தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
3 posters
Page 1 of 1
சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
சாட்டை !
இயக்கம் M.அன்பழகன் .
நடிப்பு சமுத்திரக்கனி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
துளி கூட ஆபாசமின்றி மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார்
இயக்குனர் அன்பழகன்.சமுத்திரக்கனி ஆசிரியராகவே மாறி பாத்திரத்தில்
நடிக்காமல் வாழ்ந்துள்ளார் இப்போது வரும் பல திரைப்படங்கள் குடும்பத்துடன்
சென்று பார்க்க முடிய வில்லை .ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று
அவசியம் பார்க்க வேண்டும் .தமிழ்த் திரைப்படத் துறையை புதிய உயரத்திற்கு
கொண்டு சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள் .
அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் காட்டி .ஆசிரியர்கள் மனது
வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னதமான படைப்பு .அரசு
மருத்துமனை சுகாதாரமின்றி இருப்பது போல அரசுப்பள்ளி தரமின்றி இருக்கின்றது.
சில ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவது ,வகுப்பறையில் தூங்குவது ,வீட்டு
வேலையை மாணவனிடம் வாங்குவது ,சத்துணவுப் பொருட்களை கையாடல் செய்வது
,மாணவியிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இவற்றை தோலுரித்து காட்டி விட்டு
.மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும்
முன்பாக குருவை வைத்தார்கள் .அப்படிப்பட்ட குரு எப்படி ? நடந்துக்
கொள்ள வேண்டும் . என்று கற்பிக்கும் சிறந்த படம் .இந்தப்படத்தை எல்லா
ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .
தாயாளன் ஆசிரியராக சமுத்திரக்கனி மிக நன்றாக நடித்து உள்ளார்
.தோப்புக் கரணம் போடுவது மூளையை சுறுசுறுப்பு ஆக்குகின்றது.ஒரே நேரத்தில்
மணி அடித்து தீபாராதனை காட்டுவது இடது மூளை வலது மூளை இரண்டும் வேலை
செய்ய உதவுகின்றது .சாக் பீஸில் எழுதி, எழுதிய சொல்லைக் கேட்காமல் வண்ணத்தை
கேட்டு மாணவர்களின் மூளைக்கு வேலை வைப்பது .மாணவர்களிடம் அன்பு
செலுத்துவது, சக தோழன் போல பழகுவது .இப்படி தயா ஆசிரியர் படம் பார்த்து
விட்டு வீட்டுக்கு வந்த பின்னும் மனதை விட்டு அகலாமல் நிற்கிறார் .தயா
போன்று எல்லா ஆசிரியர்களும் மாறி விட்டால் நம் நாடு முன்னேறி விடும் .
தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ஒரு ஆசிரியர் எப்படி? இருக்கக்
கூடாது என்பதற்கு உதாரணமாக வில்லன் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்து
உள்ளார் . படத்தின் கடைசி காட்சியில் தயா ஆசிரியருக்கு பல தீங்கும் செய்த
போதும் , தண்டிக்காமல் மன்னித்த உள்ளம் கண்டு நெகிழும் போது மிக நன்றாக
நடித்து உள்ளார் .தலைமை ஆசிரியாராக வரும் ஜூனியர் பாலையா மிக நன்றாக
நடித்து உள்ளார்.
மாணவ மாணவிகள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம் .
சிறந்த இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார் அன்பழகன் .ஒரு
தந்தை மகனிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும் .ஒரு மகன் தந்தையிடம் எப்படி
? நடந்து கொள்ள வேண்டும். என்று வாழ்வியல் பாடம் சொல்லும் படம் . நம்
நாட்டில் பெண் பிள்ளையிடம் அவள் சம்மதம்இல்லாமலேயே யாரவது காதல் கடிதம்
தந்து விட்டால் உடன் பெண் பிள்ளையின் படிப்பிற்கு முடிவுரை எழுதும் அவலம்
எங்கும் நடக்கின்றது.அது தவறு. பெண் பிள்ளைகளை நம்புங்கள் .படிக்க
வையுங்கள். என்று படிப்பினை சொல்லித் தரும் படம் .
மாணவர்களை வெயிலில் முட்டி போட வைத்து தண்டனை தருவது தவறு .அன்பால் திருந்துங்கள் .
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் .எந்த மாணவனையும்
உதவாக்கரை ,படிப்பு ஏறாது என்று புறக்கணிக்காதீர்கள் .பெண் ஆசிரியர்கள் ஆடை
ஒழுக்கமாக இருக்க வேண்டும் .ஆசிரியர்கள் கெட்ட பழக்கம் இன்றி இருக்க
வேண்டும் .இப்படி பல தகவல்கள் படத்தில் உள்ளது .இந்தப் படம் பார்த்த
மாணவனுக்கும் ஆசிரியருக்கும் மன மாற்றம் நிகழும் என்று அறுதி இட்டு கூறலாம்
.
மாணவி அறிவழகியை மாணவன் பழனி விரட்டி விரட்டி ஒரு தலையாக காதலிக்க
அவள் மறுக்கிறாள்.படிக்காமல் சுற்றியவன் ஆசிரியர் தயா அவர்களின் அறிவுரை
கேட்டு நன்கு படிக்கிறான்.விளையாட்டிலும் ,கலை நிகழ்ச்சியிலும் பள்ளிக்கு
முதலிடம் பெற்றுத் தருகிறான் .உடன் மாணவி அறிவழகி அவளும் காதலிப்பதாக
சொல்லுகிறாள் .படம் வழக்கமான மசாலா காதல் கதை ஆகிவிடுமோ ? என்று
நினைக்கும் போது, மாணவன் பழனி பேசும் வசனத்தில் இயக்குனர் முத்திரை
தெரிகின்றது ." இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் என் தந்தை உள்பட எல்லா
ஆசிரியர்களும் என்னை வெறுத்தபோது ,ஆசிரியர் தயா என் மீது அன்பு
செலுத்தினார் என்னை நம்பினார் .அவர் நம்பிக்கை வீண் போக நான் விரும்ப
வில்லை . அறிவழகி நன்றாக படிக்கும் மாணவி .காதலிப்பது தெரிந்தால் அவள்
வீட்டில் அவள் படிப்பதை நிறுத்தி விடுவார்கள் .எனவே நான் காதலிக்க
விரும்பவில்லை ".என்று நண்பன் முருகனிடம் சொல்கிறான் .சமுதாயத்தில் மாற்றம்
உருவாக்கும் மிக நல்ல படம் .இநதப் படத்தில் கொலை, கொள்ளை ,வன்முறை
,வெட்டு, குத்து ,ஆபாசம் எதுவுமின்றி ய்தரமான படம் தந்துள்ளார்.
பாராட்டுக்கள்.
இந்த படத்தை கோடிகளை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தந்து ,வெளி
நாடுகள் சென்று கோடிகளை விரையம் செய்து படம் எடுக்கும் மசாலா பட
இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம் இது .
திக்கு வாய் குறை உள்ள மாணவி வீட்டில் நன்றாக பேசுகிறாள் ..ஆனால்,
பள்ளிக்கு வந்ததும் சக மாணவர்கள் கேலிக்கு அஞ்சி அதிகம் திக்குகின்றது
.இதனை உணர்ந்த ஆசிரியர் தயா , மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி திக்கு வாய்
குறை உள்ள மாணவிக்கு படிக்க பயிற்சி தந்து பேச்சுப் போட்டியில் பங்குப் பெற
வைக்கிறார் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
எடுத்துக்காட்டு ஆசிரியர் தயா.
மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளியை மாவட்டத்தில் முதல் பள்ளியாக வர
வைத்து விட்டு ,ஆசிரியர் தயா படத்தின் இறுதியில் மாணவர்கள் வேண்டுதலையும்
மீறி ,அடுத்த மாவட்டத்தில் பின் பின்தங்கிய பள்ளி நோக்கி பயணிக்கும்
முடிவும் பாராட்டுக்குரியது .இயக்குனர் M.அன்பழகன், இயக்குனர் சமுத்திரகனி
வெற்றிக் கூட்டணியாகி விட்டது .
முற்போக்கு சிந்தனை உள்ள இயக்குனர் M.அன்பழகன் .அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தங்கள் முன் எழுத்தை தமிழில் எழுதுங்கள் .
இயக்கம் M.அன்பழகன் .
நடிப்பு சமுத்திரக்கனி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
துளி கூட ஆபாசமின்றி மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார்
இயக்குனர் அன்பழகன்.சமுத்திரக்கனி ஆசிரியராகவே மாறி பாத்திரத்தில்
நடிக்காமல் வாழ்ந்துள்ளார் இப்போது வரும் பல திரைப்படங்கள் குடும்பத்துடன்
சென்று பார்க்க முடிய வில்லை .ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று
அவசியம் பார்க்க வேண்டும் .தமிழ்த் திரைப்படத் துறையை புதிய உயரத்திற்கு
கொண்டு சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள் .
அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் காட்டி .ஆசிரியர்கள் மனது
வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னதமான படைப்பு .அரசு
மருத்துமனை சுகாதாரமின்றி இருப்பது போல அரசுப்பள்ளி தரமின்றி இருக்கின்றது.
சில ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவது ,வகுப்பறையில் தூங்குவது ,வீட்டு
வேலையை மாணவனிடம் வாங்குவது ,சத்துணவுப் பொருட்களை கையாடல் செய்வது
,மாணவியிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இவற்றை தோலுரித்து காட்டி விட்டு
.மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும்
முன்பாக குருவை வைத்தார்கள் .அப்படிப்பட்ட குரு எப்படி ? நடந்துக்
கொள்ள வேண்டும் . என்று கற்பிக்கும் சிறந்த படம் .இந்தப்படத்தை எல்லா
ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .
தாயாளன் ஆசிரியராக சமுத்திரக்கனி மிக நன்றாக நடித்து உள்ளார்
.தோப்புக் கரணம் போடுவது மூளையை சுறுசுறுப்பு ஆக்குகின்றது.ஒரே நேரத்தில்
மணி அடித்து தீபாராதனை காட்டுவது இடது மூளை வலது மூளை இரண்டும் வேலை
செய்ய உதவுகின்றது .சாக் பீஸில் எழுதி, எழுதிய சொல்லைக் கேட்காமல் வண்ணத்தை
கேட்டு மாணவர்களின் மூளைக்கு வேலை வைப்பது .மாணவர்களிடம் அன்பு
செலுத்துவது, சக தோழன் போல பழகுவது .இப்படி தயா ஆசிரியர் படம் பார்த்து
விட்டு வீட்டுக்கு வந்த பின்னும் மனதை விட்டு அகலாமல் நிற்கிறார் .தயா
போன்று எல்லா ஆசிரியர்களும் மாறி விட்டால் நம் நாடு முன்னேறி விடும் .
தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ஒரு ஆசிரியர் எப்படி? இருக்கக்
கூடாது என்பதற்கு உதாரணமாக வில்லன் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்து
உள்ளார் . படத்தின் கடைசி காட்சியில் தயா ஆசிரியருக்கு பல தீங்கும் செய்த
போதும் , தண்டிக்காமல் மன்னித்த உள்ளம் கண்டு நெகிழும் போது மிக நன்றாக
நடித்து உள்ளார் .தலைமை ஆசிரியாராக வரும் ஜூனியர் பாலையா மிக நன்றாக
நடித்து உள்ளார்.
மாணவ மாணவிகள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம் .
சிறந்த இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார் அன்பழகன் .ஒரு
தந்தை மகனிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும் .ஒரு மகன் தந்தையிடம் எப்படி
? நடந்து கொள்ள வேண்டும். என்று வாழ்வியல் பாடம் சொல்லும் படம் . நம்
நாட்டில் பெண் பிள்ளையிடம் அவள் சம்மதம்இல்லாமலேயே யாரவது காதல் கடிதம்
தந்து விட்டால் உடன் பெண் பிள்ளையின் படிப்பிற்கு முடிவுரை எழுதும் அவலம்
எங்கும் நடக்கின்றது.அது தவறு. பெண் பிள்ளைகளை நம்புங்கள் .படிக்க
வையுங்கள். என்று படிப்பினை சொல்லித் தரும் படம் .
மாணவர்களை வெயிலில் முட்டி போட வைத்து தண்டனை தருவது தவறு .அன்பால் திருந்துங்கள் .
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் .எந்த மாணவனையும்
உதவாக்கரை ,படிப்பு ஏறாது என்று புறக்கணிக்காதீர்கள் .பெண் ஆசிரியர்கள் ஆடை
ஒழுக்கமாக இருக்க வேண்டும் .ஆசிரியர்கள் கெட்ட பழக்கம் இன்றி இருக்க
வேண்டும் .இப்படி பல தகவல்கள் படத்தில் உள்ளது .இந்தப் படம் பார்த்த
மாணவனுக்கும் ஆசிரியருக்கும் மன மாற்றம் நிகழும் என்று அறுதி இட்டு கூறலாம்
.
மாணவி அறிவழகியை மாணவன் பழனி விரட்டி விரட்டி ஒரு தலையாக காதலிக்க
அவள் மறுக்கிறாள்.படிக்காமல் சுற்றியவன் ஆசிரியர் தயா அவர்களின் அறிவுரை
கேட்டு நன்கு படிக்கிறான்.விளையாட்டிலும் ,கலை நிகழ்ச்சியிலும் பள்ளிக்கு
முதலிடம் பெற்றுத் தருகிறான் .உடன் மாணவி அறிவழகி அவளும் காதலிப்பதாக
சொல்லுகிறாள் .படம் வழக்கமான மசாலா காதல் கதை ஆகிவிடுமோ ? என்று
நினைக்கும் போது, மாணவன் பழனி பேசும் வசனத்தில் இயக்குனர் முத்திரை
தெரிகின்றது ." இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் என் தந்தை உள்பட எல்லா
ஆசிரியர்களும் என்னை வெறுத்தபோது ,ஆசிரியர் தயா என் மீது அன்பு
செலுத்தினார் என்னை நம்பினார் .அவர் நம்பிக்கை வீண் போக நான் விரும்ப
வில்லை . அறிவழகி நன்றாக படிக்கும் மாணவி .காதலிப்பது தெரிந்தால் அவள்
வீட்டில் அவள் படிப்பதை நிறுத்தி விடுவார்கள் .எனவே நான் காதலிக்க
விரும்பவில்லை ".என்று நண்பன் முருகனிடம் சொல்கிறான் .சமுதாயத்தில் மாற்றம்
உருவாக்கும் மிக நல்ல படம் .இநதப் படத்தில் கொலை, கொள்ளை ,வன்முறை
,வெட்டு, குத்து ,ஆபாசம் எதுவுமின்றி ய்தரமான படம் தந்துள்ளார்.
பாராட்டுக்கள்.
இந்த படத்தை கோடிகளை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தந்து ,வெளி
நாடுகள் சென்று கோடிகளை விரையம் செய்து படம் எடுக்கும் மசாலா பட
இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம் இது .
திக்கு வாய் குறை உள்ள மாணவி வீட்டில் நன்றாக பேசுகிறாள் ..ஆனால்,
பள்ளிக்கு வந்ததும் சக மாணவர்கள் கேலிக்கு அஞ்சி அதிகம் திக்குகின்றது
.இதனை உணர்ந்த ஆசிரியர் தயா , மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி திக்கு வாய்
குறை உள்ள மாணவிக்கு படிக்க பயிற்சி தந்து பேச்சுப் போட்டியில் பங்குப் பெற
வைக்கிறார் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
எடுத்துக்காட்டு ஆசிரியர் தயா.
மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளியை மாவட்டத்தில் முதல் பள்ளியாக வர
வைத்து விட்டு ,ஆசிரியர் தயா படத்தின் இறுதியில் மாணவர்கள் வேண்டுதலையும்
மீறி ,அடுத்த மாவட்டத்தில் பின் பின்தங்கிய பள்ளி நோக்கி பயணிக்கும்
முடிவும் பாராட்டுக்குரியது .இயக்குனர் M.அன்பழகன், இயக்குனர் சமுத்திரகனி
வெற்றிக் கூட்டணியாகி விட்டது .
முற்போக்கு சிந்தனை உள்ள இயக்குனர் M.அன்பழகன் .அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தங்கள் முன் எழுத்தை தமிழில் எழுதுங்கள் .
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» அப்பா ! திரைப்பட விமர்சனம் ! கவிஞர் இரா .இரவி ! நடிப்பு ,இயக்கம் சமுத்திரக்கனி !
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
» சிகரம் தொடு ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நடிப்பு விக்ரம் பிரபு ,சத்தியராஜ் ! இயக்கம் கெளரவ் !
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நடிப்பு ,எழுத்து , இயக்கம் கமலஹாசன்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
» சிகரம் தொடு ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நடிப்பு விக்ரம் பிரபு ,சத்தியராஜ் ! இயக்கம் கெளரவ் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|