தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
Page 1 of 1
வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு காது கேட்காது!
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு
சிறு வயதிலிருந்தே காது கேட்காது.
ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் எவ்வளவு தெரியுமா?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு அவர்
சொந்தக்காரர்.
அவர் நினைத்திருந்தால் காது கேட்க ஒரு கருவியையும் கண்டு
பிடித்திருக்கலாம்.
ஆனால், அவர் செய்யவில்லை, ஏன் என்று கேட்டவர்களுக்கு
அவருடைய பதில்:
""என்னிடம் வந்து பேசுபவர்கள், எனக்குப் புரிய வேண்டும்
என்பதற்காக மிக உரக்கக் கத்திப் பேசவேண்டிய நிலைமை
ஏற்படும். இப்படி உரக்கப் பேசுபவர்களால் பொய் சொல்ல
முடியாது தெரியுமா?'' என்பாராம் சிரித்தபடியே!
எவ்வளவு பெரிய மனோதத்துவ உண்மை!
-
-----------------------------------
-ஆர்.பாலாஜிராஜா, திருநெல்வேலி.
dinamani
பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு
சிறு வயதிலிருந்தே காது கேட்காது.
ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் எவ்வளவு தெரியுமா?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு அவர்
சொந்தக்காரர்.
அவர் நினைத்திருந்தால் காது கேட்க ஒரு கருவியையும் கண்டு
பிடித்திருக்கலாம்.
ஆனால், அவர் செய்யவில்லை, ஏன் என்று கேட்டவர்களுக்கு
அவருடைய பதில்:
""என்னிடம் வந்து பேசுபவர்கள், எனக்குப் புரிய வேண்டும்
என்பதற்காக மிக உரக்கக் கத்திப் பேசவேண்டிய நிலைமை
ஏற்படும். இப்படி உரக்கப் பேசுபவர்களால் பொய் சொல்ல
முடியாது தெரியுமா?'' என்பாராம் சிரித்தபடியே!
எவ்வளவு பெரிய மனோதத்துவ உண்மை!
-
-----------------------------------
-ஆர்.பாலாஜிராஜா, திருநெல்வேலி.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
சுவாமி விவேகானந்தருக்கு அவருடைய பெற்றோர்
சூட்டிய பெயர் நரேந்திரன். பள்ளியில் நரேந்திரன்
படித்துக் கொண்டிருந்தபோது, ஒருசமயம், ஆசிரியர்
அவனைப் பார்த்துக் கேள்வி ஒன்றைக் கேட்டார்.
அதற்கு நரேந்திரன் பதில் சொன்னான்.
அவன் சொன்ன பதில் தவறு என்று ஆசிரியர்
சொன்னார்.
"இல்லை, அய்யா... இதுதான் சரியான விடை'
என்று நரேந்திரன் சொன்னான். ஆசிரியர் கோபப்பட்டு,
"தவறான விடையைச் சொன்னதோடு அல்லாமல்,
இதுதான் சரியான விடை என்று கூறுகிறாயா?'' என்று
கேட்டு, அவனைப் பிரம்பால் அடித்தார்.
நரேந்திரன் மீண்டும் அதையே கூறினான்.
ஆசிரியருக்குக் கோபம் அதிகமாகி மீண்டும் பிரம்பால்
அடித்தார். நரேந்திரன் மீண்டும் தான் சொன்னதே
சரியான விடை என்று கூறினான்.
ஆசிரியருக்கு சந்தேகம் வந்தது. புத்தகத்தை எடுத்து
அவசர அவசரமாகப் புரட்டிப் பார்த்தார். நரேந்திரன்
சொன்ன விடைதான் சரியான விடை என்பதைத்
தெரிந்து கொண்டார்.
தலைகுனிந்து நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார். அவனுடைய மன உறுதியைப் பாராட்டவும்
அவர் தவறவில்லை!
-
-----------------------------
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
dinamani
சூட்டிய பெயர் நரேந்திரன். பள்ளியில் நரேந்திரன்
படித்துக் கொண்டிருந்தபோது, ஒருசமயம், ஆசிரியர்
அவனைப் பார்த்துக் கேள்வி ஒன்றைக் கேட்டார்.
அதற்கு நரேந்திரன் பதில் சொன்னான்.
அவன் சொன்ன பதில் தவறு என்று ஆசிரியர்
சொன்னார்.
"இல்லை, அய்யா... இதுதான் சரியான விடை'
என்று நரேந்திரன் சொன்னான். ஆசிரியர் கோபப்பட்டு,
"தவறான விடையைச் சொன்னதோடு அல்லாமல்,
இதுதான் சரியான விடை என்று கூறுகிறாயா?'' என்று
கேட்டு, அவனைப் பிரம்பால் அடித்தார்.
நரேந்திரன் மீண்டும் அதையே கூறினான்.
ஆசிரியருக்குக் கோபம் அதிகமாகி மீண்டும் பிரம்பால்
அடித்தார். நரேந்திரன் மீண்டும் தான் சொன்னதே
சரியான விடை என்று கூறினான்.
ஆசிரியருக்கு சந்தேகம் வந்தது. புத்தகத்தை எடுத்து
அவசர அவசரமாகப் புரட்டிப் பார்த்தார். நரேந்திரன்
சொன்ன விடைதான் சரியான விடை என்பதைத்
தெரிந்து கொண்டார்.
தலைகுனிந்து நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார். அவனுடைய மன உறுதியைப் பாராட்டவும்
அவர் தவறவில்லை!
-
-----------------------------
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
புத்திசாலித்தனம்!
சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பந்து பக்கத்திலிருந்த மரப் பொந்தில் போய் விழுந்தது.
என் பந்து எனக்கு வேண்டும் என்று பந்துக்குச்
சொந்தக்காரப் பையன் பிடிவாதம் பிடித்து அழ
ஆரம்பித்தான்.
பொந்துக்குள் பாம்போ, தேளோ இருக்கலாமென்று
எல்லோரும் பயந்தனர். கையை விட்டு எடுக்கமுடியாத
அளவுக்குப் பொந்தும் ஆழமாக இருந்தது!
அப்போது அந்த வழியே வந்த ஒரு சிறுவன் அழுது
கொண்டிருந்தவனை விசாரித்து நடந்ததை அறிந்தான்.
உடனே, இரண்டு பக்கெட் தண்ணீர் கொண்டு வரச்
சொல்லி, அந்தப் பொந்துக்குள் நீரை ஊற்றினான்.
பொந்துக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பித்ததும் பந்து
அதில் மிதந்து மேலே வந்தது. அழுது கொண்டிருந்த
பையன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.
பொந்துக்குள் தண்ணீர் ஊற்றிப் பந்தை,
புத்திசாலித்தனமாக எடுத்துக் கொடுத்த பையன் யார்
தெரியுமா?
பின்னாளில் பாரதப் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான்!
-
------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பந்து பக்கத்திலிருந்த மரப் பொந்தில் போய் விழுந்தது.
என் பந்து எனக்கு வேண்டும் என்று பந்துக்குச்
சொந்தக்காரப் பையன் பிடிவாதம் பிடித்து அழ
ஆரம்பித்தான்.
பொந்துக்குள் பாம்போ, தேளோ இருக்கலாமென்று
எல்லோரும் பயந்தனர். கையை விட்டு எடுக்கமுடியாத
அளவுக்குப் பொந்தும் ஆழமாக இருந்தது!
அப்போது அந்த வழியே வந்த ஒரு சிறுவன் அழுது
கொண்டிருந்தவனை விசாரித்து நடந்ததை அறிந்தான்.
உடனே, இரண்டு பக்கெட் தண்ணீர் கொண்டு வரச்
சொல்லி, அந்தப் பொந்துக்குள் நீரை ஊற்றினான்.
பொந்துக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பித்ததும் பந்து
அதில் மிதந்து மேலே வந்தது. அழுது கொண்டிருந்த
பையன் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.
பொந்துக்குள் தண்ணீர் ஊற்றிப் பந்தை,
புத்திசாலித்தனமாக எடுத்துக் கொடுத்த பையன் யார்
தெரியுமா?
பின்னாளில் பாரதப் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான்!
-
------------------------
-மல்லிகா அன்பழகன், சென்னை.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
நல்ல பழக்கம்!
இங்கிலாந்தின் மன்னராக இருந்த ஏழாம் எட்வர்ட்
பேரக் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பேரன் ஆல்பர்ட், தாத்தாவிடம் ஏதோ
பேச வாய் எடுத்தான். அதற்கு ஏழாம் எட்வர்ட்,
""குழந்தாய், சாப்பிடும்போது பேசுவது நல்ல
பழக்கமல்ல; ஆகையால் சாப்பிட்டு முடிக்கும் வரை
பேசாதே!'' என்று சொல்லி அவன் வாயை அடக்கிவிட்டார்.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பிறகு, மன்னர் ஆல்பர்ட்டை
அழைத்து, ""நான் சாப்பிடும்போது ஏதோ சொல்ல வந்தாயே,
அதை இப்போது சொல்...'' என்றார்.
ஆல்பர்ட் முகத்தை வருத்தத்துடன் வைத்துக் கொண்டு,
"இப்பொழுது அதற்கு அவசியமில்லை!'' என்றான்.
"ஏன்?'' சக்கரவர்த்தி கேட்டார்.
"தாங்கள் சாப்பிடும்போது உங்கள் சாப்பாட்டில் ஒரு
பூச்சி இருந்தது. அதைத்தான் சொல்ல வந்தேன்.
ஆனால் தாங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்!
இப்போது அதைச் சொல்லி, என்ன பிரயோசனம்?
நீங்கள்தான் அதைச் சாப்பிட்டு விட்டீர்களே!'' என்றான்
ஆல்பர்ட்.
-
------------------------------
-முக்கிமலை நஞ்சன்
dinamani
இங்கிலாந்தின் மன்னராக இருந்த ஏழாம் எட்வர்ட்
பேரக் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பேரன் ஆல்பர்ட், தாத்தாவிடம் ஏதோ
பேச வாய் எடுத்தான். அதற்கு ஏழாம் எட்வர்ட்,
""குழந்தாய், சாப்பிடும்போது பேசுவது நல்ல
பழக்கமல்ல; ஆகையால் சாப்பிட்டு முடிக்கும் வரை
பேசாதே!'' என்று சொல்லி அவன் வாயை அடக்கிவிட்டார்.
எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பிறகு, மன்னர் ஆல்பர்ட்டை
அழைத்து, ""நான் சாப்பிடும்போது ஏதோ சொல்ல வந்தாயே,
அதை இப்போது சொல்...'' என்றார்.
ஆல்பர்ட் முகத்தை வருத்தத்துடன் வைத்துக் கொண்டு,
"இப்பொழுது அதற்கு அவசியமில்லை!'' என்றான்.
"ஏன்?'' சக்கரவர்த்தி கேட்டார்.
"தாங்கள் சாப்பிடும்போது உங்கள் சாப்பாட்டில் ஒரு
பூச்சி இருந்தது. அதைத்தான் சொல்ல வந்தேன்.
ஆனால் தாங்கள் என்னைப் பேசக்கூடாது என்று
தடுத்துவிட்டீர்கள்!
இப்போது அதைச் சொல்லி, என்ன பிரயோசனம்?
நீங்கள்தான் அதைச் சாப்பிட்டு விட்டீர்களே!'' என்றான்
ஆல்பர்ட்.
-
------------------------------
-முக்கிமலை நஞ்சன்
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
ஏன்?
ஒருமுறை இளைஞன் ஒருவன் ரசிகமணி டி.கே.சி.யின்
வீட்டுக்கு வந்தான். தான் கொண்டுவந்த பணம்
செலவாகிவிட்டதால் ஊருக்குச் செல்ல பணம் தேவை
என்று கேட்டான்.
அவன் பொய் சொல்கிறான் என அங்கே இருந்த
அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் டி.கே.சி. அந்த
இளைஞன் கேட்ட பணத்தைக் கொடுத்து அனுப்பினார்.
அங்கிருந்த அவருடைய நண்பர்களில் ஒருவர் டி.கே.சி.யிடம்,
""ஐயா, அந்த இளைஞன் பொய் சொல்கிறான் எனத்
தெரிகிறது. உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும்
அவனுக்கு நீங்கள் பணம் கொடுத்தனுப்புகிறீர்களே, ஏன்?''
என்று கேட்டார்.
அதற்கு டி.கே.சி. சிரித்துக் கொண்டே சொன்னார்,
"அவன் சொன்னது பொய் என்று எனக்கும் நன்றாகப்
புரிந்தது. பணம் கிடைக்கவில்லை எனில் அவன்
எல்லோரையும் தொல்லை செய்வான். இப்போது
அவன் யாரையும் தொல்லை செய்ய மாட்டான் அல்லவா?
அதற்காகத்தான் நான் பணம் கொடுத்தேன்!''
-
-------------------------------
-விசாகன், திருநெல்வேலி.
dinamani
ஒருமுறை இளைஞன் ஒருவன் ரசிகமணி டி.கே.சி.யின்
வீட்டுக்கு வந்தான். தான் கொண்டுவந்த பணம்
செலவாகிவிட்டதால் ஊருக்குச் செல்ல பணம் தேவை
என்று கேட்டான்.
அவன் பொய் சொல்கிறான் என அங்கே இருந்த
அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் டி.கே.சி. அந்த
இளைஞன் கேட்ட பணத்தைக் கொடுத்து அனுப்பினார்.
அங்கிருந்த அவருடைய நண்பர்களில் ஒருவர் டி.கே.சி.யிடம்,
""ஐயா, அந்த இளைஞன் பொய் சொல்கிறான் எனத்
தெரிகிறது. உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும்
அவனுக்கு நீங்கள் பணம் கொடுத்தனுப்புகிறீர்களே, ஏன்?''
என்று கேட்டார்.
அதற்கு டி.கே.சி. சிரித்துக் கொண்டே சொன்னார்,
"அவன் சொன்னது பொய் என்று எனக்கும் நன்றாகப்
புரிந்தது. பணம் கிடைக்கவில்லை எனில் அவன்
எல்லோரையும் தொல்லை செய்வான். இப்போது
அவன் யாரையும் தொல்லை செய்ய மாட்டான் அல்லவா?
அதற்காகத்தான் நான் பணம் கொடுத்தேன்!''
-
-------------------------------
-விசாகன், திருநெல்வேலி.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
குருபக்தி!
முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை,
மஸ்கட் மன்னர் தன் ஊருக்கு வரும்படி ஒருமுறை
அழைப்பு விடுத்திருந்தார். சர்மாவும் போனார்.
அங்கு சென்று இறங்கியதும், மன்னர் தனது காரில்
சங்கர் தயாள் சர்மாவை அமர வைத்து, தானே காரை
ஓட்டிக்கொண்டு சென்றார்.
பின்னர் சர்மா செல்லுமிடத்துக்கெல்லாம் மன்னரே
காரை ஓட்டிக்கொண்டு அழைத்துச் சென்றார்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மன்னரின்
உதவியாளர்களுக்கு இது பிடிக்கவில்லை.
அவரிடம் தனிமையில், ""நீங்களோ இந்த நாட்டின் மன்னர்,
நீங்கள் போய் ஒரு இந்திய குடியரசுத் தலைவருக்குக் கார்
ஓட்டிச் செல்கிறீர்களே?'' என்று கேட்டனர்.
அதற்கு மன்னர் பொறுமையாக, ""நான் இந்திய நாட்டு
குடியரசுத் தலைவர் என்ற முறையில் அவருக்குக் கார்
ஓட்டவில்லை. எனக்கு சின்ன வயதில் பாடம் கற்பித்த
ஆசிரியர் அவர்.
இது எனது ஆசிரியருக்கு நான் செலுத்தும் மரியாதை!''
என்றார்.
மன்னரின் குருபக்தியைக் கண்டு கேள்வி கேட்டவர்கள்
வியப்பில் ஆழ்ந்தனர்.
-
-----------------------------------------
-சுகந்தாராம், சென்னை.
dinamani
முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை,
மஸ்கட் மன்னர் தன் ஊருக்கு வரும்படி ஒருமுறை
அழைப்பு விடுத்திருந்தார். சர்மாவும் போனார்.
அங்கு சென்று இறங்கியதும், மன்னர் தனது காரில்
சங்கர் தயாள் சர்மாவை அமர வைத்து, தானே காரை
ஓட்டிக்கொண்டு சென்றார்.
பின்னர் சர்மா செல்லுமிடத்துக்கெல்லாம் மன்னரே
காரை ஓட்டிக்கொண்டு அழைத்துச் சென்றார்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த மன்னரின்
உதவியாளர்களுக்கு இது பிடிக்கவில்லை.
அவரிடம் தனிமையில், ""நீங்களோ இந்த நாட்டின் மன்னர்,
நீங்கள் போய் ஒரு இந்திய குடியரசுத் தலைவருக்குக் கார்
ஓட்டிச் செல்கிறீர்களே?'' என்று கேட்டனர்.
அதற்கு மன்னர் பொறுமையாக, ""நான் இந்திய நாட்டு
குடியரசுத் தலைவர் என்ற முறையில் அவருக்குக் கார்
ஓட்டவில்லை. எனக்கு சின்ன வயதில் பாடம் கற்பித்த
ஆசிரியர் அவர்.
இது எனது ஆசிரியருக்கு நான் செலுத்தும் மரியாதை!''
என்றார்.
மன்னரின் குருபக்தியைக் கண்டு கேள்வி கேட்டவர்கள்
வியப்பில் ஆழ்ந்தனர்.
-
-----------------------------------------
-சுகந்தாராம், சென்னை.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
மனசாட்சி!
சுதந்திரப் போராட்ட வீரரான ஈஸ்வர சந்திர வித்யாசாகரின்
நாணயம் மிக அலாதியானது. தனித்தன்மையானது.
அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், தம் சொந்த
வரவு செலவுக் கணக்குகளைப் பரிசோதனை செய்தார்.
அவரிடம் இருக்க வேண்டிய இருப்புத் தொகையை விடப்
பன்மடங்கு அதிகமான தொகை இருப்பில் இருந்தது.
ஒரு காலத்தில் தாம் பள்ளிக்கூட ஆய்வாளராகப்
பணியாற்றிய காலத்தில் அரசாங்கப் பணத்தைத் தவறுதலாக
வைத்துக் கொண்டுவிட்டோமோ என்ற சந்தேகம் அவருக்கு
ஏற்பட்டது.
உடனே அரசு கணக்கு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதி,
தம்மிடமுள்ள அதிகத் தொகையை அரசாங்கத்தின்
சார்பாகப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
இந்தப் பணம் எப்படி அரசாங்கத்துக்குப் பாக்கி என்பதை
கணக்கு அதிகாரி எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க
முடியவில்லை!
அவர் இந்த விஷயத்தை வித்யாசாகருக்குத் தெரியப்படுத்தினார்.
இருந்தாலும் அந்தப் பணத்தை அரசாங்கத்திடமே ஒப்படைத்த
பிறகுதான் வித்யாசாகர் மன அமைதி
-------------------------
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.
dinamani
சுதந்திரப் போராட்ட வீரரான ஈஸ்வர சந்திர வித்யாசாகரின்
நாணயம் மிக அலாதியானது. தனித்தன்மையானது.
அவர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன், தம் சொந்த
வரவு செலவுக் கணக்குகளைப் பரிசோதனை செய்தார்.
அவரிடம் இருக்க வேண்டிய இருப்புத் தொகையை விடப்
பன்மடங்கு அதிகமான தொகை இருப்பில் இருந்தது.
ஒரு காலத்தில் தாம் பள்ளிக்கூட ஆய்வாளராகப்
பணியாற்றிய காலத்தில் அரசாங்கப் பணத்தைத் தவறுதலாக
வைத்துக் கொண்டுவிட்டோமோ என்ற சந்தேகம் அவருக்கு
ஏற்பட்டது.
உடனே அரசு கணக்கு அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதி,
தம்மிடமுள்ள அதிகத் தொகையை அரசாங்கத்தின்
சார்பாகப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
இந்தப் பணம் எப்படி அரசாங்கத்துக்குப் பாக்கி என்பதை
கணக்கு அதிகாரி எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க
முடியவில்லை!
அவர் இந்த விஷயத்தை வித்யாசாகருக்குத் தெரியப்படுத்தினார்.
இருந்தாலும் அந்தப் பணத்தை அரசாங்கத்திடமே ஒப்படைத்த
பிறகுதான் வித்யாசாகர் மன அமைதி
-------------------------
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: வரலாறாய் வாழ்ந்தவர்கள் வாழ்வில் - தொடர் பதிவு
கணக்கு கணக்குதான்!
மகாத்மா காந்தி தான் செலவு செய்த ஒவ்வொரு
காலணாவுக்கும் கணக்கு வைத்திருந்தார்.
செலவு செய்வதைத் தீர யோசித்தே செய்வார்.
வண்டிக் கூலி, தபால் செலவு, பத்திரிகைகள் வாங்க
செலவிட்ட தொகை போன்ற சிறு செலவினங்களையும்
கூடக் கணக்கில் எழுதி வைப்பார். தினந்தோறும்
படுக்கைக்குப் போவதற்கு முன்னால் கணக்கைக் கூட்டிப்
பார்த்து மிச்சமிருக்கும் பணம் எவ்வளவு என்று குறித்து
வைத்துக் கொள்வார்.
இந்தப் பழக்கம் காந்தியிடம் இறுதிக்காலம் வரை
நிலைத்திருந்தது. இதனால் பொதுப்பணத்தை லட்சக்
கணக்கில் கையாள நேர்ந்தபோது, அதைச் செலவிடுவதில்
கண்டிப்பான சிக்கனத்தை அனுசரிக்க அவரால் முடிந்தது.
அவர் நடத்திய எல்லா இயக்கங்கள் தொடர்பாகவும்
வெளிக்கடன் எதுவும் இல்லாமல் எப்பொழுதும் கையில்
மிச்சத் தொகை வைத்திருப்பார்.
தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த இந்தக் கொள்கையை
இளைஞர்கள் பாடமாகக் கொண்டு தம்மிடம் வரும்
ஒவ்வொன்றுக்கும் செலவிடும் தொகை ஒவ்வொன்றுக்கும்
கணக்கு வைக்கவேண்டியதை ஒரு கடமையாகக் கொள்ள
வேண்டும் என்பார் காந்தி.
-
--------------------------------
-புலவர் கோ.தமிழரசன், செஞ்சி.
dinamani
மகாத்மா காந்தி தான் செலவு செய்த ஒவ்வொரு
காலணாவுக்கும் கணக்கு வைத்திருந்தார்.
செலவு செய்வதைத் தீர யோசித்தே செய்வார்.
வண்டிக் கூலி, தபால் செலவு, பத்திரிகைகள் வாங்க
செலவிட்ட தொகை போன்ற சிறு செலவினங்களையும்
கூடக் கணக்கில் எழுதி வைப்பார். தினந்தோறும்
படுக்கைக்குப் போவதற்கு முன்னால் கணக்கைக் கூட்டிப்
பார்த்து மிச்சமிருக்கும் பணம் எவ்வளவு என்று குறித்து
வைத்துக் கொள்வார்.
இந்தப் பழக்கம் காந்தியிடம் இறுதிக்காலம் வரை
நிலைத்திருந்தது. இதனால் பொதுப்பணத்தை லட்சக்
கணக்கில் கையாள நேர்ந்தபோது, அதைச் செலவிடுவதில்
கண்டிப்பான சிக்கனத்தை அனுசரிக்க அவரால் முடிந்தது.
அவர் நடத்திய எல்லா இயக்கங்கள் தொடர்பாகவும்
வெளிக்கடன் எதுவும் இல்லாமல் எப்பொழுதும் கையில்
மிச்சத் தொகை வைத்திருப்பார்.
தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த இந்தக் கொள்கையை
இளைஞர்கள் பாடமாகக் கொண்டு தம்மிடம் வரும்
ஒவ்வொன்றுக்கும் செலவிடும் தொகை ஒவ்வொன்றுக்கும்
கணக்கு வைக்கவேண்டியதை ஒரு கடமையாகக் கொள்ள
வேண்டும் என்பார் காந்தி.
-
--------------------------------
-புலவர் கோ.தமிழரசன், செஞ்சி.
dinamani
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Similar topics
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில் - தொடர் பதிவு
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில் - தொடர் பதிவு
» பிரபலங்கள் வாழ்வில் - தொடர் பதிவு- தொகுப்பு 1
» புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|