தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:46 pm
» ஈரோட்டில் மினி வேடந்தாங்கல்.. வெறும் ரூ.25 தான் டிக்கெட்..
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 2:31 pm
» ஆன்மீக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:10 am
» சமையல் குறிப்புகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:09 am
» இயற்கையை ரசிப்போம்..!
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:07 am
» மருத்துவ குறிப்புகள் & பாட்டி வைத்தியம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:05 am
» சிரிக்கலாம் சில நிமிடம்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 11:01 am
» நடிகர் டோவினோ தாமஸ்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:51 am
» மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:49 am
» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 10:46 am
» செல்போன் வெடித்து இளம்பெண் பலி..(சார்ஜ் போட்டபடி பேசியதால்)
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:56 am
» என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம்…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:54 am
» காதல் கவிதை வரிகள்
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:53 am
» இங்கு எளிதாய் கிடைப்பது…
by அ.இராமநாதன் Thu Sep 28, 2023 12:52 am
» ஒரு முத்தம் கொடேன்!
by அ.இராமநாதன் Wed Sep 20, 2023 6:40 pm
» ‘மண்வாசனை’ படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:19 pm
» கந்தன் காலடியை வணங்கினால்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:18 pm
» சிதம்பரம் ஸ்ரீ முக்குறுணி விநாயகர்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2023 4:17 pm
» முட்டை வாசம் பிடிக்காதவர்களுக்கு...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:57 pm
» கண் திருஷ்டி நீங்க...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:55 pm
» கடிகாரம் மாட்ட சிறந்த இடம்...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:53 pm
» வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவை...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:52 pm
» மகா புத்திசாலி...!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:50 pm
» குளிக்கும் போது...
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:48 pm
» அகல் விளக்கு
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:46 pm
» சிறந்த வரிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:45 pm
» வாழ்க்கைக் கணக்கு.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:44 pm
» மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாள்…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:43 pm
» இன்னக்கி நல்ல நாள்டி’… !
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:42 pm
» டாஸ்மாக்ல கூட்டம் அளவுக்கு அதிகமா இருக்கே…!!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» விசித்திரப் பறவைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:41 pm
» புத்தர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:38 pm
» எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm
» அமுதிலும் இனிதான 1957 காதல் பாடல்கள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:32 pm
» ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:30 pm
» நாளும் உந்தன் அரசாட்சி
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:29 pm
» கார்டியாக் அரஸ்ட்டுக்கும் – ஹார்ட் அட்டாக்குக்கும் என்ன வித்தியாசம்..
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:25 pm
» இதயம் காப்போம்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:23 pm
» மதுரை முக்குறுணி விநாயகர்.
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:21 pm
» அது ‘பெரிய மனுஷி’…!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:20 pm
» மனிதம் – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:19 pm
» பிரிவோம் சந்திப்போம்!! – கவிதைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:17 pm
» சமையல் துளிகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:16 pm
» கூறியது நடந்துவிட்டது… உற்சாகத்தில் எஸ்.ஜே.சூர்யா!
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:15 pm
» மரணம் பற்றிய நம்பிக்கைகள்
by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:14 pm
ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
ஹைக்கூ புதையல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
******
நூலாசிரியர் கவிஞர் பேனா தெய்வம் வரலாற்று சிறப்புமிக்க நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர். வளர்ந்து வரும் கவிஞர். முகநூலிலும் ஹைக்கூ கவிதைகள் வடித்து வருகிறார். ‘ஹைக்கூ புதையல்’ என்ற நூலின் மூலம்
தனிமுத்திரை பதித்து உள்ளார். சொற்கள் களிநடனம் புரிகின்றன. சொல்லாட்சியோடு ஹைக்கூ விருந்து படைத்துள்ளார். பாராட்டுகள்.
மழைக்காலத்தில்
வணிகம் செய்யும் குழந்தைகள்
காகிதக் கப்பல்!
மழைக்காலத்தில் குழந்தைகள் கப்பல் விடுவதை காட்சிப்-படுத்தும் விதமாக வடித்த ஹைக்கூ கவிதை நன்று. எதையும் உற்றுநோக்கும் பார்வையின் விளைவே ‘ஹைக்கூ புதையல்’
நூல் விளைவிற்குக் காரணம்.
முதியோர் இல்லத்திற்கு
தானம் செய்யப்பட்டது
பெற்றோர்கள்!
பெருமைமிகு நம்நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது நாட்டிற்கு அவமானம். ‘பெற்றோரை பேணிக்காக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை’ என்பதை பிள்ளைகள் உணரும் நாள் நன்னாள்.
கண்கள் கவனம்
வீட்டுக்குள் மின்னல்
தொலைக்காட்சி!
அயல்நாட்டிலும் தொலைக்காட்சிகள் உண்டு. அவர்கள் ஊறுகாய் போல பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் சோறு போல பயன்படுத்துகின்றனர். ‘தொடர்ந்து தொலைக்காட்சிகள் பார்ப்பது கண்களுக்கு கேடு தரும்’ என்பதை உணர்த்திய ஹைக்கூ நன்று.
பள்ளி வரை தொடர்வதல்ல
கொள்ளி வரை தொடர்வதே
நட்பு!
நட்பின் சிறப்பை பள்ளி, கொள்ளி என்று சொல் விளையாட்டின் மூலம் ‘மூச்சு இருக்கும் வரை தொடர்வதே உண்மையான நட்பு’ என்று உணர்த்தியது சிறப்பு. பாராட்டுகள்.
அறுவை சிகிச்சை செய்ய
மயக்க ஊசி வேண்டாம்
அவளைப் பார்த்தாலே போதும்!
அவளைப் பார்த்தாலே மயங்கி விடுவேன் என்பதை எள்ளல் சுவையுடன் ‘மயக்க ஊசி வேண்டாம், அவளை வரச் சொல்லுங்கள்’ என்ற நையாண்டி நன்று.
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்டங்களைக் கடந்தார்
வரலாற்று ஆசிரியர்
‘கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டங்களைக் கடந்தவர் யாரோ?’ என வியப்பில் ஆழ்த்தி, பின் விடையாக ‘வரலாற்று ஆசிரியர்’ என்று கணிக்க முடியாத விடை சொல்லி வெற்றி பெற்றுள்ளார்.
கையூட்டு வாங்காத
காவலன்
பூட்டு!
காவலர்களில் சிலர் கையூட்டு பெற்று வருகின்றனர். எந்தக் காலமும் அவர்கள் திருந்துவதில்லை. கையூட்டு வாங்காத நல்ல காவலர்களும் பலர் உண்டு. ‘பூட்டு, கையூட்டு வாங்குவதில்லை’ என்று சொல்லி, கையூட்டு வாங்கும் காவலர் தலையில் கொட்டு வைத்துள்ளார். பாராட்டுகள்.
எண்ணங்களை இமையமாக்கு
காலத்தை பாலமாக்கு
எதிலும் வாகை தான்!
தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக ‘எண்ணங்களை இமையமென உயரமாக்கினால் வெற்றிமாலை தோள்களில் விழும்’ என்று உணர்த்தியது சிறப்பு.
தூய்மை செய்ய வேண்டியது
கைகளை மட்டுமல்ல
மனதையும் தான்!
அடிக்கடி கைகளை சுத்தம் செய்தால் மட்டும் போதாது, மனதையும் சுத்தம் செய்யுங்கள். ‘மனதில் உள்ள அழுக்கை அகற்றுங்கள்’ என்று உணர்த்தியது நன்று.
தேர்வு வந்தது
பதற்றத்தில்
பெற்றோர்கள்!
உண்மை தான். தேர்வு எழுத இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் பதட்டப்பட்டு அவர்களையும் பதட்டமாக்கி விடுகின்றனர். ‘பதட்டம் தேவை இல்லை, இயல்பாக இருந்து அறிவுரை வழங்கினால் தேர்வில் வெற்றி பெறுவார்கள், சாதிப்பார்கள்.’
அடிக்கடி தூர்வாரப்பட்டது
அரசுக் கருவூலம்
கண்மாய்?
கண்மாய் தூர் வார்க்கிறோம் என்ற பெயரில் அரசுக் கருவூலம் தூர்வாரப்படுகிறது. ஆனால் கண்மாய் தூர் வாராமல் அப்படியே உள்ளது என்பதை சொல் விளையாட்டின் மூலம் ஊழலை படம்பிடித்துக் காட்டி உள்ளார். கண்மாய் தூர் வாரவில்லை என்ற செய்தி அடிக்கடி செய்தியாகப் பார்த்தது நினைவிற்கு வந்து போயின.
இரண்டாயிரம் பதுக்கியவன் புழலில்
இரண்டாயிரம் கோடி பதுக்கியவன்
புலாலோடு!
புழல், புலால் சொல் விளையாட்டில் நாட்டுநடப்பை படம்பிடித்துக் காட்டி உள்ளார். கோடிகளைக் கொள்ளையடித்து வெளிநாடுகள் சென்றவர்களை குறைந்தபட்சம் கைது கூட செய்ய முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மட்டை விளையாட்டை ரசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
போராட்டத்தில்
தேநீர் கொடுத்தான் சிறுவன்!
உண்மை தான். நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிக்கபடவில்லை. காரணம் ஏழ்மை ஒழியவில்லை. அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
வார்த்தெடுங்கள்
வறுத்தெடுக்காதீர்கள்
பாவம் மாணவர்களை!
மாணவர்களை தனிப்பயிற்சி என்ற பெயரில் வாட்டி எடுக்கும் அவலநிலை இன்றும் தொடர்கின்றன. ‘வாட்டி எடுக்காமல் வார்த்து எடுங்கள்’ என்ற அறிவுரை நன்று. மொத்தத்தில் ஹைக்கூ புதையல் மூலம் சிந்தனை விதை விதைத்துள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.
நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
******
நூலாசிரியர் கவிஞர் பேனா தெய்வம் வரலாற்று சிறப்புமிக்க நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்தும் செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர். வளர்ந்து வரும் கவிஞர். முகநூலிலும் ஹைக்கூ கவிதைகள் வடித்து வருகிறார். ‘ஹைக்கூ புதையல்’ என்ற நூலின் மூலம்
தனிமுத்திரை பதித்து உள்ளார். சொற்கள் களிநடனம் புரிகின்றன. சொல்லாட்சியோடு ஹைக்கூ விருந்து படைத்துள்ளார். பாராட்டுகள்.
மழைக்காலத்தில்
வணிகம் செய்யும் குழந்தைகள்
காகிதக் கப்பல்!
மழைக்காலத்தில் குழந்தைகள் கப்பல் விடுவதை காட்சிப்-படுத்தும் விதமாக வடித்த ஹைக்கூ கவிதை நன்று. எதையும் உற்றுநோக்கும் பார்வையின் விளைவே ‘ஹைக்கூ புதையல்’
நூல் விளைவிற்குக் காரணம்.
முதியோர் இல்லத்திற்கு
தானம் செய்யப்பட்டது
பெற்றோர்கள்!
பெருமைமிகு நம்நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது நாட்டிற்கு அவமானம். ‘பெற்றோரை பேணிக்காக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை’ என்பதை பிள்ளைகள் உணரும் நாள் நன்னாள்.
கண்கள் கவனம்
வீட்டுக்குள் மின்னல்
தொலைக்காட்சி!
அயல்நாட்டிலும் தொலைக்காட்சிகள் உண்டு. அவர்கள் ஊறுகாய் போல பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் சோறு போல பயன்படுத்துகின்றனர். ‘தொடர்ந்து தொலைக்காட்சிகள் பார்ப்பது கண்களுக்கு கேடு தரும்’ என்பதை உணர்த்திய ஹைக்கூ நன்று.
பள்ளி வரை தொடர்வதல்ல
கொள்ளி வரை தொடர்வதே
நட்பு!
நட்பின் சிறப்பை பள்ளி, கொள்ளி என்று சொல் விளையாட்டின் மூலம் ‘மூச்சு இருக்கும் வரை தொடர்வதே உண்மையான நட்பு’ என்று உணர்த்தியது சிறப்பு. பாராட்டுகள்.
அறுவை சிகிச்சை செய்ய
மயக்க ஊசி வேண்டாம்
அவளைப் பார்த்தாலே போதும்!
அவளைப் பார்த்தாலே மயங்கி விடுவேன் என்பதை எள்ளல் சுவையுடன் ‘மயக்க ஊசி வேண்டாம், அவளை வரச் சொல்லுங்கள்’ என்ற நையாண்டி நன்று.
கண்ணிமைக்கும் நேரத்தில்
கண்டங்களைக் கடந்தார்
வரலாற்று ஆசிரியர்
‘கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டங்களைக் கடந்தவர் யாரோ?’ என வியப்பில் ஆழ்த்தி, பின் விடையாக ‘வரலாற்று ஆசிரியர்’ என்று கணிக்க முடியாத விடை சொல்லி வெற்றி பெற்றுள்ளார்.
கையூட்டு வாங்காத
காவலன்
பூட்டு!
காவலர்களில் சிலர் கையூட்டு பெற்று வருகின்றனர். எந்தக் காலமும் அவர்கள் திருந்துவதில்லை. கையூட்டு வாங்காத நல்ல காவலர்களும் பலர் உண்டு. ‘பூட்டு, கையூட்டு வாங்குவதில்லை’ என்று சொல்லி, கையூட்டு வாங்கும் காவலர் தலையில் கொட்டு வைத்துள்ளார். பாராட்டுகள்.
எண்ணங்களை இமையமாக்கு
காலத்தை பாலமாக்கு
எதிலும் வாகை தான்!
தன்னம்பிக்கை விதை விதைக்கும் விதமாக ‘எண்ணங்களை இமையமென உயரமாக்கினால் வெற்றிமாலை தோள்களில் விழும்’ என்று உணர்த்தியது சிறப்பு.
தூய்மை செய்ய வேண்டியது
கைகளை மட்டுமல்ல
மனதையும் தான்!
அடிக்கடி கைகளை சுத்தம் செய்தால் மட்டும் போதாது, மனதையும் சுத்தம் செய்யுங்கள். ‘மனதில் உள்ள அழுக்கை அகற்றுங்கள்’ என்று உணர்த்தியது நன்று.
தேர்வு வந்தது
பதற்றத்தில்
பெற்றோர்கள்!
உண்மை தான். தேர்வு எழுத இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் பதட்டப்பட்டு அவர்களையும் பதட்டமாக்கி விடுகின்றனர். ‘பதட்டம் தேவை இல்லை, இயல்பாக இருந்து அறிவுரை வழங்கினால் தேர்வில் வெற்றி பெறுவார்கள், சாதிப்பார்கள்.’
அடிக்கடி தூர்வாரப்பட்டது
அரசுக் கருவூலம்
கண்மாய்?
கண்மாய் தூர் வார்க்கிறோம் என்ற பெயரில் அரசுக் கருவூலம் தூர்வாரப்படுகிறது. ஆனால் கண்மாய் தூர் வாராமல் அப்படியே உள்ளது என்பதை சொல் விளையாட்டின் மூலம் ஊழலை படம்பிடித்துக் காட்டி உள்ளார். கண்மாய் தூர் வாரவில்லை என்ற செய்தி அடிக்கடி செய்தியாகப் பார்த்தது நினைவிற்கு வந்து போயின.
இரண்டாயிரம் பதுக்கியவன் புழலில்
இரண்டாயிரம் கோடி பதுக்கியவன்
புலாலோடு!
புழல், புலால் சொல் விளையாட்டில் நாட்டுநடப்பை படம்பிடித்துக் காட்டி உள்ளார். கோடிகளைக் கொள்ளையடித்து வெளிநாடுகள் சென்றவர்களை குறைந்தபட்சம் கைது கூட செய்ய முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மட்டை விளையாட்டை ரசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
போராட்டத்தில்
தேநீர் கொடுத்தான் சிறுவன்!
உண்மை தான். நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிக்கபடவில்லை. காரணம் ஏழ்மை ஒழியவில்லை. அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
வார்த்தெடுங்கள்
வறுத்தெடுக்காதீர்கள்
பாவம் மாணவர்களை!
மாணவர்களை தனிப்பயிற்சி என்ற பெயரில் வாட்டி எடுக்கும் அவலநிலை இன்றும் தொடர்கின்றன. ‘வாட்டி எடுக்காமல் வார்த்து எடுங்கள்’ என்ற அறிவுரை நன்று. மொத்தத்தில் ஹைக்கூ புதையல் மூலம் சிந்தனை விதை விதைத்துள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2616
Points : 6284
Join date : 18/06/2010

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
» எனது ஹைக்கூ... நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் ச. தமிழரசன் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» தேன் சுவைத் துளிப்பாக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவென்றி நா .சுரேஷ் குமார் நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி .
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !
» 'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : முது முனைவர் வெ .இறையன்பு இ ஆ ..ப .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|