தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
2 posters
Page 1 of 1
ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் !
நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் !
kavithaiuravu@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சுதா பதிப்பகம் ,420இ . மலர்க் குடியிருப்பு ,அண்ணா நகர் மேற்கு, சென்னை .6000040. விலை ரூபாய் 70.
.
திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற பிறந்த ஊருக்கு பெருமைகள் சேர்த்து வருபவர் நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் .பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர் .
இவரை இராதா கிருஷ்ணன் என்றால் சிலர் மட்டுமே அறிவர் .ஆனால் ஏர்வாடியார் என்றால் இலக்கிய உலகில் அனைவரும் அறிவர். கவிஞர், எழுத்தாளர் ,கட்டுரையாளர் ,கவிதை உறவு ஆசிரியர், பேச்சாளர் இவை எல்லாம் விட எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் பண்பாளர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .என்னைப் போன்ற தன்னை விட இளையவர்களையும் நீங்கள் என்று மரியாதையாக அழைக்கும் உயர்ந்த குணம் உடையவர் .மகாகவி பாரதி போல எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர் . நூலின் தன்னுரையில் எழுதி உள்ளதைப் பார்க்கும் போது கவிஞன் என்பதையே விரும்புகிறார் .
" நான் எழுத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சிக்கிறவன்.சிறுகதை ,நாடகம் ,கட்டுரை ,வானொலி உரைச்சித்திரம் ,நவீனம் என்றெல்லாம் எழுதி அவையெல்லாம் அறிந்தேற்கப் பட்டிருந்தாலும் ,நான் அதிகமாய் அறியப்பட்டிருப்பது கவிஞனாகத்தான் ."
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . இந்த நூலை அவரது நண்பர் கவிஞர் தியாரூ அவர்களுக்கு காணிக்கை ஆக்கி நட்புக்கும் கவிதைக்கும் மேன்மை செய்து உள்ளார் .அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் கா .ஆபத்துக்காத்த பிள்ளை அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ள திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் பழனி பாரதி வாழ்த்துரை நன்று இந்த நூலில் 38 தலைப்புகளில் உள்ளன ..மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் உள்ளன .நூலின் முதல் கவிதையிலேயே கவிதை எப்படி எழுத வரும் என்று வளரும் கவிஞர்களுக்கு பயிற்று விக்கும் விதமாக கவிதை உள்ளது .
எங்கிருந்து கவிதை ?
அழகினிலே மயங்கிடுங்கள் கவிதை ஊறும்
ஆத்திரமா .. கொதித்திடுங்கள் கவிதை பொங்கும்
பழகிடுங்கள் பலருடனே கவிதை தோன்றும்
பண்புகளால் ஈர்த்திடுங்கள் கவிதை பூக்கும்
அழத்தோன்றும் போதழுங்கள் கவிதை சிந்தும்
அன்பாலும் கவிதைவரும் அவ்வா றின்றி
எழுகின்ற கவிதை நீங்கள் படைப்ப தில்லை
இதயத்துள் இருந்துமையாள் செய்வ தாகும் !
கவிஞர் அனைவருக்கும் தமிழ்ப்பற்று உண்டு .தமிழ்ப்பற்று இருந்தால்தான் கவிஞர் .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி
எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்ப்பற்று உண்டு. அதனால்தான் கவிதைகளை குற்றால அருவி போல கொட்டி வருகிறார் .அவரது தமிழ்ப் பற்றைப் பறை சாற்றும் கவிதை நன்று .
தமிழைப் போல இனிமையில்லை !
உலகத்தின் மிகப்பெரிய மொழிகளுக்குள்
உயர்தமிழே மிகச்சிறந்த மொழியென் பார்கள்
உலகத்தின் இன்பங்கள் யாவி னுக்கும்
உயர்த்தமிழே எப்போதும் உச்சமாகும் !
கலைமாமணி ஏர்வாடியாரின் வெற்றியின் ரகசியம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் எல்லோருடனும் அன்போடு பழகுவது .மிகப் பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் , என் போன்ற வளரும் கவிஞராக இருந்தாலும் சமமாகவே அன்பு செலுத்துவார் .அவர் மதுரை வரும்போதெல்லாம் தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவோடு சென்று வரவேற்று சந்தித்து உரையாடி மகிழ்வேன். உரையாடும் நிமிடங்களில் அன்பு மழை பொழிவார்கள் .பல அரிய செய்திகளும் பகிர்வார்கள் .மதுரை புகைப்படக் கலைஞர்
திரு .முருகன் அவர்களை சகோதரர் போல நடத்துவார். எழுத்தாளர் கவிஞர் இதழ் ஆசிரியர் என்ற கர்வம் துளியும் இல்லாத இனிமை மனிதர்
வாழ்க்கையில் கடைபிடித்து வரும் அன்பு பற்றிய கவிதை நன்று .
அன்பின் வடிவம் !
அன்பான சொல் இனிக்கும்
அது சுவைக்கும்
அன்பே நம் செவிகளுக்கு
விருந்து மாகும்
அன்பான வாய்மணக்கும்
எனவே அன்பாய்
என்றைக்கும் இருப்பதுதான்
இனிமை என்றேன் !
ஆம் அன்பால் உலகை ஆளலாம் .அதனால்தான் வள்ளுவர் அன்பை மிக உயர்வாக உணர்த்தினார் திருக்குறளில் .
விதி என்று நொந்து சாகாதே. வீணாய் காலம் கழிக்காதே .முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தை இறைவனால் அல்ல என்ற கவிதையில் உணர்த்தி உள்ளார் .இறைவா நீ வர வேண்டாம் என்ற கவிதையை எள்ளல் சுவையுடன் எழுதி உள்ளார் .
இறைவா நீ வர வேண்டாம் !
இல்லையில்லை பக்தர்களைப் பார்க்க வேண்டும்
என்றுனக்கு போதாத ஆசை வந்தால்
சொல்லுகிறேன் ஒரு நாளில் இறங்கி வந்து
தேர்தலில் தனியாக நின்று பார் நீ
சில்லறையும் செல்வாக்கும் செல்லும் வண்ணம்
செயும் வித்தை வெல்லும் நீ தோற்பாய் அன்று
எல்லோருக்கும் அருள் சுரக்கும் இறைவா பக்தி
எட்டத்தில் இருந்தால்தான் என்று ணர்வாய் !
அரசியல் அவலங்களை இறைவனுக்கு சொல்வது போல வாசகருக்கு சொல்லி உள்ளார் .
இந்தக் கவிதைகள் கவிதை உறவு மாத இதழில் ஏர்வாடியாரின் ஏழாம் பக்கத்தில் படித்தவை .மொத்தமாக நூலாகப் படிக்கும் போது திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்தேன் .
இறைவா நீ வர வேண்டாம் ! என்று எச்சரிக்கை செய்தவர் மறு மாதம் கவிதை உறவில் இறைவா நீ வர வேண்டும் ! என்றும் எழுதினார். கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு இவை .
இறைவா நீ வர வேண்டும் !
நகரம்தான் நரக வாழ்க்கை எனினும் கொஞ்ச
நாள்களேனும் எங்களோடு தங்க வேண்டும் !
வரப்போகும் நாள் தெரிந்தால் விழா யெடுக்க
வசதியாக இருக்கும் ;ஒரு சேதி சொல் நீ !
அடுத்து கடவுளே பேசுவது போல ஒரு கவிதை இப்படிக்கு இறைவன் என்று ஒரு கவிதை .கடவுள் என்றைக்கு பேசினார் என்று பராசக்தி வசனத்தை கேட்டு விடாதீர்கள்.கடவுள் பேசுவது போல ஏர்வாடியார் பேசி உள்ளார் .
இப்படிக்கு இறைவன் !
சின்ன இதழ் மலர்கின்ற சிரிப்பி லெல்லாம்
சத்தியமாய் நானிருப்பே ன் இன்னும் மேலாய் !
அன்னையை நீ தெய்வமாக ஏற்றுக் கொண்டால்
ஆலயமாய் அவள்பாத கமலம் காண்பாய் !
ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான் .பெற்ற தாயே தெய்வம் என்றும் வலியுறுத்தும் விதமாக கவிதை எழுதி உள்ளார் ஏர்வாடியாருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . மதுரை வரும்போதெல்லாம் மீனாட்சியம்மன் கோவில் சென்று வருவார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .இருந்தபோதும் கடவுள் பெயரிலான கவிதைகளை ரசித்துப் படித்தேன் .கவிதைகள் படி தேன். நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் எழுத முடியாது .எழுதக் கூடாது என்பதால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூல் ப்வாங்கி படித்துப் பாருங்கள்
.
இந்த நூல் சொற்களின் சுரங்கமாக உள்ளது .வளரும் கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் .படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் விதமாக அனைத்து கவிதைகளும் உள்ளன. புரியாத புதிர்க்கவிதை ஒன்றும் இல்லை . கவிதைகள் எளிமையாகவும் , இனிமையாகவும் , புதுமையாகவும் ,அன்பை விதைக்கும் விதமாகவும் ,பண்பை வளர்க்கும் விதமாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் உள்ளன .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .உங்கள் இலக்கிய மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக மிளிர்கின்றது .
.
நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் !
kavithaiuravu@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சுதா பதிப்பகம் ,420இ . மலர்க் குடியிருப்பு ,அண்ணா நகர் மேற்கு, சென்னை .6000040. விலை ரூபாய் 70.
.
திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற பிறந்த ஊருக்கு பெருமைகள் சேர்த்து வருபவர் நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்கள் .பெயரோடு பிறந்த மண்ணை இணைத்துக் கொண்டவர் .
இவரை இராதா கிருஷ்ணன் என்றால் சிலர் மட்டுமே அறிவர் .ஆனால் ஏர்வாடியார் என்றால் இலக்கிய உலகில் அனைவரும் அறிவர். கவிஞர், எழுத்தாளர் ,கட்டுரையாளர் ,கவிதை உறவு ஆசிரியர், பேச்சாளர் இவை எல்லாம் விட எல்லோருடனும் அன்பாகப் பழகிடும் பண்பாளர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .என்னைப் போன்ற தன்னை விட இளையவர்களையும் நீங்கள் என்று மரியாதையாக அழைக்கும் உயர்ந்த குணம் உடையவர் .மகாகவி பாரதி போல எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாதவர் . நூலின் தன்னுரையில் எழுதி உள்ளதைப் பார்க்கும் போது கவிஞன் என்பதையே விரும்புகிறார் .
" நான் எழுத்தின் எல்லா வடிவங்களையும் முயற்சிக்கிறவன்.சிறுகதை ,நாடகம் ,கட்டுரை ,வானொலி உரைச்சித்திரம் ,நவீனம் என்றெல்லாம் எழுதி அவையெல்லாம் அறிந்தேற்கப் பட்டிருந்தாலும் ,நான் அதிகமாய் அறியப்பட்டிருப்பது கவிஞனாகத்தான் ."
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன . இந்த நூலை அவரது நண்பர் கவிஞர் தியாரூ அவர்களுக்கு காணிக்கை ஆக்கி நட்புக்கும் கவிதைக்கும் மேன்மை செய்து உள்ளார் .அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் கா .ஆபத்துக்காத்த பிள்ளை அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூலின் பின் அட்டையில் பிரசுரமாகி உள்ள திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் பழனி பாரதி வாழ்த்துரை நன்று இந்த நூலில் 38 தலைப்புகளில் உள்ளன ..மரபுக்கவிதைகளும் உள்ளன. புதுக்கவிதைகளும் உள்ளன .நூலின் முதல் கவிதையிலேயே கவிதை எப்படி எழுத வரும் என்று வளரும் கவிஞர்களுக்கு பயிற்று விக்கும் விதமாக கவிதை உள்ளது .
எங்கிருந்து கவிதை ?
அழகினிலே மயங்கிடுங்கள் கவிதை ஊறும்
ஆத்திரமா .. கொதித்திடுங்கள் கவிதை பொங்கும்
பழகிடுங்கள் பலருடனே கவிதை தோன்றும்
பண்புகளால் ஈர்த்திடுங்கள் கவிதை பூக்கும்
அழத்தோன்றும் போதழுங்கள் கவிதை சிந்தும்
அன்பாலும் கவிதைவரும் அவ்வா றின்றி
எழுகின்ற கவிதை நீங்கள் படைப்ப தில்லை
இதயத்துள் இருந்துமையாள் செய்வ தாகும் !
கவிஞர் அனைவருக்கும் தமிழ்ப்பற்று உண்டு .தமிழ்ப்பற்று இருந்தால்தான் கவிஞர் .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி
எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழ்ப்பற்று உண்டு. அதனால்தான் கவிதைகளை குற்றால அருவி போல கொட்டி வருகிறார் .அவரது தமிழ்ப் பற்றைப் பறை சாற்றும் கவிதை நன்று .
தமிழைப் போல இனிமையில்லை !
உலகத்தின் மிகப்பெரிய மொழிகளுக்குள்
உயர்தமிழே மிகச்சிறந்த மொழியென் பார்கள்
உலகத்தின் இன்பங்கள் யாவி னுக்கும்
உயர்த்தமிழே எப்போதும் உச்சமாகும் !
கலைமாமணி ஏர்வாடியாரின் வெற்றியின் ரகசியம் என்னவென்று யோசித்துப் பார்த்தால் எல்லோருடனும் அன்போடு பழகுவது .மிகப் பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் , என் போன்ற வளரும் கவிஞராக இருந்தாலும் சமமாகவே அன்பு செலுத்துவார் .அவர் மதுரை வரும்போதெல்லாம் தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவோடு சென்று வரவேற்று சந்தித்து உரையாடி மகிழ்வேன். உரையாடும் நிமிடங்களில் அன்பு மழை பொழிவார்கள் .பல அரிய செய்திகளும் பகிர்வார்கள் .மதுரை புகைப்படக் கலைஞர்
திரு .முருகன் அவர்களை சகோதரர் போல நடத்துவார். எழுத்தாளர் கவிஞர் இதழ் ஆசிரியர் என்ற கர்வம் துளியும் இல்லாத இனிமை மனிதர்
வாழ்க்கையில் கடைபிடித்து வரும் அன்பு பற்றிய கவிதை நன்று .
அன்பின் வடிவம் !
அன்பான சொல் இனிக்கும்
அது சுவைக்கும்
அன்பே நம் செவிகளுக்கு
விருந்து மாகும்
அன்பான வாய்மணக்கும்
எனவே அன்பாய்
என்றைக்கும் இருப்பதுதான்
இனிமை என்றேன் !
ஆம் அன்பால் உலகை ஆளலாம் .அதனால்தான் வள்ளுவர் அன்பை மிக உயர்வாக உணர்த்தினார் திருக்குறளில் .
விதி என்று நொந்து சாகாதே. வீணாய் காலம் கழிக்காதே .முயற்சி திருவினையாக்கும் என்ற கருத்தை இறைவனால் அல்ல என்ற கவிதையில் உணர்த்தி உள்ளார் .இறைவா நீ வர வேண்டாம் என்ற கவிதையை எள்ளல் சுவையுடன் எழுதி உள்ளார் .
இறைவா நீ வர வேண்டாம் !
இல்லையில்லை பக்தர்களைப் பார்க்க வேண்டும்
என்றுனக்கு போதாத ஆசை வந்தால்
சொல்லுகிறேன் ஒரு நாளில் இறங்கி வந்து
தேர்தலில் தனியாக நின்று பார் நீ
சில்லறையும் செல்வாக்கும் செல்லும் வண்ணம்
செயும் வித்தை வெல்லும் நீ தோற்பாய் அன்று
எல்லோருக்கும் அருள் சுரக்கும் இறைவா பக்தி
எட்டத்தில் இருந்தால்தான் என்று ணர்வாய் !
அரசியல் அவலங்களை இறைவனுக்கு சொல்வது போல வாசகருக்கு சொல்லி உள்ளார் .
இந்தக் கவிதைகள் கவிதை உறவு மாத இதழில் ஏர்வாடியாரின் ஏழாம் பக்கத்தில் படித்தவை .மொத்தமாக நூலாகப் படிக்கும் போது திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்தேன் .
இறைவா நீ வர வேண்டாம் ! என்று எச்சரிக்கை செய்தவர் மறு மாதம் கவிதை உறவில் இறைவா நீ வர வேண்டும் ! என்றும் எழுதினார். கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு இவை .
இறைவா நீ வர வேண்டும் !
நகரம்தான் நரக வாழ்க்கை எனினும் கொஞ்ச
நாள்களேனும் எங்களோடு தங்க வேண்டும் !
வரப்போகும் நாள் தெரிந்தால் விழா யெடுக்க
வசதியாக இருக்கும் ;ஒரு சேதி சொல் நீ !
அடுத்து கடவுளே பேசுவது போல ஒரு கவிதை இப்படிக்கு இறைவன் என்று ஒரு கவிதை .கடவுள் என்றைக்கு பேசினார் என்று பராசக்தி வசனத்தை கேட்டு விடாதீர்கள்.கடவுள் பேசுவது போல ஏர்வாடியார் பேசி உள்ளார் .
இப்படிக்கு இறைவன் !
சின்ன இதழ் மலர்கின்ற சிரிப்பி லெல்லாம்
சத்தியமாய் நானிருப்பே ன் இன்னும் மேலாய் !
அன்னையை நீ தெய்வமாக ஏற்றுக் கொண்டால்
ஆலயமாய் அவள்பாத கமலம் காண்பாய் !
ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான் .பெற்ற தாயே தெய்வம் என்றும் வலியுறுத்தும் விதமாக கவிதை எழுதி உள்ளார் ஏர்வாடியாருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு . மதுரை வரும்போதெல்லாம் மீனாட்சியம்மன் கோவில் சென்று வருவார் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .இருந்தபோதும் கடவுள் பெயரிலான கவிதைகளை ரசித்துப் படித்தேன் .கவிதைகள் படி தேன். நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் எழுத முடியாது .எழுதக் கூடாது என்பதால் பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூல் ப்வாங்கி படித்துப் பாருங்கள்
.
இந்த நூல் சொற்களின் சுரங்கமாக உள்ளது .வளரும் கவிஞர்கள் அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் .படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் புரியும் விதமாக அனைத்து கவிதைகளும் உள்ளன. புரியாத புதிர்க்கவிதை ஒன்றும் இல்லை . கவிதைகள் எளிமையாகவும் , இனிமையாகவும் , புதுமையாகவும் ,அன்பை விதைக்கும் விதமாகவும் ,பண்பை வளர்க்கும் விதமாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் உள்ளன .நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .உங்கள் இலக்கிய மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக மிளிர்கின்றது .
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Re: ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
--
இவரோடு பேச 94441 07879 ல் டயல் செய்யலாம்.
(தினமலர்)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! --
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010
Similar topics
» எப்போதும் போல் இல்லை எப்போதும் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» யாரும் யாராகவும் ! நூல் ஆசிரியர் ஏர்வாடி எஸ் . ராதாகிருஷ்ணன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|