தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
3 posters
Page 1 of 1
தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
* கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
* கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
* கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
* கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
* கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
* கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
* கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
* கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
* கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
* கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
* கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
* கண் கண்டது கை செய்யும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
* கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
* கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
* கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
* கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
* கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
* கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
* கரணம் தப்பினால் மரணம்.
* கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
* கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
* கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
* கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
* கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
* கல்லாதவரே கண்ணில்லாதவர்.
* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
* கல்வி அழகே அழகு.
* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
* கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
* கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள மனம் துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
* கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
* கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
* கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
* கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
* கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
* கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
* கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
* கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
* கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
* கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
* கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
* கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
* கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
* கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
* கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
* கண் கண்டது கை செய்யும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
* கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
* கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
* கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
* கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
* கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
* கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
* கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
* கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
* கரணம் தப்பினால் மரணம்.
* கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
* கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
* கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
* கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
* கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
* கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
* கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
* கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
* கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
* கல்லாதவரே கண்ணில்லாதவர்.
* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
* கல்வி அழகே அழகு.
* கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
* கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
* கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
* கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
* களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
* கள்ள மனம் துள்ளும்.
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
* கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
* கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
* கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
* கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
* கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
* கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கனிந்த பழம் தானே விழும்.
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
Last edited by தோழி பிரஷா on Thu Mar 17, 2011 2:54 pm; edited 1 time in total
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
* காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
* காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி ஆசை கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காரண குருவே காரிய குரு!
* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
* காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
* காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
* காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
* காற்றில்லாமல் தூசி பறக்குமா?
* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
* காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
* காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
* காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
* காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
* காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
* காணி ஆசை கோடி கேடு.
* காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
* காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
* காப்பு சொல்லும் கை மெலிவை.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
* காரண குருவே காரிய குரு!
* காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
* காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
* காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
* காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
* காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
* காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
* காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
* காற்றில்லாமல் தூசி பறக்குமா?
* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
* காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
* குணத்தை மாற்றக் குருவில்லை.
* குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
* குப்பை உயரும் கோபுரம் தாழும்.
* குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
* கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குரைக்கிற நாய் கடிக்காது;
கடிக்கிற நாய் குரைக்காது.
* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
* குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
* குணத்தை மாற்றக் குருவில்லை.
* குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
* குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
* குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
* குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
* குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
* குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
* குப்பை உயரும் கோபுரம் தாழும்.
* குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
* கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
* குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குரைக்கிற நாய் கடிக்காது;
கடிக்கிற நாய் குரைக்காது.
* குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
* கெடுவான் கேடு நினைப்பான்
* கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
* கெட்டும் பட்டணம் சேர்
* கெண்டையைப் போட்டு வராலை இழு.
* கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
* கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
* கெடுவான் கேடு நினைப்பான்
* கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
* கெட்டும் பட்டணம் சேர்
* கெண்டையைப் போட்டு வராலை இழு.
* கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
* கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
* கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
* கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
* கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
* கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
* கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
* கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
* கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
* கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
* கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
* கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
* கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
* கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
* கையிலே காசு வாயிலே தோசை
* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
* கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
* கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
* கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
* கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
* கையிலே காசு வாயிலே தோசை
* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
* கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
* கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
* கொடிக்கு காய் கனமா?
* கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
* கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
* கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
* கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
* கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
* கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
* கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
* கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
* கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
* கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
* கொடிக்கு காய் கனமா?
* கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
* கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
* கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
* கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
* கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
* கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
* கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
* கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
* கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
* கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
* கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
* கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
* கோடி வித்தையும் கூழுக்குத்தான்
* கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
* கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
* கோபம் சண்டாளம்.
* கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
* கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
* கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
* கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
* கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
* கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
* கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
* கோடி வித்தையும் கூழுக்குத்தான்
* கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
* கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
* கோபம் சண்டாளம்.
* கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
* கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
* கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
* கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
* கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
* கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
[You must be registered and logged in to see this image.] பழமொழி தொகுப்பிற்கு நன்றி தோழி பிரஷா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழ் பழமொழிகள்.( "க - கோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Similar topics
» தமிழ் பழமொழிகள்.( "ஆ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ச- சோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "த தா து தை" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ந- நோ" எழுத்தில் ஆரம்பிப்பவை)
» தமிழ் பழமொழிகள்.( "ப - போ " எழுத்தில் ஆரம்பிப்பவை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|