுள் இல்லை
இருவரும் நலமுடன்



இவை சென்ரியுவா ....
மொத்தத்தில் தாங்கள் கூறுவது என்ன அப்படியென்றால் சென்ரியு எப்படி இருக்கவேண்டும் கொஞ்சம் நீங்கள் கூறுங்களேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by manisen37 Sat Feb 11, 2012 9:00 pm

யாருடைய மனதையும் சிரமப்படுத்துவது என்னுடைய பணி இல்லை
சென்ரியு என்பது சப்பானில் மதுபானக்கடைகளிலும் தேனீர் விடுதிகளிலும் படைக்கப்பட்ட கவிதை வகை. இக்கவிதை வகை தமிழகத்தில் ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களால் ‘ ஒரு வண்டி சென்ரியு’ என்னும் நூலின் வாயிலாக அறியப்பட்டது.
தமிழன்பன் ஐயா சென்ரியு கவிதைகளில் சில,

ஓடுமீன் ஓட
வரும் மீன் பார்க்கும்...
மக்கு

சண்டை கோழி
வென்றாலும் தோற்றாலும் ...
பிரியாணி

பணம் பத்தும் செய்யும்
பணம் இல்லாதவர்கள்...
பணம் செய்தார்கள்

இவையே சென்ரியு(நகைப்பா) கவிதைகளுக்கு அதிசிறந்த எடுத்துக்காட்டுகள்
manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 14, 2012 9:29 am

manisen37 wrote:யாருடைய மனதையும் சிரமப்படுத்துவது என்னுடைய பணி இல்லை
சென்ரியு என்பது சப்பானில் மதுபானக்கடைகளிலும் தேனீர் விடுதிகளிலும் படைக்கப்பட்ட கவிதை வகை. இக்கவிதை வகை தமிழகத்தில் ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களால் ‘ ஒரு வண்டி சென்ரியு’ என்னும் நூலின் வாயிலாக அறியப்பட்டது.
தமிழன்பன் ஐயா சென்ரியு கவிதைகளில் சில,

ஓடுமீன் ஓட
வரும் மீன் பார்க்கும்...
மக்கு

சண்டை கோழி
வென்றாலும் தோற்றாலும் ...
பிரியாணி

பணம் பத்தும் செய்யும்
பணம் இல்லாதவர்கள்...
பணம் செய்தார்கள்

இவையே சென்ரியு(நகைப்பா) கவிதைகளுக்கு அதிசிறந்த எடுத்துக்காட்டுகள்

ஆரோக்கியமான விவாதத்திற்கு நன்றி manisen37

என் சிறிய விளக்கம் 1

தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும்.

மூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள்.

நீங்கள் குறிப்பிடும்படி நகைச்சுவை நோக்கத்திற்காக மட்டுமே சென்ரியு எழுதப்படுவதில்லை. அப்படி எழுதித்தான் ஆக வேண்டும் என்றால் நம்மிடம் நகைச்சுவை(ஜோக்ஸ்) என்ற வடிவம் இருக்கிறது.

நான் ஹைக்கூ சென்ரியு லிமரைக்கூ ஹைபுன் போன்ற பல வடிவங்களின் ஆழத்தைப் படித்துள்ளேன். கவிதைகளும் எழுதி வருகிறேன். அதனால் தோட்டத்தில் கருத்துக்களையும் மாற்றங்களையும் சொல்லிவருகிறேன். எனக்கு எதாவது தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியவில்லை என்று ஒப்புக்கொள்கிறவன் நான். வீம்புக்கு நான் சொல்வதுதான் உண்மையானது என்று அடம் பிடிப்பதில்லை.
நாங்கள் எழுதும் திருக்குறளுக்கானச் சென்ரியு, சென்ரியு இலக்கணத்துக்கு உட்பட்டதே.

நீங்கள் மேலே படித்து எடுத்துக்காட்டிய சென்ரியுக்கள் அனைத்தும் திருக்குறளுக்கு நாங்கள் மூவர் எழுதும் சென்ரியுக்களைத்தான். திருக்குறளுக்கு நகைச்சுவையாகச் சென்ரியு எழுதமுடியாது என்பதைச் சென்ரியு எழுதுபவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். நகைச்சுவை உணர்வுக்கு மட்டும் எழுதுவது சென்ரியு அல்ல. கவித்துவம் குறைந்தும் கருத்தைச் சொல்வதும் சென்ரியுதான். நாங்கள் திருக்குறளுக்குக் கருத்தை- சென்ரியு பாணியில் சொல்கிறோம். மேலும் சென்ரியு ஆழம் குறைந்து கருத்து குறைந்து படித்தவுடனேயே புரியும் படியும் இருக்க வேண்டும் என்பதும் தவறானதே.

திருக்குறளுக்குச் சில கவிஞர்கள் ஹைக்கூ எழுதியதைக் கண்டு, நான் வருந்தினேன். உண்மையாகவே திருக்குறளுக்கோ தனிப்பட்ட புலவனுக்கோ நூலுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ ஒரு நடிகனுக்கோ நோய்களுக்கோ ஹைக்கூ எழுத முடியாது என்பது உண்மை. ஆனால் இவைகளைச் சென்ரியு பாட அனுமதிக்கிறது. அதனால் நாங்கள் மூவரும் ஒரு புது முயற்சியாகத் திருக்குறளுக்குச் சென்ரியு எழுதி வருகிறோம். நீங்களும் எங்களோடு சென்ரியு எழுத முன்வருவீர்கள் என்றால் மிகவும் மனம் மகிழ்வோம்.

என் நிலைப்பாட்டில் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும். நன்றி manisen37


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 14, 2012 9:53 am; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 14, 2012 9:49 am

manisen37 wrote:அண்ணா அவர் மட்டும் எழுதுறது இல்லை ...அவர் மற்றவங்களை motivate பண்ணுறவர் ...


அவருக்கு பிறரை ஏற்றிவிடும் நல்ல உள்ளம் இருக்கிறது.ஆனால் கவிதையில் தான் கவித்துவம் இல்லை.எடுத்துகாட்டாக,



”உண்மையை
சொல்லுறேன் எனக்கு நிறைய கவிதை புரியாது ..சிலது அர்த்தம் கேப்பேன்
...அப்போ அவங்க சொல்லுற அர்த்தம் ரொம்ப பிரமிப்பா இருக்கும் ....”
உங்களுடைய வாதம். சென்ரியு சாமுதாயத்தை பற்ரி விவரிப்பது.பாமரமக்களுக்கும் புரியும் வண்ணம் படைக்கப்படுவது.ஆனால்,உங்களுக்கு புரியவில்லை,அவர் விளக்கினால் மட்டுமே புரிகிறது எனில் அது சென்ரியுவாக இருக்க இயலாது.


ம. ரமேஷ் சென்ரியு

ஐம்புலன்
அடக்கியவன்
இந்திரன்

எண்ணிக்கை
முரணாக அதிகரிக்கிறது
பற்று அற்றவர்கள்

மெய்
இன்பம்
ஒழுக்கம்



ஐம்புலன்
அடக்கம்
இன்பம்

இறைவன் இருக்கிறான்
கடவுள் இல்லை
இருவரும் நலமுடன்



இவை சென்ரியுவா ....

என் விளக்கம் 2

சென்ரியுவில் கவித்துவம் இருக்கக்கூடாது என்பது கட்டாயம் இல்லை. சில சென்ரியுக்களுக்கு விளக்கம் தேவைப்படும் என்பது உண்மையே. தமிழன்பனின் ஒரு வண்டி சென்ரியு கவிதைகளை கோவை ஞானி விளக்கியிருக்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சென்ரியு என்பது தங்கள் பார்வையில் நகைச்சுவைதான் (ஜோக்தான்) என்ற தீர்மானத்திலேயே இருக்கிறீர்கள்... சென்ரியு பல கருத்துப் பரிமாணங்களைக் கொண்டது.

எடுத்துக்காட்டுக்கு நீங்கள்
தமிழன்பனின் ஒரு வண்டி சென்ரியுவின் முன்னுரையையும்
நிர்மலா சுரேஷின் ஹைக்கூ ஆய்வு நூலையும்
சுஜாதாவின் ஹைக்கூ அறிமுகம்
நெல்லை சு. முத்துவின் தமிழில் ஹைக்கூ
ஜப்பானிய தமிழ் ஹைக்கூக் கவிதைகள் ஓர் ஒப்பாய்வு - பரிமளம் சுந்தர்

என்ற குறிப்பிட்டச் சில நூல்களைக் கற்பீரானால் சென்ரியுவின் பாடுபொருளின் விரிவுகளை - களங்களை விரிவாக தெரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Feb 14, 2012 9:59 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by manisen37 Tue Feb 14, 2012 9:54 am

தங்கள் எண்ணம் நல்ல எண்ணமே. தங்கள் கவிதைகளை நான் பெருவாரியாக படித்துள்ளாதால் இக்கவிதைகளில் தேக்க நிலை உள்ளதால் சுட்டிகாட்டினேன்.தங்கள் கசல் கவிதைகள் அற்புதமான தன்மை வாய்ந்தவை.எனினும், சென்ரியுவில் நீங்கள்
”கவித்துவம் குறைந்தும் கருத்தைச் சொல்வதும் சென்ரியுதான். நாங்கள் திருக்குறளுக்குக் கருத்தை- சென்ரியு பாணியில் சொல்கிறோம்”.கருத்தை மட்டும் கூறாது அதன் பண்பான அங்கத வடிவத்தையும் சேர்த்து கூறவேண்டும் என்பது என் எண்ணம். தங்கள் கருத்திற்கும் கவி உள்ளத்திற்கும் இரசிப்புத்தன்மைக்கும் நன்றிகள்

manisen37
manisen37
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 353
Points : 609
Join date : 26/03/2011

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 14, 2012 10:07 am

manisen37 wrote:தங்கள் எண்ணம் நல்ல எண்ணமே. தங்கள் கவிதைகளை நான் பெருவாரியாக படித்துள்ளாதால் இக்கவிதைகளில் தேக்க நிலை உள்ளதால் சுட்டிகாட்டினேன்.தங்கள் கசல் கவிதைகள் அற்புதமான தன்மை வாய்ந்தவை.எனினும், சென்ரியுவில் நீங்கள்
”கவித்துவம் குறைந்தும் கருத்தைச் சொல்வதும் சென்ரியுதான். நாங்கள் திருக்குறளுக்குக் கருத்தை- சென்ரியு பாணியில் சொல்கிறோம்”.கருத்தை மட்டும் கூறாது அதன் பண்பான அங்கத வடிவத்தையும் சேர்த்து கூறவேண்டும் என்பது என் எண்ணம். தங்கள் கருத்திற்கும் கவி உள்ளத்திற்கும் இரசிப்புத்தன்மைக்கும் நன்றிகள்
தங்கள் எண்ணம் கண்டிப்பா ஈடேறும் ஆனால் தற்போது அல்ல... அதாவது தற்போது இல்லை அறத்துப்பாலில் இல்லை. இன்னும் திருக்குறள் அறத்துப்பாலைக் கடக்க வில்லை. இந்த அறத்துப்பாலில் இவ்வாறுதான் திருக்குறளுக்குச் சென்ரியு எழுத முடியும். எழுதவும் வேண்டும்.

பொருட்பால், காமத்துப்பாலில் பாருங்கள் நீங்கள் விரும்புவதற்கு மேலாகவே சென்ரியுவில் அங்கதமும் நகைச்சுவை உணர்வும் மேலோங்கிக் காணப்படும்.

கஸல் கவிதையைப் பாராட்டியதற்கு நன்றியும் மகிழ்ச்சியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 14, 2012 11:09 am

அருமையான விளக்கம் கொடுத்து சந்தேகத்தை நிவிரித்தி செய்த எனதருமை நண்பர் கவியருவி ரமேஷுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Tue Feb 14, 2012 11:10 am

விளக்கம் கொடுத்து என்னை மீண்டும் எழுத தூண்டிய கவியருவி ம ரமேஷ் நண்பருக்கு எனது நன்றிகள்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 14, 2012 11:13 am

ஹிஷாலீ wrote:விளக்கம் கொடுத்து என்னை மீண்டும் எழுத தூண்டிய கவியருவி ம ரமேஷ் நண்பருக்கு எனது நன்றிகள்.
துவண்டு போகாதீங்க தங்கையே, விமர்சனங்களை இருந்தால் தான் முன்னேற முடியும்  சென்ரியுவாய்த் திருக்குறள் 25 868492
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Tue Feb 14, 2012 11:14 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ஹிஷாலீ wrote:விளக்கம் கொடுத்து என்னை மீண்டும் எழுத தூண்டிய கவியருவி ம ரமேஷ் நண்பருக்கு எனது நன்றிகள்.
துவண்டு போகாதீங்க தங்கையே, விமர்சனங்களை இருந்தால் தான் முன்னேற முடியும்  சென்ரியுவாய்த் திருக்குறள் 25 868492

ஒக் அண்ணா thanks அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Feb 14, 2012 4:51 pm

ஹிஷாலீ wrote:விளக்கம் கொடுத்து என்னை மீண்டும் எழுத தூண்டிய கவியருவி ம ரமேஷ் நண்பருக்கு எனது நன்றிகள்.

வணக்கம் தோழி என்னுடன் பயணிப்பதில் மகிழ்கிறேன். நான் என்றும் தங்களுக்கோ தோட்டத்துக்கோ தவறான வழிகாட்டியாக இருக்கமாட்டேன் என்று உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

அறத்துப்பாலில் இவ்வாறுதான் திருக்குறளுக்குச் சென்ரியு எழுத முடியும். எழுதவும் வேண்டும். அறத்தை - நீதியைப் போதிக்கும்போது எப்படி நகைச்சுவையாகப் போதிக்க முடியும். செய்தியாகத்தான் சொல்ல முடியும் என்பதை ஹிஷாலீயும் தோட்டத்து நண்பர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொருட்பால், காமத்துப்பாலில் பாருங்கள் நீங்கள் விரும்புவதற்கு மேலாகவே சென்ரியுவில் அங்கதமும் நகைச்சுவை உணர்வும் மேலோங்கிக் காணப்படும். நாங்கள் எழுதுவோம்.

நண்பர் நகைச்சுவை ஒன்றினையே நோக்கமாகக் கொண்டெழுதப்படுவது சென்ரியு என்று இப்போதும் ஆழமாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் பதிலில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு அல்ல என்பதையும் இன்னும் பல கருத்துக்களை உள்ளடக்கியது என்பதையும் நான் விளக்கியுள்ளேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by ஹிஷாலீ Tue Feb 14, 2012 4:53 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
ஹிஷாலீ wrote:விளக்கம் கொடுத்து என்னை மீண்டும் எழுத தூண்டிய கவியருவி ம ரமேஷ் நண்பருக்கு எனது நன்றிகள்.

வணக்கம் தோழி என்னுடன் பயணிப்பதில் மகிழ்கிறேன். நான் என்றும் தங்களுக்கோ தோட்டத்துக்கோ தவறான வழிகாட்டியாக இருக்கமாட்டேன் என்று உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

அறத்துப்பாலில் இவ்வாறுதான் திருக்குறளுக்குச் சென்ரியு எழுத முடியும். எழுதவும் வேண்டும். அறத்தை - நீதியைப் போதிக்கும்போது எப்படி நகைச்சுவையாகப் போதிக்க முடியும். செய்தியாகத்தான் சொல்ல முடியும் என்பதை ஹிஷாலீயும் தோட்டத்து நண்பர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொருட்பால், காமத்துப்பாலில் பாருங்கள் நீங்கள் விரும்புவதற்கு மேலாகவே சென்ரியுவில் அங்கதமும் நகைச்சுவை உணர்வும் மேலோங்கிக் காணப்படும். நாங்கள் எழுதுவோம்.

நண்பர் நகைச்சுவை ஒன்றினையே நோக்கமாகக் கொண்டெழுதப்படுவது சென்ரியு என்று இப்போதும் ஆழமாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் பதிலில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறு அல்ல என்பதையும் இன்னும் பல கருத்துக்களை உள்ளடக்கியது என்பதையும் நான் விளக்கியுள்ளேன்.

தங்கள் விளக்கம் மிகவும் பொருத்தமான ஒன்று அதை நான் வழி மொழிகிறேன் நண்பரே நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Feb 14, 2012 7:56 pm

பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் பயணம் நம் தோட்டத்தில்  சென்ரியுவாய்த் திருக்குறள் 25 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 சென்ரியுவாய்த் திருக்குறள் 25 Empty Re: சென்ரியுவாய்த் திருக்குறள் 25

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum