தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
+7
yarlpavanan
அ.இராமநாதன்
RAJABTHEEN
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஆளுங்க
கவியருவி ம. ரமேஷ்
சதாசிவம்
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
First topic message reminder :
தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது. அவை
தமிழ் நூல்களில் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் என்பது எட்டுத்தொகை, பத்து பாட்டு என்று கூறப்படும் நூல்கள் ஆகும். இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளைப் பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும். இவை
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"
புறநானூறு
புறம் + நானூறு =
புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், மன்னனின் பெருமை, வீரம் போன்ற புற வாழ்க்கைப் பற்றி கூறும் மொத்தம் நானூறு பாடல்களை கொண்ட நூல் தான் புற நானூறு.
புறநானூறில் நான் படித்து ரசித்த பாடல்களை இனி வரும் நாட்களில் காண்போம்.
தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது. அவை
- தொகுத்தல் - பல் வேறு விஷயங்களைத் தொகுத்து ஒருவர் எழுதுதல்
- விரித்தல் - இது ஏற்கனவே எழுதிய புத்தகத்திற்கு விளக்க உரை எழுதுதல்
- தொகை - பல் வேறு கால கட்டங்களில் பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடல்.
- மொழி பெயர்ப்பு - இது வேறு மொழியில் உள்ள நூல்களில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதுதல்.
தமிழ் நூல்களில் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் என்பது எட்டுத்தொகை, பத்து பாட்டு என்று கூறப்படும் நூல்கள் ஆகும். இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளைப் பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும். இவை
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"
புறநானூறு
புறம் + நானூறு =
புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், மன்னனின் பெருமை, வீரம் போன்ற புற வாழ்க்கைப் பற்றி கூறும் மொத்தம் நானூறு பாடல்களை கொண்ட நூல் தான் புற நானூறு.
புறநானூறில் நான் படித்து ரசித்த பாடல்களை இனி வரும் நாட்களில் காண்போம்.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
அனைவருக்கும் பொதுவானது
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வேறு வேறு நிலையில் இருக்கிறார்கள். ஒருவன் பணக்காரனாகவும் வேறு ஒருவன் ஏழையாகவும் வாழ்கிறார்கள். இப்படி வேறு வேறு நிலையில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது எது?. செல்வம் பெற்றோர் செய்யும் செயல் என்ன என்று இந்த பாடல் கூறுகிறது.
பாடல் 7 : உண்பதும் உடுப்பதும் (புறம் : 189)
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிறழ்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயன் ஈதலே;
துய்பேம் எனினே, தப்பு ந பலவே.
பொருள் விளக்கம்
தெற்கு கடல் போல் மிகப்பெரிய நிலத்தை ஒரே வெண் கொற்ற குடையில் ஆளும் பேரரசனும், காட்டில் இரவு பகலும் உறங்காது வேட்டை ஆடும் சிறு வேட்டைக்காரனும் உண்பது நாழி அளவுதான், உடுப்பது மேலே ஒன்று, கீழே ஒன்று ஆகிய இரண்டு தான். மற்ற விஷயங்களும் இதைப் போல் பொதுவானது தான். அதனால் பணம் படைத்தவர்கள் செய்யும்
சிறந்த செயல் இல்லாதவருக்கு ஈவதே, நாம் மட்டும் உண்டு வாழ்வோம் என்பது தவறான செயலாகும்.
இந்த கருத்தையே வலியுறுத்தும் வேறு சில பாடல்கள்
"இல்லோர் இரப்பது இயல்பே
இரந்தோர் கீ வதும் உடையோர் கடனே" - நறுந்தொகை
"ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு" - திருக்குறள்
" பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல் முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு " - நன்னெறி
ஒருவருக்கும் பயன் தராத கடல் நீரை மேகங்கள் கவர்ந்து சென்று நிலத்தில் பெய்வது போல் அடுத்தவனுக்கு கொடுக்காத செல்வத்தை பிறர் அபகரித்து உரியவருக்கு போய்ச் சேர்ப்பர்.
இப்படி அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் நமக்கு தேவையானவற்றை சம்பாதிக்க வேண்டும், இப்படி சம்பாதிக்கவும், சபையில் முன்னே வர வேண்டும் என்றால் கல்வி கற்ற வேண்டும். இப்படிப்பட்ட கல்வியின் சிறப்பை அடுத்த பாடலில் காண்போம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வேறு வேறு நிலையில் இருக்கிறார்கள். ஒருவன் பணக்காரனாகவும் வேறு ஒருவன் ஏழையாகவும் வாழ்கிறார்கள். இப்படி வேறு வேறு நிலையில் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானது எது?. செல்வம் பெற்றோர் செய்யும் செயல் என்ன என்று இந்த பாடல் கூறுகிறது.
பாடல் 7 : உண்பதும் உடுப்பதும் (புறம் : 189)
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிறழ்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப் பயன் ஈதலே;
துய்பேம் எனினே, தப்பு ந பலவே.
பொருள் விளக்கம்
தெற்கு கடல் போல் மிகப்பெரிய நிலத்தை ஒரே வெண் கொற்ற குடையில் ஆளும் பேரரசனும், காட்டில் இரவு பகலும் உறங்காது வேட்டை ஆடும் சிறு வேட்டைக்காரனும் உண்பது நாழி அளவுதான், உடுப்பது மேலே ஒன்று, கீழே ஒன்று ஆகிய இரண்டு தான். மற்ற விஷயங்களும் இதைப் போல் பொதுவானது தான். அதனால் பணம் படைத்தவர்கள் செய்யும்
சிறந்த செயல் இல்லாதவருக்கு ஈவதே, நாம் மட்டும் உண்டு வாழ்வோம் என்பது தவறான செயலாகும்.
இந்த கருத்தையே வலியுறுத்தும் வேறு சில பாடல்கள்
"இல்லோர் இரப்பது இயல்பே
இரந்தோர் கீ வதும் உடையோர் கடனே" - நறுந்தொகை
"ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்ல
ஊதியம் இல்லை உயிர்க்கு" - திருக்குறள்
" பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல் முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு " - நன்னெறி
ஒருவருக்கும் பயன் தராத கடல் நீரை மேகங்கள் கவர்ந்து சென்று நிலத்தில் பெய்வது போல் அடுத்தவனுக்கு கொடுக்காத செல்வத்தை பிறர் அபகரித்து உரியவருக்கு போய்ச் சேர்ப்பர்.
இப்படி அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் நமக்கு தேவையானவற்றை சம்பாதிக்க வேண்டும், இப்படி சம்பாதிக்கவும், சபையில் முன்னே வர வேண்டும் என்றால் கல்வி கற்ற வேண்டும். இப்படிப்பட்ட கல்வியின் சிறப்பை அடுத்த பாடலில் காண்போம்.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
இப்படி அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் நமக்கு தேவையானவற்றை சம்பாதிக்க வேண்டும், இப்படி சம்பாதிக்கவும், சபையில் முன்னே வர வேண்டும் என்றால் கல்வி கற்ற வேண்டும்.
-- உண்மையான நேர்மையான கருத்து...
பகிர்வுக்குப் பாராட்டுகள் நண்பரே
-- உண்மையான நேர்மையான கருத்து...
பகிர்வுக்குப் பாராட்டுகள் நண்பரே
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
கவியருவி ம. ரமேஷ் wrote:இப்படி அடுத்தவருக்கு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் நாம் நமக்கு தேவையானவற்றை சம்பாதிக்க வேண்டும், இப்படி சம்பாதிக்கவும், சபையில் முன்னே வர வேண்டும் என்றால் கல்வி கற்ற வேண்டும்.
-- உண்மையான நேர்மையான கருத்து...
பகிர்வுக்குப் பாராட்டுகள் நண்பரே
நன்றி நண்பரே
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
கல்வியின் சிறப்பு
வாழ்க்கையில் பல வசதிகள் இருந்தாலும் கல்வி இல்லையென்றால் அந்த வசதிகளை நம்மிடம் தக்க வைத்து கொள்ள முடியாது. கல்வி ஒன்றே எல்லா வசதிகளையும் நாம் சம்பாதிக்க உதவும். எந்த குடியில் பிறந்தாலும் கல்வி ஒருவனை மேலே உயர்த்துகிறது. கல்வியின் சிறப்பை இந்த பாடல் அழகாக எடுத்துக் கூறுகிறது.
பாடல் 8 : கற்கை நன்றே (புறம் : 183)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
"அறிவுடையோன் வருக" ஆறு அரசு செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
பொருள் விளக்கம்
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உற்ற உதவிகள் செய்தும், தேவையான பொருள் கொடுத்தும், அவர் சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் பொது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் . கல்வி கற்காதவன் வயது முதிர்ந்தாலும் அவனுக்கு தக்க மரியாதை கிடைக்காது. அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணத்தாரில் கீழ் உள்ளவன் கல்வி கற்றால் அவனுக்கு மேல் உள்ளவன் கட்டுப்பட வேண்டும். கல்வி ஒருவனை உயர்த்தும்.
ஆதலால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் கல்வியை விடாது கற்க வேண்டும்.
பாடலில் சிறப்பு :
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிறது.
இந்த கருத்தையே வலியுறுத்தும் வேறு சில பாடல்கள்:
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" - ஒளவையார்
"கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை" - திருக்குறள்
கல்வி கற்று ஒரு பதவியில் அமர்பவருக்கு என்ன குணங்கள் வேண்டும், அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும் ............
வாழ்க்கையில் பல வசதிகள் இருந்தாலும் கல்வி இல்லையென்றால் அந்த வசதிகளை நம்மிடம் தக்க வைத்து கொள்ள முடியாது. கல்வி ஒன்றே எல்லா வசதிகளையும் நாம் சம்பாதிக்க உதவும். எந்த குடியில் பிறந்தாலும் கல்வி ஒருவனை மேலே உயர்த்துகிறது. கல்வியின் சிறப்பை இந்த பாடல் அழகாக எடுத்துக் கூறுகிறது.
பாடல் 8 : கற்கை நன்றே (புறம் : 183)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
"மூத்தோன் வருக" என்னாது, அவருள்
"அறிவுடையோன் வருக" ஆறு அரசு செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
பொருள் விளக்கம்
கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு உற்ற உதவிகள் செய்தும், தேவையான பொருள் கொடுத்தும், அவர் சொல் சொன்னபடி, அவர் மனம் கோணாத படி கல்வி கற்பது சிறந்தது. ஒரே வயிற்றில் பிறந்தாலும் சிறப்பாக உள்ள மகனின் பால் தாயின் மனம் சாயும் , கல்வி கற்காத மகனை தாயும் மதிக்க மாட்டாள். ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு விழா நடக்கும் பொது, அந்த குடும்பத்தில் இளையவன் ஆனாலும், அறிவுள்ளவனுக்கே முதல் மரியாதை கிடைக்கும், அவன் பின்னர் அரசனும் செல்வர் . கல்வி கற்காதவன் வயது முதிர்ந்தாலும் அவனுக்கு தக்க மரியாதை கிடைக்காது. அந்தணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் என்ற நான்கு வர்ணத்தாரில் கீழ் உள்ளவன் கல்வி கற்றால் அவனுக்கு மேல் உள்ளவன் கட்டுப்பட வேண்டும். கல்வி ஒருவனை உயர்த்தும்.
ஆதலால் கற்பதில் சிரமங்கள் இருந்தாலும் கல்வியை விடாது கற்க வேண்டும்.
பாடலில் சிறப்பு :
குலப்பாகுபாடு ஒழிய, நான்கு நபர்கள் கூடும் சபையில் மரியாதை கிடைக்க கல்வி ஒன்றே சிறந்த வழி என்று இந்த பாடல் வலியுறுத்துகிறது.
இந்த கருத்தையே வலியுறுத்தும் வேறு சில பாடல்கள்:
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு" - ஒளவையார்
"கேடில் விழுச் செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை" - திருக்குறள்
கல்வி கற்று ஒரு பதவியில் அமர்பவருக்கு என்ன குணங்கள் வேண்டும், அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும் ............
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
தொடருங்கள்... தங்கள் தமிழ் விளக்கம் நல்ல பயனைத் தருகிறதே...
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
தொடருங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Aarya- புதிய மொட்டு
- Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 31
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
பாராட்டத்தக்க படைப்புகளைத்தரும் உங்களுக்கு எனது அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
தோட்டத்து உறவுகளின் ஊக்கத்திற்கு நன்றி.
தொடர்ந்து படிக்கவும்....
தொடர்ந்து படிக்கவும்....
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
பதவியில் இருப்பவர்கள் பண்பு
நாம் ஒவ்வொருவருக்கும் நம் தகுதிற்கேற்ப பதவிகள் அமைகிறது. பதவிகள் வந்தவுடன் நாம் நமக்கு வேண்டியவர்களுக்கு அதிகமாக உதவி செய்கிறோம், அவர்கள் செய்யும் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறோம், வேண்டாதவர்களுக்கு கெடுதல் செய்கிறோம். நம்மை நாடி வந்தவர்களை உதாசீனம் செய்கிறோம். பதவி வரும் வரை அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறி, பதவி வந்தால் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சுகமாகவே வாழ ஆசைபடுகிறோம்.
பாடல் 9 : குற்றமும் தண்டனையும் (புறம் : 10)
பாடியவர்: ஊன் பொதி பசுங் குடையார்
பாடப்பட்டோர் : சோழன் நெய்தலங் கானல் இலஞ் சேட் சென்னி
திணை : பாடாண் துறை: இயன் மொழி
வழிபடு வோரை வல்லரி தீயே !
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே ;
நீ மெய் கண்ட தீமை கானின்;
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை யில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகியே, சிலைத் தார் மார்ப !
செய்து இரங்கா வினைச், சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங் கானல் நெடியோய் !
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே !
பொருள் விளக்கம்:
சோழா,நீ நீதி வழங்கும் போது உனக்கு வேண்டியவர்கள் கூறுவதால் ஒருவரை நல்லவர் என்று யாரையும் நீ உடனடியாக முடிவு செய்வதில்லை, அது போல் ஒருவரை பழித்து கூறுவதால் அவர்களை கெட்டவர் என்றும் முடிவு செய்து விடுவதில்லை. நன்கு ஆராய்ந்து முடிவு செய்கிறாய். அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று முடிவு செய்தால் வேண்டியவர்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கிறாய். குற்றத்தை மன்னிக்கும் படி அவர்கள் வேண்டினால் அவர்களுக்கு உரிய தண்டனையை குறைத்து அருள் செய்கிறாய்.
உன்னை நாடி வந்தவர்களுக்கு உணவு அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவி செய்கிறாய். குல மகளிர் தழுவ உன் வலிமையான மார்பு இடம் தரும், உன் எதிரிகள் தாக்க இடம் தர மாட்டாய்.
தவறு செய்து விட்டு பின்பு வருந்தும் குணம் உன்னிடம் இல்லை. எதையும் நன்கு ஆலோசனை செய்த பின்பு முடிவு செய்கிறாய். நெய்தலங் கானல் என்னும் ஊருக்கு உரிய தலைவனே, உன்னை நாங்கள் பலப்படி ஏத்தி வாழ்த்துவோம், ஓங்குக உன் புகழ் !
பாடலின் சிறப்பு
மன்னனுக்காக எழுதப்பட்ட பாடல் இது என்றாலும் பொறுப்புள்ள பதவியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் பாடல் இது. எந்த குணங்களோடு இருப்பவர் புகழ்தலுக்கு உரியவர் என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது.
பதவியை எவ்வாறு கையாளுகிறோம், எவர் சுலபமாக கையாளுகிறார், எவர் கஷ்டப்படுகிறார் என்பதை அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும் .............
நாம் ஒவ்வொருவருக்கும் நம் தகுதிற்கேற்ப பதவிகள் அமைகிறது. பதவிகள் வந்தவுடன் நாம் நமக்கு வேண்டியவர்களுக்கு அதிகமாக உதவி செய்கிறோம், அவர்கள் செய்யும் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறோம், வேண்டாதவர்களுக்கு கெடுதல் செய்கிறோம். நம்மை நாடி வந்தவர்களை உதாசீனம் செய்கிறோம். பதவி வரும் வரை அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறி, பதவி வந்தால் பிரச்சனைகளை கண்டு ஒதுங்கி சுகமாகவே வாழ ஆசைபடுகிறோம்.
பாடல் 9 : குற்றமும் தண்டனையும் (புறம் : 10)
பாடியவர்: ஊன் பொதி பசுங் குடையார்
பாடப்பட்டோர் : சோழன் நெய்தலங் கானல் இலஞ் சேட் சென்னி
திணை : பாடாண் துறை: இயன் மொழி
வழிபடு வோரை வல்லரி தீயே !
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே ;
நீ மெய் கண்ட தீமை கானின்;
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை யில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகியே, சிலைத் தார் மார்ப !
செய்து இரங்கா வினைச், சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங் கானல் நெடியோய் !
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே !
பொருள் விளக்கம்:
சோழா,நீ நீதி வழங்கும் போது உனக்கு வேண்டியவர்கள் கூறுவதால் ஒருவரை நல்லவர் என்று யாரையும் நீ உடனடியாக முடிவு செய்வதில்லை, அது போல் ஒருவரை பழித்து கூறுவதால் அவர்களை கெட்டவர் என்றும் முடிவு செய்து விடுவதில்லை. நன்கு ஆராய்ந்து முடிவு செய்கிறாய். அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று முடிவு செய்தால் வேண்டியவர்கள் என்றும் பாராமல் அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கிறாய். குற்றத்தை மன்னிக்கும் படி அவர்கள் வேண்டினால் அவர்களுக்கு உரிய தண்டனையை குறைத்து அருள் செய்கிறாய்.
உன்னை நாடி வந்தவர்களுக்கு உணவு அளித்து அவர்களுக்கு வேண்டிய உதவி செய்கிறாய். குல மகளிர் தழுவ உன் வலிமையான மார்பு இடம் தரும், உன் எதிரிகள் தாக்க இடம் தர மாட்டாய்.
தவறு செய்து விட்டு பின்பு வருந்தும் குணம் உன்னிடம் இல்லை. எதையும் நன்கு ஆலோசனை செய்த பின்பு முடிவு செய்கிறாய். நெய்தலங் கானல் என்னும் ஊருக்கு உரிய தலைவனே, உன்னை நாங்கள் பலப்படி ஏத்தி வாழ்த்துவோம், ஓங்குக உன் புகழ் !
பாடலின் சிறப்பு
மன்னனுக்காக எழுதப்பட்ட பாடல் இது என்றாலும் பொறுப்புள்ள பதவியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் பாடல் இது. எந்த குணங்களோடு இருப்பவர் புகழ்தலுக்கு உரியவர் என்பதை இந்த பாடல் எடுத்துக் கூறுகிறது.
பதவியை எவ்வாறு கையாளுகிறோம், எவர் சுலபமாக கையாளுகிறார், எவர் கஷ்டப்படுகிறார் என்பதை அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும் .............
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
வாழ்தலுக்கான எடுத்துக்காட்டு.
தொடர் பதிவுகளுக்குப் பாராட்டுகள்.
தொடர் பதிவுகளுக்குப் பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
நன்றி உறவுகளே,
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
பதவியின் பெருமை
பதவி வந்தால் அனைவரும் ஒரே மாதிரி கையாளுவதில்லை. ஒரு சிலரிடம் சின்ன வேலை கொடுத்தாலும் அதை முடிக்க வெகு சிரமப்படுவர். வேறு சிலரோ பெரிய வேலையையும் மிகச் சுலபமாக கையாளுகின்றனர். நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கும் சாதாரண குடிமகனுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். ஒருவர் நேரம் இல்லை என்கிறார். மற்றொருவர் சர்வசாதரானமாக அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்கிறார். இந்த பாடல் கூறுவதை கேளுங்கள்.
பாடல் 10 : அரச பாரம் (புறம் : 75)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிவரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே !
மண்டு அமர்ப் பறிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெருகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே மையற்று,
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுக்கெழு திருவே"
பொருள் விளக்கம்
பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க, அதற்கு அடுத்து உள்ள இளையோர் பதவி ஏற்க, பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை. அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்தப் பதவிக்கே ஒரு மரியாதை வருகிறது. ஆண்மை இல்லாத சிறியோன் கைகளில் கிடைத்தால் மக்களின் வரிப்பணத்தை உண்டு வாழும் வாழ்வாகவே அது முடியும். வீரமும் ஆண்மை அற்றவரிடம் அது போயிச் சேர்ந்தால், அது அவர்களுக்கு சுமையாகி விடும்.
போரில் எதிரிகளை தைரியமாக சந்திக்கும் ஆண்மைத் திறன் பெற்றவரிடம் அது போய்ச் சேரும் போது அது பொலிவு பெறுகிறது. முரசு கொண்டு நல்லாச்சி செய்யும் பெருநில மன்னருக்கு அது மிகவும் எளிதானது, குளத்தில் நீர் வற்ற காய்ந்து போன தாமரைக் கிழங்கு, மழை நீர் பெருகி குளத்தை நிறைக்கும் போது தக்கையாக மிதக்கும், அது போல்
தக்கையாக அதை கையாளுவர்.
சரி பதவி வந்தால் மட்டும் போதுமா, நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் நமக்கு கவலை இல்லாமல் இருக்கும், கவலை இல்லையென்றால் முடி கொட்டாது, முடி நரைக்காது. இப்படி பல ஆண்டுகள் நரைக்காமல் இருந்தவரிடம் அதன் ரகசியத்தை கேட்டால் என்ன சொல்வார்?,
அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும்...............
பதவி வந்தால் அனைவரும் ஒரே மாதிரி கையாளுவதில்லை. ஒரு சிலரிடம் சின்ன வேலை கொடுத்தாலும் அதை முடிக்க வெகு சிரமப்படுவர். வேறு சிலரோ பெரிய வேலையையும் மிகச் சுலபமாக கையாளுகின்றனர். நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கும் சாதாரண குடிமகனுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். ஒருவர் நேரம் இல்லை என்கிறார். மற்றொருவர் சர்வசாதரானமாக அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்கிறார். இந்த பாடல் கூறுவதை கேளுங்கள்.
பாடல் 10 : அரச பாரம் (புறம் : 75)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிவரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே !
மண்டு அமர்ப் பறிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெருகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே மையற்று,
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுக்கெழு திருவே"
பொருள் விளக்கம்
பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க, அதற்கு அடுத்து உள்ள இளையோர் பதவி ஏற்க, பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை. அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்தப் பதவிக்கே ஒரு மரியாதை வருகிறது. ஆண்மை இல்லாத சிறியோன் கைகளில் கிடைத்தால் மக்களின் வரிப்பணத்தை உண்டு வாழும் வாழ்வாகவே அது முடியும். வீரமும் ஆண்மை அற்றவரிடம் அது போயிச் சேர்ந்தால், அது அவர்களுக்கு சுமையாகி விடும்.
போரில் எதிரிகளை தைரியமாக சந்திக்கும் ஆண்மைத் திறன் பெற்றவரிடம் அது போய்ச் சேரும் போது அது பொலிவு பெறுகிறது. முரசு கொண்டு நல்லாச்சி செய்யும் பெருநில மன்னருக்கு அது மிகவும் எளிதானது, குளத்தில் நீர் வற்ற காய்ந்து போன தாமரைக் கிழங்கு, மழை நீர் பெருகி குளத்தை நிறைக்கும் போது தக்கையாக மிதக்கும், அது போல்
தக்கையாக அதை கையாளுவர்.
சரி பதவி வந்தால் மட்டும் போதுமா, நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் நமக்கு கவலை இல்லாமல் இருக்கும், கவலை இல்லையென்றால் முடி கொட்டாது, முடி நரைக்காது. இப்படி பல ஆண்டுகள் நரைக்காமல் இருந்தவரிடம் அதன் ரகசியத்தை கேட்டால் என்ன சொல்வார்?,
அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும்...............
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து பூக்க விடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Aarya- புதிய மொட்டு
- Posts : 57
Points : 97
Join date : 26/04/2012
Age : 31
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
கவலையில்லா வாழ்க்கை
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் கவலை இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்லலாம். ஆசை அதிகம் ஆகும் போது கவலை அதிகம் ஆகுகிறது என்பது வாழ்வியல் உண்மை. இப்படி வாழும் நிலையில் கவலை நம்மால் மட்டுமே வந்து விடுவதில்லை. நம்மை சுற்றிவுள்ளவர்கள் தான் நம்முடைய சுக துக்கங்களை வளர்க்கவும் குறைக்கவும் செய்கின்றனர். கவலை தான் உடல் கோளாறு அனைத்திற்கும் காரணம். இப்படி கவலை இல்லாமல், வாழ்ந்து, வயது ஆகியும் தலைமுடி நரைக்காமல் ஒருவர் இருந்தார், அவரிடம் இப்படி நரைக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார், அவர் கூறும் பதில் தான் இந்த பாடல். இன்று நமக்கு என் சீக்கிரம் நரைகிறது என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.
பாடல் 11 : நரையில ஆகுதல் (புறம் : 191)
பாடியவர்: பிசிராந்தையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு, மக்களும் நிரம்பினார் ;
யான் கண்டனையர் என் இளையோரும் , வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
பொருள் விளக்கம்
பல ஆண்டுகள் வாழ்ந்தும் நரை இல்லாமல் வாழ்வது எங்ஙனம் என்று நீங்கள் கேட்கிறீர்கள், அது என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள்.
மாண்பான குணம் கொண்ட என் மனைவி, என் மக்களும் கல்வி கற்று அறிவு நிரம்பியவர்கள், என்னிடம் பணி செய்யும் வேலைக்காரர்களும் என் குறிப்பு அறிந்து நான் சொல்லும் முன் வேலை செய்பவர்கள், இந்த நாட்டு அரசனும் கொடுமைகள் செய்யாமல் மக்களுக்கு நன்மைகள் செய்யும் மன்னன், கவலை நீங்க வாழ வைக்கிறான். அதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது, நல்லது எது கெட்டது எது என்று அனுபவத்தில் வாழ்ந்து உணர்ந்த (கல்வியால் மட்டும் உணரவில்லை என்பது இங்கு மறை பொருளாக கூறப்படுகிறது) சான்றோர் பலர் உள்ளனர், அவர்கள் மக்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு நல்லது எது என்று எடுத்து உரைத்து தவறு மிகா வண்ணம் இந்த நாட்டை காக்கின்றனர். இப்படி நான் கவலைப் பட எந்த காரணமும் இல்லாதது தான் என் இளமைக்கு காரணம்.
சரி இளமையாக வாழ கவலை இல்லாமல் இருப்பது ஒன்று மட்டும் தான் வழியா, ஏதாவது தின்றால் நாம் இளமையாக இருக்க முடியுமா? இப்படி இளமையாக வாழ பழம் ஒன்று கிடைத்தால் நாம் என்ன செய்வோம், அதியமான் என்ன செய்தான்அடுத்த பாடலில் காண்போம்.
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் கவலை இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்லலாம். ஆசை அதிகம் ஆகும் போது கவலை அதிகம் ஆகுகிறது என்பது வாழ்வியல் உண்மை. இப்படி வாழும் நிலையில் கவலை நம்மால் மட்டுமே வந்து விடுவதில்லை. நம்மை சுற்றிவுள்ளவர்கள் தான் நம்முடைய சுக துக்கங்களை வளர்க்கவும் குறைக்கவும் செய்கின்றனர். கவலை தான் உடல் கோளாறு அனைத்திற்கும் காரணம். இப்படி கவலை இல்லாமல், வாழ்ந்து, வயது ஆகியும் தலைமுடி நரைக்காமல் ஒருவர் இருந்தார், அவரிடம் இப்படி நரைக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார், அவர் கூறும் பதில் தான் இந்த பாடல். இன்று நமக்கு என் சீக்கிரம் நரைகிறது என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.
பாடல் 11 : நரையில ஆகுதல் (புறம் : 191)
பாடியவர்: பிசிராந்தையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு, மக்களும் நிரம்பினார் ;
யான் கண்டனையர் என் இளையோரும் , வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
பொருள் விளக்கம்
பல ஆண்டுகள் வாழ்ந்தும் நரை இல்லாமல் வாழ்வது எங்ஙனம் என்று நீங்கள் கேட்கிறீர்கள், அது என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள்.
மாண்பான குணம் கொண்ட என் மனைவி, என் மக்களும் கல்வி கற்று அறிவு நிரம்பியவர்கள், என்னிடம் பணி செய்யும் வேலைக்காரர்களும் என் குறிப்பு அறிந்து நான் சொல்லும் முன் வேலை செய்பவர்கள், இந்த நாட்டு அரசனும் கொடுமைகள் செய்யாமல் மக்களுக்கு நன்மைகள் செய்யும் மன்னன், கவலை நீங்க வாழ வைக்கிறான். அதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது, நல்லது எது கெட்டது எது என்று அனுபவத்தில் வாழ்ந்து உணர்ந்த (கல்வியால் மட்டும் உணரவில்லை என்பது இங்கு மறை பொருளாக கூறப்படுகிறது) சான்றோர் பலர் உள்ளனர், அவர்கள் மக்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு நல்லது எது என்று எடுத்து உரைத்து தவறு மிகா வண்ணம் இந்த நாட்டை காக்கின்றனர். இப்படி நான் கவலைப் பட எந்த காரணமும் இல்லாதது தான் என் இளமைக்கு காரணம்.
சரி இளமையாக வாழ கவலை இல்லாமல் இருப்பது ஒன்று மட்டும் தான் வழியா, ஏதாவது தின்றால் நாம் இளமையாக இருக்க முடியுமா? இப்படி இளமையாக வாழ பழம் ஒன்று கிடைத்தால் நாம் என்ன செய்வோம், அதியமான் என்ன செய்தான்அடுத்த பாடலில் காண்போம்.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
கொடுத்துப் புகழ்சபெற்றவன் அவன்... உங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
தொடருங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
சிறந்த விளக்கம்
தொடருங்கள் நண்பரே!
தொடருங்கள் நண்பரே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
நன்றி உறவுகளே, தொடர்கிறேன்
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
அதிசய நெல்லிக்கனி தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இந்த உலகில் அருகி வருகின்றனர். இப்படி இருக்கும் ஒரு சிலருக்காகத் தான் மழை பெய்கிறது. முன்பு நீண்ட நாள் தன் அரண்மனையில் தங்கச் செய்து ஔவைக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். எங்கே பரிசு கிடைத்தால் உடனே தன் அரண்மனையை விட்டு சென்று விடுவாள் என்று நினைத்து, பரிசு தராமல் காலம் தாழ்த்தி அவளுடைய தமிழின் சுவையை ரசித்திருந்தான். அப்படி அரண்மனையில் தங்கும் போது அதியமான் வேட்டையாடச் சென்ற மலையில் ஒரு அபூர்வ நெல்லிக்கனி அவனுக்கு கிடைத்தது. அதைத் தான் உண்டால் இந்த நாடு மட்டும் தான் பலன் பெரும், ஆனால் தமிழுக்கு தொன்று ஆற்றும் ஔவை உண்டால் நன்றாக இருக்கும், அவளால் தமிழும், தமிழால் உலகமும் உய்வு பெரும் என்று எண்ணி இளமையும், நீண்ட ஆயுளையும் தரும் அதிசய நெல்லிக்கனியின் அருமையை கூறி கொடுத்தால் ஔவை உண்ணமாட்டாள் என்று அறிந்து இது ஒரு சாதாரண கனி என்று கூறி அதைத் தின்னக் கொடுக்கிறான் அதியமான். பாடல் 12 : எமக்கு ஈந்தனையோ! (புறம் : 91) பாடியவர்: ஔவையார் அதியமான் பாடப்பட்டோர் : அதியமான் திணை : தும்பை துறை: வாழ்த்தியல் வலம்படு வாய் வாள் ஏந்தி, ஒன்னார் களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை, ஆர் கலி நறவின், அதியர் கோமான் போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி ! பால் புரை பிறை நூதற் பொலிந்த சென்னி நீலமணி மிடற்று ஒருவன் போல மண்ணுக - பெரும நீயே ! தொல் நிலைப் பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, ஆதல் நின் அகத்து அடக்கிச் சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே ! பொருள் விளக்கம் பகைவரின் பல களங்களை தைரியமாக எதிர்த்து வெற்றி பெற்ற அதியர் கூட்டத் தலைவன் அதியமானே, பால் போல் வெள்ளை நிற பிறையை அணிந்துள்ளவன், விஷம் உண்டு தேவர்களைக் காத்த நீல நிறக் கழுத்தை உடைய சிவபெருமான் போல் நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். உயரமான மலையின் பிளவுக்கு இடையில் வளர்ந்த சிறிய இலைகளை உடைய அறிய நெல்லிக்கனியை, எனக்கு அதன் பெருமையை சொல்லாமல் தந்தாயே, உன்னை நான் எப்படி புகழ்வேன், இது மதிக்கத்த செயல் ஆகும். இப்படி கூறிய பிறகு, அதியமான் ஔவையே, இது உன் தமிழுக்கு செய்யும் மரியாதை என்று கூறினார், ஔவையோ கர்வம் கொள்ளாமல் ஒரு பாடல் பாடினார் ......அந்த பாடலை அடுத்து பார்ப்போம் ......... புறம் வளரும் .......... |
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
ஔவையின் பெருந்தன்மை
சிறு விஷயம் செய்தாலே நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் பல பாடல்களைத் தந்த ஔவையோ தன் பாடலை குழந்தையின் சொல்லொடு ஒப்பிடுகிறார்.
தமிழுக்கு தொண்டு செய்யும் ஔவையின் சிறப்பை உணர்ந்த அதியமான் கிடைப்பதற்கு அறிய நெல்லிக்கனியை ஔவைக்கு பரிசாக அளித்தான். ஆனால் ஔவை இதற்கு கர்வம் கொள்ளாமல் ஒருவருக்கு தான் குழந்தை கூறும் மழலைச் சொல் புரியாவிட்டாலும் அது கேட்பதற்கு சுவையாக இருப்பது போல், அதியமானே உனக்கு என் மேல் உள்ள
அன்பின் காரணமாக நான் பாடும் சாதாரண பாடல் கூட மிக இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது என்று தன்னடக்கத்தோடு கூறுகிறார், அந்த பாடல்
பாடல் 13 : யாழொடும் கொள்ளா! (புறம் : 92)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : ..... துறை: இயன்மொழி.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.
பொருள் விளக்கம்:
மழலைச் சொல், யாழ் போல் இனிமையாக இருப்பதாக கொள்ள முடியாது, பொருள் இருக்காது, காலத்தோடும் பொருந்தி வாராது, ஆனாலும் தந்தைக்கு தன் குழந்தை கூறும் மழலைச் சொல் இனிமையாக இருப்பதாக தோன்றும். அது போல் பல அரண்மனை கோட்டைச் சுவர்களை கடந்த, பல போரில் வென்ற அதியமானே உனக்கு என் மீது உள்ள அன்பின் காரணமாக மழலை மொழி போல் நான் கூறும் சாதாரண சொல்லும் இனிமையாக இருக்கிறது. இதில் என் பெருமை ஏதும் இல்லை.
மழலைச் சொல் இவ்வளவு இன்பம் என்றால், மழலைச் செல்வம் எவ்வளவு இன்பம்? அதை இப்பற்றி கூறும் புறப்பாடலை அடுத்துக் காண்போம்
புறம் வளரும் .......
சிறு விஷயம் செய்தாலே நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் பல பாடல்களைத் தந்த ஔவையோ தன் பாடலை குழந்தையின் சொல்லொடு ஒப்பிடுகிறார்.
தமிழுக்கு தொண்டு செய்யும் ஔவையின் சிறப்பை உணர்ந்த அதியமான் கிடைப்பதற்கு அறிய நெல்லிக்கனியை ஔவைக்கு பரிசாக அளித்தான். ஆனால் ஔவை இதற்கு கர்வம் கொள்ளாமல் ஒருவருக்கு தான் குழந்தை கூறும் மழலைச் சொல் புரியாவிட்டாலும் அது கேட்பதற்கு சுவையாக இருப்பது போல், அதியமானே உனக்கு என் மேல் உள்ள
அன்பின் காரணமாக நான் பாடும் சாதாரண பாடல் கூட மிக இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது என்று தன்னடக்கத்தோடு கூறுகிறார், அந்த பாடல்
பாடல் 13 : யாழொடும் கொள்ளா! (புறம் : 92)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : ..... துறை: இயன்மொழி.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.
பொருள் விளக்கம்:
மழலைச் சொல், யாழ் போல் இனிமையாக இருப்பதாக கொள்ள முடியாது, பொருள் இருக்காது, காலத்தோடும் பொருந்தி வாராது, ஆனாலும் தந்தைக்கு தன் குழந்தை கூறும் மழலைச் சொல் இனிமையாக இருப்பதாக தோன்றும். அது போல் பல அரண்மனை கோட்டைச் சுவர்களை கடந்த, பல போரில் வென்ற அதியமானே உனக்கு என் மீது உள்ள அன்பின் காரணமாக மழலை மொழி போல் நான் கூறும் சாதாரண சொல்லும் இனிமையாக இருக்கிறது. இதில் என் பெருமை ஏதும் இல்லை.
மழலைச் சொல் இவ்வளவு இன்பம் என்றால், மழலைச் செல்வம் எவ்வளவு இன்பம்? அதை இப்பற்றி கூறும் புறப்பாடலை அடுத்துக் காண்போம்
புறம் வளரும் .......
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Re: நல்ல தமிழ் அறிவோம் - புறநானூறு - தொடர் பதிவு
மழலைச் செல்வம்
நாம் வாழும் வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகள் உண்டு. இல்வாழ்க்கையில் உள்ளவருக்கு விருந்தோம்பல், நீத்தார் கடன், பெரியோரை பேணுதல், அறம் வளர்தல் என்ற பல கடமைகள் உள்ளது. என்ன தான் நமக்கு அனைத்து செல்வம் இருந்தாலும், மக்கள் செல்வம் தரும் மகிழ்ச்சி வேறு எந்த செல்வத்தினாலும் வருவதில்லை. குழந்தைகள் செய்யும் குறும்பு, விளையாட்டு, மழலைச் சொல் நமக்கு தரும் இன்பத்தைப் போல் வேறு எதுவும் தருவதில்லை. இப்படிப் பட்ட மழலைச் செல்வத்தின் பெருமையை கூறும் அழகான சங்கப் பாடல் இது.
பாடல் 14 : மக்களை இல்லோர் (புறம் : 188)
(மக்கள் பேற்றின் சிறப்பை கூறும் பாடல்)
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை : பொதுவியல் துறை: பொருண் மொழிக் காஞ்சி
படைப்புப்பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ்செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகைநீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடையடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறையில்லைத் தாம்வாழு நாளே.
பொருள் விளக்கம்
மக்கட்பேறு அல்ல பிற " - திருக்குறள் 61
விளக்கம் :எனக்கு தெரிந்த வரை அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுவதை விட சிறந்த செல்வம் ஏதும் இல்லை.
புறம் வளரும் .......
நாம் வாழும் வாழ்க்கையில் பல மகிழ்ச்சிகள் உண்டு. இல்வாழ்க்கையில் உள்ளவருக்கு விருந்தோம்பல், நீத்தார் கடன், பெரியோரை பேணுதல், அறம் வளர்தல் என்ற பல கடமைகள் உள்ளது. என்ன தான் நமக்கு அனைத்து செல்வம் இருந்தாலும், மக்கள் செல்வம் தரும் மகிழ்ச்சி வேறு எந்த செல்வத்தினாலும் வருவதில்லை. குழந்தைகள் செய்யும் குறும்பு, விளையாட்டு, மழலைச் சொல் நமக்கு தரும் இன்பத்தைப் போல் வேறு எதுவும் தருவதில்லை. இப்படிப் பட்ட மழலைச் செல்வத்தின் பெருமையை கூறும் அழகான சங்கப் பாடல் இது.
பாடல் 14 : மக்களை இல்லோர் (புறம் : 188)
(மக்கள் பேற்றின் சிறப்பை கூறும் பாடல்)
பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை : பொதுவியல் துறை: பொருண் மொழிக் காஞ்சி
படைப்புப்பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ்செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகைநீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடையடிசின் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறையில்லைத் தாம்வாழு நாளே.
பொருள் விளக்கம்
உலகத்தில் இது வரை படைக்கப்பெற்ற செல்வம் அனைத்தையும் உடையவர், பலருடன் உண்டு வாழும் மிகப் பெரிய செல்வம் உடையவர் என்ற பெருமை உடையவர் ஆயினும், அவருக்கு மக்கள் செல்வமே சிறந்த செல்வம் ஆகும்.
குறு குறு என்று நடந்து, சிறிய கைகளை நீட்டி, தொட்டு, தழுவி, வாயால் துழாவி, நெய்யிட்ட சோற்றை உண்டு, சிதறி,
ஓடி ,ஆடி, சிரித்து நம்மை மகிழ்ச் செய்யும் மழலைச் செல்வத்தை உடையவருக்கு தான் வாழும் நாளில் பயம் இல்லை. மக்கள் செல்வமே சிறந்த செல்வம் ஆகும்.
"பெருமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தகுறு குறு என்று நடந்து, சிறிய கைகளை நீட்டி, தொட்டு, தழுவி, வாயால் துழாவி, நெய்யிட்ட சோற்றை உண்டு, சிதறி,
ஓடி ,ஆடி, சிரித்து நம்மை மகிழ்ச் செய்யும் மழலைச் செல்வத்தை உடையவருக்கு தான் வாழும் நாளில் பயம் இல்லை. மக்கள் செல்வமே சிறந்த செல்வம் ஆகும்.
மக்கட்பேறு அல்ல பிற " - திருக்குறள் 61
விளக்கம் :எனக்கு தெரிந்த வரை அறிவார்ந்த பிள்ளைகளைப் பெறுவதை விட சிறந்த செல்வம் ஏதும் இல்லை.
புறம் வளரும் .......
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 48
Location : chennai
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நல்ல தமிழ் அறிவோம் - மூதுரை -தொடர் பதிவு
» அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
» அறிவோம் - பொது அறிவு தகவல்கள-தொடர் பதிவு
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» அறிவோம் தமிழ் - எழுத்துப்பிழை கற்பிப்பான்! (1)
» அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு
» அறிவோம் - பொது அறிவு தகவல்கள-தொடர் பதிவு
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» அறிவோம் தமிழ் - எழுத்துப்பிழை கற்பிப்பான்! (1)
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|