தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

+16
கலைநிலா
அ.இராமநாதன்
tamizhmuhil
yarlpavanan
கவியருவி ம. ரமேஷ்
நிலாமதி
சதாசிவம்
ramaswamy
கலைவேந்தன்
rameshalam
vinitha
ஹிஷாலீ
தமிழ்1981
ருக்மணி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
dhilipdsp
20 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 20, 2012 7:17 am

நட்பு அந்தாதியைத் தொடங்குவதில் தோட்டம் மகிழ்கிறது.

ஏற்கெனவே தோட்டத்தில் காதல் அந்தாதி, அம்மா அந்தாதியை முறையே புத்தகமாக 120, 100 பக்கங்கள் எழுதி முடித்த பெரும் பங்கும் சிறப்பும் நம் தோட்டக் கவிஞர்களுக்கு உண்டு. அந்த அந்தாதிகள் முற்றுபெற்றதுபோல இந்த அந்தாதியையும் நம் கவிஞர்களும் வரவிருக்கும் கவிஞர்களும் சிறப்பாக எழுதி முடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேற்கண்ட அந்தாதிகள் புத்தகமாகத் தொகுக்கும் முயற்சியில் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் செம்மை பெறும். புத்தகமாக வெளிவரும். பங்கேற்ற கவிஞர்களுக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த நட்பு அந்தாதியையும் எளிமையாக முடித்துவைப்பீர்கள் என்றே நினைக்கிறோம்.

நட்பு அந்தாதியில் காதலைச் சேர்க்க வேண்டாம். காதல் என்ற வார்த்தை இடம் பெறலாம். அந்தக் கவிதைகளில் காதலின் கருப்பொருள் இருக்கக்கூடாது. நட்பையே முன்னிலைப் படுத்தவேண்டும்.

எத்தனை வகை நட்பு இருக்கிறதோ அத்துணை வகை நட்பையும் நாம் கவிதையாக்கலாம். நட்பில் துரோகங்கள் காணப்படுகிறதையும் கவிதையாக்கலாம். எல்லாம் கற்பனை என்று இல்லாத அளவுக்கு கற்பனை கலந்து கவிதையை செம்மையாகவும் நேர்த்தியாகவும் படையுங்கள்.

ஒவ்வொரு கவிதையும் 10 வரிகளுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். தமிழ் எழுதும் கவிதைகள் 20 வரிகளைத் தொட்டுவிடுகிறது. இத்தனை வரிகள் எழுதியே ஆக வேண்டும் எனில் கட்டுப்பாடு இல்லை.

கவிதையை கவிதையாகவே பார்க்க வேண்டும். ஆண் பெண் நட்பு, ஆண் ஆண் நட்பு, பெண் பெண் நட்பு, தாய் தந்தை பிள்ளைகளின் நட்பு, குழந்தைகளின் நட்பு... இப்படி நட்புதான் அந்தாதியின் கருப்பொருள்...

தொடர்க... வழக்கம் போல் அந்தாதிக் கவிதைகளில் கருத்துரைகளைத் தவிர்க்கச் சொன்னோம். இந்த அந்தாதியில் கருத்துரைகள் வரவேற்கப்படுகிறது. சிறந்த கருத்துரைகள் புத்தக ஆக்கத்தின் போது அந்தந்த கவிதைகளுக்குக் கீழாகவே எழுதியவரின் பெயரோடே சேர்த்து வெளியிடப்படும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp Fri Jul 20, 2012 9:26 am

அன்பை தர
ஆண்டவனால்
முடியவில்லை
என் நண்பனை
தந்து விட்டான் ............
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jul 20, 2012 10:55 am

//சிறந்த கருத்துரைகள் புத்தக ஆக்கத்தின் போது அந்தந்த கவிதைகளுக்குக் கீழாகவே எழுதியவரின் பெயரோடே சேர்த்து வெளியிடப்படும்.//

பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ருக்மணி Fri Jul 20, 2012 11:07 am

தந்து விட்டான் உன்னை
அன்னை என்னுடன்
பள்ளிக்கு பாடம்
கற்க வர முடியாதென்று!!!
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp Fri Jul 20, 2012 12:47 pm

முடியாதென்று!!
நினைத்துதான்
எனக்காக போராடுகிறாய்
நண்பா,
நீ என்னுடன்
இருக்கும்போது என்னால்
முடியாதது எதுவும் உள்ளதோ ................
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Fri Jul 20, 2012 6:08 pm

எதுவும் உள்ளதோ என்னிடம்
இல்லையில்லை
எதுவும் இல்லை என்னிடம்
உன்னிடம் பகிராத‌
சோகங்கள் என்னில்
எதுவுமில்லை என்னில்...
நண்பா என்றழைத்து
நட்பை பகிர்ந்தேன்....
அன்பை பகிர்ந்தேன்.....
சோகத்தையும் பகிர்ந்தேன்
நட்பில் என்னில்
ஆறுதலாய் இருந்தாய்
என் அழுகையினை
துடைத்திடும் முதல்கரம்
உன்னுடையது நட்பே......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Fri Jul 20, 2012 6:09 pm

கவியருவி அவர்களே முடிந்தவரைக்கும் இனி வரிகளைச் சுருக்கி எழுத‌ முயல்கின்றேன் நண்பரே......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 20, 2012 10:21 pm

தமிழ்1981 wrote:கவியருவி அவர்களே முடிந்தவரைக்கும் இனி வரிகளைச் சுருக்கி எழுத‌ முயல்கின்றேன் நண்பரே......
அதற்காக வலிந்து குறைக்க வேண்டாம். கவிதைதான் முக்கியம்... வரிகள் பொருட்டல்ல... குறுகி இருந்தால் அழகாக இருக்கும் என்பது என் கருத்து அவ்வளவுதான்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by dhilipdsp Sat Jul 21, 2012 9:48 am

நட்பே!
எங்கு பிறந்தாய்
என்று தெரியாது
என்றும் இறப்பரியா
பிறப்பு நீ
உலக அசிசயம்
உன்னை மட்டும்
அனைத்து உயிர்களும்
ஏற்று கொண்டன ,,,
மதங்களை தடுத்து
சாதிகளை தாண்டி
சமத்துவம் தந்த
சாமியும் நீ தான் ...............................
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 21, 2012 11:01 am

நீதான் என் புன்னனையின்
ஆனந்தக் கண்ணீராக இருந்தாய்.
இருக்கிறாய்...
சிரித்தலிலும் அழுகையிலும்
ஒன்றாகவே பயணப்படுகிறோம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ஹிஷாலீ Sat Jul 21, 2012 12:44 pm

ஒன்றாகவே பயணப்படுகிறோம்
இறந்த பின்பும்
வாழும் விழிகள் போலவே
வலிகள் தாங்கிய புத்தகத்தில்
வரலாறு படைக்கும்
நட்பு பூக்கலாய்...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Sat Jul 21, 2012 2:31 pm

நட்பு பூக்களாய்
மணம் வீசுவோம்
கவிதை மழையினை
பொழியச் செய்திடுவோம்
நம் தமிழ் தோட்டத்தில்
கவிதை மழையினில்
நம் செந்தமிழ்
மண்ணின் மணமாய்
மணம் வீசட்டும்.......
தோட்டத்தில் என்றும்
அன்பில் வளர்ந்த‌
பூக்களாய் வளரட்டும் நட்பு........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ஹிஷாலீ Sat Jul 21, 2012 5:26 pm

வளரட்டும் நட்பு...
வாழையடி வாழையாக
ஏழை எளியவருக்கும்
ஓலை அனுப்பி
ஓர் வாய் சோறு போட...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by vinitha Sat Jul 21, 2012 5:48 pm

ஓர் வாய் சோறு போட
தேவை அன்பால் ஆன நட்பு
நட்பு என்ற வெள்ளத்தில் மூழ்கினால்
எழும்போது நட்பு எமக்கு கை கொடுக்கும்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Sat Jul 21, 2012 6:07 pm

கை கொடுக்கும்
நாம் துயரிலிருந்தால்
கை கொடுக்கும் நட்பு
நான் அழுகையிலிருந்தால்
கண்ணீரை துடைக்கும் நட்பு
நான் தனிமையிலிருந்தால்
துணையாய் வரும் நட்பு
நான் நிராதரவாயிருந்தால்
ஆதரவாய் வரும் நட்பு..........
ஆண்னென்ன‌ பெண்ணென்ன‌
நட்பில் எல்லாம் ஒன்றே
அன்பு வாழும் நட்பு
என்றும் மாறாததே நட்பு....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 21, 2012 6:20 pm

நட்பில்
ஆயிரம் உறவுகள் உருவாகின்றன.
சங்கிலித் தொடர்போல
பிணைத்திருக்க வைக்கிறது.
ஒரு நண்பன்
நண்பனாகும்போது
அந்த நண்பனின் நண்பன்
நம் நண்பனாகிவிடும் அதிசயம்
நட்பில் மட்டும்தான் வாய்த்திருக்கிறது.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sat Jul 21, 2012 6:37 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Sat Jul 21, 2012 6:26 pm

நட்பில் மட்டும் தான் வாய்த்திருக்கிறது
ஆம் நண்பனின் நண்பனையும்
தோழியின் தோழியையும்
நட்பில் அறிமுகப் படுத்தும் போது
எவ்வித‌ சலனமும்
எவ்வித‌ பொறாமையும்
இல்லாத‌ அன்பு
நட்பில் மட்டுமே
வாய்த்திருக்கின்றது.....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by rameshalam Sat Jul 21, 2012 6:35 pm

வாய்த்திருக்கிறது என்றென்றும் -
எந்த மொழியும்
எழுத இயலாக் கவிதை என
ஒன்றை நான்காக்கி...
நான்கை அதன் மடங்காக்கும்
கடவுளின் கணிதம் அது - நட்பு.
”மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது”
என்னும் கார்ல்-மார்க்ஸ்
தோற்கும் தத்துவம் அது.
உடுக்கை இழந்தவன்
இடுக்கண் களைந்து
இணைந்த உயிர்களின்
ஆயுள்ரேகை .....
ஒற்றையடிப் பாதையில்
பயணிக்கும் பாதை அது.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 58
Location : mayiladuthurai

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 21, 2012 6:45 pm

நண்பர் rameshalamஅவர்களின் கவனத்திற்கு...

நாம் இந்த இழையில் எழுதுவது அந்தாதி...

எனவே கவிஞர்கள் முடிக்கும் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியைத் தொடக்கமாகக் கொண்டுதான் நாம் நம் கவிதை வரியை - முதல் வரியைத் தொடங்க வேண்டும்.

உங்களுக்கு முந்தைய கவிஞர் வாய்த்திருக்கின்றது..... என்று முடித்திருப்பதால் நீங்களும் வாய்த்திருக்கிறது - என்பதைப் போன்ற வார்த்தையைத்தான் முதல் வார்த்தையாக அமைத்து எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னரே தோட்டத்தில் காதல் அந்தாதி [You must be registered and logged in to see this link.]
அம்மா அந்தாதி [You must be registered and logged in to see this link.]
முடித்துள்ளோம். பார்க்கவும். நன்றி.

நான் உங்கள் அந்தக் கவிதையை அந்தாதியாக மாற்றியுள்ளேன். என்னுடைய மாற்றம் சரியில்லை என்றால் நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்1981 Sat Jul 21, 2012 7:08 pm

ஒற்றையடிப் பாதையில்
பயணிக்கும் பாதை அது
இனம் ஜாதி மதம்
வேறுபட்டாலும்
நட்பு என்ற‌ ஒரே பாதையில்
செல்லும் அன்பு.....
நட்பில் மட்டுமே
மொழிகள் வேறுபட்டாலும்
தேசங்கள் வேறாயிருந்தாலும்
நட்பு உள்ளங்களை
மனிதங்களை இணைக்கும்
என்றும் வாடாத‌ பூ
அது என்றும் நட்பூ
காதலில் ஒருதலையாக‌
விரும்பலாம் ஆனால்
நட்பில் ஆகாது
ஈரடி குறள் போல‌
இரு உள்ளங்கள் விரும்பினால்
மலர்ந்து வளர்வது
நட்பு மட்டுமே...
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by rameshalam Sat Jul 21, 2012 7:13 pm

மாற்றி இருப்பது அழகாக இருக்கிறது ரமேஷ். அதில் திருத்தம்
தேவை இல்லை.
நான் எழுதத் துவங்கியது...தமிழ் முடித்திருந்த “என்றும் மாறாததே
நட்பு”...ஐத் துவக்கமாக வைத்து. நான் எழுதி முடிப்பதற்குத்
தாமதமாகி விட்டது. அதனால்தான் இது போல் நேர்ந்து விட்டது.
என்றாலும் உங்களின் திருத்தம்...பொருத்தமாகவும்...அழகாகவும்
இருக்கிறது. உங்களுக்கு எனது நன்றிகள்.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 58
Location : mayiladuthurai

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 21, 2012 7:23 pm

விளக்கத்துக்கு மகிழ்ச்சி நண்பரே...

இவ்வாறு சில சமயம் - பல சமயம் பல கவிஞர்கள் தோட்டத்தில் இருக்கும்போது இயற்கையாக ஏற்பதுவதுதான். ஏற்கெனவே முடிந்த இரு அந்தாதியிலும் இந்த நிலை ஏற்பட்டது.

நாம் ஒருவர் முடித்ததைக் கொண்டு தொடங்கி கவிதை எழுதி முடிப்பதற்குள் வேறு கவிஞர் எழுதி பதிவு செய்துவிட்டிருந்தால்... நாம்தான் நம் கவிதையைத் திருத்தியோ மாற்றியோ தொடக்கமாக வரும் வார்த்தையை மாற்றி கவிதை படைத்துப் பதிய வேண்டும்.

இவ்வாறு ஏற்படுவதற்கு நாம் யாரும் மனம் தளர்ந்து சலித்துக்கொள்ளக்கூடாது என்றும் தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by rameshalam Sat Jul 21, 2012 7:29 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:விளக்கத்துக்கு மகிழ்ச்சி நண்பரே...

இவ்வாறு சில சமயம் - பல சமயம் பல கவிஞர்கள் தோட்டத்தில் இருக்கும்போது இயற்கையாக ஏற்பதுவதுதான். ஏற்கெனவே முடிந்த இரு அந்தாதியிலும் இந்த நிலை ஏற்பட்டது.

நாம் ஒருவர் முடித்ததைக் கொண்டு தொடங்கி கவிதை எழுதி முடிப்பதற்குள் வேறு கவிஞர் எழுதி பதிவு செய்துவிட்டிருந்தால்... நாம்தான் நம் கவிதையைத் திருத்தியோ மாற்றியோ தொடக்கமாக வரும் வார்த்தையை மாற்றி கவிதை படைத்துப் பதிய வேண்டும்.

இவ்வாறு ஏற்படுவதற்கு நாம் யாரும் மனம் தளர்ந்து சலித்துக்கொள்ளக்கூடாது என்றும் தோட்டம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

உண்மைதான் ரமேஷ். நீங்கள் சொல்வதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.
rameshalam
rameshalam
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 54
Points : 74
Join date : 20/07/2012
Age : 58
Location : mayiladuthurai

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jul 21, 2012 7:42 pm

நட்பு மட்டுமே
பகைவனானவனைத் திரும்பவும்
உண்மையான
நண்பனாக ஏற்றுக்கொள்கிறது.
மற்ற உறவுகள்
பகை மறந்ததாக நடிக்கிறது!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைவேந்தன் Sun Jul 22, 2012 8:29 am

நடிக்கிறது நட்பு..
ஆம்.. துயரின் போது துவளாமல் இருக்க
நாம் துவண்டால் நண்பன் கலங்காமல் இருக்க
நண்பனின் கலக்கம்
மேலும் துயர் தராமல் இருக்க
நடிக்கத்தான் செய்கிறது..
இமயமளவு வலிகளிலும்
இமைகூட அசைக்காமல்
நடிக்கத்தான் செய்கிறது..
இணைமான் நீரருந்த
துணைமான் நடித்ததுபோல்
நல்ல நட்பு
நடிக்கத்தான் செய்கிறது..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் Empty Re: நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» புதியதாக நட்பு அந்தாதி தொடரலாமா? கருத்துரைக்கவும்.
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum