தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

Go down

 மெய் உறக்கம் -  வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Empty மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

Post by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:06 am

மெய் உறக்கமே  மரணம் 


உறக்கமே சுவர்க்கம்
உறக்கமே  நரகம்
உறக்கமே கனவு
உறக்கமே நினைவு
உறக்கமே  மனசாட்சி
உறக்கமே மரணத்தின் சகோதரன்
ஆம் ! மரணமே மெய் உறக்கம்
மரணமே ஏகாந்தம்
ஏகாந்தமே நிலையான மெய் உறக்கம்! 

- புகழேந்தி இக்பால் 

**

ஒரு கை பல் துலக்கும்- மற்றொன்று
சிற்றுண்டி தயாரிக்கும் ,
ஒரு ஆக்டோபஸ் திறமை !!
சுருண்டு படுக்கும் குழந்தையை
சுண்டி எழுப்பி, அவசரச்சமையலுக்கு
தன் கையால் சுவை கூட்டி
ஊட்டி விடும் அருமை !!
அலுவலகத்தில் சில கருப்புக்கண்களின்
பார்வை ஊர்வலத்தை தடுத்துத்
திருப்பி அனுப்ப,  அலங்காரமில்லா அழகுடன்
ஆடை அணியும் பொறுமை !!
மாலையில் கணவருக்கு
அருகே அமர்ந்தபடி
காப்பி சுவைத்து மகிழும் செழுமை !!
அகங்காரத்தோல் உரித்து, பழங்களை
பணிவுத்தேனில் குழைத்து,
பெரியவர்களுக்கு வழங்கும் பழமை !!
கடமைகள் கசக்கிய உடல்:
ஒரு வெள்ளை மனதுடன்
இரவில் இவளைப்போல் படுக்கச்செல்!  
மாத்திரைகள் போடாத
மெய்யுறக்கம் அது !!

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி

**

மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !
பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது !

தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்தது 
தொல்லைக்காட்சியானது  தொலைக்காட்சி !

தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும் 
தொடர்கின்றது இரவில்  நெடுநேர விழிப்பு !

தொடர்களில் எதிர்மறை சிந்தனை போதிப்பு
தொலைந்து விடுகிறது நிம்மதியான உறக்கம் !

கெட்ட சிந்தனை  நாளும் விதைக்கின்றனர் 
கேட்ட காரணத்தால் போனது உறக்கம் !

இரவு உறக்கத்தை இல்லாமல் ஆக்கியது
இளசுகளோ கைபேசியில் மூழ்கியது !

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல 
அலைபேசியும் நஞ்சு உணர்ந்திட வேண்டும் !

கணினியும் கண்களுக்கு  இன்று கேடானது 
கண்ட நேரம் நேரத்தை விழுங்கி விடுகிறது !

நாளும் அறிவியல் கண்டுபிடிப்பால்
நன்மையை விட தீமை அதிகமானது !

அன்று இல்லை தூக்கம் இன்மை 
இன்று உள்ளது தூக்கம் இன்மை !

அன்று அதிகாலை எழுந்தனர் பலரும் 
அதிகாலை எழுவது இல்லை என்றானது !

கோழித் தூக்கம் மனிதத் தூக்கம் ஆனது 
கண்கள் காணவில்லை மெய் உறக்கம்! 
 
- கவிஞர் இரா .இரவி

**
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 மெய் உறக்கம் -  வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Empty Re: மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

Post by அ.இராமநாதன் Mon Nov 19, 2018 11:06 am

குடுவையே மனிதன் என்றுகொண்டால்
குடுவையுள் குலுங்கும் திரவங்கள்
ஏதோ ஒருசமநிலை எட்டிப்பிடிக்க‌
கடவுள் தந்த கருவியே  
உறக்கம்.

ஏறி இறங்கும் மூச்சுக்காற்றில்
குடுவையுள் சுழலும் சக்கரங்கள்
ஏதோ உயர்நிலை எட்டித்தழுவ‌
இயற்கை செய்த விந்தையே  
உறக்கம்.

ஆசையும் மோகமும் காமமும்
கோபமும் இன்னும்சில‌பல‌ கசடுகளெல்லாம்
இறுகப்படிந்த உடலை மனதை
மெல்லத் தளர்த்திக் கசடுகள்கரைய‌
உடலும்மனமும் விழையும் செயலே
உறக்கம்.

தன்னால் உலகால் தன்னில்
எழுதிப்படிந்த எண்ணங்கள் பிம்பங்கள்
குடுவை கொள்ளும் ஏதோஅதிர்வினில்
கனவாய் மெதுவாய்க் கல‌ந்துபேச‌
உடலும்மனமும் தளரும் நிகழ்வே
உறக்கம்.

எது மெய் உறக்கம் ?
உள்ளங்கைகள் அளவே உணவும்
உழைத்துச் சலித்த உடலும்
கசடுகள் களைந்த மனமும்
மெல்லக்கிடந்து மெதுவாய்த் தளர‌
ஒன்றைப் பற்றிய ஒருமுகத்தால்
தன்னைமறந்து தன்னிலை மறந்து
மெல்லமுகிழும் தாமரை மலர்போல்
தன்னைத் தன்னால் மலர்த்தி
மகிழ்ந்து மலரும் நிகழ்வே
மெய் உறக்கம் !!.

உலகம் பற்றிய ஒருமுகம்
கடவுள் என்று சொன்னால்
என் "உள் கட" ந்த உன்னை நானும்
கடவுள் என்பேன்.
என் குருவும் என்பேன்..

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா

**
காலையில் எழுந்ததும் எறுப்பைப்பார்
காலையில் அவை தூங்குவதுண்டோ!
அவை வாயில் சிறு உணவைத் தூக்கி 
வரிசை வரிசையாய்ச் செல்வதைப் பார்!
குட்டிக்குட்டித் தேனீக்கள் குழுவாய்
மலர்கள் தேடிப் பறந்து திரிவதைப் பார்
உழைத்து உண்டு இரவில் உறங்குவது
ஆழ்ந்த உறக்கத்தில் மெய்மறந்தே!
உழைத்துப்பார் உறக்கம் கிட்டும் 
உறங்கிப்பார் உற்சாகம் கிட்டும்
கண்களை விடியும்வரை விழித்து இரவில்
கணினியின் முன் காலத்தைப் போக்காதே
கோழி உறக்கம் விரைந்து காலனுக்கு வழிவிடும்
காலனை விரட்ட ஆழ்ந்த தூக்கம் துணை நிற்கும்
தேனீ போல் சுற்றிப் பறந்து திரித்து விளையாடு!
எறும்புகள் போல் சுறுசுறுப்பாய் உழைத்து நீ திரி
மெய்உறக்கம் மெல்லவே ஆழ்உறக்கமாய்த்  தழுவ
மெய் புத்துணர்வு பெறும் நீ மேதினியில்
மேன்மையாய் வாழ்வாய் நன்றாய் என்றுமே!

**

நிம்மதியை பிச்சையாகக் கேட்டு வாசலில் 
நின்று அம்மா தாயே என்று துன்பமும் 
துயரமும் குரலெழுப்பும் 

இல்லையென கூறாது மனமிறங்கி 
இன்று போய் நாளை வா யென்னும்
பதாதையை தொங்க விட்டிடினும் 

மெய் உறக்கம் உறங்க விட்டிடாது 
ஏதேனும் மொரு குறை யில்லாமல் 
ஜீவிதம் துவங்காது சற்றும் முடியாது 

அக்குறையிடமே நிறையாக்கிடும் மூல 
மந்திர முளததை கற்றிட கற்றவற்றை 
கல்லாதாருக்கும் கற்பித்திடவே யது

மனிதர் மேல் மனிதர் மனிதநேயம் 
கொள்ளா விடில் மெய் உறக்கம் 
கொண்டிடல் குதிரை கொம்பேயாம்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்

**
மெய் உறங்கும் வேளையிலே
பொய் எழுந்து ஆடிவிடும்
நேர்மை ஓடி ஒளிந்துவிடும்
நேசம்கூட தேசம் நீங்கி சாடிவிடும்.

பாசம் வளர்க்கும் சூழலிலே
பாசாங்கு செய்யும் வேளையிலே
மோசம் காட்ட எண்ணாமல்
தேகம் காட்டுதே சாகசங்கள்.

மெய் உறக்கம் மறந்திடுவார்
மெச்சி மெச்சி பேசிடுவார்
கனவுகளில் கரைந்திடுவார்
காதலுக்குள் மூழ்கிடுவார்.

இயந்திரங்கள் போல் வாழ்க்கை
இந்நாளில் சுழலுதென்றே
இயல்புடனே இயம்புகின்றார்
இரவு பகல் பாராமல்
இயன்றவரை உழைக்கின்றார்.

மெய் உறக்கம் கேட்டிடினும்
மெய்யாலுமே நாம் ஏற்பதில்லை
பொய் கூறிட  மறப்பதில்லை
பொதுவில் பொதுவாக நினைப்பதில்லை
தாய் தந்தை அருகிருக்க
தனயன்மார் நினைப்பதில்லை.

விதிகள் நாம் மதிப்பதில்லை
விபத்தில் சிக்க தவறவில்லை
அவசியமெய் உறக்கம் தவிர்த்து
அலைபேசி அடிமையாக மறப்பதில்லை.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் சிறுமுகை

**
மெய் உறக்கம் மிகாமல் மிதமாய் இருந்தாலே
மென்மையாய் உள்ளம் மேன்மைக்கு வழிகோலி
நல்லதையே  நாடும்!  நயமாய்ச்  சிந்திக்கும்!
கல்லாததைக்கூட   கற்க    ஓடி     வரும்!
நில்லா இவ்வுலகில் நிம்மதி அடைந்திடவே
பல்லா வகையானும் பக்குவமாய்த் தினமுழைக்கும்!

உறக்கந்தான் வாழ்வுக்கு உசுப்பேத்தும் நல்மருந்து!
கிறக்கமின்றி  வாழ்ந்திடவும்  கீழ்நிலையைத் தவிர்த்திடவும்
இரக்கமின்றி நடப்போர்க்கு இனிதினையே செய்திடவும்
அரக்கக்  குணத்தோர்க்கு  அன்பைப்  பகிர்ந்திடவும்
பரக்கப் பரக்கத் தினம் பலவேலை பார்ப்போர்க்கு 
திறக்கத்  திறக்கத்   தினம்தெவிட்டாத  அருமருந்து! 

பொய்உறக்கம்  கொள்வோரே பொழுதெல்லாம்  சோம்பிப்போய்
நெய்வடியும்  முகத்துடனே  நிம்மதியைத்  தொலைத்துவிட்டு
உறவுகளின்     மத்தியிலே    உயிர்ச்சடலம்    நிற்பதுபோல்
அரவுகளின்   இடையினிலே     அல்லாடும்    விலங்கினமாய்
பல்லாண்டு  வாழ்ந்தாலும்     பாருக்குப்   பயனின்றி
எல்லா     நிலையிலுமே       ஏக்கத்தில்    மூழ்கிடுவர்!

தூங்கும்    வேளையிலே   துக்கம்    தனைமறந்து
ஆங்கே   நல்லாக்கம்  அயராத   உழைப்புக்கு
அமிர்தம் உறக்கமென்றால் அதிலேதும் தவறில்லை!
தர்மம்   பூவுலகில்   தக்கபடி   தழைத்திடவும்
உடலில் உரமேற்றி உயர்ந்தபணி ஆற்றிடவும்
மெய்யுறக்கம் கொண்டிடுவோம்!மெல்ல வாருங்கள்!

-ரெ.ஆத்மநாதன்

**

கண்மூடி  மெய்உறக்கம்  கொண்டி  ருந்தால்
    கனவினிலும்  நல்வழிகள்  தெரிந்தி  டாது
விண்மீதில்  பறப்பதற்கே   ஆசை  கொண்டால்
    வெறுங்கையை  வீசிநின்றால்  நடந்தி  டாது !
மண்மீதில்  பெயர்நிறுவி  புகழ்கு  விக்க
    மனம்மட்டும்  விரும்புவதால்  நடந்தி  டாது
திண்மைமிகு  உண்மையுடன்  தளர்ச்சி  யின்றித்
    தினமுழைத்தால்  தானிங்கே  வெற்றி  கிட்டும் !

புல்லர்க்கு  வழிவிட்டுப்  புறத்தே  நின்றால்
    புல்கூட  நம்காலைப்  புரட்டி  வீழ்த்தும்
பொல்லாமை  கண்டஞ்சி  மௌன  மானால்
    பொய்புரட்டே  மேடையேறி  வீரம்  பேசும் !
நல்லவர்கள்  வீட்டிற்குள்  பதுங்கிக்  கொண்டால்
    நரிகளிங்கே  நாடாளும்  தலைமை  யாகும்
வல்லடிமை  நினைவகற்றித்  துணிவு  பெற்று
    வந்தால்தான்  நல்லவையும்  நடக்கு  மிங்கே !

நமக்கென்ன  என்றொதுங்கி   நாமி  ருந்தால்
    நம்கண்ணை  நாம்குத்திக்  கெடுவ  தாகும்
தமகென்றே   வாழ்வோரின்   தாளில்  வீழ்ந்தால்
    தலைகனத்து  நம்வயிற்றில்  காலை  வைப்பர் !
சுமக்கின்ற   கொடுமைகளைச்  சிலுவை  என்றே
    சுமந்துநின்றால்   முள்மகுடம்  சூட்டிப்  பார்ப்பர்
நமதென்னும்   பொதுமையிலே   மானத்  தோடு
    நாமெழுந்தால்   நற்காலம்   பூக்கு  மிங்கே !

(உண்மை  உறக்கம் கொண்டால் எனும் பொருளில் எழுதப்பட்டது )

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

மெய் மறந்த உறக்கம் இறக்கி வைக்கும் 
இறுக்கம்  எதுவாயினும் மனதில் இருந்து 
மெய் மறந்து உறங்குபவன் விழித்துக் 
கொள்வான் அவனை எழுப்பினால் !
ஆனால் பொய் தூக்கம் போடுபவனை 
எழுப்ப முடியுமா தட்டி ?
மெய்யுடன் பொய் சரிக்கு சரி நின்று 
சண்டை இடும் இந்த காலத்தில் 
வாய்மையே வெல்லும் என்று வசனம் 
பேசி நீ மெய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டால் 
வாய் மெய்யை வெல்லும் நிலைமை 
வந்து விடும் தம்பி ! மெய் உறக்கத்திலும் 
விழிப்புடன் இருக்க வேண்டும் நீ தம்பி !
மெய் மறந்த உன் உறக்கத்தில் உண்மையை 
உறங்க விட்டு விடாதே நீ தம்பி !

- K.நடராஜன்

**
எவ்வுறக்கம் சொல்வேனோ!
தாயின் கருவறையில் உறங்கிய உறக்கமா!
தாலாட்டுப் பாடலின் தானே வந்த உறக்கமா!
ஓடியாடி விளையாண்டு களைப்படைந்த உறக்கமா!
படிப்பின் போது அயர்ந்து தூங்கிய உறக்கமா!
எதைச்சொல்வேன்? என்னவளின் களிப்பில் உறங்கிய உறக்கமா?
காலை முதல் மாலை வரை பணி செய்த உறக்கமா?

பஞ்சு மெத்தை தந்ததா! பாவையால் பாதி உறக்கம் போனதே!
நெடு உறக்கம் உறங்கியே நிறைய நாள் ஆயிற்று!
ஏனுறக்கம் வரவில்லை
எதற்கென தெரியவில்லை!
வயது கூட காரணமோ!
வந்த உறக்கம் நிற்கையிலே!
நித்தம் நித்தம் உறங்கியதால்
செத்து செத்து பிழைத்திருக்கோம்!
எவ்வுறக்கம் மெய் உறக்கம் தெரிவதில்லை எவருக்குமே!

பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!

-செந்தில்குமார், ஓமன்

**
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31735
Points : 69815
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum