தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Go down

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன் Empty கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

Post by Dr Maa Thyagarajan Wed Feb 16, 2011 11:25 am

கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 7. உவமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com

7. உவமை
ஒரு பொருளுக்கு உவமை கூறும் போது பொருள் உவமை, உவம உருபு, பொதுத் தன்மை என்ற நான்கும் தேவை. இந்நான்கையும் வெளிப்படுத்திக் கூறுவது ‘உவம விரி’ எனப்படும். இந்நான்கினுள்ளும் உவமை பொருள் இரண்டை மட்டும் வைத்துக் கூறலாம். இது ‘உவமத் தொகை’ எனப்படும். அதாவது உவம உருபும் பொதுத் தன்மையும் தொக்கு வருவது - மறைந்து வருவது. இவை தொக்கு நின்றே பொருள் உணர்த்தும். இவை உவமை முன்னும் பொருள் பின்னுமாக அமையும்.
மேலும், உவமை நான்கின் அடிப்படையில் அமையும். அவை வினை, பயன், மெய், உரு எனப்படும். அதாவது தொழில் அடிப்படையினும் விளையும் பயன்பாடு பற்றியும் வடிவம் பற்றியும் நிறம் அல்லது பண்பு பற்றியும் அமையும்.
உவமை கூறும்போது தொல்காப்பியம் கூறும் வழிகாட்டலின்படி உயர்ந்ததையே உவமித்தல் வேண்டும். கிழிந்த ஒன்றை உவமித்தல் கூடாது.
உவமை கூறாமல் கவிஞர்கள் தம் கற்பனையைச் சிறக்கச் செய்ய முடியாது. அவர்கள் கையாள்கின்ற உவமையைப் பொருத்தே அவர் தம் உயர்வும் பெறப்படுகிறது. அந்த வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எந்த அளவில் உவமையைக் கையாண்டு இருக்கிறார் என்பதைக் காண்போம்.
பொன்மாலைப் பொழுது - இது ஒரு
பொன்மாலைப் பொழுது. (1 - 1)
பொன்னின் நிறம் போன்ற மாலைப்பொழுது, நிறம் பற்றி வந்த உவமை.
அம்பு போன்ற கைகள் இன்று ஆயுதங்கள்
ஆனதே (1 - 7)
வடிவம் பற்றி வந்த உவமை.
மொட்டுக் கதவைப் பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது. (1 - 11)
பட்டுப்போன்ற வண்டுகள் - பண்பு உவமை (நிறம்) பண்பு உவமை என்பது நிறத்தில் அடங்கும்.
பெளர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போலே முன்னால் போனாள். (1 - 25)
மின்னல் போல - வடிவம் பற்றி வந்த உவமை.
--- இள
மங்கையின் தங்கமுகம். (1 - 58)
தங்கம் போன்ற முகம் - நிறம் பற்றி வந்த உவமை.
நீர்போகும் வழியோடு தான் போகும் ஏஞ்சேல
நீ போகும் வழிதேடி வருவேனே பின்னால
(1 - 70)
இதில் முதலடி உவமை, இரண்டாமடி பொருள் வினை பற்றி வந்த உவமம்.
-- இள
மாதுளை போல் நிறம் மாறிடுமோ? (1 - 75)
நிறம் பற்றி வந்த உவமம்.
பட்டுப்பொண்ணு இவ தொட்டுப்புட்டா
கட்டுமரங்களும் பூப்பூக்கும். (1 - 77)
பட்டுப்போன்ற பொண்ணு - பண்புவமை.
பூ மேகம் சூடும் பொன்வானமே (1 - 78)
பூ மேகம் - பண்புவமை
பொன் வானம் -- நிறம் பற்றிய உவமை.
நந்தனார் போல் நான் வெம்பினேன். (1 - 81)
தொழில் பற்றி வந்த உவமம்.
பூம்பாதம் தண்ணிபட்டா நோகும்மா (1 - 83)
பூப்போன்ற மென்மையான பாதம் - பண்புவமை.
கரும்பாறையைப் போலிருந்தா
இன்று மாம்பழமாக் கனிஞ்சா (1 - 88)
கரும் பாறையைப் போல் - பண்புவமை.
மாம்பழமாக் கனிஞ்சா -- தொழில் உவமம்.
பழகிய கனி நிலவினில் விளைந்த மணி (1 - 95)
கனிபோலும் இனிய நிலவு - பண்புவமை.
காரம் மிகுந்து போனால் பெண்ணே
சமையல் ருசிக்காது
கோபம் மிகுந்த போனால் அன்பே
குடும்பம் இருக்காது. (1 - 102)
முதலிரண்டு அடிகள் உவமை - பயன் உவமை.
இளமைச் சுமையை - மனம்
தாங்கிக்கொள்ளுமோ
புலம்பும் அலையைக் - கடல்
மூடிக்கொள்ளுமோ? (1 - 104)
பின்னிரண்டு அடிகள் உவமை - வினை உவமம்.
வீட்டுப்பூனை நான் வேங்கை போலவே
மாறினேன். (1 - 106)
பண்பு பற்றி வந்த உவமை.
ஓ பால் போல வா. (1 - 109)
பண்பு உவமை.
மகிழ்ந்து உன்னோடு கலந்தபின் எந்தன்
மனசுதான் மாறுமா?
நதியிலே சேர்ந்த அருவிதான் மீண்டும்
மலையின் மேலேறுமா? (1 - 121)
தொழில் (வினை) பற்றிய உவமை - பின் இரண்டு அடிகள்.
சூழ்ச்சியினால் தர்மம் என்றும் அழியாது - அட
சூரியனைப் பொத்தி வைக்க முடியாது. (1 - 131)
தொழில் உவமை.
தாலி வருமுன்பே - இங்கு
பந்தி நடப்பதில்லை
காலை பகல் வேளை - அல்லி
முந்தி விரிப்பதில்லை. (1 - 144)
பின் இரண்டு அடிகள் உவமை - தொழில் உவமை.
உடலைத் தேடும் நிழலைப் போலே
நின்றேன் இந்த மூலையிலே (1 - 148)
உடலைத் தேடும் நிழல் - தொழில் உவமை,
தங்கமேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும் (1 - 160)
தங்கம் போன்ற மேனி - நிறம் பற்றிய உவமை.
கடலோடு அலைபோல
உறவாட வேண்டும்
இலைமூடும் மலர் போல
எனைமூட வேண்டும். (1 - 174)
இரண்டு உவமைகள் - தொழில் உவமம்.
இன்பதுன்பம் என்பது
இரவு பகலைப் போன்றது. (1 - 179)
இரவு பகல் மாறி வருதலைப் போன்றது. வினை உவமம்.
ராகங்களால் தீபங்களை
ஏற்றி வைத்தான் தான் சேன்
ராகங்களால் மேகங்களை - நான்
நிறுத்தி வைப்பேன் - என்பேன் (1 - 86)
முதலிரண்டு அடிகள் - தொழில் உவமை.
ஆளைக்கொல்லும் திமிங்கலம்
வலையில் தானே அகப்படும்
அன்பு என்னும் பிடியினுள்ளே
மலையும் கூட வசப்படும். (1 - 190)
முதலிரண்டு அடிகள் - தொழில் உவமை.
(திமிங்கிலத்தை வலை போட்டப் பிடிப்பதில்லை. பொருட்குற்றம்.)
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட (1 - 191)
வினை பற்றிய உவமை.
குங்குமச் செவப்பு
வெக்கம் போல வழியும் (1 - 192)
வினை பற்றிய உவமை.
சிங்காரத் தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
(1 - 198)
வடிவம் பற்றிய உவமம்.
சுழியில் படகு போல எம்
மனசு சுத்தது சுத்தது. (2 - 4)
தொழில் உவமம்.
பச்சைக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்.
பாலக் குடிச்சுப்புட்டுப் பாம்பாக் கொத்துதடி.
(2 - 12)
பாம்பு கொத்துவது போல - தொழில் உவமை.
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கறுக்காது தாயே (2 - 19)
பின் இரண்டு அடிகள் உவமை - தொழில் உவமம்.
வெந்த புண்ணில் அல்லவோ
வேலும் பாய்ந்தது. (2 - 38)
தொழில் உவமம்.
அம்மாடி ஒன்னால
அமாவாச போலானேன். (2 - 56)
நிறம் பற்றிய உவமை.
புயல் போலவே வந்தவன். (2 - 59)
தொழில் உவமம்.
பூமிப் பெண்ணுக்கும்
கன்னிப்பெண்ணைப் போல்
நெஞ்சில் ஈரம் உண்டு. (2 - 62)
பயன் பற்றி வந்த உவமம்.
மேகத்தில் தூங்கும் நீரினைப் போல
வெளித் தெரியாது - இது ஒரு காதல். (2 - 91)
மறைந்திருத்தல் செயல் - வினை உவமை.
விண்ணைப் பிரிகின்ற போது மயங்குது நிலவு
உன்னைப் பிரிகின்றபோது கலங்குது மனது.
(2 - 104)
முதலடி உவமை - தொழில் உவமை.
உப்பைப்போல எளிமையானவன்
சொந்தக்காரன் - பெண்
கற்பைப் போல வலிமையானவன்
சொந்தக்காரன். (2 - 105)
உப்பைப் போல எளிமை, கற்பைப் போல வலிமை. இரண்டும் பண்புவமை.
அழுக்குத் தீர எப்போதும் குளித்தவன் யார்?
ஆசை தீர எப்போதும் சுவைத்தவன் யார்?
(2 - 107)
முதலடி உவமை - வினை உவமம்.
இலையில் தூங்கும் பனித்துளி போல
உனது மார்பில் உறங்கிட ஆசை. (2 - 107)
வினை உவமம்.
தாமரையில் தண்ணீர் போல
நானிங்கு வாழ்கிறேன். (2 - 114)
வினை உவமம்.
பால் வண்ண உடம்பில்
வருவத்தின் பாரம். (1 - 115)
நிறம் பற்றிய உவமை.
1. கண்கள் இல்லை என்று சொன்னான்
காவியம் இங்கு இல்லை
பெண்கள் இல்லையென்றால்
ஆண்கள் இங்க இல்லை.
2. ஓசை இங்கு இல்லையென்றால்
பாஷைகள் இங்கு இல்லை
ஆண்கள் இல்லையென்றால்
பெண்கள் இங்க இல்லை. (2 - 119)
இரண்டிலும் முதலிரண்டு அடிகள் உவமை. பயன்பற்றி வந்த உவமம்.
தேன் என்றால் சாரம் வேண்டும்
ஆண் என்றால் வீரம் வேண்டும். (2 - 120)
முதலடி - பண்புவமை.
இது பட்டுப்போன்ற தேகம் - விரல்
தொட்டுப் பார்க்க நோகும். (2 - 121)
பட்டுப்போன்ற மென்மை - பண்புவமை.
தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய். (2 - 124)
பண்புவமை.
கார்த்திகை போனால் மழையில்லை மானே
கருணை போனால் வாழ்வில்லை தானே. (2 - 132)
முதலடி பயன் உவமம்.
புலியெனவே எழுந்துவிடு
நெருப்பெனவே கொழுந்துவிடு. (2 - 147)
முதலடி வினை உவமம். இரண்டாமடி பண்புவமம்.
நீர்வழிப் போகும் ஓடங்கள் போல
விதிவழி போகிறேன். (2 - 153)
வினை உவமம்.
மெட்டு ஒண்ணு கட்டட்டா?
மேகம் போலக் கொட்டட்டா? (2 - 154)
இது வினை உவமம். பயன் உவமை அன்று.
மேடுபள்ளம் வந்தால் கூடப்
பாதை பாதைதான்
இன்ப துன்பம் ரெண்டும் உண்டு
வாழ்க்கை வாழ்க்கை தான். (2 - 156)
பண்புவமை - முதலிரண்டு அடிகள்.
நீரில்லையேல் மீனில்லையே
நீயில்லையேல் நானில்லையே. (2 - 157)
பயன் உவமை.
பாலப் போல மனசு
அத யாரும் பாக்கல
பண்புவமை.
வயசுப் பொண்ணைப் போல
வந்து காத்து வீசுணும். (2 - 158)
இனிமை - பண்புவமை.
ஓடம் எங்கே போகும்
அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும்
அது விதி வழியே (2 - 159)
வினை உவமம் - முதலிரண்டடிகள்.
தண்ணீரு இல்லாம
நதியே இல்லிங்க
கண்ணீரு இல்லாம
பொம்பளை இல்லிங்கே. (2 - 159)
முதலிரண்டடிகள் பண்பு பற்றிய உவமை.
முன்னம் அடிகொடுத்த பெண்ணே - அன்று
கன்னம் வலிக்கவில்லை கண்ணே
தாமரை மோதினால் ரணமிருக்குமா?
தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா? (2 - 164)
தொழில் பற்றிய உவமை.
ஒரு மேகத்தைப் போல்
சுதந்திரமாய் இருந்தேனே - என்னை
ஒரு மழைத் துளியைப் போல்
கைது செய்துவிட்டாய். (2 - 173)
வினை உவமம் போல் தோன்றினாலும் இது வடிவு பற்றி வந்த உவமமே.
முத்ததுக்கு நேரம் வந்தால் முத்து அந்தச்
சிப்பிக்கும் சொந்தமில்லை.
பெண்ணுக்குநேரம் வந்தால் - பெண்கள் என்றும்
பெற்றவன் சொந்தமில்லை. (2 - 182)
உறவைப் பற்றிச் சொல்வதால் முதலிரண்டு அடிகளும் பண்பு உவமையாகும்.
என்னென்ன தடை வந்தபோதும்
காதல் இறப்பதில்லை.
மேகங்கள் போழிகின்ற வெள்ளம்
வானத்தை நனைப்பதில்லை. (2 - 192)
பின் இரண்டு அடிகள் - தொழில் உவமை.
தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்.
முதலடி - வாழ்தல் என்னும் செயலடிப்படையில் வந்ததால் இது வினை பற்றிய உவமம்.
உவமை ஒன்றே எல்லா அணிகளுக்கும் அடிப்படை. ஆகவே தொல்காப்பியர் உவமம் ஒன்று மட்டுமே கூறினார். பிற அணிகளைக் கூறவில்லை.
நம் கவிஞர் அவர்கள் கையாண்ட உவமைகள் எளிமையானவை எனினும் உயர்வாகவும் பொருத்தமாகவும் கூறப்பட்டுள்ளன. அவர் உவமைகளை எடுத்தாண்ட முறை அவரை அனைவர் உள்ளத்திலும் இருத்தி வைத்துவிட்டது.




Dr Maa Thyagarajan
Dr Maa Thyagarajan
மல்லிகை
மல்லிகை

Posts : 147
Points : 391
Join date : 11/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – சொல்வளம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 23. தமிழ் , சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 8. உருவகம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -24. வரலாறு, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum