தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

+16
கலைநிலா
அ.இராமநாதன்
tamizhmuhil
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
நிலாமதி
சதாசிவம்
ramaswamy
கலைவேந்தன்
rameshalam
vinitha
ஹிஷாலீ
தமிழ்1981
ருக்மணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
20 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 20, 2012 7:17 am

First topic message reminder :

நட்பு அந்தாதியைத் தொடங்குவதில் தோட்டம் மகிழ்கிறது.

ஏற்கெனவே தோட்டத்தில் காதல் அந்தாதி, அம்மா அந்தாதியை முறையே புத்தகமாக 120, 100 பக்கங்கள் எழுதி முடித்த பெரும் பங்கும் சிறப்பும் நம் தோட்டக் கவிஞர்களுக்கு உண்டு. அந்த அந்தாதிகள் முற்றுபெற்றதுபோல இந்த அந்தாதியையும் நம் கவிஞர்களும் வரவிருக்கும் கவிஞர்களும் சிறப்பாக எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேற்கண்ட அந்தாதிகள் புத்தகமாகத் தொகுக்கும் முயற்சியில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் செம்மை பெறும். புத்தகமாக வெளிவரும். பங்கேற்ற கவிஞர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நட்பு அந்தாதியையும் எளிமையாக முடித்துவைப்பீர்கள் என்றே நினைக்கிறோம்.

நட்பு அந்தாதியில் காதலைச் சேர்க்க வேண்டாம். காதல் என்ற வார்த்தை இடம் பெறலாம். அந்தக் கவிதைகளில் காதலின் கருப்பொருள் இருக்கக்கூடாது. நட்பையே முன்னிலைப் படுத்தவேண்டும்.

எத்தனை வகை நட்பு இருக்கிறதோ அத்துணை வகை நட்பையும் நாம் கவிதையாக்கலாம். நட்பில் துரோகங்கள் காணப்படுகிறதையும் கவிதையாக்கலாம். எல்லாம் கற்பனை என்று இல்லாத அளவுக்கு கற்பனை கலந்து கவிதையை செம்மையாகவும் நேர்த்தியாகவும் படையுங்கள்.

ஒவ்வொரு கவிதையும் 10 வரிகளுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். தமிழ் எழுதும் கவிதைகள் 20 வரிகளைத் தொட்டுவிடுகிறது. இத்தனை வரிகள் எழுதியே ஆக வேண்டும் எனில் கட்டுப்பாடு இல்லை.

கவிதையை கவிதையாகவே பார்க்க வேண்டும். ஆண் பெண் நட்பு, ஆண் ஆண் நட்பு, பெண் பெண் நட்பு, தாய் தந்தை பிள்ளைகளின் நட்பு, குழந்தைகளின் நட்பு... இப்படி நட்புதான் அந்தாதியின் கருப்பொருள்...

தொடர்க... வழக்கம் போல் அந்தாதிக் கவிதைகளில் கருத்துரைகளைத் தவிர்க்கச் சொன்னோம். இந்த அந்தாதியில் கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது. சிறந்த கருத்துரைகள் புத்தக ஆக்கத்தின் போது அந்தந்த கவிதைகளுக்குக் கீழாகவே எழுதியவரின் பெயரோடே சேர்த்து வெளியிடப்படும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:56 pm

மனத்திற்குள்
சோகம் குடிகொள்ளும்போது
உன் தன்னம்பிக்கையான
வார்த்தைகள்தான்
பாரத்தைக் குறைத்து
மனிதனாக்குகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Thu Jan 31, 2013 8:58 pm

[quote="அ.இராமநாதன்"][You must be registered and logged in to see this image.]

மனதுக்குள் போராட்டம்
மனம் விரும்பிய பின்னும்
காதல் நடப்பில்
தடுமாற்றம்
நட்பாய் இன்று
நடமாட்டம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Thu Jan 31, 2013 9:00 pm

மனிதனாக்குகிறது.
புண் பட்ட போது
மனிதனாக்கியது
பிறர் துயர் துடைத்தபோது...

கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Thu Jan 31, 2013 10:27 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
tamizhmuhil wrote:எந்த வார்த்தையை வைத்து அந்தாதியை தொடர்வது நண்பரே ? "தொடரும்" என்ற சொல்லை வைத்தா ? அன்றி " பொருந்திடுமே" என்ற சொல்லை வைத்தா?

என்று கேட்டு இருக்கிறீர்கள்... அந்தாதி எழுதுபவர்கள் கவனத்திற்கு... நீங்கள் எழுதுவதற்கு முன்னர் யார் எழுதி முடித்து இருக்கிறார்களோ அவரைத் தொடர்ந்து அந்தாதியாக எழுதுங்கள்... ஒரே நேரத்தில் இருவர் அல்லது மூவர் பதியும்போது அந்தாதியின் - கவிதையின் முதல் அடி மாற வாய்ப்பு இருக்கிறது. அதை தமிழ்த்தோட்டத்தின் புத்தகக் குழு பெரிய மாற்ற மின்றி சரி செய்து கொள்ளும். ஒரு வேலை அதை நீங்களாகக்கூட தங்கள் கவிதையின் முதல் அடியைத் திரும்ப மாற்றி எழுதி பதியலாம்.

சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு நன்றி நண்பரே !!! நன்றி
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Thu Jan 31, 2013 10:33 pm

பிறர் துயர் துடைத்த போது
உணர்ந்தேன் - அன்பின்
பெருமையை !!!
பலரும் துணையாய்
கைகோர்த்து நின்ற போது
உணர்ந்தேன் - நட்பின்
வலிமையை !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 8:28 pm

வலிமை பலமாகிறது
நட்பில் அன்பிலும்...
பிரிவின் முடிவில்
கண்ணீர் ரணமாகிறது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Feb 02, 2013 8:31 pm

ரணமாகிப்போனது
இன்று நான் வடிக்கும்
கண்ணீர்...
மகனே
நான் நண்பனாகத்தான்
பழகினேன்...
நீ உயர்ந்ததும்
என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து
நீயாக உன்னைத் தாழ்த்திக் கொண்டாய்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Sun Feb 03, 2013 1:33 am

தாழ்த்திக் கொண்டாய்
உன் தலையை மௌனமாய் -
நான் வருவதை தொலைவிலிருந்து
கண்ட உடனே !!! - உன் எதிர்பார்ப்பும் புரிகிறது !
யார் முதலில் மௌனத்தைக் கலைப்பதென்று
இருவர் மனதிலும் போராட்டம் !!
இதோ... வந்துவிட்டேன் - ஒரு
நட்பின் மரணத்தை மனம் ஏற்கவில்லை !!!

tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Sun Feb 03, 2013 3:36 pm

மனம் ஏற்கவில்லை !!! - சொல்லம்பு
கொண்டு உள்ளம் தனை
பதம் பார்த்து விட்டு - அதற்கு
கிண்டல் என்று நாமகரணம் சூட்டி
" நட்பில் இதெல்லாம் சாதாரணமப்பா " - என்று
அசட்டையாய் சொல்லிச் செல்லும்
மக்களை - நண்பர்களென்று !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Sun Feb 03, 2013 10:30 pm

நண்பர்களென்று மார்த்தாட்டி
உங்களை நான் காட்டுவேன்
எனது கவிதைக்கு
கைத்தட்டியதை நினைவு கூர்ந்து...

எங்கோ இருந்தாலும்
தமிழ்த் தோட்டம்
எனது உறவு யென்றும்
நண்பர்களென்று நான்
என்றும் சொல்லுவேன்...

நான் சொல்லுவது யெல்லாம்
உண்மையை தவிர வேறு
ஒன்றுமில்லை...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by அ.இராமநாதன் Mon Feb 04, 2013 2:58 pm

[You must be registered and logged in to see this image.]
---
ஒன்றுமில்லை
என்பதிலேயே
எல்லாமே இருக்கிறது
— அது தான் நிஜம்.

-
------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Mon Feb 04, 2013 4:18 pm

நிஜத்தை மறைத்தாலும்
மறையாது...
நட்பை விட்டாலும்
மறக்காது..


Last edited by கலைநிலா on Mon Feb 04, 2013 7:32 pm; edited 1 time in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:15 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
---
ஒன்றுமில்லை
என்பதிலேயே
எல்லாமே இருக்கிறது
— அது தான் நிஜம்.

-
------------------------------------
எல்லாரும் பாருங்க... ஐயாவும் அந்தாதி எழுதுறாரு... அந்தாதி எழுதுறாரு... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Mon Feb 04, 2013 7:33 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
---
ஒன்றுமில்லை
என்பதிலேயே
எல்லாமே இருக்கிறது
— அது தான் நிஜம்.

-
------------------------------------
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:36 pm

அரை கிலோ திராட்சியை எப்படித் தூக்கிக் குடுத்தாரு பாருங்க...

உங்களுக்குப் பெரிய மனசுங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Mon Feb 04, 2013 7:39 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அரை கிலோ திராட்சியை எப்படித் தூக்கிக் குடுத்தாரு பாருங்க...

உங்களுக்குப் பெரிய மனசுங்க...
[You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Mon Feb 04, 2013 10:48 pm

மறக்காது இருக்க வேண்டி
உன் பிறந்த நாளை
ஆரம்பத்தில் என் டைரியிலும்
பின் - நிரந்தரமாய் என்
மனதிலும் !! - ஒவ்வோராண்டும்
நான் வாழ்த்தும் போதெல்லாம்
கேட்பாய் - அதெப்படி உனக்கு மட்டும்
என் பிறந்தநாள் நினைவில் உள்ளதென்று ?
மறந்தால் தானடி தோழி - அதை நான்
நினைவில் வைத்துக் கொள்வதற்கு ???
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Thu Feb 07, 2013 1:07 pm

வைத்துக் கொள்வதற்கு
நினைவுப் பரிசொன்றை
உனக்களிக்க விழைந்தேன் - என் தோழி
நீயோ உன் நினைவுகளையே
எனக்கு பரிசாக அளித்து விட்டாய் !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Thu Feb 07, 2013 6:13 pm

பரிசாக அளித்து விட்டாய் இறைவா,
பாசமிகு நண்பர்களையெனக்கு!
இனி தோல்விகள் எதுவரினும்
தொய்வடையாது மனம்
தோள்கொடுக்க தோழர்கள் இருப்பதால்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Sat Feb 09, 2013 5:00 pm

தோள்கொடுக்க தோழர்கள் இருப்பதால்
தாங்கிடலாம் பூமியையும் நம்
உள்ளங்கை தனிலே !!!
வானமும் வந்து விடும்
தொட்டு விடும் தூரத்திலே !!!
அன்பு கொண்டு
ஆட்சியும் செலுத்தலாம் -
இந்த அவனியிலே !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Tue Feb 12, 2013 6:48 am

இந்த அவனியிலே
என்றென்றும் நாங்கள்
உனக்காகவே !!! - உன்
தேடல்கள் எங்களுள்
கிடைக்கட்டும் !! - உன்
கனவுகள் என்றும்
எங்கள் கண்களில் விரியட்டும் !!
உன் வெற்றிக் கோட்டைக்கு
எங்கள் உழைப்பு அடித்தளமாய்
அமையட்டும் !! - நீ
ஜோதியாய் ஒளிர
என்றென்றும் நாங்கள்
மெழுகுவர்தியாகிறோம் என்று
நமக்காகவே வாழும்
நம் பெற்றோர்
நம் முதல் நண்பர்களன்றோ??
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Mon Feb 18, 2013 1:59 pm

நண்பர்களன்றோ நம்மை
முழுதாய் உணர்ந்தவர்கள் !!
இன்பம் துன்பம்
ஆத்திரம் மகிழ்ச்சி
உயர்வு தாழ்வு
என்றனைத்து நிலையிலும்
தோளோடு தோளாய்
துணை நிற்கும் அவர்கள்
நமக்கு பாதுகாப்புத் தூண்கள் !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Fri Jun 07, 2013 6:52 pm

தூண்கள் தூர்ந்துபோகாதவரை
கட்டிடங்கள் கவலைப்படுவதில்லை!
நண்பர்கள் நம்மோடிருக்கும்வரை
நம் நம்பிக்கைகள் நசிந்துபோவதில்லை!
உப்பில்லா வீட்டில்
உணவுகள் ருசிப்பதில்லை!
நட்பில்லா வாழ்வில்
நம்பிக்கைகள் துளிர்ப்பதில்லை!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jun 07, 2013 8:56 pm

துளிர்க்கும் நட்புகள்
விருட்சமாகும்
மண்ணில் வீழ்ந்த பின்பும்
நினைவுகளாகும்!
என்றும் உடன் வரும் நட்பும்
பிரிந்து நிற்கும் நட்பும்
ஆயிரம் கதைகள் பேசும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by tamizhmuhil Sun Jun 09, 2013 3:21 am

ஆயிரம் கதைகள் பேசும்
ஆதரவாய் தோள் கொடுக்கும்
அருகிருந்தாலும் தொலைவிலிருந்தாலும்
அழகாய் தான் வளரும் நல்நட்பு
அன்பின் வழியே என்றென்றும் !!!
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 4 Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum