தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்ணதாசன் எனும் காவியம்

2 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:23 pm

சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:23 pm

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:23 pm

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இவருக்கும் மிகவும் ஆழமான நட்பு நிலவியது. ஆயினும் அரசியல் வேறுபாடுகளினால் இருவருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகளும் நிலவியது. அதன் காரணமாக ஒருவரையொருவர் தமது வெளியீடுகளிலே சாடியதும் உண்டு. இருப்பினும் எங்கேயாவது சந்தித்துக்கொண்டால் அவர்களது நட்பு தலைதூக்குவது உண்டு.

இப்படியாக காவியம் படைத்த நாயகன் தனது வாழ்க்கையின் 2ம் பாகத்திலே நாத்திகவாதத்திலிருந்து முழு ஆத்திகவாதியாகினான் . அதன் விளைவாக எமக்கு கிடைத்த படைப்புக்களில் ஒன்றே "அர்த்தமுள்ள இந்துமதம்" என்ற பொக்கிஷம் .

இத்தகைய புகழ்படைத்த தமிழ்ப் புதல்வனை குறுகிய காலத்தினுள்ளே தன்னுடன் சேர்த்துக் கொண்டான் ஆண்டவன் .

ஆனால் கண்ணதாசனால் ஏற்றப்பட்ட இந்த இலக்கியச் சுடர், என் போன்ற ரசிகர்கள் இதயத்தினுள்ளே அணையாத் தீபமாக என்றுமே ஒளிவீசிக்கொண்டிருக்கும் என்பது உறுதி.

அவரது வார்தைகளிலேயே பார்த்தோமானால்
" நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை "
என்று பாடியுள்ளார் அது எத்தகைய உண்மை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:24 pm

கவியரசர் முக்கியமாகக் கொண்டிருந்த நோக்கம் தனது பாடல்களின் மூலம் சங்க காலத் தமிழ் இலக்கியத்தை , ராக்கெட் வேகத்தில் போகும் இந்த அவசரச் சமுதாயத்திற்கு விளங்கக்கூடிய வகையில் எளிமையாக தமிழில் வழங்குவதாகும். இந்த வாரம் , கம்பனின் இலக்கியத்தை எவ்வாறு இலகுவான தமிழில் நமக்கு நமது கவியரசர் கொடுத்தார் என்பதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்.

கம்பனும் கண்ணதாசனும்

இலக்கியவாதிகளும் , ஆன்மீகவாதிகளும் மட்டுமே அறிந்திருந்தவர் கம்பர் . கம்பனின் சாயல் கண்ணதாசனில் , எழுத்துக்களில் நிறையவே தெரியும்.

கைகேயி பெற்ற வரத்தின்படி இராமனுக்கு அரசு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே .அதைக் கேட்டதும் ஆதிசேட அவதாரமான இலட்சுமணனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்து விட்டது.அந்தக் கோபத்தினால் கைகேயி , பரதன் , தசரதன் எல்லோரையுமே ஒழித்து விடுகின்றேன் என்று வில்லை வளைத்து ஒலி எழுப்புகின்றான் . அப்போது அங்கே வந்த இராமன் இலட்சுமணனை சாந்தப்படுத்துகின்றார். “ தம்பி கோபப்படலாமா ? இது தவறல்லவா ? நதிக்குப் போகின்றோம் , நதியினில் தண்ணீர் இல்லை , அதற்காக நதியைத் திட்ட முடியுமா? நதியின் மீது தவறுண்டா? அது போலத்தான் இதுவும். எனக்கு அரசில்லாமல் போனது தசரதர் குற்றமில்லை , கைகேயின் குற்றமில்லை , பரதன் குற்றமுமில்லை பின் யார் குற்றம்? விதியின் குற்றமப்பா, விதியின் குற்றம்” என்கின்றார். இதற்கான கம்பரின் பாடல் பின்வருமாறு:

நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து
நமைப் புரந்தான்
மதியின் பிழை அன்று மகன்பிழை
அன்று மைந்த !
விதியின் பிழை இதற்கு என்னை
வெகுண்டது என்றான்.

இந்தப்பாடலின் கருத்தை மறந்துவிட்டு , பாடலை மட்டும் படித்து பாருங்கள் . சுலபத்தில் பொருள் விளங்காது . கடினமாக இருக்கும் . இதே கருத்தை மிகவும் சுலபமாக நம் மனதினில் பதிய வைக்கும் கண்ணதாசன் பாடலைப் பார்க்கலாம் . தியாகம் என்ற படத்தில் வரும் அந்தப் பாடல் வரிகள் இதோ :

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறு யாரம்மா ?

நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை - கம்பர்
நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை - கண்ணாதாசன்

விதியின் பிழை - கம்பர்
விதி செய்த குற்றம் - கண்ணதாசன்

ஆதாரம் : வெப் உலகம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:24 pm

காவியத்தலைவன் கண்ணதாசன் ஒரு கவிப்பெருங்கடல். அவரின் படைப்புக்கள் ஒவ்வொன்றுமே தமிழன்னையை அலங்கரிக்கும் நவநாகரீக அணிகலன்கள். அந்தக் கவிதைக்கடலில் எழுந்த அலை அடித்தபோது எங்கோ பட்டுத் தெறித்த ஓர் நீர்த்திவலை போன்றதுதான் என் கவியறிவு. ஆனால் அந்தக் கடலின் ஓர் ஓரத்தில் மூழ்கி எழுந்து மகிழ்வது என் அவா அந்த அனுபவத்தினை நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் நோக்கம்.

இந்த வாரம் கவியரசர் பகவத்கீதையை எமக்கு புரியவைக்கும் முயற்சியின் ஓர் அங்கத்தினைப் பார்ப்போம்.

கீதையின் கூற்று

பூர்யமானம் அசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப : ப்ரவிசந்தி யத்வத்
த்வத்வத்காம யம் ப்ரவிசந்தி ஸர்வே
ஸ சாந்திமாப்நோதி ந காமகாமீ

என்ன? ஒன்றுமே புரியவில்லையா? வருத்தப்படாதீர்கள். எனக்கும்தான் புரியவில்லை. ஆனால் கவிச்சக்கரவர்த்தியின் முயற்சியின் முழு வெற்றியையும் உணர வேண்டுமானால் கீதையை அப்படியே கூறி பின்பு அதை அவர் எப்படி கையாளுகின்றார் என்று அறியத் தரவேண்டும் .

மேலே கூறிய கீதையின் விளக்கம்

கடல் நிறைந்து காணப்படும். அதனுள் எவ்வளவு மழைத் தண்ணீர் வந்து எவ்வழியில் சேர்ந்தாலும் அது ஒரு போதும் துள்ளிக் குதித்து கரையை மீறுவது கிடையாது. அதே போன்று அந்தக் கடலின் நீர் வெய்யிலின் நிமித்தம் நீராவியாகிப் போகின்றது. இருந்தபோதும் அது ஒருபோதும் உள்ளே சென்று மறைவதில்லை, என்றுமே நிலைகுலையாது அமைதியாக உள்ளது. நிலையான உள்ளம் கொண்ட மனிதன் ஒருபோதும் கலங்க மாட்டான். ஆனால் உள்ளம் நிலையற்று இருப்பவன் ஒருபோதும் அமைதியடையமாட்டான்.

கண்ணனுக்கு தாசனான கண்ணதாசன் கண்ணனின் கீதையை எப்படி எம் மத்தியில் புகுத்துகின்றார் என்று பார்ப்போம்.

அவன்தான் மனிதன் படத்திலே வரும் ஆட்டுவித்தால் யாரொருவர் எனும் பாடலில் மேற்கூறிய கீதையின் விளக்கத்தை சாதாரண தமிழில் கண்ணாதாசன் தனக்கே உரிய பாணியில் கூறுவதைப் பாருங்கள்:

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பமெல்லாம் விலகும் கண்ணா

எவ்வளவு பெரிய தத்துவம்! எவ்வளவு பெரிய கீதையின் கூற்று! எப்படி எளிமையாக மக்கள் அனைவருக்கும் புரியக் கூடிய வகையில் கவியரசர் கூறியிருக்கின்றார்!

இந்த வியத்தகு கவிஞரின் அற்றலை எடுத்துக்காட்ட இன்னுமோர் உதாரணமாக பட்டினத்தாரின் பாடலை அவர் எப்படி எளிமைப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:

பட்டினத்தாரின் பாடல்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே
விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே
விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும்
சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை
புண்ணிய பாவமுமே

இதன் கருத்து:

செல்வமும் உறவும் வருவது வீடுவரைதான். கதறி அழும் மனைவி வருவது வீதி வரை மட்டும்தான். அடித்துக் கொண்டு அழும் பிள்ளையின் விஜயம் சுடுகாடு மட்டும்தான். ஆனால் கடைசி வரை கூட வருவது செய்த புண்ணியமும் பாவமும் மட்டும்தான்.

பட்டினத்தாரின் இப்பாடலைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் அந்த ஞானியின் தத்துவத்தை எவ்வாறு எம்மிடையே கவிஞர் உலவ விடுகின்றார் என்று பாருங்கள் நண்பர்களே !

பாதகாணிக்கை எனும் படத்தில் வரும் பாடலிது:

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ

கவனித்தீர்களானால் கடைசி வரியான பாவமும் புண்ணியமும்தான் கடைசிவரை கூடவரும் என்ற வாக்கியத்தை கவிஞர் விட்டு விட்டார். இதைப்பற்றி நண்பர் ஒருவர் வினவியதற்கு கவிஞர், “அப்படி ஓர் அருமையான வாக்கியத்தை சொல்லும் உரிமை பட்டினத்தாருக்கே உண்டு. அதனால் தான் அதை பாடலில் குறிப்பிடவில்லை” என்றாராம்.

மற்றவரின் ஆற்றலை மதிக்கும் மனப்பான்மை கவிஞரிடம் சிகரம் தொட்டு நிற்பதைப் பார்த்தீர்களா?
இன்று பட்டினத்தாரின் கருத்தை பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கச் செய்த கவிஞரின் ஆற்றலை என்னவென்பது!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:24 pm

தமிழ் என்னும் அந்த ஆலயத்தில் தமிழன்னை என்னும் தெய்வத்தின் முன்னே, அணையாது ஒளிவீசிக் கொண்டிருக்கும் தீபங்களில் முன்னிற்பது கண்ணதாசன் எனும் அந்தக் காவியக்கடல். ‘சாந்தி நிலையம்’ என்னும் படத்திற்காக அவர் எழுதிய பாடலின் அர்த்தத்தைச் சுவைப்போம் வாருங்கள்.

சிலநேரங்களிலே நாம் செய்வதறியாது ‘போர்`’ அடித்துப் போய் உட்கார்ந்திருப்போம் அல்லவா? அப்படித்தான் கவிஞர் கண்ணதாசனின் கற்பனையில் இருந்த கடவுளுக்கும் ஓர்நாள் போரடித்து விட்டதாம்.”என்னடா நான் படைத்த உலகத்தை ஒருமுறை பார்த்து வருவோமே" எனக் கிளம்பி விட்டாராம். பிறந்தது அந்த முதல் வரி தமிழ்க்குமரனின் எண்ணக் கருவறையிலிருந்து.

கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்

வந்தவர் சும்மா இருக்கவில்லையே தெருவில் போவோர் வருவோரை எல்லாம்”சுகமாக இருக்கின்றீர்களா?” என விசாரிக்க வேறு தொடங்கி விட்டாராம், எப்படிப் போகின்றது கவித்தலைவனின் கற்பனைத் தேர்!

வழியில் வந்த மனிதரையெல்லாம் நலமா? என்றாராம்

சும்மா இருப்பானா நம் மனிதன்? எல்லாவற்றையும் பற்றி முணுமுணுப்பவனல்லவா. ‘ஹா இதுவல்லவா வாழ்க்கை, இதைவிடை என்ன சொர்க்கம் இருக்கய்யா?’ என்று மகிழ்கின்றான் ஒருவன். மற்றொருவனோ”சே, போய்யா என்ன வாழ்க்கை இது?’என்கின்றான்.

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

என்ன அருமையாக வார்த்தைகளோடு விளையாடியிருக்கின்றார் கண்ணதாசன் பார்த்தீர்களா? சாதாரணமாக யாராவது பாட்டெழுதினால்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் வாழ்வைக் கொடுமை என்றான் என்று எழுதியிருப்பார்கள். அதில் ஒரு தப்பில்லை ஆனால், கவித்தலைவனோ அதற்கு இன்னுமொரு அர்த்தத்தையும் கொடுக்க எண்ணினான். அதாவது ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்னும் போது, அவனது இனிமையான வாழ்வைப் பொறுக்க முடியாமல் மற்றவன் இவனது இனிமையான வாழ்க்கையே தனக்கு கொடுமை என்கின்றான் .



“ ஒரு மனிதன் அதுவே கொடுமை" என்றான் என்பதன் மூலம், மனித மனத்தின் பொறாமை குணாம்சத்தை எப்படி விளக்கியுள்ளார் இந்தக் கவிச்சக்கரவர்த்தி பார்த்தீர்களா? இதைக்கேட்டதும் படைத்தவனுக்கு”என்ன மனிதர்களடா? இப்படி பொறாமை படைத்தவர்களாக இருக்கின்றார்களே" என்று எண்ணி சிரிப்பு வர உடனே சிரித்து விட்டானாம் நம்ப கடவுள்.

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் .

சிரிப்புடன் கூடவே கடவுளுக்கு சிந்தனையும் வந்தது.” என்னடா இது, இவர்களுக்குப் படைக்கும் போது நான் கொடுத்தது கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் தானே, எப்படியடா காசு, பணம், சொத்து என்று அலைந்து, எல்லாவற்றையும் அடையும் பேராசை வந்தது?

எல்லையேயில்லாத நீரும், நிலமும், வானும் நான்தானே கொடுத்தேன், சொந்தக்காரன் நானிருக்கும்போதே சொந்தம் கொண்டாடுகிறார்களே பாவிகள்.என்ன மனிதரோ! படைத்தவனுக்கே வந்துவிட்டது குழப்பம், நம் மனிதனின் சுயநல போக்கைக் கண்டு.

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் சையும் இங்கே யார் தந்தது?
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது?
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை

கண்ணதாசன் மேலே அர்த்தத்தோடு வரிகளை கையாண்டிருப்பதை பாருங்கள் தோழர்களே! கடவுள் எல்லையில்லாதவன் அதனால் அவன் படைத்த நீரும், நிலமும் எல்லையில்லாதது என்றுகூறி, கடவுள் எல்லையில்லாமல் வியாபித்திருப்பவன் என்று நம்மை உணர வைக்கின்றார் கவிஞர்.

இவற்றையெல்லாம் பார்த்துச் சலித்துப்போன கண்ணதாசனின் கடவுள் ஓர் இடத்தில் நின்றுவிட்டாராம், எங்கே?

பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்.


அங்கே நிற்கின்ற நம் கடவுள் இந்த மகிழ்ச்சியாக, எந்த வித வேறுபாடுகளுமற்ற உள்ளத்துடன், உண்மைத் தோழமையோடு ஓடி வரும் குழந்தைகளைக் கண்டதும்” அடடா! போட்டி, போறாமை கொண்டு அலையும் இந்த மனிதர்களால் குழந்தைகளின் வெள்ளை உள்ளத்தை மட்டும் இன்னும் கெடுக்க முடியவில்லை, அன்பைத் தவிர வேறு ஒன்றுக்குமே மயங்காத இந்தக் குழந்தைகள் இருக்கும் வரை என் படைப்பின் தத்துவம் அழியாது" என்று எண்ணினார்.

போதுமடா எனது பூமிச் சுற்றுலா எனத் திரும்பி தனது மேலுலகிற்கே திரும்பி விட்டாராம் .

பச்சைப்பிள்ளை கிள்ளை மொழியில்
தன்னைக் கண்டாராம்
உண்மை கண்டது போதும் என்று
வானம் சென்றாராம்.

நண்பர்களே! கண்ணதாசன் எனும் அந்தக் காவியக் கடலில் என்னோடு சேர்ந்து இனிய பயணத்தை மேற்கொள்ளும் உங்களை அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கிறேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:25 pm

கண்ணதாசன் கூற்று

அன்று எத்தனையோ புத்தகங்கள் எழுதக்கூடிய அளவிற்கு உடலில் வலுவிருந்தது.

ஆற்றல் பொங்கி வழிந்தது.

ஆனால் வெறும் இரத்தத் துடிப்புக்கு முதலிடம் கொடுத்து பொன்னான காலத்தை விரயமாக்கினேன்.

இன்று எத்தனையோ எழுத வேண்டும் என்று துடிக்கின்றேன், அனுபவங்கள் பொங்கி வழிகின்றன. ஆனால் எனது பாழாய்ப்போன உடம்பு விட்டுக்கொடுக்க மறுக்கின்றது .

இளைஞனே என்னைப்பார்த்து விழித்துக்கொள்

காலம் பொன்னானது காலம் தாழ்த்தி உணர்ந்து கொள்ளாதே !

(கண்ணதாசனின் பல நூல்களில் இருந்து திரட்டியவை)கவிஞர் கண்ணதாசன் கவிதை மட்டுமல்ல, திரைப்படப்பாடல்கள் மட்டுமல்ல, கதைகள் மட்டுமல்ல, கட்டுரைகள் மட்டுமல்ல யாவற்றிலுமே சிறந்து விளங்கினார். கவிஞரின் கட்டுரைத் தொகுப்புக்களில் "எண்ணங்கள் ஆயிரம்" என்பதும் ஒன்று. இதன் முதல் கட்டுரையைப் பார்க்கும் முன் அதன் முன்னுரையாக கவிஞர் கூறியவற்றைப் பார்ப்பது இந்த இடத்திற்குப் பொருந்தும் என்பது எனது எண்ணம்.

அன்றும் இன்றும்

(இது 10.4.1978 எழுதப்பட்டதாகும்)
ஒரு காலத்து எழுத்துக்கள் மறு காலத்தில் அதிசயமாவதும் உண்டு, கேலிக்கிடமாவதும் உண்டு. எனது பழைய எழுத்துக்கள் சிலவற்றை இப்போது நானே படித்துப் பார்த்தால் "நாமா இப்படி எழுதினோம்?" என எண்ணத் தோன்றுகிறது. சில எழுத்துக்களோ "சீ! இவ்வளவு மட்டமாகவா எழுதினோம்" என்று எண்ணவும் தோன்றுகின்றது. புத்தகம் வெளியிடுவதில் புதிய உற்சாகம் பொங்கி வழியும் காலம் இது. புதிய நூல்களோடு எனது பழைய எழுத்துக்களில் தரமானவையும் விடாமல் தொகுக்கப் படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் சோ அவர்கள், தனது "துக்ளக்" பத்திரிகையில் ஏதாவது எழுத வேண்டும் என்று கேட்டார். "எண்ணங்கள் ஆயிரம்" என்ற தலைப்பையும் அவரே சொன்னார். சிலகாலம் அந்தத் தலைப்பில் எழுதி வந்தேன்.

அவை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. என் குழந்தைகளுக்குப் புத்தகம் போடுவதில் இப்போது தீராத ஆசை. அண்மையில் திருமணமான என் மூத்த மகன் "காந்தி" (இது எழுதப்பட்டது 1978ம் ஆண்டு), பாதிப் பங்காளியாக உள்ள "கீதாசமாஜம்" இந்த நூலை வெளியிடுகின்றது.

பல்வேறு காலத்திய கருத்துக்கள் என்றாலும், என்னுடைய சிந்தனையோட்டம் ஒரே மாதிரி இருப்பதை இந்தக் கட்டுரைக் குவியல் சுட்டிக் காட்டும்.

அன்பன்
கண்ணதாசன்

மேலே உள்ள கண்ணதாசன் அவர்களின் முன்னுரையை நான் தந்ததிற்குக் காரணம், கவிஞரின் சிந்தனைத் தடாகத்தின் நீர் எவ்வளவு தெள்ளத் தெளிவாக இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்கே. அவர் தன்னைத் தானே விமர்சித்தார். அதன் மூலம் எழுந்த வினாக்களுக்குத் தானே விடைகாண முற்பட்டார். உண்மைகள் பூதாகரமாக அவர் முன்னே எழுந்து நின்றபோது அவர் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை, அதைத் துணிவாக எதிர் கொண்டார். அதன் மூலமே அவருடைய எழுத்தாக்கங்கள் எந்தவொரு காலகட்டத்திற்கும் உகந்ததாக மிளிர்கின்றது.

இனிக் கவிஞரது கட்டுரை ஒன்றைப் பார்ப்போம்.

நம்பிக்கை 1

நம்பிக்கையில்தான் நானும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஆனால், என் நம்பிக்கை வரையறுக்கப்பட்டிருகின்றது. என் தகுதிக்கும், திறமைக்கும் உட்பட்டே, அந்த நம்பிக்கை தன் ராஜ்ஜியத்தை நடத்துகின்றது. தகுதி வளர்ந்தால்தான் எனது நம்பிக்கை வளர்கிறது.

சிறிய கொடிகளில் பெரிய பூசணிக்காய் காய்ப்பது போல், சிலரது நம்பிக்கை அவர்களது சக்தியை விட அதிகமாக இருக்கின்றது.

பெரிய மாமரம் சிறிய கனிகளை ஈன்றெடுப்பது போல,எனது சக்தி, எனது நம்பிக்கையைத் தாலாட்டுகின்றது. "இமயமலையின் மீது ஏறிவிடலா" என்று மனிதன் நம்புகிறான்; ஏற முயற்சிக்கிறான். கால்களில் வலுவில்லை. கடைசியில் ஒரு குன்றின் மீது நின்று கொண்டு "இதுதான் இமயம்" என்று சாதிக்கிறான்.

சொல்லித் திருத்த முடியாத வாதங்களை ஏற்றுக் கொண்டு விட்டால் தொல்லை இல்லை என்பதால், மற்றவர்களும் அதை ஒப்புக் கொள்கிறார்கள். களிமண்ணால் சிலை செய்ய முயற்சிக்கும் ஒரு சிற்பி, மண்ணாலேயே ஒரு மாளிகை கட்ட முயற்சிக்கிறான். "காகிதக் கப்பலைக் கடலிலே விடுவேன்;அதை ஓட்டியும் காட்டுவேன்; கரையிலும் சேர்ப்பேன்" என்பது ஒருவனது வாதம்.

இரண்டு காலடிகள் ஒழுங்காக விழுந்து விட்டதாலேயே, கால்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வழுக்குப் பாதைகளில் ஏறுவேன் என்பது இன்னொருவரின் வாதம். ஒரு வெற்றி, பல வெற்றிகளைக் கனவு காண்கின்றது. ஒரு சக்தி, பல சக்திகள் தனக்கிருப்பதாக நம்புகின்றது மத்தளத்தில் புல்லாங்குழல் வாசிக்க ஒரு முயற்சி.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:25 pm

தாரையும், கொம்பும் ஸ் ரி க ம ப த நி பாடுகின்றன. சிலகாலம் அவைகளையும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் நம்பிக்கை அளவுக்கு மீறியதாக ஆகும் போது, அழிவும் கேலியும் எதிரே நிற்கின்றன. கோழிக்குஞ்சைப் பிடித்து விட்ட தைரியத்தில் ஒருவன் யானையையும்- பிடிக்க தயாராகிறான். கேரம்போர்டில் வெற்றி பெற்றுவிட்ட மயக்கத்தில் கிரிக்கெட் பந்தயத்திற்கு ஒருவன் தயாராகிறான். போலந்தையும்,செக்கோஸ்லாவாக்¢யாவையும் பிடித்த மயக்கத்தில் சோவியத் யூனியனுக்குள் நுழைந்த ஹிட்லரைப் போல். நீச்சல் குளத்தில் நீந்தப் பழகியவன், "கடலிலும் குதித்துக் கரையேறுவேன்" என்கிறான்.

நம்பிக்கை தரும் வெற்றிகளை விட தோல்விகள் அதிகம். அந்தத் தோல்விகளும், வெற்றிகளே என்பது ஒருவனது நம்பிக்கை. நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

தங்கள் சக்திக்கேற்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன. நம்பிக்கை துளிர் விடும் போது அச்சம் அற்றுப் போகின்றது. அச்சம் அற்றுப்போன இடத்தில், "எது செய்தாலும் சரியே" என்ற துணிவு வருகின்றது. அந்தத் துணிவு, தோல்வியைக் கூட்டி விடுகிறது. தோல்வி நம்பிக்கையை சாக அடிக்கிறது. மனித மனம், பழைய நிலைக்குத் திரும்புகின்றது. மனிதனது கடைசி நம்பிக்கை, மயானம். இந்த நம்பிக்கை மட்டும் தோல்வியடைந்ததே இல்லை.

பாஞ்சாலியைத் துகிலுரிந்த போது கெளரவர்களுக்கிருந்த நம்பிக்கை பாரதப்போர் வரையிலும்தான் இருந்தது. எதிரியின் சக்தி என்ன என்று தெரியும்வரை, ஒருவன் கொண்டிருக்கும் நம்பிக்கையை யார் தடுக்க முடியும்?

சமுதாயம் சிலரது நம்பிக்கைகளை வியப்போடும், திகைப்போடும் பார்க்கிறது. நான் யாருடைய நம்பிக்கையையும் வேடிக்கையாகப் பார்க்கிறேன். மரணத்தின் பின் மனித ஏடுகள் பரிசீலிக்கப் படும்போது, எது சரி, எது தவறு என்பது தெரியப் போகிறது. அதுவரை சர்க்கஸ்காரனுக்கு அடங்கும் புலியைப்போல், என் நம்பிக்கையை என் அளவுக்குள் வைத்திருக்க விரும்புகிறேன்.

(கவிஞர் கண்ணதாசனின் "எண்ணங்கள் ஆயிரம்" எனும் தொகுப்பிலிருந்து ... நன்றி)

மேலேயுள்ள கட்டுரை கவிஞர் வாழ்க்கையின் நடைமுறைகளை யாதார்த்த முறையில் தத்துவங்களோடு பின்னிப் பார்த்து விளக்கும் அழகை சித்தரிக்கின்றது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:25 pm

இந்த இதழில் நாம் பார்க்கப் போகும் இந்தப் பாடல் கவிஞரின் கற்பனைக்கு ஓர் கலசம். தன் கணவனைப் பிரிந்த ஒரு பெண், மீண்டும் அவனைச் சந்திக்கும் போது ஏற்படும் அந்த உணர்ச்சிக் குவியலை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து எம்மையும் அதே உணர்ச்சி வீதியில் ஊர்கோலம் அழைத்துச் செல்கிறார்.

கவிஞசரின் பாடலுக்கு, பி.சுசிலாவின் காந்தர்வக் குரல் உயிர் கொடுக்க பலரது மனவானிலும் மறையாது நிலை கொண்டிருக்கும் பாடலிது.

காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வானவீதியில் பறக்கவா ?
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர்க் கடலில் குளிக்கவா ?

அருமையான கற்பனை, ஒரு பெண்ணால் பறக்க முடியுமா? முடியும் என்கிறார் கவிஞர் அவளது காதல் சிறகை விரித்தால், அவளுக்கு வானம் எனும் வீதி சாதாரணமாகி விடுகின்றதாம்.
அவளால் வானில் பறக்கக் கூட முடியும். ஆனால் அடைய முடியா அந்த இலக்கை அடைந்து பறப்பதா இல்லைப் பிரிந்து மீண்டும் இணைந்த கணவனின் மார்பில் தனது முகத்தைப் புதைத்து இவ்வளவு காலம் அவனைப் பிரிந்திருந்த சோகச் சுமையைக் கொட்டித் தீர்ப்பதா என குழம்பிப் போகின்றாளாம் !

அடேயப்பா, தமிழறிவெனும் உளியால், தமிழெனும் கருங்கல்லில் சிற்பம் வடிக்கக் கூடிய திறன் கவிஞரின் தனிப்பெருமை.

எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும், பகலும் நடக்கவா?
இத்தனை காலம் இருந்ததை எண்ணி
இருகை கொண்டு வணங்கவா?

கவிஞர், இந்த ஒரு வரியில் தனது கணவனைப் பிரிந்திருக்கும் துயரை இவ்வளவு காலமும் அவள் எவ்வாறு சகித்துக் கொண்டாள் என்று அருமையாக விளக்கியுள்ளர். அதோடு அடுத்த வரிகளில் இறைவனுக்கு அவள் கணவனை உயிரோடு வைத்திருந்ததற்காகவும், அதேசமயம் தனது கணவனுக்கு இத்தனை காலமும் இன்னொருத்தியை நாடாது தன் நினைவுகளுடனேயே இருந்ததற்காகவும் நன்றி சொல்வதற்காக இரு கை கொண்டு வணங்கப் போகின்றாளாம். எப்படி இரு கருத்துகளை ஓரே வாக்கியத்தில் உள்ளடக்கியிருக் கிறார் பார்த்தீர்களா?

முதல்நாள் காணும் திருமணப் பெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?
முறையுடன் மணந்த கணவர் முன்னாலும்
பரம்பரை நாணம் தோன்றுமா?

ஆமாம் இவ்வளவு காலம் பிரிந்திருந்தோமே? அவரைப் பார்த்ததுமே முகத்தை மறைக்க வேண்டுமோ?

சும்மா போங்கடி ! அவர் என்னை முறையாக மணந்த கணவர்தானே? பின்னும் என்ன அங்கேயும் பரம்பரை நாணம் வந்திடுமோ? புரியாமல் தவிப்பதை தனக்கே உரிய பாணியில் படம் பிடித்துக் காட்டுகின்றார் தமிழ் எனும் காமிரா கொண்டு.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.

முதல் மூன்று பந்திகளும் வினாக்களை வீசிய நமது தமிழ்ப்பெண் கடைசியில் தானே அதற்கு விடை பகருகின்றாள். பலநாள் காணாமல் கண்ட தன் கணவனின் முன்னால் தான் அழுவதும், அப்படியே அமைதியாய் சிலைபோல் நிற்பதுவும் சரியான ஒரு நிகழ்வுதான் என மனதை சாந்தியாக்கிக் கொள்கிறாள்.

கவிஞரின் பாடல் எனும் தோட்டத்தினுள் நான் நுழைந்து விட்டால் வெளியேறும் வழியைத் தொலைத்து விடுகிறேன். வெளிக்கதவைப் பூட்டி அதன் சாவியை தமிழமுது எனும் பூந்தொட்டியின் கீழ் மறைத்து விடுகிறார் கவிஞர்.

என்னோடு சேர்ந்து இந்தப் பூந்தோட்டத்தில் பயணித்ததிற்கு நன்றி , நீங்களும் இந்த அழகில் மனம், லயித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:26 pm

கவிஞர் கண்ணதாசன் புவியில் வாழ்வைத் துறந்தபோது அவரின் நண்பர் கலைஞர் கருணாநிதி வடித்த இரங்கல் கவிதை இங்கே:

என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதயசுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ - என்நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ - உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே!

கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட!


இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் - சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!

ஆயிரங்காலத்துப் பயிர் நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள்!

என் நண்பா!

இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:26 pm

கவிதை உலகின் காவியத்தலைவன் கண்ணதாசனைப் பற்றிப் பேசுவதென்றால் உலகத்தில் வேறு எதுவுமே தேவைப்படாது. இந்தப் பகுதியில் அவர் தம் பாடல்கள் சிலவற்றையும், கட்டுரையையும் பார்த்தோம். இந்த இதழிலே சிறிது வித்தியாசமாக வேறு ஒரு கோணத்தில் கவியரசரைப் பார்ப்போம்.

இத்தகைய ஒரு சிறந்த கவிஞனுக்கு இத்தகைய சிறந்த பாடல்களைச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமைப்பதற்கு உந்துதலைக் கொடுத்தது எந்த சக்தி என்று சிந்தித்தேன். இயற்கையிலே இறைவன் அளித்த அந்தத் தமிழ் இலக்கிய ஞானம் இருந்தாலும், தன் அனுபவங்களே தனக்குப் பல இடங்களில் கைகொடுத்துள்ளன எனத் தன் சுயசரிதத்தில் கவிஞரே குறிப்பிட்டுள்ளார்.

தகவல் சேகரிப்பதற்காகப் பல இணைய தளங்களில் தேடியதற்கு நல்ல பலன். அவர் எழுதிய வெற்றிப்பாடல்களின் பின்னணியில் உள்ள சம்பவங்கள் சிலவற்றை அறிய முடிந்தது. அதன் அடிப்படையில் மூன்று சம்பவங்களைத் தொகுத்துத் தருகிறேன் . படித்துப் பாருங்களேன் ! சுவையாக இருக்கும்

பாடல் பிறந்த சம்பவம் 1

"அவன் தான் மனிதன்" என்னும் படத்தை உங்களில் பலர் பார்த்து ரசித்திருப்பீர்கள்; சிவாஜிகணேசனின் அற்புதமான நடிப்பில் வெளிவந்த அருமையான படம். அதிலே வந்த பாடல்கள் அனைத்தும் உங்கள் மனத்தில் இன்றும் நிலை பெற்றிருக்கும் என நம்புகிறேன். 'அவன்தான் மனிதன்' படம் 1973ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது. இதற்குப் பாடல்கள் எழுதுவதற்காகக் கவியரசர் கண்ணதாசனைக் கேட்டிருந்தார்கள். எதையும் மிகவும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் கவியரசரின் பழக்கத்தை மனத்திற் கொண்டு அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், அவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு 'மே மாதம் பாடல்கள் தேவை, மறந்து விடாதீர்கள்' என நச்சரித்த வண்ணமே இருந்தார்கள். கடைசியாக ஒருநாள், பாடல்களை அன்றே எழுத வேண்டும் என வற்புறுத்தினார்கள். கவியரசரும் வற்புறுத்தல் தாங்காது சென்னையில் 'ஹோட்டல் அட்லாண்டிக்'இல் அத்தனை பாடல்களையும் எழுதி முடித்தார்.

அவை மிகவும் பிரபல்யம் வாய்ந்த

"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா ?",
"அன்பு நடமாடும் கலைக்கூடமே !",
"மனிதன் நினைப்பதொன்று" மற்றும்
"எங்கிருந்தோ அந்தக் குரல்"

எனும் பாடல்களாகும். பாடல்களை எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறும் போது தனது உற்ற நண்பரான எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களிடம், ஒரேயொரு பாட்டை மற்றும் கவனமாகக் கவனி என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அனைவரும் ஏன் கவியரசர் அப்படிக் கூறினார் என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கையில், எம்.எஸ்,விஸ்வநாதனுக்குப் பட்டென்று வெளிச்சமானது, உற்ற நண்பராயிற்றே!. மே மாதம், மே மாதம் என்று கவிஞரைப் போட்டுத் தயாரிப்பாளர்கள் நச்சரித்ததைத் தாங்காமல் தனக்கே உரிய பாணியில் ஒரு பாடலில் தனது ஆதங்கத்தை வெளியிடிருந்தார். அடுத்தமுறை "அன்பு நடமாடும் கலைக்கூடமே" எனும் பாடலைக் கேட்கும்போது உங்களுக்குப் புரியும். ஆமாம் அந்தப்பாடலின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஒரு 'மே' யைச் சேர்த்திருந்தார். அதாவது தயாரிப்பாளர்கள் தன்னிடம் மே, மே என்று குறிப்பிட்டது தனக்கு எரிச்சல் மூட்டியது என்பதை அறியத் தருவதற்காக. அப்பப்பா! என்னே சாமர்த்தியம், எப்படியான ஒரு சந்தர்ப்பக் கவி, இவை அனைத்தையும் தரணியில் உயர்ந்த கவிஞனால் தான் சாதிக்க முடியும்.

பாடல் பிறந்த சம்பவம் 2

"கெளரவம்" என்னும் ஓர் அருமையான படம் நண்பர்களுக்கு ஞாபகமிருக்கும் என்று நம்புகிறேன். அதிலே வந்த அருமையான சில பாடல்களும் உங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும். அது 1973/74 ஆம் ஆண்டுக் கால கட்டம். அப்போது கவியரசர் தனது மருமகனை முன்னுக்குக் கொண்டு வருவதற்காக அவரைத் தனக்கு உதவியாளாராக வைத்துக் கொண்டிருந்த காலம். அந்தச் சமயத்தில் கவியரசர் மலேசிய விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைத்தார் கவியரசரரின் மருமகன். எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் கவியரசரின் மனப்பான்மையை மேற்கோள் காட்டி, அந்தப் படத்தில் பாடல் எழுதும் சந்தர்ப்பத்தைத் தனக்குத் தருமாறு வேண்டினார். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர்களோ கவியரசர் மீதே நம்பிக்கை கொண்டிருந்தார்கள். எனவே அவர் வரும் வரைக்கும் காத்திருந்தார்கள். கவியரசர் வந்ததுமே இந்தச் செய்தி அவர் காதுகளுக்கு எப்படியோ எட்டி விட்டது. "நான் வளர்த்த என் வீட்டுப் பையனே எனக்குத் துரோகம் புரிய முற்பட்டானா?"- அவரது அனுபவப் பட்டறையில் அடுத்தொரு ஆயுதம். கலங்கவில்லை கவிதை ராஜன். எடுத்தான் பேனாவை, வடித்தான் தமிழ் ஓவியத்தை, ரசிகர்களான எங்களுக்குக் கிடைத்தன அருமையான பாடல்கள் இரண்டு:

"பாலூட்டி வளர்த்த கிளி, பழம் கொடுத்துப் பார்த்த கிளி"
"நீயும் நானுமா ? கண்ணா நீயும் நானுமா ?"

அடுத்த தடவை இந்தப் பாடல்களைக் கேட்கும் போது கண்களை மூடிக் கொண்டு, மனக்கண்ணிலே கவியரசரின் இந்தக் காட்சியைக் கற்பனை பண்ண்¢க் கொள்ளுங்கள். புதுவிதமான அர்த்தங்களும் , இதை எழுதும்போது கவிஞரின் மனத்தில் ஓடிய எண்ணங்களும் உங்களுக்கு நிதர்சனமாகும்.

ஒரு கவிஞன் கை வலிக்காமல் பாடல்களை எழுதுவது பெரிதல்ல, அந்தப் பாடலில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகளை ரசிகர்களாகிய நம் மனங்களில் உருவாக்குவதுதான் பெரிது. அதில்தான் அவனது வெற்றி தங்கியுள்ளது. கசப்பான அனுபவங்கள் கொடுத்த உணர்ச்சிகளுக்குத் தமிழ் எனும் இனிப்பு தடவி எமக்குச் வைக்கக் கொடுக்கும் உன்னதக் கவிஞனின் ஆற்றலுக்கு இணை எங்கேயுண்டு!
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:26 pm

பாடல் பிறந்த சம்பவம் 3

கே.பாலச்சந்தருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் உள்ள நட்பு வித்தியாசமானது. ஒவ்வொருவரும் மற்றவருடைய திறமையை மதித்து மிகவும் கெளரவமாகப் பழகினர். 60-ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியிலும், 70ம் ஆண்டின் ஆரம்பத்திலும் கே.பாலச்சந்தர் வெளியிட்ட பல படங்களின் வெற்றியின் பின்னணியில் கவியரசர் கண்ணதாசன் பாடல், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பு எனும் கூட்டுறவு மிளிர்ந்தது.

இந்தப் பட்டியல்களில் ஒன்றுதான் "பட்டினப் பிரவேசம்". இந்தப் படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு மெட்டு மீட்டியிருந்தார் அது கே.பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் கேள்வி "பூனையின் கழுத்தில் யார் மணி கட்டுவது?" ஆமாம், இந்த மெட்டிற்கேற்றவாறு பாடலை அமைக்கும்படி யார் கவியரசரைக் கேட்பது? ஒரு கால கட்டத்திலே இசையமைப்பாளர்களின் கட்டளைப்படியே பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதினார்கள். ஆனால் இந்தக் கலாச்சாரத்தை மாற்றியதே கண்ணதாசன் எனலாம். கண்ணதாசன் இந்தக் கட்டுப்பாட்டிற்குப் பணிய மறுத்த கவிஞர். எனவே இந்தப் பொறுப்பைக் கவியரசரின் உற்ற நண்பரான எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடமே கே.பாலச்சந்தர் ஒப்படைத்திருந்தார். இதைச் செயலாக்குவதற்கு எம்.எஸ்.வி ஒரு தந்திரத்தைக் கையாண்டார். ஒரு சவாலாக "எங்கே இந்த மெட்டிற்கு ஒரு பாடல் எழுது பார்க்கலாம்" என்று கவியரசரிடம் கேட்டார். முதலில் தனது பாணியில் மறுத்தாலும் பின்பு ஒருவாறு கவிஞர் ஒத்துக் கொண்டு 15 நிமிடங்களில் அந்தப் பாட்டை எழுதி முடித்தார். அதுதான் உங்கள் நினைவிலும், என் நினைவிலும் என்றும் நிறைந்திருக்கும், "வான் நிலா நிலா அல்ல " என்னும் பாடல்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இன்னிசைக் குரலில் ஒலிக்கும் கானம் அது. இந்தப் பாடலை எழுதி முடித்த பின் கவிஞரே இதன் பெருமை பற்றிக் குறிப்பிடுகையில், நகைச்சுவையாக தன் ஒவ்வொரு வரியும் "லா"வில் முடிகிறது. இதில் நான் குறிப்பிடாத முக்கியமான மூன்று "லா"க்கள் "மதர் - இன் - லா (மாமியார்), பாதர் - இன் - லா (மாமனார்), டாட்டர் - இன் - லா (மருமகள்) என்று குறிப்பிட்டாராம்.

கவியரசர் கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் நட்பு மிகுந்த ஜோடித்தனத்தை தனது படம் ஒன்றினில் புகுத்த ஆவலாக இருந்த கே பாலச்சந்தர்,"வறுமையின் நிறம் சிகப்பு " படத்தில் "சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி" என்னும் பாடலைப் புகுத்தினார். அதனை நினைவு கூர்ந்தீர்களானால், ஸ்ரீதேவி ராகத்தைக் கொடுக்க கமல்ஹாசன் அதற்கேற்றவாறு பாடலைக் கொடுப்பதாக அந்தக் காட்சி அமைந்திருந்தது. இதில் ஸ்ரீதேவி எம்.எஸ்.விஸ்வநாதனையும், கமல்ஹாசன் கவியரசர் கண்ணதாசனையும் பிரதிபலிப்பது போன்ற அர்த்தத்தைத்தான் இந்தக் காட்சியில் கே.பாலச்சந்தர் வெளிக்கொணர்ந்திருந்தார்.

மற்றுமொரு திரைப்படம் கே.பாலச்சந்தர் அவர்களின் "அபூர்வ ராகங்கள்". அதில், கதையின் முடிவுரையாக பாடல் ஒன்றை அமைக்கும்படி கே.பாலச்சந்தர், கவியரசரைக் கேட்டார், அதற்காகவே பிறந்த அருமையான பாடல் "கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்குப் பதிலென்ன?" என்பதாகும். இந்தப் படத்தின் கருத்தையே மிகவும் ஆழமாக விவரித்தது இது.

நண்பர்களே ! மேலே நான் குறிப்பிட்ட சம்பவங்கள் உங்களுக்குச் சுவையூட்டுபவையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:27 pm

கண்ணதாசன் என்ற தனிமனிதன் தமிழ் நெஞ்சங்களில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தமிழ் இலக்கிய உலகிலே அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது . கவிஞர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இன்றைய பாடல்களை அளக்கும் அளவுகோலாக கவித்தலைவனின் ஆக்கங்களே அமைகின்றன . ஒரு பாடலின் வெற்றியை ஒப்பீடு செய்ய அவரது படைப்புக்களே முன்னிற்கின்றன.

இந்த இதழில் அவரது இனிய திரைகானம் ஒன்று நமக்குச் சொல்ல வந்த செய்தியை அந்தப் பாட்டைப் பகுப்பதின் மூலம் பார்ப்போம்

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு (ஆறு)

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி !

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும் -
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும் -
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை எனப்து அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும் (ஆறு)

ஆசை,கோபம்,களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு,நன்றி,கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் - இதில்
மிருகம் என்பது கள்ள மனம் - உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (ஆறு)

இந்தப்பாடல் உங்களில் பலருக்கும் ஞாபகம் இருக்கும்.

ஆண்டவன் கட்டளை என்னும் படத்திற்காக கவிஞர் இயற்ற , டி.எம்.ஸ் குரல் கொடுத்து , நடிகர் திலகம் நடித்திருந்தார்.

ஒரு மனிதன் அமைதியான வாழ்வு வாழ எளிமையான ஆறு கட்டளைகளைத் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்.

அதிலே ஒரு சிறப்புப் பாருங்கள் ஒரு சராசரி மனிதன் வாழ்விலே அவன் விரும்புவது பொன், பட்டு என்பதுவே அதாவது வாழ்க்கை வசதிகளைக் குறிப்பிடுகிறார்.

சொல்லுவதையே, செய்பவன் வாழ்க்கையில் அவன் சொல்வதும் அதைச் செய்வதும் பொன்னைப் போலே அவனுக்கு இன்றியமையாததாம் . அது மட்டுமல்ல இனபம் வருகிறது அந்த இன்பத்திலே ஒளிந்து துன்பம் தொடர்கிறது. துன்பம் என்று பதைத்துப் போகிறோம் அந்த துன்பத்தைலே இன்பம் குடி கொள்கிறது . இதிலே துன்பத்தினூடாக வரும் இன்பம் அவனுக்குப் பட்டைப் போன்றதாம்.

ஒரு வாழ்க்கையின் இன்றியமையாத தத்துவத்தைச் சொல்லிய அழகைப் பார்த்தீர்களா?

உண்மையை பேசுங்கள் , நன்மையைச் செய்யுங்கள் உலகம் தானாக உங்களைத் தேடி வரும் . உங்கள் நிலை உயரும் போது , முன்பு இருந்த நிலையை மனதில் கொண்டு பணிவாக நடந்தீர்களால் நீங்கள் வணக்கத்துக்குரியவர்களாவீர்கள் என்கிறார் கவிஞர்.

இந்த நான்கு கட்டளைகளை அறிந்தாலே நன்மையாகுமாம் .

உண்மையை அன்புக்கும் , பணிவை பண்புக்கும் ஈடு கட்டி அதன் முக்கியத்துவம் வாழ்க்கையில் எப்படி பேணப்பட வேண்டும் என்று அழகாக எடுத்தியம்புகிறார் .

ஆசை, கோபம், களவு இந்தக் குணங்கள் ஒரு மனிதனை மிருகமாக்குகின்றன. இதைக் கடந்தவன் வாழ்க்கை தெய்வாம்சங்கள் பொருந்திய ஒரு தூய்மையான வாழ்க்கையாக மாறுகிறது என்று நமக்கெல்லாம் ஒரு இலட்சியப்பயணத்தை மேற்கொள்ளுமாறு அறைகூவல் விடுகிறார் .

மிருகம் என்பது கள்ள மனமின்றி வேறொன்றில்லை அதேபோல தெய்வமனம் பிள்ளை மனம் என்று நமது கண்ணுக்கு புலப்படக்கூடிய ஒரு உதாரணத்தின் மூலம் உயர்த்திக் காட்டுகிறார் நமது கவிஞர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:27 pm

கண்ணதாசன் கூற்று

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் ஊசலாடிக்கொண்டிருப்பதல்ல பிறப்பின் நோக்கம். சுகமான சிந்தனைக்கு அவகாசம் வேண்டும். அது எங்கே கிடைக்குமோ அங்கே; எப்படிக் கிடைக்குமோ அப்படி; எதனால் கிடைக்குமோ அதனால் கொண்டுவரப்பட வேண்டும்.

புள்ளிகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் கோலங்கள் ஆகின்றன. எண்ணங்கள் பூர்த்தியடையும்போது அதற்கு நிம்மதி என்று பெயர் வருகிறது. எது தேவையோ அதைப்பெற்றுவிட முயற்சி செய்வோம்; இல்லையேல் விட்டுவிடத் தயாராகுவோம். காரணம் எமக்குத் தேவை நிம்மதி.கண்ணதாசன் சாலை , கண்ணதாசன் பதிப்பகம் , கண்ணதாசன் இல்லம் .அப்பா! இம்முறை எனது சென்னை விஜயத்தின் போது நான் கடந்த இந்த காவியத்தலைவனின் ஞாபகச் சின்னங்கள் கணக்கிலடங்கா . கலையுலகில் சினிமா உலகில் பலர் உலா வருகிறார்கள் ஆனால் மக்கள் மனதில் தமக்கென ஒரு நீங்காத இடத்தை ஏற்படுத்திச் செல்பவர்கள் ஒரு சிலரே . அவரின் இல்லத்தின் வாயிலில் நிற்கும்போது ஒரு கவிதையுணர்ச்சியுடன் கூடிய அமைதி நெஞ்சை நிறைக்கிறது.

இந்த ஆக்கத்திலே அவரது பாடல் ஒன்றை முதலில் பார்ப்போம். அவர் தனது பாடல்களிலே தமிழ்ச் சொல்வளத்தாலே கருத்துக்களுக்கு உயிர் வடிவம் கொடுத்தார். அவர் பாடல்கள் சராசரி மனிதரின் இதயங்களின் மென்மையான பகுதிகளைத் தீண்டியது. வாழ்க்கை தம்மை நோக்கி வீசிய இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாது தவிக்கும் ஒருவனுக்கு அவரது பாடல்களினால் இதயத்தின் வலி தாங்கக் கூடியதாக இருந்தது. இதுவே இந்தக் கவிமகன் புகழேணியின் உச்சிக்குச் செல்ல ஏதுவாக அமைந்தது.

இந்த ஆக்கத்திலே நான் பார்க்கப் போகும் பாடல் இந்த உலகிலே எமது வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை மிகவும் எளிமையாக எமக்குப் புரிய வைக்கும் பாடல். வாழ்க்கையைப் பற்றி எவ்வளவோ கனவு கண்டு, அதற்காக எத்தனையோ பாடுபடும் நமக்கு அந்த வாழ்க்கையின் தத்துவத்தை சில வரிகளிலேயே புரிய வைத்து விடுகிறார் கவிஞர்.

இந்தப் பாடல் நீர்க்குமிழி எனும் படத்திலே இடம் பெற்றது. நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களின் நடிப்பிற்கு, வெண்கலக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் குரலில், கவிஞரின் தம்பியெனும் உரிமை பெற்ற திரு விஸ்வநாதன் அவர்களுடம் திரு ராமமூர்த்தியும் இணைந்து வழங்கிய இசையில் மக்களின் மனதை நிறைத்த பாடல்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

எத்தகைய ஒரு நிதர்சனமான உண்மையை எப்படி எளிமையாக எமக்குப் புரிய வைத்திருக்கிறார் கவிஞர்.

எத்தனை ஆட்டம் போடுகிறான் மனிதன்? எத்தனை ஏக்கர் நிலத்தை வாங்கிக் குவிக்கிறான், எத்தனை பேரை ஏமாற்றித் தனது காரியங்களைப் புரிகிறான்!
அவனுக்கென ஆண்டவன் கணித்து வைத்திருப்பதோ
ஆறடி நிலம்தான்!

முதலில் எமக்கெல்லாம் தொட்டிலடா
கண்மூடினால் காலில்லாக் கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரயாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஒரு வைத்தியர் நோயாளிக்குக் கசப்பான மருந்தை இனிப்புத் தடவிக் கொடுப்பதைப் போல , வாழ்வின் கசப்பான உண்மைகளை இனிப்பான தமிழ் வார்த்தை கலந்து எம்மையெல்லாம் , எம்மையறியாமலே பாடலை முணுமுணுக்க வைத்து விட்டார் இந்த ஆய கவி.

வாழ்க்கை என்பது ஒரு நிகழ்வு அந்த நிகழ்வில் மறதி முக்கியமானது அல்லவா , மறதி என்பது இல்லாவிட்டால் மனிதன் பைத்தியக்காரன் ஆகிவிடுவானல்லவா ? அங்கேதான் நித்திரை எமக்குக் கை கொடுக்கிறதாம். எவ்வளவு ஆழமான கருத்து!

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவர் அல்லவோ திறக்கின்றார்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன் அதை எத்தனை எளிமையாக எமது கவிஞர் கவலையிலும் சிரித்திருங்கள் என்கிறார்.

நாமெல்லோரும் கர்வமாக பல காலம் இருப்போம் என்ற மாயையில் பல காரியங்கள் புரிகின்றோமாம், எமது கண்களைத் திறப்பது, எமக்கு முன்னாலே இறப்பவர்கள் தானாம், அப்போதுதான் இந்த வாழ்க்கை நிலையற்றது என்ற எண்ணம் எமக்கு வருகின்றதாம்.

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவரெல்லாம் நிலைப்பதில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலர் அதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா


தமது வழ்க்கை எனும் புத்தகத்தை அழகாய்த் தொகுப்பார்களாம் ஆனால் அதைச் சுவைக்க அவர்களால் முடிவதில்லையாம். ஆஸ்திகளை சேர்த்து வைத்து விட்டு அனுபவிக்க முடியாது போகும் எமது நண்பர்களைப் பற்றித்தான் இங்கே விளக்கம்` !

தொடங்கிய உடனே மறைந்து விடுவதால், முடிக்காமலே போய்விடும் சிலரும் இருக்கிறார்களாம். மரணம் எனும் முடிவுரையைக் கொடுப்பது காலன்,ஆனால் தாம் தொடங்கிய வாழ்க்கையை முடிக்காமலே போகிறவர்கள் யார் தெரியுமோ ?
தம்மைத் தாமே அழித்துக் கொள்பவர்கள் தான் .
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:28 pm

இதோ இன்னுமொருமுறை கவிஞரின் ஆழ்ந்த கவியாற்றலை, அனுபவத்தோடு படிந்த கருத்தெனும் பாசியை மெதுவாகத் தூக்கிப்பார்க்கும் ஒரு சிறிய அவா.

இளம் வயதினிலே கவிஞரின் திரை கானங்கள் வெவ்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மனத்தைக் கவர்ந்தன. அம்மாவின் முந்தானையைப் பற்றிப் பின் தொடரும் போது தாயின் பெருமைப் பாடல்கள் நெஞ்சைத் தொட்டன.

தந்தை காலத்திற்கேற்ற சுதந்திரத்தை அளித்தபோது, தந்தையின் மீதான பாசத்தை அள்ளித் தெளிக்கும் பாடல்கள் அடி நெஞ்சில் அலையாடின.

கன்னியின் பின்னே காதல் என்றெண்ணி கவர்ந்திழுக்கப்பட்டு அலையும்போது காதல் பாடல்கள் கருத்தைக் கவர்ந்தன.

வாழ்க்கையில் பட்டுத் தெளிந்தபோது அனுபவப் பாடல்கள் ஆறுதலளித்தன.

பின்னே! ஓர் இடத்தில் இவற்றைச் சீர்தூக்கிப்பார்க்கும்போது, அவையனைத்தையுமளித்த கவிஞரின் ஆழமான ஞானம் அதிசயிக்க வைத்தது. இன்றும் அதிசயிக்க வைக்கிறது

இந்த இதழில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது, கவிஞரின் இறைமைத் தத்துவத்தைப் புதைத்து வைத்த பாடலொன்றை! இந்தப் பாடல் டி.எம்.எஸ். அவர்களின் கணீரென்ற குரலிலே, செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல்.

இந்தப் பாடலின் சிறப்பு இதன் எளிமை, அதனுள் புதைந்துள்ள ஆழமான தத்துவம். கவிஞர் பயன்படுத்தியுள்ள தமிழ்ச்சொற்கள் ஒரு சாதாரண பாமரனைக்கூடக் கவர்ந்து அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தூண்டும் தன்மை வாய்ந்தவை.

பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமேயில்லை. என்ன இறைமையின் ஆரம்பத்தை இதற்குப் போய் ஒப்பிடுகிறாரே கவிஞர் என ஆதங்கப்படுகிறீர்களா?

ஆரம்பத்தை ஒன்றிலிருந்து ஆரம்பித்திருக்கலாமே! இல்லை முக்கால், அரை,கால் என அளவுகள் ஒன்றிற்குப் பின்னாலும் ஓர் அர்த்தத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. எனவே நாம் கையை விரிக்கும் பூஜ்ஜியத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார். பூஜ்ஜியம் அதாவது தனக்கென ஒரு பெறுமானமும் அற்ற, லாப நட்டம் வேண்டாத ஓர் ஆரம்பம். இதைத்தவிர எதை நாம் ஆரம்பத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம்?

கவிஞர் கூற விளைவது என்னவெனில், எதுவுமேயற்ற ஒரு தற்பெருமயில்லா ராஜ்ஜியத்தின் தலைவன்தான் இறைவன். தனக்கென ஒரு பெறுமதியைக் கொண்டிருக்கா விட்டாலும், 1, 2,3 என்னும் இலக்கங்கள் தமது பெறுமதியை ஏற்றிக் கொள்வது தம் பின்னால் சேர்க்கும் பூஜ்ஜியத்தின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. அதேபோல, இறைவனின் சேர்க்கை இல்லா வாழ்க்கை பெறுமானமற்றது என்கிறார் கவிஞர்.

அது மட்டுமல்ல. இந்த ராஜ்ஜியத்தின் தலைவனை எவன் புரிந்து கொள்கிறானோ அவன் மனிதன் அல்ல இறைவன் என்று நாம் அர்த்தம் கொள்ளக்கூடாது. இங்கே கவிஞர் அந்த ராஜ்ஜியத்தின் தலைவனை அறிந்து கொண்டால், அந்தத் தலைவனே இறைவன் என்று கூறுகிறார்.

தென்னை இள நீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

பலவிதமான உறைகளாலே மறைக்கப்பட்டு இருப்பதுதான் தென்னங்காய். அதனுள் இருக்கும் தேங்காயையோ அன்றி இளநீரையோ அதைத் தாங்கியிருக்கும் ஓட்டையோ பார்த்த மாத்திரத்தில் தெரிந்து கொள்ள முடியாது. எமக்கப்பாற்பட்ட சக்தி என்று எம்மால் நோக்கப்படும் அந்த இறைவனும் அதைப் போன்றவனே என்று எம் கண்முன்னே, பாமர மனிதனுக்குக் கூடத் தெரியக்கூடிய ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டுகிறார் கவியரசர்.

எம் மனத்திலுள்ள ஆணவம் எனும் அந்த மாயையை எத்தனையோ சிரமப்பட்டு அகற்றினாலே அங்கு இறைவன் எனும் உண்மையை அறிகிறோம்.

இங்கே நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகவாதிகளுக்கு ஒன்றைக் கூற விழைகிறேன். நீங்கள் ஆணவம் என்னும் மாயையினைக் களைந்து இறைவனைக் காணுகிறீ£ர்கள் என்று கூட எண்ணத் தேவையில்லை. உங்களின் உள்ளத் தெளிவு எனும் உண்மையைக் காணுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். மனச்சஞ்சலங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தெளிவான, அமைதியான சிந்தனை நீரோட்டத்தைக் காணுவதாக எடுத்துக் கொள்ளுங்கள். கவிஞர் இங்கே கூற விழைவது அதுதான்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:28 pm

அத்தகைய ஒரு சுத்திகரிப்பின் பின் உங்கள் மனம் எத்தகைய அமைதியைக் காணுகிறதோ, அந்த அமைதியின் பெயரே தெய்வம் என்கிறார் கவிஞர்.

முற்றும் கசந்ததென்று
பற்றற்று வந்தவர்க்குச்
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

என்ன பார்க்கிறீர்கள் நண்பர்களே!

வாழ்க்கையின் எல்லா இன்பத்தையும் அனுபவித்து, அனுபவத் தூணில் அடிபட்டு முற்றையும் துறந்து விட்டு தனியாக வரும் ஒருவனுக்கு பற்றே இருக்காதே! அவனுக்குக் கூட அத்தகைய சூழலில் ஒரு தனிமை இருக்கத்தானே செய்யும். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் சொந்தமென ஒரு சக்தி அமைதியைக் கொடுக்கிறதே! அந்த அமைதியை அறிந்து கொண்டு, அவ்வழியே நாம் அந்த அமைதியைப் பின்பற்றினால் அதுதான் தெய்வம்!

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்குள் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? என்பது மனித மனத்தினில் உலவும் விடையற்ற வினாக்களில் ஒன்று. விடையற்ற வினாவை மனதில் தொங்க விட்டது ஒரு சக்தியென்றால் அந்த சக்தியே இறைவன் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.

கோழியைப் படைத்து, முட்டையைப் படைத்து, வாழைக் கன்றைப் படைத்து பல அரிய செயல்களைப் புரிந்தவன் ஒர் ஏழையாம், அவனே இறைவனாம்!

முக்கியமாக இங்கே கவிஞர் விளக்க விழைவது அந்தஸ்து என்பதற்கு இறைவனின் சந்நிதானத்தில் அர்த்தமேயில்லை என்பதுவே!

நண்பர்களே! இறைவன் எனும் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தியை நம்பி உங்கள் தன்னம்பிக்கையை இழப்பது என்றுமே உண்மையான ஆன்மீகமாகாது. அதேசமயம் ஆன்மீகப் போர்வையில் செய்யும் அநாகரீகச் செயல்களை மூடிமறைப்பதும் ஆன்மீகமாகாது.

உங்கள் மனத்தின் குறைபாடுகளை உள சுத்தியோடு ஏற்றுக்கொண்டு அதன் நிவர்த்திக்காக உண்மையாக, நேர்மையாக எவன் ஒருவன் ஆக்கபூர்வமாக செயல்படுகிறானோ அவன் தான் உண்மையான ஆன்மீகவாதி என்பதுவே யதார்த்தமாகும்.

சமீபத்தில் எமது உள்ளங்களை, வாழ்க்கையைப் பாதித்த இயற்கை அனர்த்தங்களுக்குக் காரணம் தேடிக் குழம்பும்போது, கவிஞரின் சில அனுபவப் பாடல்கள் ரணமான உள்ளங்களுக்கு சிறிய ஒத்தடம் கொடுக்கிறது.

என்னோடு சேர்ந்து நீங்கள் மேற்கொண்ட இந்தப் பயணத்தில் ஆனந்தமடைந்தது உங்களைவிட நானே என்பதுவே உண்மை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:29 pm

கற்பனைக் கடலினில் தேரோடித் தான் கண்டெடுத்த முத்துக்களை மாலையாக்கி, ரசிகர்கள் கழுத்தினில் பூட்டி அழகு பார்த்துக் களித்திருந்த கவிச்சக்கரவர்த்திதான் கண்ணதாசன். அனைத்தையுமே கற்பனைக் கடலினில் கண்டெடுத்தவை என்று வகைப்படுத்திவிடவும் முடியாது. ஏனெனில், தனது வாழ்க்கைப் பயணத்தில் அனுபவம் எனும் பாதையில் நடக்கும் போது காலில் தைத்த முட்களை அடுத்தவருக்கு பல்லுக்குத்த உதவுமே என்று சேகரித்து உருவாக்கிய அரும் படைப்புகளும் உண்டு.

இந்தப் பகுதியில் அவரை வெள்ளித்திரை வசனகர்த்தாவாக எடுத்துப் பார்க்கவே விழைந்தேன். ஆனால் கடந்த மாதம் 26ம் நாள்¢ல் சுனாமி என்னும் அந்தப் பேரழிவு-பேரிடர்-பேரலை கொய்தெடுத்த எம் அரும்பெரும் உறவுகளை நினைத்து எமது மனம் அனைத்தும் சொல்லொணாத் துன்பத்தில் அமிழ்ந்திருக்கும் வேளையிது.

புண்ணாகிப் போயிருக்கும் எமது இதயங்களுக்கு, விடையற்ற வினாக்களை இயற்கையை நோக்கி வீசிக் கொண்டிருக்கும் இப்பொழுதினிலே, ஆன்மீகப் பலத்தை உலுப்பிப் பார்க்கும் ஓர் உச்சக் கட்டத்திலே, கண்ணதாசனின் எந்தப் பாடல் எமது மனங்களில் சிறிது ஆறுதலைத் தோற்றுவிக்கும் என்று எண்ணிப்பார்த்து அதைச் சிறிது நோக்கலாம் என எண்ணினேன்.

எனது மனத்தில் உதித்தது ஒரு பாடல். தனது ஆருயிர் மனைவியை இழந்து, அதிலெழுந்த சோகத்திலாழ்ந்து கணவன் பாடுவதாய் வரும் ஒரு காட்சி.

"பாலும் பழமும்" எனும் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பிற்கு, டி. எம். எஸ்ஸின் காந்தர்வக் குரலில் ஒலித்த இந்தப் பாடல் அனைவரது நினவுகளையும் விட்டகல மறுக்கும் ஒரு பாடல்!

அந்தப் பாடலைப் பார்ப்போமா?

போனால் போகட்டும் போடா
இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் - யாரடா
போனால் போகட்டும் போடா!

தன்னுடைய உயிருக்குயிரான மனைவியின் சாவைத் தடுக்கும் சக்தி தனக்கில்லை என்பதைப் புரிந்து கொண்டவன், விரக்தியைத் தத்துவமாக்குகிறான்!

வந்தது தெரியும், போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் - இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வந்தது நமக்குத் தெரியும் என்கிறார். ஆமாம், எமது அன்னை எம்மை இந்த உலகில் தள்ளிய வரவு எமக்குத் தெரிந்த ஒன்றுதானே! ஆனால் எப்போ போகப் போகிறோம்? எங்கே போகப் போகிறோம்? தெரிந்தவர் யார்?
இப்படி ஒரு சின்னத் தத்துவத்தை உலகின் கடைசி மனிதனுக்கும் புரியக்கூடிய வகையில் எடுத்துக் காட்டுகிறார் இந்த ஒப்புயர்வற்ற கவிஞர்.

இழப்பால் தள்ளாடும் மனங்களுக்கு காலத்தால் மறையாக் கவிஞனின் ஆறுதல் என்ன? எம்மை நோக்கி ஒரு கேள்விக் கணையைத் தொடுக்கிறார். இந்தப் பூமியில் பிறந்தவரெல்லாம் மரணமின்றி நிலையாக வாழ்ந்து விட்டால் புதிய பிறப்புகளுக்கு இடமேது என்கிறார் கவிஞர்.

வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா!

சொந்தத்தை இழந்து தவிக்கும் மனங்களுக்கு, வாழ்க்கையை வியாபாரம் என்றெண்ணி ஆறுதல் அடையுங்கள் என்கிறார் கவியரசர். எப்படி என்கிறீர்களா? பிறப்பை வரவு என்று எடுத்துக் கொள்ளுங்கள்; அப்படியானால் செலவு இருக்கத்தானே வேண்டும்? எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத மரணத்தைச் செலவு என்றெண்ணிக் கொள்ளுங்கள், கணக்கு முடிந்து விடுகிறது. மிகவும் எளிமையாக எடுத்துரைத்து விடுகிறார். ஆனால் எம்மால் இந்தத் தத்துவத்தை எண்ணுவதன் மூலம் ஆறுதலடைய முடிகிறதா? இல்லை. வரவின்போது மகிழும் நாம், செலவின்போது அழத்தான் செய்வோம். இது இயற்கை நியதி. ஆனால் கவிஞரின் கூற்று. சில நேரங்களிலே விளக்கமற்ற செய்கைகளை விளக்குகிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:29 pm

இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதினாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது -
இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா!

நம் வாழ்க்கை இறைவனிடம் வாங்கிய இரவல். அவன் அதைத் திருப்பிக் கேட்கும்போது நாம் கொடுக்காமல் இருந்துவிட முடியுமா? அப்படிச் சொல்லி விட்டால் கூட அவன் விட்டு விடுவானா? மறைந்தவருக்கும் எமக்கும் உள்ள நெருக்கமான, உருக்கமான, உன்னதமான உறவைச் சுட்டிக்காட்டி, கூக்குரல் போட்டு அழுது புரள்வதினாலே, மாண்டு போன அந்த உயிரை என்ன எமக்கு மீண்டும் தந்து விடுவானா? மனமே துயரை மறந்து ஆறுதல் அடைந்துவிடு என்கிறார் கவிஞர்.

அடுத்தென்ன?

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந் தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா!
போனால் போகட்டும் போடா!

இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சியில் வரும் அந்தக் கணவன் ஒரு டாக்டர். தனது மனைவியின் மரணத்தைத் தடுக்க வகை சொல்லாக் கல்வி என்ன கல்வி என்று விரக்தியின் விளிம்பில் அங்கலாய்ப்பது போல் பாடலைப் புனைந்திருக்கிறார் கவிஞர். அப்படி அந்தக் கல்வியின் மூலம் வகையறிந்திருந்தால் என் அன்பு மனைவி இப்படி தீயினுள் கருகும் நிலையை நான் கண்ணுற வேண்டி வந்திருக்காதே என்று வெம்புகிறான். என்ன சொல்ல விழைகிறார் கவிஞர்? இறைவனின் இந்த உயிரழிப்புத் தத்துவத்தைப் புகட்ட எந்தக் கல்வியுமே கிடையாது. துயர் எவருக்குமே பொதுவானது. மரணம் வரும்போது இருப்பவன், இல்லாதவன், கற்றவன், கல்லாதவன் என்று வேறுபாடு பாராட்டுவது கிடையாது.

முடிவாக நமக்கு ஓர் அருமையான, ஓர் எளிமையான தத்துவத்தைக் கூறுகிறா அமரர் கண்ணதாசன். 'என்னிடம் பணம் இருக்கிறது. என்னிடம் அறிவு இருக்கிறது. என்னிடம் அழகு இருக்கிறது. நான் உயர்ந்தவன். அவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு பொய்மையில் உழலும் மனிதரைப் பார்த்துக் கவிஞர் சிரிக்கிறார். நீங்கள் எல்லோருமே இறைவன் எனும் இயக்குனர் இயக்கும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. அவன்தான் எல்லாம் தெரிந்தவன். நமது வருகையும் மறைவும் அவன் கையிலேயே இருக்கிறது.

நண்பர்களே! கவிஞர் கண்ணதாசன் எனும் அந்த உயரிய கலைஞன் எனக்கு வாழ்க்கையில் விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள், அவரது படைப்புகளே! அது உள்ளோர், இல்லாதோர் எனும் பாகுபாடின்றி அனைவரின் ஆளுகைக்கும் உட்பட்டது. அதை ரசிப்பதற்கு எங்கள் இதயத்தின் மனிதத்துவப் பகுதியைக் கொஞ்சம் திறந்தால் போதும்.

'சுனாமி' எனும் அந்த இயற்கையின் கொடூரத் தாண்டவத்திற்குத் தம்மைப் பலிகொடுத்தவர்கள், அவர்தம் உறவினர்கள் ஆகியோரின் இழப்புக்கள் ஈடுகட்ட முடியாதவை. ஆனால் புண்பட்ட இதயத்திற்குக் கொஞ்சம் களிம்பு தடவுவது போல மனதைத் தேற்றும் சிலவற்றை நினைவு கூறுவோம்.

கடலோடு ஐக்கியமாகிவிட்ட உதிரத்தின் உறவுகளுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்! உறவுகளை இழந்து ஏதிலிகளாகியவர்களுக்கு உறவுகளாய் நாமுள்ளோம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:29 pm

தமிழக சட்டசபையில் முதலாவது ஆஸ்தான கவிஞர் எனும் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களை இதுவரை இந்தப் பகுதியிலே கவிஞராக, கட்டுரையாளராக பார்த்திருந்தோம். இந்தப் பகுதியிலே என் உள்ளங்கவர் கவிஞரை ஒரு திரைப்பட வசனகர்த்தாவாக பார்ப்போம் என எண்ணினேன்.

கவிதைகளில் எப்படி அழகிய தமிழை ஆராதித்தாரோ, கட்டுரைகளில் எப்படி தமிழை இறகாக்கி எம்மிதயங்களை வருடிக் கொடுத்தாரோ, திரையிசைப்பாடல்களில் எப்படி அனுபவம் எனும் வாசனையைக் கலந்து தமிழ் எனும் பன்னீரை எம்மீது தெளித்தாரோ, அதே போன்று திரைக்கதை வசனங்களிலும் அவரது ஆழ்ந்த அனுபவத்தின் சாயல் பூசப்பட்ட தமிழைக் காணக்கூடியதாக இருக்கும்.

கிடைக்கக்கூடிய தரவுகளை வைத்துப் பார்க்கும்போது கவிஞர் உரைநடை எழுதிய படங்கள் பதினாறுதான். பாட்டுக்கள் எழுதுவது அவரது தனித்திறன் என்றால் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதில் தணியாத தாகம் கொண்டார். அந்த சைக் கனவை நனவாக்கவே பல திரைப்படங்களைத் தானே தயாரித்தார்.

திரைப்படங்களுக்குப் பாட்டெழுதுவதில் ஈட்டிய பொருளையெல்லாம், திரைப்படங்கள் தயாரிப்பதில் இழந்தார் என்றே கூறவேண்டும். ஆனால் அந்த இலட்சிய மனிதன் தன் இலக்கியதாகம் தணிக்கும் பொருட்டு பணத்தைப் பெரிதென மதிக்காது கனவை நனவாக்கி மகிழ்ந்தார்.

திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் முயற்சியில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரியும் போது, மற்றோரை முன்னேற விடாது தடுக்கும் மனோபாவம் கொண்டவர்களால் இவரது திறமை மறைக்கப்பட்டது. இதை தனது வனவாசம் எனும் சுயசரிதை நூலில் அழகாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு,”வசனத் துறையில் எனக்கென ஒரு தனிப்பாணி உண்டு. சமூகக் கதைகளை விடச் சரித்திரக் கதைகளிலேயே அதை நிறைவேற்ற வாய்புக்களுண்டு”என்று அவர் குறிப்பிடுவதுண்டு.

முதலாவதாக ”தெனாலிராமன்” எனும் திரைப்படத்திலே கவிஞரின் சக உயிரினங்களின் மீது அன்பு கொள்ளும் மனப்பாங்கப் படம் பிடித்துக் காட்டும் ஒரு காட்சியையும் அதற்கு அவர் எழுதிய உரைநடையையும் பார்ப்போம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:29 pm

கோவிலிலே ஆடு ஒன்றைப் பலியாக்குவதற்காக ஒரு கும்பல் முனைகிறது. இதைத் தெனாலிராமன் தடுக்கிறான்

"யாரடா அது... தாயின் பூசையைத் தடுப்பது?”என்கிறான் அந்தக் கும்பலின் தலைவன் போன்றவன்.

அதற்குத் தெனாலிராமன்,"தாயின் பூசை! வாயற்ற உயிரின் வாழ்வை முடிப்பதா தாயின் பூசை? நீங்களெல்லாம் இரக்கமற்ற அரக்கர்களா?”என்பான்.

இந்த இடத்தில் கவிஞரின் பாடல் ஒன்றின் சில வரிகளையும் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

"அரக்கர் குலமெல்லாம் அன்றோடழியவில்லை
இரக்கமிலா வடிவாக இன்னும் இருக்குதய்யா” என்று வரும்.

இது கருணை மறந்த உள்ளங்களைப் பற்றி அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டை நன்கு புரிய வைக்கும்.

"ராஜா தேசிங்கு” என்னும் படத்தில் வரும் காட்சி ஒன்றில் புறா ஒன்றை மகபத்கான் அடித்து வீழ்த்துவதாக காட்சி வரும். அதை ஆயிஷா பெண்களுக்கேயுரிய கருணையுடன் கையிலெடுத்து

"பறந்து வரும் புறா! பிறருக்குத் தீங்கு செய்யத் தெரியாத குலத்தில் பிறந்த உனக்கா இந்தப் பரிதாபம்! உன்னைத் துடிக்க வைத்த அந்தப் பாவி யார்? இந்த இரக்கமற்ற கொடுமையை எமது மனித குலம்தாந் செய்யும்” என்று பேசுவதாக எழுதியிருந்தார்.

அடுத்தொரு படமான “சிவகெங்கைச் சீமை” - மருது பாண்டியரின் அரண்மனையில், ஊமைத்துரை தஞ்சம் அடைந்ததைக் காட்டும் ஒரு வசனத்தைக் கவிஞர் அமைத்திருந்தார் அது பின்வருமாறு

"கணை துளைத்திருக்கிறது. சிறகு ஒடிந்திருக்கிறது. அனாதைப் புறா, ஆதரவில்லாமல் இங்கே வந்து விழுந்திருக்கிறது”இந்த வசனத்தின் மூலம் ஒரு ஊமைப் புறாவையும்,
ஊமைத்துரையையும் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார் எமது ஒப்பற்ற கவிஞர்.

இங்கே கவிஞர் மற்றைய உயிரினங்களின் மீது தான் கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்தும் சில உரைநடைகளையே பார்த்தோம்.

நண்பர்களே! இந்தத் தலைப்பில் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய விடயங்கள் எண்ணிக்கையிலடங்காதவை, ஏனெனில் எமது கவியரசர் தன்னிகரற்றவர். கண்ணதாசன் எனும் இந்தத் தமிழ் வனத்திற்குள் நான் என்னைத் தொலைத்த காலங்கள் எத்தனையோ! ஆனால் அங்கே வழிதெரியாமல் திண்டாடவில்லை, பதிலாக இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவதற்கு வழி கிடைத்து விட்டதே என்று ஆதங்கப்பட்டதுதான் உண்டு.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:29 pm

நமது வாழ்க்கையிலே சில சமயங்களில் தாங்கவொண்ணாத் துயரங்களில் அழுந்துகிறோம். நம்மைச் சுற்றியுள்ள சொந்தங்கள் எனும் பந்தங்கள் நாம் எதிர்பார்த்தபடி ஆறுதலாக இல்லாமல், நமது மனத்தின் துயரத்திற்குக் காரணமாக அமைந்து விடுகிறார்கள். நடந்த நிகழ்வுகளை நடக்க விடாமல் பாதுகாப்பதற்கு நாம் பகீரத முயற்சி செய்திருந்தாலும், கைக்கு மீறிக் காரியங்கள் நடந்து விடுகின்றன. துயரச் சுமையினால் தோய்ந்துபோன உள்ளத்துடன் தவிக்கின்றோம்.

மேலே குறிப்பிட்ட சம்பவம் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு காலகட்டத்தில் நடந்திருக்கும். இல்லையானால் இனி நடக்கவும் கூடும். அப்படியான ஒரு சம்பவத்திலே ஒரு நண்பன் அருகே அமர்ந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக் கூறி, அது எதனால் நிகழ்ந்தது என்று தனது மனதில் படுகிற விதத்தில் எடுத்துரைதானாகில், எமது மனம் எவ்வாறு இலேசாகும் என்று சிறிது எண்ணிப்பாருங்கள்.

இத்தகைய மனஅமைதியைத்தான் கவியரசரின் பாடல்களும் கட்டுரைகளும் எனக்குத் தந்திருக்கின்றன. என் உள்ளத்தைத் திறந்து சொல்லப்போனால், அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அவரது அரிய பொக்கிஷ நூல்களைப் படிக்கும் வரை, நான் இந்து என்று பெயரளவில்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். "அர்த்தமுள்ள இந்து மதம்" என்னை மதவெறியனாக ஆக்கியது என்று சொல்ல வரவில்லை, என்னை மனிதாபிமானமிக்க இந்துவாகப் பரிணமிக்க வைத்தது என்றே சொல்லுவேன். மனிதனுக்கு மதம் ஒரு அணிகலனே தவிர ஆடையில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நெளிவு, சுளிவுகளையும் புரிந்து வைத்துக் கொண்ட நம் கவியரசு அதை அழகாய்த் திரைப்படப்பாடல்களிலும் கட்டுரைகளிலும் வரைந்து நமது மனப் புண்களுக்கு மருந்திட்டார். அவரது அனுபவம் எனும் பட்டறையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டதால்தான் கருத்தெனும் ஆயுதம் கூர்மையாக வாசிக்கும் உள்ளங்களில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

இங்கே அவரது வாழ்வைத் தொட்ட துயரத்தின் சாயலைக் கொண்டு ஒரு திரைப்படத்தில் அவர் படைத்த பாடலோடு தொடர்புடைய சம்பவம் ஒன்றைப் பார்ப்போம்.

மீண்ட சொர்க்கத்தில் ஆரம்பித்துக் கவியரசுக்கும், டைரக்டர் ஸ்ரீதருக்கும் இடையிலான நட்பு இறுதிவரை தொடர்ந்ததென்றே கூற வேண்டும். "சுமைதாங்கி" எனும் படத்தைக் கவியரசர் தயாரிக்க, டைரக்டர் ஸ்ரீதர் இயக்கினார்.

இந்தப் படத்தின் கதாநாயகனாகக் காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்திருந்தார். அதிலே ஒரு காட்சியில், ஜெமினி கணேசன் கடற்கரையோரத்தில் ஒரு பாடல் பாடுவது போன்ற காட்சி, அதற்கான பாடல்
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்".
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:30 pm

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் தான் கவியரசர் முதன்முதலில் சென்னைக்கு கையில் ஒரு பைசா கூட இல்லாமல் வந்த போது நின்ற இடமாம். அப்போது அங்கே தூங்கக்கூடாது என்றுகூட அவரை ஒரு போலிஸ்காரர் விரட்டியிருக்கிறாராம்.. இந்தப் பாடல் அந்த இடத்திலேதான் படமாக்கப்பட வேண்டும் என்பதில் கவியரசர் மிகுந்த பிடிவாதமாக இருந்தாராம். அது மட்டுமல்ல அந்தக் காட்சி படமாக்கப்படும் நேரத்திலே, ஸ்டூடியோ விளக்குகளை உபயோகிப்பதற்குப் பதிலாக, தனது எட்டு அம்பாஸிடர் கார்களின் விளக்குகளை கதாநாயகன் மேல் விழப்பண்ணி அந்தக் காட்சியைப் படமாக்கினாராம்.

இதற்குத் தனது கார்களை உபயோகித்தது தனது பெருமையைப் பறை சாற்ற அல்ல, ஒருவன் தனது சொந்தத் திறமையை உபயோகித்து, எட்டுக் கார்கள் வைத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு உயரமுடியும் என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதற்காகவே.

இங்கே நான் இதை குறிப்பிடுவதற்குக் காரணம் கவியரசரின் உள்ளத்தில் காலமகள் ஏற்படுத்திய வடுக்களை அவர் எப்படி அனுபவப் பாடங்களாகக் கொண்டார் எனபதை எடுத்துக்காட்டவேயாகும்.

கவியரசர் தொட்டது என்னைப் போன்ற சாதாரண ரசிகர்களின் மனத்தை மட்டுமல்ல, கலையுலகச் சிகரங்களின் உச்சியில் வீற்றிருந்தோரின் மனத்தில் அவர் வகித்த இடம் மகத்தானது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, 1984ம் ஆண்டளவில் நடிப்புச் செம்மல் கமல், செவாலியே சிவாஜி கணேசனுடன் சேர்ந்தளித்த ஒரு பேட்டியின் போது, பாலும் பழமும் படத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘போனால் போகட்டும் போடா’ எனும் பாடல் காட்சியில் அவர் நடிப்பைப் புகழ்ந்து பாராட்டினார். அதற்கு நடிகர் திலகமோ அந்தப் பாடலின் சிறப்பு தனது நடிப்பினால் அல்ல மறைந்த கவியரசரின் பாடல் வரிகளும், அதன் பொருளுமே என்று கூறி "எமக்கெல்லாம் தத்துவம் சொன்னவர் கவிஞர், இப்போ அவரே தத்துவமாகி விட்டார்" என்று கூறி தனது கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகளைச் சுண்டி விட்டாராம்.

கவியரசரின் தத்துவம், அதை நன்றாய்ப் பயன்படுத்திய வகை, அவருடைய கருத்துக்களின் ஆழம் அளக்க முடியாதவை. அவருக்கும் எழுத்து "க" விற்கும் உள்ள தொடர்பும் நெருக்கமானதே! எப்படி என்கிறீர்களா?

"க"ண்ணதாசன், அவருடைய முதலாவது பாடல் 'கன்னியின் காதலி' எனும் படத்தில் இடம்பெற்ற "க"லங்காதிரு மனமே! கடைசியாகக் கவிஞர் எழுதிய பாடல் மூன்றாம் பிறை எனும் படத்தில் இடம்பெற்ற "க"ண்ணே கலைமானே ஆகும்.

இப்படிக் "க" வோடு தொடங்கி முடிந்த திரைப்படப் பாடல்களின் நாயகன், "க"விதை உலகிலும், "க"ட்டுரை உலகிலும் கோலோச்சியவன் "க"டைசிவரை என் போன்ற ரசிகர்களின் மனத்தை ஆட்சி செய்வான் என்பது அசைக்கமுடியாத உண்மை.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:30 pm

எங்கே தொடங்கப் போகிறேன்? எங்கே முடிக்கப் போகிறேன்? என் கண்முன்னே நான் கண்டு வாசித்து அறிந்த கவியரசரைப் பற்றி எழுதுவதற்கான முயற்சியே எனது கைகளில் இல்லை எனும் ஒரு நிலை இருக்கும் போது, எப்படி இந்த வாழ்க்கையை மட்டும் நான் எனது எண்ணப்படிதான் வாழுகிறேன் என்று எண்ண முடியும்? இதையேதான் கவியரசர் தனது பல படைப்புக்களில், பாடல்களில்,கட்டுரைகளில் தெளிவாக, அழகாக விளக்கியிருக்கிறார்.

ஒரு மனிதன் அறிவுரை கூறும்போது, "மது அருந்தாதே" என்று கூறுகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவனது சொந்த வாழ்க்கையில் அந்த மனிதன் ஒரு நாளுமே மதுவைத் தீண்டியது கூட இல்லையானால் "என்ன, இவன் தான் அறியாத இன்பத்தை, எம்மை அடைய விடாது தடுக்கிறானே" என்று சிலர் ஆதங்கப்படுவார்கள் ("மது அருந்துவது இன்பமானது" என்று நான் கூறுகிறேன் என்று வாசகர்கள் தவறாகப் பொருள் கொள்ளாதீர்கள்). அதே மனிதன் முன்பு நன்றாக மது அருந்திக் களித்தவன் இப்போ தனது பழக்கத்தை மாற்ற்¢க் கொண்டு அறிவுரை கூறுகின்றானானால் "தான் மட்டும் அனுபவிக்கும் வரை அனுபவித்து விட்டு இப்போ எங்களைத் தடுக்க வந்து விட்டான்" என்று ஒரு சாரார் விசனப்படலாம்.

ஆனால் எமது கவியரசரோ, "நான் இப்படி நடந்தேன், இவ்வாறு இருந்தேன்" என்று தனது தவறான பழக்க வழக்கங்களை ஒளிவு மறைவின்றி நம்மோடு பகிர்ந்து, தன்னையே அதற்கு உதாரணமாய் எடுத்துக் கொண்டு நம்மை நல்வழிப் படுத்த முயற்சி எடுத்துள்ளார். அதனால்தான் அவரது எழுத்து வெற்றியடைந்தது. அர்த்தமுள்ள இந்துமதம் கூட அன்றாட வாழ்க்கை முறைகளுடன், மதத்தின் வழிமுறைகளைப் பிணைத்துக் காட்டியதே தவிர, நம்மால் புரிந்து கொள்ளாதபடி மதத் தத்துவங்களை அள்ளி வீசவில்லை.

இத்தகைய கவியரசரின் வாழ்க்கையிலே அவர் மது, மங்கை என்று தனது வாழ்நாளைக் கழித்தபோது சில கவிதைகள் எழுதியிருந்தார். அப்படியான கவிதைகள் சிலவற்றை இங்கே எடுத்துப் பார்க்க விழைகிறேன்.

அதற்கு முன்னால் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு "

இனி மேலே குறிப்பிட்டவாறு அவரது கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மதுவை ஓர் கையில் வைத்து
மங்கையோர் புறத்தே வைத்தால்
எதுவரை உலகம் போகும்
எங்கெங்கோ போகும், நானும்
அதுவரை போவேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:30 pm

இந்தக் கவிதையின் கருத்தை உற்று நோக்கினால் கவிஞரின் அன்றைய வாழ்க்கை முறையை நன்றாக எடுத்துக் காட்டுகிறது. சாதாரண மனித மன ஆசை எனும் நதியினில் நீச்சலடித்து விட்டுத்தான் அந்தப் பயணத்தின் சிரமம் பற்றி நமக்கெல்லாம் எடுத்துரைத்திருக்கிறார், நம் கவிஞர்.

இது ஏதோ பெரிய சாதனை என்று நான் சொல்லுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கவிஞனின் வாயிலிருந்து, அந்தந்தக் காட்சிகளுக்கேற்றவாறு வெற்றிப்பாடல்கள் வந்து விழுவதன் பின்னணி, இவைகளைப் பற்றி அறிந்திருப்பதால் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
இதே வரிசையில் இன்னுமொரு கவிதையைப் பார்ப்போம் !

காதலை, மதுவை, இன்பக்
காட்சியை வென்றேனென்று
ஓதுவோர் எவரும் இந்த
உலகிற்குத் தேவையில்லை

கவிஞர் தனது கருத்துக்களோடு பின்னொரு காலத்தில் தானே முரண்பட்டு நின்றார் அவரே தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் கவிஞரிடம் நான் ரசித்த உயர்ந்த குணங்களில் ஒன்று. மேலே குறிப்பிட்ட கவிதையின் கருத்தைப் பார்த்தீர்களானால், கவிஞரே யார் உலகிற்குத் தேவையில்லை என்று கூறினாரோ அதே மனிதனாகத் தானே மாறியிருந்திருக்கிறார்.

மனத்தினில் ஒருகாலத்தில் ஒரு செயலைப்பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருந்தோமேயானால், பின்னால் நமது எண்ணம் பிழையானது என்றறிந்து அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் நம்மில் எல்லோருக்கும் வந்து விடாது. அதை அடைந்து விட்டால் நாம் மனிதத்துவம் எனும் பரீட்சையில் தேறி விட்டோம் என்றே பொருள். அந்த வரிசையில் கவித்தலைவர் தன்னுடைய மனிதத்துவத்தை நிலைநாட்டி விட்டார் என்றே கூற வேண்டும்.

இங்கே நாம் எடுத்துப் பார்த்தது கவிஞரின் மற்றொரு பக்கம், அதுதான் அவரது ஆன்மீகக் கதவைத் திறந்த சாவியாகும். கண்ணதாசனின் பக்கங்களைப் புரட்டும்போது நாம் இந்தப் பக்கங்களையும் பார்க்கத்தான் வேண்டும், அதைத்தான் அவரும் விரும்பினார் ஏனென்றால் அவர் வாழ்க்கையில் மற்றவர்களிடம் அர்த்தத்தைத் தேடவில்லை, தன்னிடமே தேடினார்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by RAJABTHEEN Fri Apr 01, 2011 9:30 pm

மனக்கேணியில் மேலும் மேலும் ஊறிக்கொண்டேயிருக்கிறது. இம்முறை அவரைப்பற்றிய ஆக்கத்தை வித்தியாசமான முறையில் பார்ப்போம். கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கி அவரது சில பாடல்களையும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு இணைத்துப் பார்ப்போம் என்றொரு ஆசை. எங்கே போவாமா கனவுலகம்?

இங்கே நமது காதாபாத்திரமாக ராம் என்றொரு 24 வயது இளைஞனை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். வசதியான குடும்பத்தில் பிறந்த அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை.

கேட்டதெல்லாம் கிடைத்துத் தனது வாழ்க்கையில் எந்தப் பொறுப்பையும் உணராத ராம் மதுவிலும் மங்கையிலும் தனது நேரத்தைக் கழிக்கிறான். என்ன ராம் பாடுகின்றானா?

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு

உல்லாசமாய் தனது வாழ்க்கையை கழித்த ராம் தற்செயலாக எளிமையே உருவான பாந்தமான அழகுடைய உமாவைப் பார்த்து விடுகிறான். கேட்க வேண்டுமா?

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கும் அவன் தந்தை உமாவை மட்டும் வாங்கித் தரமாட்டாரா என்ன? பின்னென்ன பெண் பார்க்கும் படலம். பணத்திற்கு முன் உமாவின் ஏழைத் தந்தை மனத்தையா பார்க்கப் போகிறார்? பெண்களுக்கே உரிய அந்த மெளனம் (இங்கே ஏழ்மையால் பிறந்தது) என்ற சம்மத்துடன் உமா மிஸஸ். ராம் ஆகிறாள். என்ன ஊமை ராகமோ?

யாருக்கு யாரென எழுதியவன் - என்னை
அவனுக்குத் தானென எழுதி விட்டான்

குடிகாரக் கணவன் வாழ்க்கையில் கண்டிப்பில்லாமையால் தான் இப்படியோ உமா யாரைக் கேட்கிறாள்?

கலைமகள் கைப்பொருளோ? - அதை
மீட்டவும் விரலில்லையோ?

விஸ்கி போத்தலை நடுவீட்டில் உடைக்கிறாள் தானா? மதுவா? கெடுவைக்கிறாள். எங்கே ஓடுகிறான் ராம்? ஓ ! பாடுகிறானோ

நாளைமுதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம் சபதம் போட்டு விட்டான்.

இனிமையான தாம்பத்தியம் தொடங்குகிறது தந்தையின் வியாபாரத்தைப் பொறுப்பேற்கிறான் ராம்.

தேனிருக்கும் மலரினிலே
நீ இருக்கச் சம்மதமா?
பாலிருக்கும் கனிகளிலே
பழகிவரச் சம்மதமா?
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கண்ணதாசன் எனும் காவியம் Empty Re: கண்ணதாசன் எனும் காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum