தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

+23
R.Eswaran
SAJEEK
சங்கவி
RAJABTHEEN
ருக்மணி
manisen37
அரசன்
தமிழ்1981
vinitha
வள்ளல்
yarlpavanan
நெல்லை அன்பன்
dhilipdsp
கலைநிலா
ஹிஷாலீ
Ramajayam
thaliranna
பார்த்திபன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ramaswamy
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
27 posters

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 11, 2012 9:16 am

First topic message reminder :

கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவது அந்தாதி எனப்படும். நாம் புதுக்கவிதையில் அந்தாதி எழுதுவோம். விருப்பமிருப்பவர்கள் தொடர்ந்து எத்தனை கவிதைகளை வேண்டுமானாலும் அந்தாதியாக எழுதலாம். ஒருவர் எழுதி முடித்த கடைசி அடியைக் கொண்டு அல்லது வார்த்தையைக் கொண்டு மற்றவர்கள் அவரவர் கவிதைகைளை எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் நீங்கள் முடித்த வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு அந்தாதிக் கவிதையை எழுதுகிறேன்.


நாம்
இணைந்திருப்பது
இது
ஏழாவது ஜென்மம்

ஏழு ஜென்மத்தில்

இணைந்திருந்தபோதும்
நம் காதல் வாழ்க்கை
கசக்கவில்லை

கசக்காதக்
காதல்தான்
வாழ்க்கையின் வெற்றி

வெற்றிப்
பெற்றக் காதலர்கள்
எல்லாம்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
நம் காதல்
கை கூடியதென்று

கை கூடாதக்
காதல்
துன்பம் நிறைந்தது என்றாலும்
பெருமைபட்டுக்கொள்ளலாம்
கடைசி வரை
ஒருவரையொருவர்
காதலிக்கலாமென

காதலிக்கலாமென

நாமாக முடிவெடுத்துக் கொண்டு
மற்றவரின் விருப்பமின்றி
காதலிக்கக்கூடாது

காதலிக்கக்கூடாது

என்பதல்ல இதன் பொருள்
ஒருவர்
உங்களுக்கு முன்னர்
வேறு யாரையாவது
காதலித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?

இல்லையிலும்
இருப்பதுதான்
காதல்

சிவப்பில் இருக்கும் முதல் அடியின் வார்த்தையை அடுத்த அடியின் தொடக்கமாக அமைத்திருப்பதற்கான அடையாளமாகத்தான் சிவப்பு வண்ணத்தில் வார்த்தையை கொடுத்திருக்கிறேன். சிலரின் அந்தாதி என்னும் கவிதையின் புரிதலுக்காக. இனி நீங்கள் காதல் என்பதைக் கொண்டு தொடங்கி எழுதுங்கள்...


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu May 03, 2012 11:34 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan Tue Apr 24, 2012 7:12 pm

அந்தாதி என்பது அந்தம், ஆதி என்ற சொற்கூட்டே! மரபுக் கவிதையில் முதலடியில் தொடங்கிய சீரும் ஈற்றடியில் முடியும் சீரும் ஒன்றாக அமைதலையே அந்தாதி என்கிறார்கள். தாங்கள் புதுக்கவிதையிலும் அந்தாதி வெளிப்படுத்த முயன்றமையைப் பாராட்டுகிறேன். தொடங்கிய சீரில் ஈற்றுச் சீர் அமையும் வண்ணம் புதுக்கவிதை அந்தாதி எழுதுவோரையும் பாராட்டுகிறேன்.
எடுத்துக்காட்டு:
படிக்க நினைத்து நினைத்து
படித்தபின் மறந்து மறந்து
பயன்படுத்த முனையும் போதுதான்
பயனீட்ட மறந்ததை நினைவூட்டி
படித்தவர்களைப் பார்த்துப் படிக்க!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 24, 2012 7:41 pm

yarlpavanan wrote:அந்தாதி என்பது அந்தம், ஆதி என்ற சொற்கூட்டே! மரபுக் கவிதையில் முதலடியில் தொடங்கிய சீரும் ஈற்றடியில் முடியும் சீரும் ஒன்றாக அமைதலையே அந்தாதி என்கிறார்கள். தாங்கள் புதுக்கவிதையிலும் அந்தாதி வெளிப்படுத்த முயன்றமையைப் பாராட்டுகிறேன். தொடங்கிய சீரில் ஈற்றுச் சீர் அமையும் வண்ணம் புதுக்கவிதை அந்தாதி எழுதுவோரையும் பாராட்டுகிறேன்.
எடுத்துக்காட்டு:
படிக்க நினைத்து நினைத்து
படித்தபின் மறந்து மறந்து
பயன்படுத்த முனையும் போதுதான்
பயனீட்ட மறந்ததை நினைவூட்டி
படித்தவர்களைப் பார்த்துப் படிக்க!
கருத்துக்கு மகிழ்ச்சி நண்பரே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 24, 2012 7:44 pm

பார்த்திபன் wrote:நிம்மதியாவது இருக்கட்டும்
என்னிடம் என்று நீ
எண்ணியிருந்தால் ஒரு
கையில் உன் மண ஓலையைத்
தந்துவிட்டு மறுகையில்
எனக்கெழுதிய காதல்
கடிதங்களை வலுக்கட்டாயமாய்
வாங்கிச் சென்றிருக்கமாட்டாய்!

சென்றிருக்க மாட்டாய் என்று
நினைத்துதான்
நான்
கால தாமதம் ஆனாலும்
சொல்லிவிட்டேனே என்ற எண்ணத்தில்
ஏமாற்றக்கூடாது என்ற நோக்கத்தில்
தாமதமாகவேணும் வந்தேன்
காணவில்லை நீ
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by நிலாமதி Wed Apr 25, 2012 6:33 am

நீ யாகத்தான் உன் வாழ்க்கையை
மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும்...
மீட்பார்களென்று ஒருவரும் இல்லை...
உங்கள் துயரங்களையோ வலிகளையோ
பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியம்
உங்களைத் தவிர யாருக்கும் இல்லை...
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 26, 2012 8:18 pm

யாருக்கும் வலியில்லை என்று
நான் நினைத்திருந்தேன்
காதலிக்காத வரை.
காதலித்தேன்.
வலியை உணர்ந்தேன்.
காதலில் விழுந்தேன்
அடிபடவில்லை
வலிக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Thu Apr 26, 2012 9:06 pm

வலிக்கிறது என்று நான்
சொல்லி முடிப்பதற்குள்
வழிந்தோடி வருகிறது
கண்ணீர் உனக்கு!
ஒரே பொருளுக்கு
இனியும் எதற்கு
இரு வேறு பெயர்கள்
அம்மா,அன்பு என்று?
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by வள்ளல் Thu Apr 26, 2012 9:08 pm

தலைவலி தான்

உலகத்திலேயே மிகப் பெரிய

தலைவலி.
வள்ளல்
வள்ளல்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 12
Points : 14
Join date : 26/04/2012
Age : 42
Location : வானம் பார்த்த பூமி

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan Thu Apr 26, 2012 9:45 pm

இப்பதிவை அந்தாதி என்று சொல்ல முடியாது. முதலாமவரின் ஈற்றுச் சீரை(சொல்லை) அடுத்தவரின் முதற் சீராகத் தொடுத்து எழுதப்படுவதை பாமாலை என்பேன். முதற் பாட்டின் ஈற்றுச் சீரை(சொல்லை) அடுத்த பாட்டின் முதற் சீராகத் தொடுத்து எழுதப்படும் பாமாலை பல பாவரசர் கண்ணதாசனால் எழுதப்பட்டுள்ளது.

அந்தாதி என்பது ஒவ்வொரு பாட்டிலும் முதற் சீரும் ஈற்றுச் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும். இரண்டாவது எடுத்துக்காட்டைக் கீழே தந்துள்ளேன். இதன்படி அந்தாதி எழுத வாருங்களேன். முடிந்தால் நண்பர் வள்ளல் எழுதியதைப் போன்றும் எழுதலாம்.

தலைவலி உம் காய்ச்சல் உம்
தனக்கு வந்தால் தான் தெரியுமாம்
எனக்குத் தெரிந்த வரை
இவ்வுண்மையை
உணராதவருக்கும் தலைவலி!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 27, 2012 8:41 am

yarlpavanan wrote:இப்பதிவை அந்தாதி என்று சொல்ல முடியாது. முதலாமவரின் ஈற்றுச் சீரை(சொல்லை) அடுத்தவரின் முதற் சீராகத் தொடுத்து எழுதப்படுவதை பாமாலை என்பேன். முதற் பாட்டின் ஈற்றுச் சீரை(சொல்லை) அடுத்த பாட்டின் முதற் சீராகத் தொடுத்து எழுதப்படும் பாமாலை பல பாவரசர் கண்ணதாசனால் எழுதப்பட்டுள்ளது.

என் பதில்,
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவதும் அந்தாதி எனப்படும்.

அந்தாதி என்பது ஒவ்வொரு பாட்டிலும் முதற் சீரும் ஈற்றுச் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும். இரண்டாவது எடுத்துக்காட்டைக் கீழே தந்துள்ளேன். இதன்படி அந்தாதி எழுத வாருங்களேன். முடிந்தால் நண்பர் வள்ளல் எழுதியதைப் போன்றும் எழுதலாம்.

தலைவலி உம் காய்ச்சல் உம்
தனக்கு வந்தால் தான் தெரியுமாம்
எனக்குத் தெரிந்த வரை
இவ்வுண்மையை
உணராதவருக்கும் தலைவலி!

-நண்பரே இது அந்தாதிதான். ஆனால் இது ஒரு பாடலுக்குள் அமைந்த அந்தாதி.

நாங்கள் புதுக்கவிதையில் (பல பாடலுக்குள் அமைத்து) அந்தாதி எழுதுகிறோம். நாங்கள் எழுதிக் கொண்டிருப்பதும் அந்தாதி வகைதான்.
நாங்கள் எழுதும் அந்தாதி சங்க காலத்திய பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தை ஒன்றியிருப்பதைக் காணலாம். தங்களின் தெளிவிற்காகப் பதிற்றுப்பத்துப் பாடல்களைப் பதிந்துள்ளேன். (பாடல்களின் வரிகள் நீண்டது என்பதால் ஒரு பாடலின் கடைசி இரண்டு அடியையும் அடுத்தப் பாடலின் முதல் இரண்டு அடியையும் பதிந்துள்ளேன்)

பாட்டு - 31

சூர்நிகழ்ந் தற்றுநின் தானை 35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.

பாட்டு - 32
~~~~~~~~~

மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
...
பகைவர் தேஎத்(து) ஆயினும்
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பொதே.


பாட்டு - 33
~~~~~~~~~

இறும்பூதால் பொதே கொடித்தேர் அண்ணல்
வடிமணி அனைத்த பனைமருள் நோன்தாள்
...

கால்வழங்(கு) ஆர்எயில் கருதின்
போர்எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே.

பாட்டு - 34
~~~~~~~~~

ஒரூஉப நின்னை ஒருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழல்கால்
...
அரைசுபடக் கடக்கும் ஆற்றல்
புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே.

பாட்டு - 35
~~~~~~~~~

புரைசால் மைந்தநீ ஓம்பல் மாறே
உரைசான் றனவால் பெருமைநின் வென்றி
...

பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயி னானே.

பாட்டு - 36
~~~~~~~~~

வீயா யாணர் நின்வயி னானே
தாவா(து) ஆகு மலிபெறு வயவே
...

குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப்பல செய்குவை வாழ்கநின் வளனே.

பாட்டு - 37
~~~~~~~~~

வாழ்கநின் வளனே நின்னுடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப்
...

நன்றுபொ஢(து) உடையையால் நீயே
வெந்திறல் வேந்தேஇவ் வுலகத் தோர்க்கே.

பாட்டு - 38
~~~~~~~~~

உலகத் தோரே பலர்மன் செல்வர்
எல்லா ருள்ளும்நின் நல்இசை மிகுமே
...

பகுத்(து)ஊண் தொகுத்த ஆண்மைப்
பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே.

பாட்டு - 39
~~~~~~~~~

பிறர்க்(கு)என வாழ்திநீ ஆகல் மாறே
எமக்கில்என் னார்நின் மறம்கூறு குழாத்தர்
...

சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்நின் போர்நிழல் புகன்றே.

பாட்டு - 40
~~~~~~~~~

போர்நிழல் புகன்ற சுற்றமொ(டு) ஊர்முகத்(து)
இறாஅ லியரோ பெருமநின் தானை
---
பாடலின் அனைத்து அடிகளையும் காண தோட்டத்தின் இப்பதிவை சொடுக்வும். [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan Sat Apr 28, 2012 5:24 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
yarlpavanan wrote:இப்பதிவை அந்தாதி என்று சொல்ல முடியாது. முதலாமவரின் ஈற்றுச் சீரை(சொல்லை) அடுத்தவரின் முதற் சீராகத் தொடுத்து எழுதப்படுவதை பாமாலை என்பேன். முதற் பாட்டின் ஈற்றுச் சீரை(சொல்லை) அடுத்த பாட்டின் முதற் சீராகத் தொடுத்து எழுதப்படும் பாமாலை பல பாவரசர் கண்ணதாசனால் எழுதப்பட்டுள்ளது.
என் பதில்,
கடைசி அடியையோ வார்த்தையையோ தொடக்கமாகக் கொண்டு அடுத்த முதல் அடியை அல்லது வார்த்தையை எழுதுவதும் அந்தாதி எனப்படும்.

அந்தாதி என்பது ஒவ்வொரு பாட்டிலும் முதற் சீரும் ஈற்றுச் சீரும் பொருந்தி வர எழுத வேண்டும். இரண்டாவது எடுத்துக்காட்டைக் கீழே தந்துள்ளேன். இதன்படி அந்தாதி எழுத வாருங்களேன். முடிந்தால் நண்பர் வள்ளல் எழுதியதைப் போன்றும் எழுதலாம்.
தலைவலி உம் காய்ச்சல் உம்
தனக்கு வந்தால் தான் தெரியுமாம்
எனக்குத் தெரிந்த வரை
இவ்வுண்மையை
உணராதவருக்கும் தலைவலி!
-நண்பரே இது அந்தாதிதான். ஆனால் இது ஒரு பாடலுக்குள் அமைந்த அந்தாதி.
நாங்கள் புதுக்கவிதையில் (பல பாடலுக்குள் அமைத்து) அந்தாதி எழுதுகிறோம். நாங்கள் எழுதிக் கொண்டிருப்பதும் அந்தாதி வகைதான்.
நாங்கள் எழுதும் அந்தாதி சங்க காலத்திய பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தை ஒன்றியிருப்பதைக் காணலாம். தங்களின் தெளிவிற்காகப் பதிற்றுப்பத்துப் பாடல்களைப் பதிந்துள்ளேன். (பாடல்களின் வரிகள் நீண்டது என்பதால் ஒரு பாடலின் கடைசி இரண்டு அடியையும் அடுத்தப் பாடலின் முதல் இரண்டு அடியையும் பதிந்துள்ளேன்)
பாட்டு - 31
சூர்நிகழ்ந் தற்றுநின் தானை 35
போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.
பாட்டு - 32
~~~~~~~~~
மாண்டனை பலவே போர்மிகு குருசில்நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்
...

சான்றுகளுடன் சிறப்பாக விளக்கமளித்தமைக்கு நன்றி.
தாங்கள் ஒரு தலைப்பைக் கொடுத்து அந்தாதியைத் தொடரவிட்டால் அழகாயிருக்குமே!
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Apr 28, 2012 8:22 pm

நண்பரே.... தங்கள் புரிதலுக்கு தோட்டம் சார்பாக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by yarlpavanan Sun Apr 29, 2012 5:21 am

இப்பதிவைத் தொடக்கி வைத்த கவியருவி ம.ரமேஷ் முடிவுத்தொடங்கி(அந்தாதி) பற்றிய சிறந்த விளக்கமளித்துள்ளார். அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்காகவும் புதிய பாவலர்களுக்கும் வாசகர்களுக்கும் தெளிவூட்டுவதற்காகவும் சில இணையத் தளங்களில் இருந்து பொறுக்கிய தகவலைத் தொகுத்துக் கீழே தந்துள்ளேன்.

அந்தாதி

அந்தாதி என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சமசுக்கிருதச் சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை எனப்படும். அந்தாதி அமைப்பு
பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது. ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக‌ (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும்.
(சான்று: [You must be registered and logged in to see this link.]

சில வகை அந்தாதிகள்

ஒலியந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி, கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி, யமக அந்தாதி, சிலேடை அந்தாதி, திரிபு அந்தாதி, நீரோட்ட யமக அந்தாதி

அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே [2]

மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.

முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
இரண்டாம் மூன்றாம் அடிகள் - சீரந்தாதி
மூன்றாம் நான்காம் அடிகள் - சீரந்தாதி
நான்காம் ஐந்தாம் அடிகள் - அடியந்தாதி
ஐந்தாம் ஆறாம் அடிகள் - சீரந்தாதி
ஆறாம் ஏழாம் அடிகள் - எழுத்தந்தாதி
ஏழாம் எட்டாம் அடிகள் - எழுத்தந்தாதி
எட்டாம் முதலாம் அடிகள் - சீரந்தாதி

(சான்று: [You must be registered and logged in to see this link.]

பக்திப் பாடல்களில் அபிராமி அந்தாதி பிரபலமானது. அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது.
இங்கு அவரது 1 ஆம் ,2 ஆம்,3 ஆம் பாடல்கள் தரப்படுகிறது.

1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவதறிந்தனமே.

3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

பிள்ளையார் காப்புடன் நூற்பயனும் உட்பட அபிராமி அந்தாதி நூறு பாடல்களையும் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.
[You must be registered and logged in to see this link.]

இதில் நான் கூறிய முடிவுத்தொடங்கி(அந்தாதி) முயற்சிக்குச் சான்றாக இளம்பூரணர் பாடலையும் விளக்கத்தையும் பார்க்கவும். இதிலிருந்தும் எனது விளக்கம் வேறுபடின் எனது முயற்சியைப் புதிய முயற்சியாகக் கருதவும்.
yarlpavanan
yarlpavanan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 29, 2012 7:34 pm

விரிவான தவகலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி நண்பரே... தோட்டத்தின் உறவுகளுக்கும் தெளிவு கிடைத்திருக்கும் என்றே நினைக்கிறேன்... தொடர்ந்து இணைந்திருப்போம். புரியாதவைகளைப் புரிந்து தெளிவோம்...

தங்களின் கருத்துக்கு

உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து
துன்னிய மாந்தர் அஃதென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே

என்ற எடுத்துக்காட்டு அரண் செய்கிறது. எங்கள் படைப்புக்கு,

1) உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.

2) துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவதறிந்தனமே.

3) அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

என்பது எடுத்துக் காட்டாய் இருக்கிறது.

நன்றி நண்பரே.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 30, 2012 12:27 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 30, 2012 8:59 pm

பார்த்திபன் wrote:வலிக்கிறது என்று நான்
சொல்லி முடிப்பதற்குள்
வழிந்தோடி வருகிறது
கண்ணீர் உனக்கு!
ஒரே பொருளுக்கு
இனியும் எதற்கு
இரு வேறு பெயர்கள்
அம்மா,அன்பு என்று?

அன்பு என்று கணக்கிட்டால்
நீ
என்னை மிஞ்சிவிடுவாய்.
நினைப்பு என்று கணக்கிட்டால்
நான் உன்னை
மிஞ்சிவிடுவேன்.
எதற்கு இந்தக் கணக்கு நமக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Tue May 01, 2012 11:31 am

நமக்கு காற்று இருக்கும் வரை ஒரு கணக்கு
கணக்கு முடிந்தால் பிணம் என்ற செல்லப் பெயரே
மிச்சமிருக்கு...
இடையில் ஏன்னடா ஜாதி என்ற இழுக்கு?


Last edited by கலைநிலா on Wed May 02, 2012 7:01 pm; edited 1 time in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by ramaswamy Tue May 01, 2012 1:09 pm

ஜாதி என்ற இழுக்கு - அது

மனிதனை பற்றிய அழுக்கு



அறிவுரை சொன்னால் வழக்கு

இல்லை ஊரை விட்டே விலக்கு



ஜாதி ஓர் போதை சரக்கு - அதை

ஒழிக்க நீயும் காதலை துவக்கு
avatar
ramaswamy
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 45
Location : kottar, Nagercoil

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 01, 2012 7:40 pm

காதலைத் துவக்கி
கிறுக்கிய கவிதைகளை
ஐம்பது ரூபாய் புத்தகமாக்கி
கிடைக்கும் லாபத்தில்
வாழ்க்கை நடக்கிறது
நட்டமாகக் கண்ணீர்த்துளிகள்
மனம் முழுவதும் நிறைந்திருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by நிலாமதி Wed May 02, 2012 5:52 am

மனம் முழுவதும் நிறந்திருக்கிறது
தந்தையாக மகளை
மணக் கோலத்தில் வெளிநாட்டு
வீடியோவில் பார்த்த காட்சி
இதயத்தில் ஒரு மூலையில்
இலேசாய் வலிக்கிறது
திரு நிறைச்செல்வி மங்கையர்க் கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 02, 2012 4:06 pm

இனிதாகத் தொடங்கிய
இல்லறம் என்றும்
நல்லறமாகச் சிறக்க
வாழ்த்துகிறேன்
என் தோல்வியை மறந்து
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Wed May 02, 2012 7:00 pm

மறந்து போனதால்
மரணம் வரவில்லை
எனது வீட்டியில்...


தோல்வியை மறந்து
போனதால்
குடும்பத்து வெற்றியில்
நானுமாகிப்போனேன்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by நிலாமதி Wed May 02, 2012 7:02 pm

மறந்து விட்ட் மகனை எண்ணி
வாடுகிறாள் விதவைத் தாய்.
முதியோர் விடுதியில்
என் பிள்ளை நோய்வாய் பட்டானோ
என எண்ணி ஆனால் அவனோ
மனைவியுடன் ஊர் சுற்றும் விடுமுறையில்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கலைநிலா Wed May 02, 2012 7:03 pm

விடுமுறையில் விண்ணப்பம்
வந்துவிட்டு போனால் என்ன
அப்பா...!
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed May 02, 2012 8:26 pm

அப்பா அம்மாவைப் பார்த்தால்
காதல் செய்ய முடியாது
காதல் முக்கியமில்லை என்பது
காதல் தோல்வியில் தெரியும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by பார்த்திபன் Wed May 02, 2012 11:53 pm

தெரியும் பெண்ணே
இதைதான் நீ சொல்வாயென்று,
நிழலாய்த் தொடரும்
காதலரை நிராகரிக்க
நீண்ட காலமாய்ச்
சொல்லப்படும் வார்த்தை தானே
"நான் உங்களை
அப்படி நினைக்கவில்லை"
என்பது!
கனவில் மூழ்கவிட்டு
கழுத்தறுப்பதில் நீ
மட்டும் என்ன விதிவிலக்காகவா
இருந்துவிடப் போகிறாய்!
பார்த்திபன்
பார்த்திபன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு

Back to top Go down

காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம் - Page 3 Empty Re: காதல் அந்தாதி - நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

Back to top

- Similar topics
» அம்மா – அந்தாதி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகமாக வெளியிடலாம்.
» நட்பு அந்தாதி - தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமாக வெளியிடலாம்
» காதல் அந்தாதி - அம்மா அந்தாதி புத்தக ஆக்கம் குறித்து உங்கள் கருத்துகள் தேவை
» பெட்ரோல் – சென்ரியுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
» பயண அனுபவங்களை புத்தகமாக எழுதும் காஜல்அகர்வால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum