தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
4 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
First topic message reminder :
விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?
சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.
பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...
நமாஸ் செய்து விட்டு கொலை
விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்
தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.
கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்
தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.
மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?
மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்
அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்
அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.
தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்
முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.
மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.
[You must be registered and logged in to see this link.]
விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?
சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.
பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...
நமாஸ் செய்து விட்டு கொலை
விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்
தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.
கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்
தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.
மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?
மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்
அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்
அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.
தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்
முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.
மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.
[You must be registered and logged in to see this link.]
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:58 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
நாட்ல குடிக்க தண்ணி இல்ல. விவசாயி தற்கொல செஞ்சிகிரான். விலைவாசி உயர்வு. இப்படி நிறைய பிரச்சன இருக்குள்ள. சினிமா படம் தான் முக்கியமா இந்த அரசாங்கத்துக்கு. கேவலமா இருக்கு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
கடவுள் இல்லைன்னு சொல்லல, இருந்தா நன்னா இருக்கும் னு சொல்றேன். கடவுள் இருந்தா கமலை காப்பாற்றட்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
ஜெயா டிவிக்குக் கிடைக்காத சினிமாவை ஒருசில முஸ்லீம் அமைப்புகள் எதிர்க்க...சறுக்கியவனுக்கு இதுவே சாக்கு என்பது போல தமிழக முதல்வர் ஜெயா இதைக் கையில் எடுத்துக்கொண்டு சொந்த விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு பழிவாங்கி, பிரச்சனையைப் பெரிதுபடுத்திப் பெரிய அளவில் பேச வைத்துவிட்டார் என்றே படுகிறது. அதிகாரம் கையில் உள்ளது என்பதற்காக முதல்வர் ஜெயாவின் இந்த விஸ்வரூபத்தால், ஒரு நல்ல கலைஞரை அநியாயமாகக் கண்கலங்க வைத்த நிகழ்வு தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. அனைவருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு தனி ஒரு கலைஞனுக்கு மட்டும் ஏற்பட்ட அவமரியாதை இல்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஏற்பட்ட அவமரியாதையாகும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
சர்ச்சைக்குரிய எந்தப் படங்கள் வந்தாலும் நாலு பேர் எதிர்ப்பது என்பது இந்தியத் திரைப்படத்துறையினர் காலங்காலமாகச் சந்தித்து வரும் ஒரு பிரச்சனையாகும். அதை வளரவிடாமல் சம்பந்தபட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாகப் படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு அண்மைய துப்பாக்கித் திரைப்படமும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஆனால், தணிக்கை முடிந்து திரையிடப்பட்ட விஸ்வரூபம் திரைபடத்திற்கு மட்டும் தமிழக அரசாங்கமே முன் வந்து தடை விதித்தும் அத்தடையை நீதிமன்றம் நீக்கிய பின்பும் ஆக்ரோஷத்துடன் இரவோடு இரவாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகி மீண்டும் தடை வாங்கியதோடு மட்டுமில்லாமல் ஆங்கங்கே படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களையும் கமல் ரசிகர்கள் மற்றும் படத்தைக் காண வந்த பொது மக்களையும் காவல்துறையினரைக் கொண்டு மிகுந்த கெடுபிடிக்கு ஆளாக்கியதோடு அராஜகத்திலும் ஈடுபட்டது ஏன்?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
இந்து முஸ்லீம் சகோரர்களின் ஒற்றுமையை ஒரு திரைப்படமா பிரித்து விடும்? அவ்வளவு பலவீனமாகவா உள்ளது இந்து முஸ்லீம் ஒற்றுமை? இல்லவே இல்லை. வலுவான நல்ல ஒற்றுமை இருப்பதால்தான் மொழி, இனம், மதம் என்று பல வேறுபாடுகள் இருப்பினும் ‘இந்தியன்’ என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். அண்டை மாநிலங்களில் இதே திரைப்படம் ஓடும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திரையிட்டிருக்க முடியாது? சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாகவா உள்ளது தமிழகத்தில்? கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு மட்டும் ஏன் தடைக்கு மேல் தடை?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
"கமலுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் வீட்டில் மின் இணைப்பை துண்டித்தும்..நீர் இணைப்பை துண்டித்தும் அரசு தனது நாகரீகத்தை காட்டியுள்ளது...." இது உண்மை என்றால் இதை விட கேவலமான பெண்மணியை நாம் பார்த்தே இருக்க மாட்டோம்.. தமிழ்நாடு அழிந்து போக அதிக நாட்கள் இல்லை.....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
தமிழ்நாட்டில் கமலின் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் அரசியல் விளையாடி விட்டதாகவே தெரிகிறது. முஸ்லீம் தோழர்கள் அதிகம் வாழும் மலேசியாவில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு படம் ஓடியதும் பின் தாய்நாட்டு முஸ்லீம் தோழர்களின் அறிவுத்தலால் அங்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அதுபோல கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் முஸ்லீம் சகோதரர்கள் இருந்தும் படம் ரீலிஸ் செய்யப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டால் இது அப்பட்டமாக ஜெயா டிவிக்காக முதல்வர் ஜெயாவால் அரங்கேற்றப்பட்ட திருவிளையாடல் என்பதில் சற்றும் ஐயமில்லை. அப்பாவி முஸ்லீம் மக்களைப் பகடைக்காயகப் பயன்படுத்தி உருட்டி விளையாடுகிறார்கள். அரசு நினைத்திருந்தால் எவ்விதமான தடங்கல்களும் இல்லாமல் படத்தைத் திரையிட்டு இருக்க முடியும். துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிரச்சினை வந்தபோது எவ்வளவு விரைவாகப் பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது. ஏன் அந்தச் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் விஸ்வரூபத்தில் இல்லை. காரணம் துப்பாக்கி திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை ஜெயா டிவி வசம். இந்து மற்றும் இஸ்லாம் போன்ற மதங்களின் நம்பிக்கை சடங்குகளைக் கேலி செய்யும் எண்ணற்ற படங்கள் வெளிவந்துவிட்டன. அப்போது எல்லாம் இல்லாத அளவு இப்போது இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய சலசலப்பு? என்ன காரணம்? சிந்திக்க வேண்டிய விஷயம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
என்றைக்கு அரசியல் கட்சிகள் எல்லாம் தொலைக்காட்சி அலைவரிசைகளை துவங்கியதோ அன்றே சினிமா துறைக்கு சனி பிடித்து விட்டது. அரசியல்வாதியின் தயவு இல்லாமல் ஒரு இழவும் நடக்காது.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே, அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக ).. விஸ்வரூபம் பிரச்சினையின் "உண்மை ரூபத்தை" தற்போது அறிந்திருப்பீர்கள். நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும். விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ? அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ? அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ? திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே... டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ? அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ? நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்.... நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ? " இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்" என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ? நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை. ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது. ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது. நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல, ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை. இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள். இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும். தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது. இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை. அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள். அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள், உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள். கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள். ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம். மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்....
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
இந்த பிரச்சனையை கொண்டுவந்தது முதலில் தி.மு.க.வுடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட இஸ்லாமிய மக்களின் ஒட்டுக்களைப்பெற்று எம்.எல்.ஏ.வாகவுள்ள ஒரு நபர்தான்... பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது இவர்களுடன் கூட்டணி அமைத்த கட்சிக்காரர்.. அப்போதே அவரிடம் பேசியிருக்க வேண்டியது தானே? இப்போதுமட்டும் இதை அரசியலாக்கி கமலஹாசன் ரசிகர்களின் வோட்டுக்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெறுவதற்கே பின்னால் இருந்து பூனைக்கு மணி கட்டிக்கொண்டிருக்கிறார்.... அரசாங்கம் தனது தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளது...அதேபோல் கமலஹாசனும் தன் தரப்பு வாதங்களை விளக்கி தடையை அகற்றிக்கொள்ளலாம்.. இதனால் தாமதம் ஏற்பட்டது உண்மைதான்.. இதனால் ஆதாயமும் இனி கமலஹாசனுக்குத் தான்... நல்ல விளம்பரம் மற்றும் மக்களிடையே எதிர்பார்ப்பு... கமலஹாசனின் திரை உலக சாதனைகளையும் அவரது திறமைகளையும் மக்கள் நன்கு அறிந்தவர்களே...நிச்சயம் கமல் அவர்கள் எதிர்ப்பார்த்ததை விட நல்ல வசூலை அள்ளி குவிப்பார்...அவரது பொறுமையையும் தொழில் நேர்த்தியையும் நாங்கள் கண்டு வியக்கிறோம். இதில் நீங்கள் உங்களுக்கு ஆதாயமான சூழ்ச்சிகளை அவிழ்த்து விடாமல் இருந்தால் சரி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
// நீதிபதி, 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். // பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என்பதை நமது முதலமைச்சரிடம் எப்படி எதிர் பார்க்க முடியும் ? நீதிபதிகள் இது போன்ற தீர்ப்புகளை எப்படித்தான் அளிக்க முன்வருகின்றார்கள் ? இதுவேதான் காவிரி பிரச்சனையிலும் கூறப்பட்டது.... நமது முதலமைச்சர் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் அதிகம் உள்ளது.. இல்லை என்றால் தாத்தாவிற்கு பாடம் கற்பித்தது போல அடுத்த தேர்தலில் இவருக்கும் கற்பிக்க வாய்ப்புண்டு...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
1-கமலுக்கு ஆதரவாக திமுக போராட்டம் நடத்துமா . 2-கமலுக்கு எதிராக இருக்கும் இஸ்லாமிய அமைப்புகளுடன் இனி திமுக கூட்டணி அமைக்காது என்று உறுதியாக கூற முடியுமா . 3-டவீத் ஜமாத் தலைவர் PJ உங்களுக்கு வேண்ட பட்டவர் அயிற்றே.4- புதுவை முதல்வர் ரங்கசாமி ஏதாவது டிவி சேனல் நடத்துகிறாரா. அவர் ஏன் படத்தை தடை செய்தார். 5-கமல் இந்த வருடம்(2012) தன் பிறந்த நாள் அன்று ஜெயா விடம் தானே ஆசி பெற்றார். ஜெயா கமல் உறவு நல்ல முறை இல் இல்லாவிடில் இது எப்படி நடக்கும் . 6-சிதம்பரத்தை கமல் புகழ்ந்தார் என்றால் சிதம்பரம் இது பற்றி எதுவும் கூறாதது ஏன் .-7-நாராயணசாமி ஏன் இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச்சு நடத்த வேண்டும் என்று தற்போது தொலைகாட்சி இல் சொல்லி கொண்டு இருக்கிறார். அதை கண்டித்து அறிக்கை விட தயாரா.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
"விஸ்வரூபம்' படத்துக்கு உள்துறை அமைச்சர் ஆதரவு
புதுடில்லி : நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, அந்த படத்துக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டும், இந்த தடையை உறுதி செய்து, தீர்ப்பளித்தது.இந்த விவகாரம், வட மாநிலங்களில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை குறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே கூறியதாவது: இது, கருத்து சுதந்திரம் உடைய, சமுதாயம். ஒவ்வொருவருக்கும், தங்களின் கருத்துக்களை தெரிவிக்க, உரிமை உள்ளது. கலைஞர்களுக்கு, கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான, அரசியல் சட்டம் இருக்கிறது.விஸ்வரூபம் படத்தின் வெளியீடு தொடர்பாக, சில மாநிலங்களில் பிரச்னைகள் உள்ளன. அவற்றை, கூர்ந்து கவனித்து வருகிறோம். சம்பந்தபட்ட மாநிலங்களில், இந்த விவகாரம் தொடர்பாக, என்ன நடந்தது என்பது பற்றி, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
புதுடில்லி : நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, அந்த படத்துக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டும், இந்த தடையை உறுதி செய்து, தீர்ப்பளித்தது.இந்த விவகாரம், வட மாநிலங்களில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னை குறித்து, மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே கூறியதாவது: இது, கருத்து சுதந்திரம் உடைய, சமுதாயம். ஒவ்வொருவருக்கும், தங்களின் கருத்துக்களை தெரிவிக்க, உரிமை உள்ளது. கலைஞர்களுக்கு, கருத்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான, அரசியல் சட்டம் இருக்கிறது.விஸ்வரூபம் படத்தின் வெளியீடு தொடர்பாக, சில மாநிலங்களில் பிரச்னைகள் உள்ளன. அவற்றை, கூர்ந்து கவனித்து வருகிறோம். சம்பந்தபட்ட மாநிலங்களில், இந்த விவகாரம் தொடர்பாக, என்ன நடந்தது என்பது பற்றி, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
விஸ்வரூபம் படப்பிரச்னை: கமலுக்கு விஜயகாந்த் ஆதரவு
சென்னை: கமலை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் படப்பிரச்னையில், தமிழக அரசின் அணுகுமுறை சரியில்லை. உலகம் போற்றும் ஒரு கலைஞன், இந்தநாட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன். மத சார்பற்ற நாட்டைக்கண்டு அங்கு சென்று குடியேறுவேன் என அவர் கூறியுள்ள வார்த்தை தமிழகத்திலுள்ள அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது. கமல்ஹாசனை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது . விஸ்வரூபம் படத்தை திரையிடக்கூடாது 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர். அப்படியானால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை முதல்வர் ஒத்துக்கொள்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என கூறியுள்ளார்.
சென்னை: கமலை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் படப்பிரச்னையில், தமிழக அரசின் அணுகுமுறை சரியில்லை. உலகம் போற்றும் ஒரு கலைஞன், இந்தநாட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன். மத சார்பற்ற நாட்டைக்கண்டு அங்கு சென்று குடியேறுவேன் என அவர் கூறியுள்ள வார்த்தை தமிழகத்திலுள்ள அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது. கமல்ஹாசனை தமிழக அரசு புண்படுத்தியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது . விஸ்வரூபம் படத்தை திரையிடக்கூடாது 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர். அப்படியானால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை முதல்வர் ஒத்துக்கொள்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என கூறியுள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
கமல் பேட்டி: இந்நிலையில், விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக சென்னையில் பேட்டியளித்த அவர், "என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவில்லை. என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன். இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்". இவ்வாறு பேசினார். இதைத் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், நீங்கள் தமிழகத்தை வெளியேற வேண்டும் என விரும்புகிறீர்களா என கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் தான் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது என கமல் வேதனையுடன் தெரிவித்தார்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
சிலரது கருத்துக்கள்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
விஸ்வரூபம் படத்திற்கு தடை சரியோ??? தவறோ??? இனி வரும் திரைபடங்கள் எந்தவித சர்ச்சைக்கு உள்ளா " கமல் " எடுக்க வேண்டும்...எல்லா மதங்களும் தீவரவாதத்தை என்றும் எப்பொழுதும் ஆதரிப்பதில்லை...திரைபடம் வெளிவராமல் கருத்து சொன்னால் யாருக்கு என்ன தெரியும்... திரைபடத்தை முழுவதும் பார்த்துவிட்டு வாசகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
தமிழ் சினிமாவும் டிவி சீரியலும் முடக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் மேலும் தீவிரமடைய வேண்டும்.. இந்த சினிமாகாரங்க ஏதோ கடவுள் மாதிரியும் இவங்க தான் மக்களை வழிநடத்துவது போலும் மக்களும் இதில் மயங்கி கிடகிரர்கள் மதி கெட்ட கூட்டம் . டிவி பத்திரிகைகளில் காலை முதல் மலை வரை சினிமாவும் சினிமா காரர்கள் பேச்சு தான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
கமல் நிச்சயம் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடும் கடவுள் இல்லை என்று சொல்லும் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் நீதி வெல்லும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி".... என்பது போல், சில அமைப்புகளும் தமிழக அரசும் சேர்ந்து இந்த திரைப்படத்திற்கு விளம்பரம் கொடுத்ததோடு இல்லாமல், தேவையில்லாத ஒரு முன் உதாரணதினையும் ஏற்படுத்தி விட்டனர். சற்று யோசித்து பாருங்கள்.... இது வரை கமல் படங்கள் எந்த வித எதிர்பார்புகளோ, எதிர்புகளோ இல்லாமல்தான் வெளி வந்தன. அதுபோல் இப்படமும் எதிர்போ அல்லது தடையோ இல்லாமல் வந்திருப்பின், நல்லாருக்கு, நல்லால்லை என்ற இரு கருத்துகளோடு மட்டுமே முடிந்திருக்கும்....இப்பொது ஒவ்வொரு ரசிகன் மற்றும் படம் பார்க்க செல்லும் அனைவரும், கமல் அப்படி என்ன ஒரு பிரிவினருக்கேதிராக கருத்து சொல்லிவிட்டார் என்று பாப்போம் என்ற மனநிலையோடுதான் செல்வர்... மேலும் கமலையும், கமல் படத்தையும் வெறுக்கும் பலருக்கும் இந்த படத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது என்பதே உண்மை.... இதில் மேல்முறையீடு வேறு உள்ளதாம்.... கடந்த 1969-லிருந்து 44 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களே தமிழ்நாட்டை ஆள்கின்றனர். ஆனால் ஏன், இவர்கள் தான் வந்த, சார்ந்த திரையுலகையும், திரைஉலகதினரையும் இத்தனை பாடு படுத்துகின்றனரோ தெரியவில்லை...??? WHY THIS KOLAVERI.....கொலைவெறி......KOLAVERI.....ADI...?????
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
கமல், உலகம் மதிக்கும், போற்றும் ஒரு அற்புதமான கலைஞர். அவர் ஒன்னும் முஸ்லிம்களுக்கு கொடுமை இளைத்துவிடவில்லை. 21 நுற்றாண்டில் தனது சொந்த கருத்தை சொல்ல முடியவில்லை என்றால் இன்னும் இந்தியா முன்னேறவில்லை என்றுதான் அர்த்தம். அந்த நபர்கள் நிஜத்தில் செயும் லீலைகள், மனிதாபிமானம் அற்ற செயல்களை உலகம் அறியும். அதைவிட இவர் ஒன்னும் அவர்களுக்கு துரோகம் செய்துவிடவில்லை. வாசகர் ஒருவர் சொன்ன மாதிரி அ.தி.மு.க. இன்னும் திருந்தவில்லை என்றுதான் தெரிகிறது. கமல் கடவுள் இல்லை என்று சொல்லுபவர் தான் அது அவர் சொந்த விஷயம், கருத்து. அதற்காக அவரை ஆத்திகர்கள், அவர் படத்தை பார்க்காமல் விட்டு விட்டார்களா???. அதே மாதரித்தான் இதுவும். ஒருவேளை அவர், அவருக்கு மாமுல் அல்லது கூட்டு சேர்ந்து இருந்தால் பேசாமல் இருந்திருப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகத்தானது. அதற்கு இங்கு குவிந்து இருக்குக்கும் கருத்தே சான்று. கமல் சாபம் சும்மா விடாது. இது சத்தியம். ஜே. செல்வாக்கும் கண்டிப்பா சரியும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
மாநில தணிக்கை குழுவில் இருப்பவர்களே சான்றிதழ் வழங்கியபின்பு அவர்களை நியமித்த தமிழக அரசு வழக்கு தொடர்வது ,தொடர்ந்து கொண்டே இருப்பது ஒரு சாராருக்கு சாதகமான செயல் பாவம் கமல் மும்மதத்தின் இறைவன் அவருக்கு துணை இருப்பார்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
தமிழகம் தான் நான் வெளியேற வேண்டும் என விரும்புகிறது என கமல் வேதனையுடன் தெரிவித்தார். தலைவா நீங்க வெளியேறினால் ஒன்றும் தமிழகம் குட்டிசுவராகி விடாது . சந்தர்ப்பவாதிகளில் கமலையும் , ரஜினிகாந்தையும் மிஞ்ச தமிழ்நாட்டில் வேறு யாருமில்லை .
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பது சுத்தமான பொய் என்பது இபோது நடைபெறும் நிகழ்வுகள் நினைவு படுத்துகின்றன. கமலஹாசன் அவர்கள் சந்திக்கும் இடையுறுகளை பார்க்கும் போது இந்தியா மதம்,இனம், ஜாதி கடந்த முற்போக்கு சிந்தனை வாதிகளுக்கு ஏற்ற நாட என சந்தேகமாக இருக்கிறது. அணைத்து மதத்தையும், ஜாதி அமைப்புகளையும் கலைந்து விட்டு சகமனிதனுக்கு தீங்கு இழைக்காமல் நாம் அனைவரும் இணைய பட வேண்டும். சில சுயநலவாதிகள் வுண்டாக்கிய மதம், ஜாதி இப்போது சகமனிதனை எதிரியாக பார்க்க வைக்கிறது. வெக்கம் அவமானம்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு
பேட்டியின் பொது கமல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறி விட்டார் என்றே சொல்ல வேண்டும். தனது வழக்கமான அறிவுஜீவித்தனமான வழ வழா கொல கொலா என்று சொதப்பி விட்டார். படத்தில் எந்த வகையிலும் முஸ்லிம்களை அவதூறாக சித்தரிக்கவில்லை என்றும், எவ்வாறு பிரைச்சினையை சுமூகமாக தீர்க்க தன் தரப்பு நடவடிக்கைகளை, விளம்பர நோக்கில் எவ்வாறு எதிர்தரப்பு நடந்து கொள்கிறது, தமிழக அரசு எவ்வாறு இதில் அரசியல் செய்கிறது, முக்கிய எதிர்க்கட்சிகள் எவ்வாறு இப்பிரச்சனையில் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பதனையும் விரிவாக கூறியிருக்கலாம்,
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அறிஞர்கள்/மேதைகளின் வாழ்வில் -சுவையான நிகழ்வுகள் (தொடர் பதிவு)
» விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்)
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» திரைச்சுவை - தொடர் பதிவு
» விஸ்வரூபம் பார்த்த என் அனுபவ பதிவு (விமர்சனம்)
» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
» பல் சுவை - தொடர் பதிவு
» திரைச்சுவை - தொடர் பதிவு
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|