தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 12. மகளிருக்குக் கொடுமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
2 posters
Page 1 of 1
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 12. மகளிருக்குக் கொடுமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 12. மகளிருக்குக் கொடுமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
12. மகளிருக்குக் கொடுமை
பெண்களைத் தெய்வமாகப் போற்றுகின்ற உயர்வு மிக்க நாடு நம்முடைய நாடு என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படுகிறோம். உயிர்காக்கும் நதிகளைப் பெண் தெய்வமாகத்தான் பண்பாடு உள்ளவனாக மாற்றும் கல்வியாகிய கலைக்குரிய தெய்வத்தைப் பெண்ணாகப் போற்றுகிறோம். செல்வத்துக்கு அதிபதியும் ஒரு பெண் தெய்வமே. இத்தனைக்கும் மேலாக மனிதனைப் பத்து மாதங்களாகத் தன் வயிற்றில் சுமந்து தன் குருதியையும் தசையையும் அளித்து வருவாக்கிப் பெற்றுத் தருகின்ற தாயும் ஒரு பெண் தானே. அவளே முதல் தெய்வம். அந்தப் பெண் தெய்வங்களுக்கு நாம் செய்யும் கொடுமைகள் கொஞ்சமல்ல. வரவாறு தெரிந்த கால முதல் மகளிர்க்கு இழைக்கப்படும் தீமைகள் வளர்ந்து தான் வருகிறதே அல்லாமல் குறைந்த பாடில்லை. இத்தகு செயல்களைக் கவிஞர் பல இடங்களில் சாடுகிறார்.
கால்களில் முள் தைத்தாலும் கண் தானே அழுகிறது. ஒன்றுக்கொன்று உறவு கொண்ட அனுதாப நிலை. ஆனால் ஆணுக்கு வெறி பிடித்து விட்டால் அழிவது பெண்குலம் தானே. அவர்கள் சந்தன மரம் போன்றவர்கள். அவர்களை வெறும் அடுப்பெரிப்பது போல் பயன்படுத்துகிறதே இந்தச் சமுதாயம்.
பாதத்தில் முள்ளத் தச்சா
அழுவது கண்தானே?
ஆணுக்கு வெறிபுடிச்சா
அழிவது பெண்தானே?
பாவம் வந்தன மரம்
அடுப்பெரிக்கச் சொன்னானே. (1 - 39)
திருமணம் என்பது வெறும் போலி உறவாகி விட்டது. நம் சமுதாயத்தில் கல்யாண கோஷம் கூட வெறும் சந்தோஷ வேடமாகிப் போய்விட்டது. மணமகள் கழுத்தில் உள்ள பூமாலை கூடக் கண்ணீரின் மணம் தானே வீசுகிறது.
கல்யாண கோஷம் சந்தோஷ வேஷம்
கண்ணீரின் வாவம் பூமாலை வீசும். (1 - 47)
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுவதாகக் கூறப்படகிறதே. ஆனால் வரவேற்புகள் எல்லாம் நரகத்தில் நடத்தப்படுகின்றனவே. அப்படியானால் சொர்க்கத்தில் கூட லஞ்சம் பரவிக் கிடக்கிறதோ?
சொர்க்கத்தில் கல்யாணங்கள் - மாலையில்
நரகத்தில் வரவேற்புகள்
கல்யாணம் அங்கே முடிவாகுமென்றால்
சொர்க்கத்தில் கூட லஞ்சங்கள் உண்டோ?
(1 - 47)
பெண் இங்கே வயதுக்கு வந்துவிட்டால் அது பெரும் தவறாகிப் போகிறதே. சீதைபோன்ற பெண்களெல்லாம் கூடக் கூந்தல் நரைத்த கிழவியாகி வீணாகி போகிறார்களே. பூசை அறையில் வைத்து வணங்க வேண்டிய வீணை இங்கே அடுப்பெரிக்கும் விறகாகி வீணாகின்றனவே. இது தான் பெண்டிர் நிலையோ?
ஆளானதிங்கே தப்பாகிப் போச்சு
சீதைகளுக்கெல்லாம் கூந்தல் நரச்சாச்சு
வீணை கூட விறகாகிப் போச்சு. (1 - 47)
தெய்வங்களைப் பெண்ணென்று சொன்னார்களே. வெறும் பயனற்ற நித்தாந்தம் தானா? பெண்களைக் கண்ணீரில் குளிப்பாட்டிச் சமுதாயக்கேடென்னும் தெருவில் விட்டுவிட்டார்களே. ஒவ்வொரு நாளும் பெண்மை இங்கே போராடிக் கொண்டு தானே இருக்கிறது. அவர்கள் கண்களில் கண்ணீர் வழவதில்லை. கங்கை நதியில்லவா பாய்கிறது. கற்பைச் சுமையாகக் கொண்டல்லவா இங்கே பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தெய்வம் பெண்ணென்று சொன்னாரே,
எல்லாம் சித்தாந்தமா?
பெண்ணைக் கண்ணீரில் நீராட்டித்
தெருவில் விட்டாரம்மா
நாளும் பெண்மை போராடும்
கண்ணில் கங்கை நீராடும்
கற்பே சுமையாக
ஒரு போராட்டமா? (1 - 112)
சீதையைப் பற்றியும் ராமனைப் பற்றியும் உயர்வாகப் பேசுகிறோம். ராமனின் பெருமைக்கு அளவில்லை. ஆனாலும் சீதை சிந்தாந்த கண்ணீரா? இன்னும் இந்தக் கொடுமை இருந்து கொண்டு தானே இருக்கிறது. பெண்கள் நம் நாட்டில் கல்வியிலும் கலாச்சாரத்திலும் மிகவும் முன்னேறி விட்டதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றனவே. என்ன பயன்? இன்று தொட்டு இன்று வரை பெண்ணின் கண்ணீருக்கு மதிப்பில்லாமல் தானே இருக்கிறது. கவிஞரின் கேள்விக்கு இந்தச் சமுதாயம் என்ன பதில் சொல்லப் போகிறது?
சீதை சிந்தாத கண்ணீரா?
இன்னும் அதே நிலை
பெண்மை முன்னேறிப் போனாலும்
கண்ணீர் ஒரே விலை. (1 - 112)
இந்த நாட்டில் பெண்ணடிமை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறதென்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
ஆண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் எந்தத் துன்பமும் இல்லை. துன்பத்தைச் சுமந்து சுமந்து ஆணின் வெறியால் அலைக் கழிக்கப்படுகிறாளே. அத்தகைய தண்டனை ஆணுக்கு இல்லையே.
ஆண்களுக்கு
அவஸ்தை இல்லை
பெண்களுக்கே சுமைகளோ? (1 - 134)
வரதட்கணை என்ற பெயரில் நடைபெறுகின்ற கொடுமையும் இங்கே வளர்ந்து தான் வருகிறது. தாலி கட்டுவதற்குக் கூலி கேட்கின்ற கேவலத்தை நியாயப்படுத்துகிறார்களே. அவர்கள் என்ன படுக்கையறைக் கைதிகளோ? அவர்கள் செய்த குற்றம் பெண்ணாகப் பிறந்தது தானோ?
தாலி கட்டவும் கூலி கெட்பது
தர்மமான திங்கே.
.....
பள்ளியறைக் கைதி இல்லையே. (1 - 150)
பெண்ணுக்கும் கண்ணீர் மட்டுமா கரிக்கிறது. அவர்களின் மடியில் சுரக்கும் தாய்ப்பாலாகச் சுரந்தாலும் அதுவும் கண்ணிராகத் தான் கரிக்கும். பெண்கள் இச்சமுதாயத்தில் பெண்களாக மதிக்கப்படுவதில்லை. எச்சில் துப்பும் கிண்ணமாகத் தானே பலர் எண்ணுகின்றனர்.
தாய்ப்பால் கூடக் கண்ணீரோடு,
பெண்கள் யாரும் இங்குப்
பெண்களில்லை - அவர்
எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனது உண்ணம்? (2 - 10)
கவிஞர் சமுதாயச் சழக்கர்களைப் பார்த்துக் கேட்கும் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன?
கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக்கிச் சேரனும் தொழுதான். ஈழத்தாலும் தொழுதான். தமிழனும் தான். அத்தனையும் அவளை அமங்கலப்படுத்தி அழவைத்த பின் தானே? அப்போது தானே சிலையும் வைத்தனர்.
கண்ணகியை அன்று அழ வைத்தபார் - அடி
அதற்குப் பிறகே சிலை வைத்தார். (2 - 79)
பகலெல்லாம் பெண்ணைத் தொழுவதற்கு என்றே தெய்வமாக வைத்தவர்கள் இரவில் மட்டும் அம்தெய்வத்துக்கு விலை வைத்து விடுகின்றனர். பெண்களை விலைமகளாக மாற்றும் கொடுமை யாருடைய வீரம்?
பகலில் பெண்ணைத் தொழ வைத்தார் - அடி
இரவில் அதற்கோர் விலை வைத்தார். (2 - 79)
அவளை விலைமகளாக்கிய ஆடவர் சமுதாயத்தின் அவலத்தை அவ்வாறு ஆக்கப்பட்டவர் வாக்காலேயே கவிஞர் சொல்ல வைக்கிறார். எத்தனை எத்தனை ஆடவர் - செல்வந்தன், அரசியல்வாதி எனப்பலர். அவர்களில் பலர் அவள் கதையைக் கேட்டு முதலைக் கண்ணீர் வடித்துச் சென்றவர்களும் உண்டு; கடன் சொல்லிப் போனவர்களும் உண்டு. இத்தகைய ஆடவர் சமுதாயத்தில் மகளிர் நிலை இப்படித்தான் இருக்குமோ?
வண்டுகள் என்னிடம் வந்ததுண்டு - பல
துண்டுகள் என்னிடம் வந்ததுண்டு - என்
கதையைக் கேட்டு அழுததுண்டு - சிலர்
கடனும் சொல்லிப் போனதுண்டு. (1 - 79)
அவர்கள் அச்சிப்பு விளக்குப் பகுதியில் வாழும் வாழவக்கற்ற பெண்டிரினும் கேவலமானவர்கள் என்பதைத் தான் ‘முழுமை’ என்று சொல்லாமல் ‘துண்டு’, ‘துண்டு’ எனச் சொல்லிக் கவிஞர் சாடுகிறார் போலும்.
இங்கே துன்பங்கள், வேதனைகள் என்றும் ஆணுக்கு இல்லை. அவற்றைக் கொடுத்தவர்கள் அவர்களே. ஆனால் அவர்களுக்கோ துன்பம் இல்லை. ‘கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ’ என்று வள்ளுவன் கேட்பது போல் அவர்கள் உயிர் எங்கேணும் சென்று மறைந்து கொண்டதோ?
துன்பம் என்றும் ஆணுக்கல்ல - அது
அன்றும் இன்றும் பெண்களுக்கே. (2 - 124)
அதனால் தான் பெண் சிந்திய கண்ணீரால் இந்தப் பூமி மட்டுமல்ல - வானமும் கூட நனைந்து போயிற்றுப் போலும் என்று கவிஞர் கேட்பது நம் நெஞ்சில் தைக்கிறது. நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா. (2 - 124)
இருவருக்கும் சமநீதி என்றால் ஆணுக்கும் பத்து மாதச் சுமையை வைத்திருக்க வேண்டுமே. பெண்கள் மட்டும் பத்து மாதம் சுமக்க வேண்டும் என்றால் அவர்களுக்குப் பரம்பரைச் சொத்தா? சமுதாயத்தில் சமநீதி இல்லை என்பதைக் கவிஞர் கடுமையாகத் தான் சாடுகிறார்.
பத்து மாதம் பெண்களுக்கே
பரம்பரைச் சொத்தால் - அடி
பத்து முழம் பூவை வைத்தால்
பாரம் என்னவாகும்? (2 - 144)
மகளிருக்கு விருப்பம் மிக்கது மலர் என்பதால் பத்து முழப் பூவை அவர்கள் தலையில் வைத்தால் என்னவாகும்? அலிச்சப் பூவைக் காம்புகளையாமல் தலையிலே சூடிவிட்ட அவள் அப்பாரம் தங்காமல் இடுப்பொடிந்து இறந்துவிட்டாள் என்று வள்ளுவன் கூறுவது போல மென்மைமிக்க மகளிர் பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கும் கொடுமை கொடியதாயிற்றே. அவர்களிடம் கருணை காட்டாத மனிதப் பிறவி மனித இனத்தில் சேர்க்கப்பட முடியாத ஒன்று. நல்லதொரு உவமையைக் கவிஞர் சொல்வார்.
தண்ணீரு இல்லாம
நதியே இல்லீங்க. (2 - 159)
அதுபோல,
கண்ணீரு இல்லாம
பொம்பளை இல்லீங்க. (2 - 159)
உவமை சிறப்பாகப் பொருந்துகிறது. ஆனால் உள்ளம் அதில் பொருந்தாமல் சிந்திக்க வைத்துவிட்டார் கவிஞர்.
பெண்கள் இடுப்பில் நீர்க்குடம் ஏந்துகிறார்கள். அதைவிட, அவர்கள் கண்களில் நீர்க்குடம் ஏந்துவதை யாரேனும் கவனித்ததுண்டா? அப்பெண்டிர் வாழ்க்கையில் என்ன கண்டனர்? ஒன்றுமில்லை --- ஒன்றுமேயில்லை.
கண்ணில் நீர்க்குடம் ஏந்திய மங்கையர்
கண்டது பூஜ்ஜியமா? (2 - 162)
ஆண்டாண்டு காலமாக அழுதே வளர்ந்திருக்கும் பெண்களுக்கு அழுவதையே கலையாக வைத்துவிட்டான் போலும் இறைவன். இக்கொடுமை கண்டு கவிஞர் மனம் தாங்கவில்லை என்பதைச் சில பாடல்களில் பாடினாலும் சிலை போல நிலைத்து நிற்கும் பாடல்களாகவே பாடியுள்ளார்.
சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
drthyagarajan2010@gmail.com
12. மகளிருக்குக் கொடுமை
பெண்களைத் தெய்வமாகப் போற்றுகின்ற உயர்வு மிக்க நாடு நம்முடைய நாடு என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமைப்படுகிறோம். உயிர்காக்கும் நதிகளைப் பெண் தெய்வமாகத்தான் பண்பாடு உள்ளவனாக மாற்றும் கல்வியாகிய கலைக்குரிய தெய்வத்தைப் பெண்ணாகப் போற்றுகிறோம். செல்வத்துக்கு அதிபதியும் ஒரு பெண் தெய்வமே. இத்தனைக்கும் மேலாக மனிதனைப் பத்து மாதங்களாகத் தன் வயிற்றில் சுமந்து தன் குருதியையும் தசையையும் அளித்து வருவாக்கிப் பெற்றுத் தருகின்ற தாயும் ஒரு பெண் தானே. அவளே முதல் தெய்வம். அந்தப் பெண் தெய்வங்களுக்கு நாம் செய்யும் கொடுமைகள் கொஞ்சமல்ல. வரவாறு தெரிந்த கால முதல் மகளிர்க்கு இழைக்கப்படும் தீமைகள் வளர்ந்து தான் வருகிறதே அல்லாமல் குறைந்த பாடில்லை. இத்தகு செயல்களைக் கவிஞர் பல இடங்களில் சாடுகிறார்.
கால்களில் முள் தைத்தாலும் கண் தானே அழுகிறது. ஒன்றுக்கொன்று உறவு கொண்ட அனுதாப நிலை. ஆனால் ஆணுக்கு வெறி பிடித்து விட்டால் அழிவது பெண்குலம் தானே. அவர்கள் சந்தன மரம் போன்றவர்கள். அவர்களை வெறும் அடுப்பெரிப்பது போல் பயன்படுத்துகிறதே இந்தச் சமுதாயம்.
பாதத்தில் முள்ளத் தச்சா
அழுவது கண்தானே?
ஆணுக்கு வெறிபுடிச்சா
அழிவது பெண்தானே?
பாவம் வந்தன மரம்
அடுப்பெரிக்கச் சொன்னானே. (1 - 39)
திருமணம் என்பது வெறும் போலி உறவாகி விட்டது. நம் சமுதாயத்தில் கல்யாண கோஷம் கூட வெறும் சந்தோஷ வேடமாகிப் போய்விட்டது. மணமகள் கழுத்தில் உள்ள பூமாலை கூடக் கண்ணீரின் மணம் தானே வீசுகிறது.
கல்யாண கோஷம் சந்தோஷ வேஷம்
கண்ணீரின் வாவம் பூமாலை வீசும். (1 - 47)
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுவதாகக் கூறப்படகிறதே. ஆனால் வரவேற்புகள் எல்லாம் நரகத்தில் நடத்தப்படுகின்றனவே. அப்படியானால் சொர்க்கத்தில் கூட லஞ்சம் பரவிக் கிடக்கிறதோ?
சொர்க்கத்தில் கல்யாணங்கள் - மாலையில்
நரகத்தில் வரவேற்புகள்
கல்யாணம் அங்கே முடிவாகுமென்றால்
சொர்க்கத்தில் கூட லஞ்சங்கள் உண்டோ?
(1 - 47)
பெண் இங்கே வயதுக்கு வந்துவிட்டால் அது பெரும் தவறாகிப் போகிறதே. சீதைபோன்ற பெண்களெல்லாம் கூடக் கூந்தல் நரைத்த கிழவியாகி வீணாகி போகிறார்களே. பூசை அறையில் வைத்து வணங்க வேண்டிய வீணை இங்கே அடுப்பெரிக்கும் விறகாகி வீணாகின்றனவே. இது தான் பெண்டிர் நிலையோ?
ஆளானதிங்கே தப்பாகிப் போச்சு
சீதைகளுக்கெல்லாம் கூந்தல் நரச்சாச்சு
வீணை கூட விறகாகிப் போச்சு. (1 - 47)
தெய்வங்களைப் பெண்ணென்று சொன்னார்களே. வெறும் பயனற்ற நித்தாந்தம் தானா? பெண்களைக் கண்ணீரில் குளிப்பாட்டிச் சமுதாயக்கேடென்னும் தெருவில் விட்டுவிட்டார்களே. ஒவ்வொரு நாளும் பெண்மை இங்கே போராடிக் கொண்டு தானே இருக்கிறது. அவர்கள் கண்களில் கண்ணீர் வழவதில்லை. கங்கை நதியில்லவா பாய்கிறது. கற்பைச் சுமையாகக் கொண்டல்லவா இங்கே பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
தெய்வம் பெண்ணென்று சொன்னாரே,
எல்லாம் சித்தாந்தமா?
பெண்ணைக் கண்ணீரில் நீராட்டித்
தெருவில் விட்டாரம்மா
நாளும் பெண்மை போராடும்
கண்ணில் கங்கை நீராடும்
கற்பே சுமையாக
ஒரு போராட்டமா? (1 - 112)
சீதையைப் பற்றியும் ராமனைப் பற்றியும் உயர்வாகப் பேசுகிறோம். ராமனின் பெருமைக்கு அளவில்லை. ஆனாலும் சீதை சிந்தாந்த கண்ணீரா? இன்னும் இந்தக் கொடுமை இருந்து கொண்டு தானே இருக்கிறது. பெண்கள் நம் நாட்டில் கல்வியிலும் கலாச்சாரத்திலும் மிகவும் முன்னேறி விட்டதாகக் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றனவே. என்ன பயன்? இன்று தொட்டு இன்று வரை பெண்ணின் கண்ணீருக்கு மதிப்பில்லாமல் தானே இருக்கிறது. கவிஞரின் கேள்விக்கு இந்தச் சமுதாயம் என்ன பதில் சொல்லப் போகிறது?
சீதை சிந்தாத கண்ணீரா?
இன்னும் அதே நிலை
பெண்மை முன்னேறிப் போனாலும்
கண்ணீர் ஒரே விலை. (1 - 112)
இந்த நாட்டில் பெண்ணடிமை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறதென்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
ஆண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் எந்தத் துன்பமும் இல்லை. துன்பத்தைச் சுமந்து சுமந்து ஆணின் வெறியால் அலைக் கழிக்கப்படுகிறாளே. அத்தகைய தண்டனை ஆணுக்கு இல்லையே.
ஆண்களுக்கு
அவஸ்தை இல்லை
பெண்களுக்கே சுமைகளோ? (1 - 134)
வரதட்கணை என்ற பெயரில் நடைபெறுகின்ற கொடுமையும் இங்கே வளர்ந்து தான் வருகிறது. தாலி கட்டுவதற்குக் கூலி கேட்கின்ற கேவலத்தை நியாயப்படுத்துகிறார்களே. அவர்கள் என்ன படுக்கையறைக் கைதிகளோ? அவர்கள் செய்த குற்றம் பெண்ணாகப் பிறந்தது தானோ?
தாலி கட்டவும் கூலி கெட்பது
தர்மமான திங்கே.
.....
பள்ளியறைக் கைதி இல்லையே. (1 - 150)
பெண்ணுக்கும் கண்ணீர் மட்டுமா கரிக்கிறது. அவர்களின் மடியில் சுரக்கும் தாய்ப்பாலாகச் சுரந்தாலும் அதுவும் கண்ணிராகத் தான் கரிக்கும். பெண்கள் இச்சமுதாயத்தில் பெண்களாக மதிக்கப்படுவதில்லை. எச்சில் துப்பும் கிண்ணமாகத் தானே பலர் எண்ணுகின்றனர்.
தாய்ப்பால் கூடக் கண்ணீரோடு,
பெண்கள் யாரும் இங்குப்
பெண்களில்லை - அவர்
எச்சில் துப்பும் ஒரு கிண்ணம்
என்று தானே உனது உண்ணம்? (2 - 10)
கவிஞர் சமுதாயச் சழக்கர்களைப் பார்த்துக் கேட்கும் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன?
கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக்கிச் சேரனும் தொழுதான். ஈழத்தாலும் தொழுதான். தமிழனும் தான். அத்தனையும் அவளை அமங்கலப்படுத்தி அழவைத்த பின் தானே? அப்போது தானே சிலையும் வைத்தனர்.
கண்ணகியை அன்று அழ வைத்தபார் - அடி
அதற்குப் பிறகே சிலை வைத்தார். (2 - 79)
பகலெல்லாம் பெண்ணைத் தொழுவதற்கு என்றே தெய்வமாக வைத்தவர்கள் இரவில் மட்டும் அம்தெய்வத்துக்கு விலை வைத்து விடுகின்றனர். பெண்களை விலைமகளாக மாற்றும் கொடுமை யாருடைய வீரம்?
பகலில் பெண்ணைத் தொழ வைத்தார் - அடி
இரவில் அதற்கோர் விலை வைத்தார். (2 - 79)
அவளை விலைமகளாக்கிய ஆடவர் சமுதாயத்தின் அவலத்தை அவ்வாறு ஆக்கப்பட்டவர் வாக்காலேயே கவிஞர் சொல்ல வைக்கிறார். எத்தனை எத்தனை ஆடவர் - செல்வந்தன், அரசியல்வாதி எனப்பலர். அவர்களில் பலர் அவள் கதையைக் கேட்டு முதலைக் கண்ணீர் வடித்துச் சென்றவர்களும் உண்டு; கடன் சொல்லிப் போனவர்களும் உண்டு. இத்தகைய ஆடவர் சமுதாயத்தில் மகளிர் நிலை இப்படித்தான் இருக்குமோ?
வண்டுகள் என்னிடம் வந்ததுண்டு - பல
துண்டுகள் என்னிடம் வந்ததுண்டு - என்
கதையைக் கேட்டு அழுததுண்டு - சிலர்
கடனும் சொல்லிப் போனதுண்டு. (1 - 79)
அவர்கள் அச்சிப்பு விளக்குப் பகுதியில் வாழும் வாழவக்கற்ற பெண்டிரினும் கேவலமானவர்கள் என்பதைத் தான் ‘முழுமை’ என்று சொல்லாமல் ‘துண்டு’, ‘துண்டு’ எனச் சொல்லிக் கவிஞர் சாடுகிறார் போலும்.
இங்கே துன்பங்கள், வேதனைகள் என்றும் ஆணுக்கு இல்லை. அவற்றைக் கொடுத்தவர்கள் அவர்களே. ஆனால் அவர்களுக்கோ துன்பம் இல்லை. ‘கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ’ என்று வள்ளுவன் கேட்பது போல் அவர்கள் உயிர் எங்கேணும் சென்று மறைந்து கொண்டதோ?
துன்பம் என்றும் ஆணுக்கல்ல - அது
அன்றும் இன்றும் பெண்களுக்கே. (2 - 124)
அதனால் தான் பெண் சிந்திய கண்ணீரால் இந்தப் பூமி மட்டுமல்ல - வானமும் கூட நனைந்து போயிற்றுப் போலும் என்று கவிஞர் கேட்பது நம் நெஞ்சில் தைக்கிறது. நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா. (2 - 124)
இருவருக்கும் சமநீதி என்றால் ஆணுக்கும் பத்து மாதச் சுமையை வைத்திருக்க வேண்டுமே. பெண்கள் மட்டும் பத்து மாதம் சுமக்க வேண்டும் என்றால் அவர்களுக்குப் பரம்பரைச் சொத்தா? சமுதாயத்தில் சமநீதி இல்லை என்பதைக் கவிஞர் கடுமையாகத் தான் சாடுகிறார்.
பத்து மாதம் பெண்களுக்கே
பரம்பரைச் சொத்தால் - அடி
பத்து முழம் பூவை வைத்தால்
பாரம் என்னவாகும்? (2 - 144)
மகளிருக்கு விருப்பம் மிக்கது மலர் என்பதால் பத்து முழப் பூவை அவர்கள் தலையில் வைத்தால் என்னவாகும்? அலிச்சப் பூவைக் காம்புகளையாமல் தலையிலே சூடிவிட்ட அவள் அப்பாரம் தங்காமல் இடுப்பொடிந்து இறந்துவிட்டாள் என்று வள்ளுவன் கூறுவது போல மென்மைமிக்க மகளிர் பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கும் கொடுமை கொடியதாயிற்றே. அவர்களிடம் கருணை காட்டாத மனிதப் பிறவி மனித இனத்தில் சேர்க்கப்பட முடியாத ஒன்று. நல்லதொரு உவமையைக் கவிஞர் சொல்வார்.
தண்ணீரு இல்லாம
நதியே இல்லீங்க. (2 - 159)
அதுபோல,
கண்ணீரு இல்லாம
பொம்பளை இல்லீங்க. (2 - 159)
உவமை சிறப்பாகப் பொருந்துகிறது. ஆனால் உள்ளம் அதில் பொருந்தாமல் சிந்திக்க வைத்துவிட்டார் கவிஞர்.
பெண்கள் இடுப்பில் நீர்க்குடம் ஏந்துகிறார்கள். அதைவிட, அவர்கள் கண்களில் நீர்க்குடம் ஏந்துவதை யாரேனும் கவனித்ததுண்டா? அப்பெண்டிர் வாழ்க்கையில் என்ன கண்டனர்? ஒன்றுமில்லை --- ஒன்றுமேயில்லை.
கண்ணில் நீர்க்குடம் ஏந்திய மங்கையர்
கண்டது பூஜ்ஜியமா? (2 - 162)
ஆண்டாண்டு காலமாக அழுதே வளர்ந்திருக்கும் பெண்களுக்கு அழுவதையே கலையாக வைத்துவிட்டான் போலும் இறைவன். இக்கொடுமை கண்டு கவிஞர் மனம் தாங்கவில்லை என்பதைச் சில பாடல்களில் பாடினாலும் சிலை போல நிலைத்து நிற்கும் பாடல்களாகவே பாடியுள்ளார்.
Dr Maa Thyagarajan- மல்லிகை
- Posts : 147
Points : 391
Join date : 11/01/2011
Re: கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு – 12. மகளிருக்குக் கொடுமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
இலக்கிய பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 21. குடியின் கொடுமை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 19.சட்டம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -35. பலதாரம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 36. பெருந்திணை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு - 14. இசை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு- 19.சட்டம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு -35. பலதாரம், சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கவிஞர் வைரமுத்து - திரைப்பாடல்கள் தொகுதி 1,2 - ஓர் ஆய்வு 36. பெருந்திணை, சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|