தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

4 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 5:12 pm

First topic message reminder :

விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?

சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...





நமாஸ் செய்து விட்டு கொலை

விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்



தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.



கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.



மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?

மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்



அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்

அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.



தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்

முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.

[You must be registered and logged in to see this link.]


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:58 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 12:52 am

Tamil Cinema's

எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட்ட 21 இஸ்லாம் அமைப்புகள் இணைந்து ஸ்வரூபம் படத்தைத் தடை செய்துவிட்டனர் என்று நானும் நீங்களும் நம்பினால் அதுதான் தமிழ்நாட்டு அரசியல்.

ஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள். 21 அமைப்புகள் அல்ல, 21000 அமைப்புகள் வந்தாலும் அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு தான் நினைத்ததைச் செய்யும் அதிகாரம் கொண்டவர் ஜெயலலிதா. மறக்கும் வியாதி கொண்ட தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள். அரசாங்க பணியாட்கள் அத்தனை பேரையும் ஒரேநாளில் தூக்குவார். உலகமே எதிர்த்தாலும் நூலகத்தை மருத்துவமனையாக்குவார். மருத்துவமனைக்கு சட்டமன்றத்தைப் போடுவார். அப்படிப்பட்டவர், முஸ்லீம்கள் திரண்டு வந்து புகார் அளித்ததும் பொங்கிவிட்டார் என்பது முழுக்க முழுக்க முட்டாள்தனம் நிரம்பிய அவதானிப்பு.

சென்ற தேர்தலில் கமல்ஹாசனுக்கு 200கோடி தருதாக ஆசைகாட்டி, அவரை அதிமுக பக்கம் இழுப்பதற்கு முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாய் அத்தனைப் புலனாய்வு ஏடுகளும் சொன்னது. அப்போதைக்கு எஸ்கேப் ஆன கமல்ஹாசன் இப்போது மாட்டிக்கொண்டார்.

ஜெயலலிதாவிற்கு ஆகவே ஆகாதவர் ப.சிதம்பரம். அப்படிப்பட்ட ப.சிதம்பரத்தின் புத்தக விழா அண்மையில் நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கலைஞர், கமல்ஹசன், ரஜினி. அதிலும் கமல் பேசுகையில் ’வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும்’* என்று முத்தாய்ப்பு வைக்க, பிறகு பேசிய கலைஞரோ வேட்டி கட்டிய தமிழரே பிரதமர் என்று சொல்லி சேலை கட்டிய தமிழர் பிரதமர் கனவில் இருப்பதற்கு பதில் சொல்லிவிட்டீர்கள் என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு வைத்த ஆப்பு விஸ்வருபத்துக்கு வந்து நிற்கிறது.

ஜெயா டிவிக்கு விற்கப்பட்ட விஸ்வருபத்தின் தொலைக்காட்சி உரிமை, அதிக விலையின் காரணமாக சன்டிவிக்கு மாறியதாயும் சொல்கிறார்கள். சன் டிடிஎச் ஒளிபரப்பு செய்ய அனுமதியும் வாங்கி இருந்தது.

முஸ்லீம்கள் அவருக்கு எப்போதும் நண்பர்களாய் இருந்ததேயில்லை. கலைஞர் கூட குல்லாய் போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பார். ஜெயலலிதா ம்ஹூம். மோடிக்கு நண்பராய் இருந்துகொண்டு முஸ்லீமிற்கு கைதூக்க அவர் அவ்வளவு நல்லவரல்ல. ஆனால் இந்த விஷயத்தில் ஏன் பொங்கினார், முஸ்லீம்களுக்காகவா? 2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. முஸ்லீம்கள் தேவைப்படுகிறார்கள்.

கமல்ஹாசனின் மீது ஜெயலலிதாவிற்கு எப்போதுமே பிரியம் இருந்ததில்லை. தன் சக கலைஞன் என்ற பார்வையிருந்தும் கூட, தான் அதே சினிமா இனம் என்று தெரிந்திருந்தும்கூட! கமல்ஹாசன் கலைஞரின் தமிழ் மீது பிரியம் கொண்டவர், அதனால் கமல் ஜெயலலிதாவிற்கு உள்ளூரப்பகையாகிப்போனவர்.

’மாமனை அடிக்க முடியாதவர்கள் மச்சானை அடிப்பார்கள்’ என்பார்கள். படத்தைத் தணிக்கை செய்யும் சென்சார் போர்டு மத்திய அரசின் கீழ் வருவது. ஏற்கனவே மத்திய அரசை எல்லாவிதத்திலும் தொடர்ந்து புறங்காட்டி அவமதிக்கிறார். டீசல் விலையை உயர்த்தியதற்காக மத்திய அரசின் மீது மாநில அரசு வழக்குத் தொடரப்போவது தனிக்கதை. இதில், இப்படி மத்திய அரசுக்குட்பட்ட ஒரு சென்சார்போர்டு அமைப்புக்கெதிரே, அதாவது மத்திய அரசு அனுமதித்தபிறகும் தன்னால் தடுக்கமுடியும் என்ற கர்வம்.. அதுதான் இது.

விஸ்வரூபத்தை தணிக்கை செய்த குழுவில் இருந்த முகமதிய அதிகாரி, முகமது அலி ஜின்னா, சென்ற தேர்தலில் தி.மு.கவின் சட்டமன்ற வேட்பாளர். தி.மு.க காரர். ஆக, தி.மு.கவுக்கும் ஒரு ஆப்பு வைத்தாகிவிட்டது. முஸ்லீம்களுக்கெதிராய் ஒரு முஸ்லீமே இருந்தார் என்று அறியப்படுத்தி, இனி முஸ்லீம்கள் இவருக்கு ஓட்டுப்போடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

விஸ்வருபத்தின் சேலம் ஏரியா பகுதி உரிமையை உதயநிதிஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியிருந்தது. உதயநிதி தயாரித்தார் என்பதற்காகவே நீர்ப்பறவை படத்திற்கான வரிவிலக்கை எந்திவித முகாந்திரமும் இல்லாமல் தரமறுத்த அம்மையார், இப்படி ஒரே கல்லில் ஒன்பது ஸ்தானத்தையும் அடிக்க முடியும் என்றால் சும்மா விடுவாரா?

விஸ்வரூபம் படம் வெளீயிட்ட மலேஷியா, NC 16 தணிக்கை அளித்து அனுமதியளித்திருந்த சிங்கப்பூர் நாடுகளும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களும் படத்தை, முஸ்லீகளின் போராட்டத்தாலோ எதிர்ப்பாலோ நிறுத்தவில்லை. உற்பத்தி இடமான தமிழ்நாட்டிலேயே ஒரு சரக்கை தடைசெய்தபின் இறக்குமதி செய்வது ஆபத்தாகலாம் என்பதால் தான். இது, ஜெயலலிதா தெரிந்தே ஒரு கலைஞனுக்கு, பால்ய நண்பனுக்கு, தனது சொந்த விருப்பு வெறுப்பின் மூலம் செய்த மிகப்பெரிய துரோகம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 12:58 am

அன்புடன்
நாக.இளங்கோவன்


கமலுக்கு நேர்ந்தது தமிழ் தேசிய அவமானம். இதைத் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் கூட உணராமல் பேதைகளைப் போல எழுதியும் பேசியும் வருவது முட்டாற்றனமாகும். இதுவரை திரைப்படங்களைப் பொருட்படுத்தாத என்னைப் போன்றவர்களைக் கூட அதிர வைத்தது விசுவரூபம் திரைப்படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு. கிறுக்கர்கள் மட்டுமே தமிழகத்தை "அமைதிப் பூங்கா" என்று சொல்லித் திரிய முடியும். கமல் என்ற ஒரு கலைஞனுக்கு இருக்கும் தன்மானம் உயர்ந்தது. இந்த மண்ணின் தமிழன், எங்கோ ஆப்கான, அரேபியாக்காரர்களைப் பற்றிப் படம் எடுத்தால் தமிழ் மண்ணை விட்டு ஓடி விட வேண்டுமா? ஆப்கானனும், அரேபியனும் தமிழனை விட முக்கியமென்றால் எங்கே போகிறது தமிழ்நாடு என்று புரியவில்லை.
சிவாசியை விட ஒரு படி மேலே கமல் என்பவனை நேசிக்கிறேன்.

கமலுக்கு ஏற்பட்ட நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் - பாரதிராஜா

Read more at: [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 12:59 am

கமலுக்கு ஏற்பட்ட நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் - பாரதிராஜா

Read more at: [You must be registered and logged in to see this link.]

சென்னை: கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். விஸ்வரூபம் சர்ச்சை குறித்து பாரதிராஜா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலை குணிய வேண்டும். நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான். அனைவருக்கும் பாலமாக இருந்து பெருமை தேடித் தருகிறவர்கள் இவர்கள்தான். கலைஞன் அழிந்தால் கலை அழியும், கலை அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும், இனம் அழிந்தால் பிணம் திண்ணும் கழுகுகள்தான் பறக்கும். அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வரக் கூடாது. கலைக்காக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு கலைஞனை கீறி ரணம் பார்த்து ரத்த ருசி பார்ப்பது தமிழகத்தின் சாபக்கேடாக முடிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். கமல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கித் தலை குணிய வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் நீதியின் பாலும், சட்டத்தின்பாலும் நம்பிக்கையுடன் உள்ளோம். கண்ணகி கோபப்பட்டாள், அன்று மதுரை எரிந்தது. இன்று ஒரு கலைஞனை வேதனையுறச் செய்துள்ளார்கள். அதனால் தமிழகமே எரிந்து போய் விடுமோ என்று அஞ்சுகிறேன். கமல் என்ன தவறு செய்து விட்டான்... நடப்புநிகழ்ச்சியைச் சொன்னான். அது தவறா.. பின்லேடனையும், முல்லா உமரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது தவறா.. கஜினி முகம்மது கொள்ளையடித்தான் என்று பேசினால் அது தவறா.. அப்படியென்றால் அதைப் பாடப் புத்தகத்திலிருந்தே எடுத்து விடுங்கள். தயவு செய்து நல்ல கலைஞனை வாழ விடுங்கள். இல்லாவிட்டால் அத்தனை கலைஞர்களின் பெருமூச்சும், தீமூச்சாக மாறி விடும் என்றார் பாரதிராஜா.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:01 am

இப்படி ஆக்கினார் சுனில்

இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, கே.பி.சுனிலின் தாண்டவங்கள் அரங்கேறி வந்தபோதுதான், விஸ்வரூபத்தின் ஒளிபரப்பு உரிமை குறித்து பேசப்படுகிறது. இந்த உரிமை குறித்த பேச்சு, முதன் முதலாக, கமல்ஹாசன் ஜெயலலிதாவை சந்தித்தபோது நடைபெறுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று கமல்ஹாசன் சொன்னபோது, ஜெயலலிதா கேஷுவலாக படத்தின் ஒளிபரப்பு உரிமையை நம்ம சேனலுக்கே கொடுத்திடுங்களேன்.. இது சம்பந்தமா சுனில் கிட்ட பேசுங்க என்று சொன்னதாக தெரிகிறது.

இது குறித்து கமலிடம் பேசிய சுனில், வழக்கம் போல அடிமாட்டு விலைக்கு படத்தைக் கேட்டதாகத் தெரிகிறது. நாசூக்காக அதைத் தவிர்த்த கமல், விஜய் டிவிக்கு அப்படத்தின் உரிமையை உரிய விலைக்கு விற்றிருக்கிறார். இதையடுத்து, தன்னிடம் முதல்வர் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எங்கே கோபமாகிவிடப் போகிறாரோ என்று நினைத்த சுனில், எவ்வளவு தொகை கொடுக்கிறேன் என்றாலும், கமல் விஸ்வரூபத்தை விற்க மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதா கடுமையான கோபமடைந்திருந்த நேரத்தில்தான், ப.சிதம்பரத்தைப் பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. ஒரு விழாவில் பேசுகிறோம் என்ற அடிப்படையில், உயர்வு நவிற்சியில், கமல்ஹாசன் “வேட்டி கட்டிய தமிழராக டெல்லியில் வலம் வரும் சிதம்பரம் விரைவில் பிரதமராக வேண்டும்” என்று பேசுகிறார். கமல்ஹாசன் இப்படிப் பேசியதோடு போயிருந்தால் விஷயம் முடிந்திருக்கும். அடுத்து மைக்கைப் பிடித்த தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன், “ வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்!'' என்று பேசினார்.

“அம்மாதான் இந்தியாவுக்கே வழிகாட்டி… அம்மாவின் ஆளுகையில் ஒட்டு மொத்த இந்தியாவும் வரும் நாள் தொலைவில் இல்லை. அம்மா சென்றால் டெல்லியே நடுங்கும், அம்மா டெர்ரர்,” என்று அதிமுக அடிமைகள் தொடர்ந்து பேசி வருவதை அப்படியே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்…. “அதுவும் என்னா ஒரு நக்கலு…. சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் விடை அளித்துள்ளீர்கள்” இதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதாவுக்கு எப்படி இருக்கும்….
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:02 am

ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரையே ஓட ஓட விரட்டியவர், சொல்பேச்சைக் கேட்காத ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசியதை ரசித்தவர், வயதில் மூத்தவர்களை காலில் விழச்செய்து கண்டு இன்புறுபவர். இப்படிப்பட்டவரிடம் ஒரு சாதாரண திரைப்பட நடிகர் முரண்டு பிடித்தால் என்ன ஆகும்…. ? விஸ்வரூபம் படத்துக்கு ஏற்பட்டதுதான் ஆகும்.

2014 தேர்தலை மனதில் வைத்து இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்று ஜெயலலிதா இப்படிச் செய்கிறார் என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஜெயலலிதா இப்படியெல்லாம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திப்பவரா என்ன ? இப்படியெல்லாம் தெளிவாகச் சிந்தித்தால் ஜெயலலிதா நல்ல அரசியல்வாதியாகி விடுவாரே…. 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கரசேவையை ஆதரித்துப் பேசியவர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை வெட்டிப் படுகொலை செய்த நரேந்திர மோடியோடு இன்றும் நட்புப் பாராட்டுபவர். இந்து சனாதன தர்மங்களைத் தூக்கிப் பிடிப்பவர். இந்த ஜெயலலிதாவுக்கா சிறுபான்மையினரின் உணர்வு குறித்த அக்கறை ? உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு இஸ்லாமியர்கள் மீது அக்கறை இருந்தால், 10 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை அண்ணா பிறந்தநாளன்று விடுவித்திருக்க வேண்டும். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்று, தன் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் அபுதாகிர் என்ற கைதியை, தனியார் மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சொல்லி நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்தபோதும், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பவர்தான் ஜெயலலிதா. இவருக்கா சிறுபான்மையினர் மீது அக்கறை…. ?

ஜெயலலிதா இந்தப் படத்தை தடை செய்திருப்பது, முழுக்க முழுக்க தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே. இதே திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி வாங்கியிருந்தால், இப்படி நடந்திருக்குமா என்ன ?

சரி.. இஸ்லாமிய அமைப்புகள் இந்தப் படத்தை எதிர்க்கின்றன. நம்மைப் போன்ற நடுநிலையாளர்கள் என்ன செய்ய வேண்டும்… ? என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் ?

இஸ்லாமிய அமைப்புகளின் இந்த நிலைப்பாட்டை முழு மனதோடு, முழு மூச்சோடு, கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும். இது ஒரு அப்பட்டமான பாசிசம். இன்று இதை நாம் அனுமதித்தால் எதைப்பற்றித் திரைப்படம் எடுத்தாலும் இந்த மத அடிப்படைவாதிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உருவாகும். எந்த விஷயமானாலும், கடவுள் உட்பட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை. தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் உலகம் இருந்தபோது, விவிலியத்திற்கு எதிராகப் பேசுபவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலிலும், உலகம் உருண்டை என்று ஒருவன் உரத்துச் சொன்னான். முதலில் வானத்தைப் படைத்தார், பின்பு பூமியைப் படைத்தார், பின்பு வெளிச்சத்தை படைத்தார் பின்பு பகலென்றும், இரவென்றும் பிரித்து வைத்தார். பிறகு தன் விலா எலும்பிலிருந்து ஒரு எலும்பை உருவி, ஏவாளைப் படைத்தார் என்று கூசாமல் புளுகியதை, இது பொய், என்று Origin of Species என்று ஆராய்ச்சி நூல் எழுதினான் ஒருவன். ஆகையால் இஸ்லாமிய மதமும் விமர்சனத்திற்கு உட்பட்டதே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கமல்ஹாசன் எல்லா இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறார், இதனால் இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகள், ஒரு இந்து ஆயுத வியாபாரி ஒருவனோடு கூட்டு சேர்ந்து நாசவேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று சித்தரித்து கமல்ஹாசன் விஷமத்தனமாக எடுத்த படம், உன்னைப் போல் ஒருவன். அதன் இந்தி மூலத்தில் இல்லாத விஷமத்தனங்களை கமல் தமிழில் செய்திருந்தார். ஆனால் அந்தப் படம் குறித்து எந்த இஸ்லாமிய அமைப்பும் வாய்த் திறக்கவில்லை.

விஸ்வரூபத்தைப் பொறுத்தவரை, அது தாலிபான் தீவிரவாதிகளைப் பற்றிய திரைப்படம் என்று தெரியவருகிறது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கூட்டாளிகள், இந்தியாவிலும் இருப்பதாகவும், அவர்களைக் கண்டுபிடித்து கமல் அழிப்பதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கமலின் சிறப்புத் திரையிடலில் திரைப்படம் பார்த்து விட்டு வந்த தோழர் ஒருவரிடம் உங்களுக்கு அந்த படத்தில் என்ன பிரச்சினை என்று கேட்டபோது, “தொழுகை நடத்தி விட்டு சென்று ஒருவன் குண்டு வைக்கிறான். குண்டு வைத்து விட்டு, மீண்டும் தொழுகை நடத்துகிறான். இது தொழுகை நடத்தும் இஸ்லாமியர்களை அவமதிக்கிறது” என்றார். தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் என்ன நாத்தீகர்களா ? மத நம்பிக்கை இல்லாமல் புரட்சி பேசுபவர்களா…. ? மனித வெடிகுண்டாக மாறி குண்டு வைக்கும் ஒரு இஸ்லாமியன், கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டுதானே குண்டு வைக்கிறான் ? சாகும் முன்பு, அல்லாஹூ அக்பர் என்றுதானே கூறுகிறான் ? தாலிபான்கள் வெளியிடும் வீடியோக்களில், கடவுளின் பெயரைக் கூறிக்கொண்டுதானே கொலை செய்கிறார்கள்…. ? பிறகு குண்டு வைப்பவன் தொழுகை நடத்துவதைக் காட்டாமல், நாத்தீகம் பேசுகிறான் என்றா காட்ட முடியும் ?

இந்தியாவில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் காட்டுகிறார்கள். இது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கிறது என்கிறார். இந்தியாவில் இது வரை வெடித்த அத்தனை குண்டுகளும், இந்தியாவில் உள்ள எந்த முஸ்லீமின் உதவியும் இல்லாமல் நடத்தப்பட்டதா ? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் ?

மனிதநேயம் கொண்ட கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கும் இதே இடத்தில், மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு சில தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமான, கசக்கும் உண்மை. இள வயதில், மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, தவறான பாதையில் போகும் அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டியது உங்கள் கடமை மட்டுமல்ல, அது நமது கடமை. அதை விடுத்து, இந்தியாவில் தீவிரவாதமே கிடையாது என்று பேசுவது, நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையைப் புகுத்திக் கொள்வது போன்றது…. அல்லது விஷமத்தனமானது.

பாப்ரி மசூதி என்று இடிக்கப்பட்டதோ, அன்றே இச்சமுதாயம் இஸ்லாமியர்களாகவும், இந்துக்களாகவும் மத அடிப்படையில் பிளவுபட்டு விட்டது. இந்தியாவெங்கும் முஸ்லீம் குடியிருப்புப் பகுதிகளும், இந்துக் குடியிருப்புப் பகுதிகளும் தனித்தனியே உள்ளன. இந்த பிளவை சரிசெய்யவும், மீண்டும் இச்சமுதாயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுமே, மனித உரிமையாளர்களும், நடுநிலையாளர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அந்த முயற்சிக்கு போடப்படும் முட்டுக்கட்டையே, விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமியர்கள் எழுப்பும் எதிர்ப்பு.

இந்து சனாதனவாதிகளும், வலதுசாரி வெறியர்களும் மட்டுமே எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று விஷம் கக்குவார்கள். ஆனால், சாதாரணமாக நமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் நபர்கள், எல்லா இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக ஒருபோதும் பார்க்க மாட்டார்கள். ஆனால் விஸ்வரூபம் போன்ற திரைப்படங்களுக்கு இஸ்லாமியர்கள் காட்டும் எதிர்ப்பே, மற்றவர்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்தும். சாதாரண மக்களுக்கு, இந்துத்துவா குறித்தும் கவலையில்லை, இஸ்லாத் குறித்தும் கவலையில்லை. நல்ல திரைப்படத்தை பார்த்து ரசித்து விட்டு, “அருமையா எடுத்துருக்கான் அல்லது, சரியான மொக்கைப்பா” என்று ஒரே வார்த்தையில் விமர்சித்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் செல்லும் மக்களே இங்கு பெரும்பான்மையினர். இந்த மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால்தான், மார்க்கெட்டுகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் வெடிகுண்டு வைத்து, பெண்களையும், குழந்தைகளையும் கொல்லும் நபர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும், சமூக அமைதி சற்றும் கெடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

குண்டு ஏன் வெடிக்கிறது…. குஜராத்தில் என்ன நடந்தது தெரியுமா ? கோவையில் காவலர் செல்வராஜ் கொலைக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா ? என்ற வாதங்கள் அயோக்கியத்தனமானவை. ஒரு சராசரி குடிமகனுக்கு, குஜராத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அக்கறையில்லை. அவன் கண் முன்னால், நடக்கும் குண்டு வெடிப்பு பற்றி மட்டுமே கவலை. அதனால்தான், ஒருவன் குண்டு வைத்தால், பத்து அப்பாவிகளைக் கைது செய்து, ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்தால் கூட, “இருக்கட்டுமே… என்ன இப்போ” என்று அக்கறையில்லாமல் பேசுகிறான். அப்படி அக்கறையில்லாமல் பேசுபவனிடம், அப்பாவிகள் ஆண்டுக்கணக்கில் இருக்கிறார்கள், வருடக்கணக்கில் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கிறார்கள், தண்டனை பெற்று பல வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள், அவர்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். அத்தகைய நடுநிலையாளர்களை விலகிச் செல்லும் வேலையைத்தான் இஸ்லாமிய அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன.

எதற்காக அரசோடு சண்டையிட வேண்டுமோ, அதற்காக இந்த அமைப்புகள் சண்டையிடாமல் சமரசம் செய்து கொண்டு, ஜெயலலிதா மற்றும் காவல்துறையின் சதிக்குப் பலியாகி, விஸ்வரூபத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா சட்டசபைக்குச் சென்றபோது அவர் கார் பழுதடைந்துள்ளது. அதனால் அவர் நடந்து சட்டசபைக் கூட்டத்தொடருக்குச் சென்றபோது, அவரை ஒரு இன்ஸ்பெக்டர் வழி மறித்து பொதுமக்கள் வரிசையில் வருவது போல வரச் சொல்லியிருக்கிறார். ஜவாஹிருல்லா, நான் ஒரு எம்.எல்.ஏ என்று சொல்லியும், போய்யா என்று சொல்லியிருக்கிறார். கூட்டத்தொடருக்கு தாமதமாகி விட்டது என்று பேராசிரியர் நடக்க எத்தனிக்கையில், அவர் நெஞ்சில் கை வைத்து தள்ளியிருக்கிறார் அந்த இன்ஸ்பெக்டர். அவர் மீது பேராசிரியர் அளித்த புகாரை, வாபஸ் பெறச் சொல்லி, காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அந்தப் புகாரை வலியுறுத்தவில்லை ஜவாகிருல்லா….
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:03 am

பேராசிரியர் ஜவாஹிருல்லா

ஒரு எம்.எல்.ஏ என்று சொல்லியும் தன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய அந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி போராட்டம் நடத்தியிருக்க வேண்டுமா வேண்டமா ? அங்கே சமரசம் செய்து கொண்டு விட்டு, விஸ்வரூபத்துக்கு எதிராக போராட்டம்.

இவர்கள் பரவாயில்லை. இக்கட்டுரையின் தொடக்கத்தில் மிக மிக சிறப்பான மனிதப் பண்போடு மனுஷ்ய புத்திரனை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் கைது செய்வதற்காக இரவு நேரத்தில் அவர் வீட்டுக்குச் சென்று, தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். பெண்களிடம், மிகவும் மோசமாக பேசியுள்ளனர். இதைக் கண்டித்து, இந்த அமைப்பினர் கடந்த மாதம் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அந்த முற்றுகைப் போராட்டத்தின் போது கலந்து கொண்ட பெண்கள் உள்ளித்த அனைவரும் கைதாக தயாராக இருந்தனர். அமைதியான முறையில், சற்றும் வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது, பவனீஸ்வரி என்ற ஒரு முட்டாள் காவல்துறை துணை ஆணையர் உத்தரவால் கடுமையாக தடியடி நடத்தியது காவல்துறை. அப்போது அந்த இடத்தில் பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற உதவி ஆணையர் தன் தடியை தாறுமாறாக சுழற்றியதால் மூன்று பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த தடியடிக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ் போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டதால், தேவையற்ற முறையில் தடியடி நடத்திய அந்த துணை ஆணையரையோ, இணை ஆணையரையோ இட மாறுதல் கூட செய்யாத நிலையில் தன் போராட்டத்தைக் கைவிட்ட அமைப்புதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போட துப்பில்லாத தவ்ஹீத் ஜமாத் அமைப்புதான் விஸ்வரூபம் படத்தை ஓட விடமாட்டோம் என்று இறுமாப்பாக தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:03 am

... இப்படிப்பட்ட இரட்டை வேடம் போடும் அமைப்புகள்தான் இந்த இஸ்லாமிய அமைப்புகள். இந்த இஸ்லாமிய அமைப்புகள்தான் இன்று விஸ்வரூபத்துக்கு எதிராக போராடுகின்றன. இந்த இரட்டை வேடம் போடும் அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, ஒவ்வொரு ஜனநாயக வாதியின் கடமை. நமது இந்தக் குரல் கமல்ஹாசனுக்கானது அல்ல. இது நமக்கான குரல். நமது கருத்துச் சுதந்திரத்துக்கான குரல். இந்த இரட்டை வேடதாரிகளிடம் நம் சுதந்திரத்தை நாம் ஒரு போதும் பறிகொடுக்கலாகாது.

கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற நட்சத்திரங்களுக்கு விஸ்வரூபத்துக்கு ஏற்பட்ட சிக்கல் ஒரு பாடமாக அமைய வேண்டும். திமுக ஆட்சியில், கருணாநிதியை வாராவாரம் பாராட்டிப் பேசி, அவரோடு கொஞ்சிக் குலாவுவதும், ஜெயலலிதா முதல்வரானதும், பிறந்தநாள் அன்று அவரைச் சென்று சந்திப்பதும், இப்படிப்பட்ட சிக்கல்களுக்குத்தான் வழிவகுக்கும். நீங்கள் எப்படி உங்கள் வியாபார நலன்களில் கவனமாக இருக்கிறீர்களோ, அப்படித்தான் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் நலனில் கவனமாக இருப்பார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், உங்களை விட அரசியல்வாதிகள் சக்தி படைத்தவர்கள் என்பதையும், அவர்களின் நெருக்கம் நெருப்போடு ஏற்படுத்தும் நெருக்கம் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:04 am

கமலுக்கு எதிரான அரசின் கடுமையான நிலைக்கு 'அந்தப் பேச்சு' காரணமா?

சென்னை: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடுத்த பொறுப்புக்கு வரப் போவதாக சொல்கிறார்கள். அவர் அந்த உயரிய பொறுப்புக்கு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. அவர் விரைவில் அப்பொறுப்புக்கு வர வேண்டும்... - நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் சென்னையில் பேசிய பேச்சு இது.. இதுதான் விஸ்வரூம் விவகாரத்தில் கமலுக்கு எதிராக தமிழக அரசு மிகக் கடுமையான நிலையை மேற்கொண்டதற்கான காரணம் என்று பரவலாக கருத்து பரவியுள்ளது.

அரசுத் தரப்பிலான கடுமையான நிலைக்கு கமல்ஹாசனின் இந்தப் பேச்சுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் கமல்...

நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 29ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல் பேசுகையில்,

உயரத்தில் இருக்கும் நிதியமைச்சர் இறங்கிவர வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த விழாவில், அவர் மேடையில் அமராமல் மேடையின் எதிர்புறம் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்துள்ளார். இதற்கும் கீழே அவரை இறங்க கூறாதீர்கள். மனிதன் புகழுக்கு மேலே தான் செல்ல வேண்டுமே தவிர, கீழே இறங்கி வரக்கூடாது.

எனக்கு அரசியல் தெரியாது என்பதால் தான், அரசியல் கடந்து பலரின் ரசிகராக உள்ளேன். நிதியமைச்சரை பற்றி இந்த புத்தக தொகுப்பில் 70 பேரின் கட்டுரைகள் உள்ளது. ஆனால் அவர் இன்னும் அதிகம் செய்ய வேண்டும்,

சாதனை படைக்க வேண்டும், அதற்காக விழாக்கள் எடுக்க வேண்டும், அதில் பங்கேற்க எனக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்.

இந்தியாவிற்கு தேவைப்படும்போது சட்டம், நீதி தெரிந்தவர்கள் பலர் பொறுப்பில் இருந்ததால், எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் பலமாக இருந்ததால், நாம் பலமாக உள்ளோம்.

நிதியமைச்சருக்கு நல்ல பெயர் இருப்பதால், நாட்டில் உயர் பொறுப்புகள் (பிரதமர் பதவி) வரும் என்று கூறுகிறார்கள், வரவேண்டும் என ஆசைப்படுகிறேன், அதுபற்றி கூற எனக்கு உரிமையும் உள்ளது. என் ஆசையை நிறைவேற்றுங்கள். அந்த சந்தோஷ வெள்ளத்தில் என் ஆசை துளியும் இருக்க வேண்டும் என்றார் கமல்.

அடுத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, 'சிதம்பரம் 1984ல் மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறை துணை அமைச்சராகி, பின்னர் உள்துறை இணை அமைச்சர், அதையடுத்து வர்த்தகம், நிதி அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தொடர்ந்து நிதித் துறைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அடுத்து அவர் என்ன அமைச்சர் என்பதை உங்கள் மகிழ்ச்சிப் பேரொலி மூலம் எடுத்துக் காட்டினீர்கள். வேட்டி கட்டிய தமிழன் ஒருவன் பிரதமராக வர​வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினர். அப்படியானால் சேலை கட்டிய தமிழர் வரலாமா கூடாதா என்பதற்கும் நீங்கள் விடை அளித்துள்​ளீர்கள்! என்றார்.

இதன்மூலம் ஜெயலலிதா தான் அடுத்த பிரதமர் என்று அதிமுக தரப்பில் சொல்லி வருவதற்கு மறைமுகமாக ஒரு கொட்டு வைத்தார் கருணாநிதி.

கமலின் இந்தப் பேச்சும், அடுத்து அதை ஒட்டி கருணாநிதி வைத்த 'கொட்டும்' அதிமுக தரப்பை மிகவும் கடுப்பாக்கியதாக சொல்கிறார்கள்

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:05 am

கமலுக்கு ஏற்பட்ட சோதனையை ஜீரணிக்க முடியவில்லை: அர்ஜுன்
சென்னை: விஸ்வரூபம் குறித்து இன்று கமல் ஹாசன் அளித்த பேட்டியைப் பார்த்து கண்கலங்கிவிட்டதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து விஸ்வரூபம் பற்றியும், அதற்கு தமிழக அரசு விதித்த தடை பற்றியும் உருக்கமாக பேட்டியளித்தார். தனக்கு மதமும் இல்லை, குலமும் இல்லை தற்போது பணமும் இல்லை என்றார். தன்னுடைய ரசிகர்களில் ஏராளமானோர் முஸ்லிம்கள் என்றும், யார் மனதையும் புண்படுத்த படம் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன் என்றார்.

இது குறித்து நடிகர் அர்ஜுன் கூறுகையில்,

கமலின் பேட்டியைப் பார்த்து கண்கலங்கினேன். அவருக்கு ஏற்பட்டுள்ள சோதனையை ஜீரணிக்க முடியவில்லை. தன்னுடைய இத்தனை ஆண்டு கலைசேவையில் அவர் இதுவரை யார் மனதையும் புண்படுத்தாதவர். அவருக்கா இப்படி ஒரு சோதனை. கமல் சார் எங்கும் போகக் கூடாது அவர் இங்கு தான் இருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். கமல் சார் உங்களுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது என்றார்

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:06 am

தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால் வேறு மாநிலம் அல்லது வெளிநாட்டில் குடியேறுவேன்- கமல்

சென்னை: எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார்.

அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை.

தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கிலத்தில் பழமொழி உள்ளது. எனக்கு தாமதமான நீதியே கிடைத்துள்ளது. இருப்பினும் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.

இன்று எனக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால் இப்போது நான் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இந்த வீடு எனக்கு இல்லை. இதை நான் விற்க வேண்டும். இங்கு எத்தனையோ பிரஸ் மீட் வைத்துள்ளேன், நடனமாடியுள்ளேன், ஓடியாடியுள்ளேன். ஆனால் இதை இழக்கவும் இப்போது தயாராகி விட்டேன். அதனால்தான் கடைசி முறையாக இந்த வீட்டில் ஒருபிரஸ் மீட் வைக்க விரும்பி உங்களை அழைத்தேன்.

என்னடா சிரித்துக் கொண்டே சொல்கிறானே என்று பார்ககிறீர்களா.. என் வீடே அப்படித்தான், குடும்பமே அப்படித்தான். பணம் பெரிதல்ல. நீதிபதி சொன்னது போல தனி நபரின் சொத்து முக்கியமா, நாடு முக்கியமா என்று.நான் அதை ஏற்கிறேன். நாட்டுக்கா, எனது அத்தனை சொத்துக்களையும் இழக்க நான் தயார்.

தமிழகம் என்னைப் புறக்கணிக்கிறது. தனி மனிதனை வீழ்த்திப பார்க்கலாம் என்று தமிழகம் நினைத்து விடக் கூடாது. நான் விழுந்தாலும் மீண்டும் விதையாக எழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.
மதச்சார்பற்ற மாநிலமாக எனது தமிழகம் இருக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பற்ற இன்னொரு மாநிலத்தை இந்தியாவில் நான் தேடி அங்கு போய் குடியேறுவேன். ஒருவேளை இந்தியாவில் எங்குமே இடம் இல்லை என்றால் ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் குடியேறுவேன்.

எனது படத்தில் இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களைக் கேலி செய்யும் படமே இல்லை.எனது படத்தின் களம் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவும்தான்.இதில் எப்படி இந்திய முஸ்லீம்களை இழிவுபடுத்த முடியும்.

எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் இஸ்லாமியர்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபாரிர், ஹைதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப்படத்திற்காக எனது அத்தனை சொத்துக்களையும் இழந்திருக்கிறேன். இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுமானால் மீதமுள்ள சொத்துக்களையும் நான் இழக்க நேரிடும்.

எனக்கு மதம் இல்லை, குலம் இல்லை, மனிதம் மட்டுமே எனக்கு முக்கியம். நாட்டின் முக்கியம் எனக்கு முக்கியம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றார் கமல்ஹாசன்

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:07 am

விஸ்வரூபம் படத்துக்கு மீண்டும் தடை விதித்தது ஹைகோர்ட் பெஞ்ச்: தனி நீதிபதி தந்த அனுமதி ரத்து!
சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.

முன்னதாக இந்தப் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10 மணிக்கு படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள் படத்துக்கு தடை விதிக்கக் கோரி அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாளை காலை (இன்று) இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.இதையடுத்து இந்தப் படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது.

பின்னர் வழக்கு பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் வரும் திங்கள்கிழமைக்குள் (பிப்ரவரி 4ம் தேதி) தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.



[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:10 am

விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல் முறையீடு

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான தடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு. இதற்கான அனுமதியை தலைமை நீதிபதி (எலிப்பி தர்மாராவ்) வழங்கினார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தமிழக அரசு விதித்த இரு வார கால தடை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீக்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.

இதனையடுத்து, விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிரான சிக்கல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து, இந்த உத்தரவு அமுலுக்கு வருவதை புதன் கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்டது. ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எலிபி தர்மாராவை அவரது இல்லத்தில், இரவு 11. 30 மணி அளவில் சந்தித்த அரசு வழக்கறிஞர்கள் குழு, மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெற்றது. இதனையடுத்து இந்த மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விஸ்வரூபம் இன்று வெளியாவதும் கஷ்டமே

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:11 am

[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:13 am

பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் விவகாரத்தில் கருணாநிதி போட்டார் புது குண்டு
சென்னை: விஸ்வரூபம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறார் என உண்மை வெளியே வந்து விட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் தடையில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இப்படம் தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை. ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார். பெரியார் அடிக்கடி பூனை வெளியே வந்து விட்டது என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது".

இந்த படத்தை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதி, விஸ்வரூபம் பட சிறப்பு காட்சியை நேரில் பார்த்தார். பின்னர் 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். ஆனால் இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை. விஸ்வரூபம் மீதான தடையை ரத்து செய்யாததால் நேற்று ஐகோர்ட்டில் 6 மணி நேரம் வழக்கு நடந்தது.

விஸ்வரூபம் படம் மீதான வழக்கில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இரவு 10.15 மணியளவில் தான் தனது தீர்ப்பினை அளித்துள்ளார், இதன் பின்னர் அதிமுக அரசு, இரவோடு இரவாக நள்ளிரவு 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள நீதிபதி எலிபி தர்மாராவ் வீட்டிற்கு சென்று தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தலைமை நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன ?.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:14 am

சிலரது கருத்துக்கள்...

கமல் என்ற தனிமனிதன் பகுத்தறிவு என்ற பெயரில் எண்ணற்ற இந்துக்களின், பிராமணர்களின் உணர்வுகளைக் கொலை செய்தமைக்குக் கிடைத்த தக்க தண்டனையாகவே நான் கருதுகின்றேன். இனியும் தன்னைத் திருத்திக்கொள்ள கமல் முயலவில்லையெனில், ஆண்டவனால் கூட கமலை காப்பாற்ற முடியாது. இது திண்ணம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:15 am

ஒரு வேளை விஸ்வருபம் படம் எல்லா தடைகளையும் தாண்டி திரைக்கு வந்துவிட்டால் தாமதமாக வந்திருக்கின்ற காரணத்தினால் குறிப்பிட்ட சில தினங்களுக்கு எல்லா திரையரங்குகளிலும் மற்ற படங்களை நிறுத்தி விஸ்வருபம் திரைபடத்தை மட்டுமே காண்பித்து கமல்ஹாசனின் கனவுபோல அதிகபட்ச இலாபம் கிடைக்காவிடிலும் அவரை காக்கின்ற அளவுக்கு அவருக்கு இலாபம் கிடைக்க அனைத்து திரையரங்கு urimaiyalarkalum மக்களும் எப்பொழுதும் போல் இப்பவும் அவரை காக்க வேண்டும் ஒரு தமிழனாக தமிழ் கலைஞனுக்காக கேட்டுக்கொள்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:15 am

சரஸ்வதி சபதம் நான் சிறுவனாக இருந்த போது பார்த்த படம்....இப்போதும் எப்போதும் என் மனதில் nizhaladikonde இருக்கும் .....இன்று காலையிலிருந்து அகலவில்லை மனதை விட்டு....... அந்த ஒரு பாடலிலே சிவாஜி கணேசன் தற்சமய நிலையை அன்றே பாடுவது போன்று விளக்கி இருப்பார் .... ராணி மகா ராணி .....ராஜ்யத்தில் ராணி...... எது நடக்க வேண்டுமோ அது நன்றகவே நடந்தது.... எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்........இது காலத்தினுடைய கட்டாயம்.... சொல்லுவார்களே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் என்று......
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:16 am

மத உணர்வு சம்பந்தப்பட்ட விஷயத்தை வெகு கவனமாக அரசு கையாள வேண்டிய சூழலில் ஜெயா, கமல், கருணா, கமல் ரசிகர்கள் ஆகியோர் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தொடர்வது வேதனை அளிக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:16 am

கேரளா வழியாகத்தான் முஸ்லிம் மதம் பரவியதாக கூறும் கேரளாவிலே கமல் படம் திரையிடப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் தமிழனின் படம்??????????/ கேவலம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:16 am

முதலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்று மட்டுமே அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் தணிக்கை குழுவில் சான்றிதல் வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளது என்று அரசு வழக்குரைஞர் சொன்னதாக செய்தி. அப்படியென்றால் அரசிற்கு எதோ கமலுக்கு கஷ்டம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ என்றே யோசிக்க தோன்றுகிறது. தனிப்பட்டவர்களை பழிவாங்கும் நோக்கம் இருக்குமானால் அது தவறு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:17 am

தவறான முடிவை எடுத்துவிட்டார் முதர்வர்... இனிவரும் தேர்தல் களத்தில் நிச்சயம் ஒரு பெரும்பகுதி ஓட்டை இழக்கபோவது நிச்சயம்... ஒட்டு மொத்த தமிழகமும் இதை உற்றுநோக்குவது வெறும் கமலுக்காக மட்டும் இல்லை... ஒரு தனி மனிதனை குறி வைத்து அரசாங்கமும், கட்சியினரும் தாக்கும் அளவுக்கு அதிகாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:17 am

பராசக்தி படம் ஒரு வேளை இன்று வெளியடபட்டிருந்தால், தமிழின தலைவரின் "பூசாரியை கொன்றேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல, அவன் பக்தி பகல் வேஷமாய் ஆகி விட்டதே என்பதற்காக" என்ற வசனத்திற்கு கோவிலையும் பூசாரியையும் காண்பித்து அதற்க்கு இந்து முன்னணி மற்றும் மத அமைப்புகள் பூசாரி அவமதிப்பு என்று தடை கோரியிருந்தால் இந்த பூனை, மணி, ஆகியவற்றை எல்லாம் பேசுவாரா????? பார்ப்பன ஆதிக்கம், பார்ப்பன அரசியல், பார்ப்பனர் படம், பார்ப்பனர் பூசாரி, பார்ப்பனர் கோவில் என்று பார்ப்பன பறவை போல் வார்த்தைகள் விஸ்வரூபம் எடுதிருக்காதா என்ன?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:18 am

தீவிரவாதிகள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள் .. மதம் என்பது, என் மதம், உன் மதம் என்று உன்மத்தம் "பிடித்து அலைவதற்கு" என்று ஆகி விட்டது.. பிறப்பால் ஒருவன் எந்த ஜாதி என்பதை ஒழித்த பெரியாரைப் போல, பிறப்பால் தான் ஒரு மதம் என்று இருப்பதையும் ஒழிக்க வேண்டும்.. அப்படி செய்தால் மதத்தை வளர்க்க, பிள்ளை வளர்க்க துப்பில்லை என்றாலும், பத்து பிள்ளை பெறுவதை நிப்பாட்டுவார்கள்.....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:18 am

நம்ம தமிழனை போல் மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அது தான் விஸ்வ ரூபத்தின் கதை. விஸ்வரூபம் விஸ்வ ரூபம் எடுத்து பெயருக்கு ஏற்ப விசரூபம் ஆடுகிறது. நல்ல ஒரு நீதி கிடைக்கும் விஸ்வரூபத்தின் கொழுந்து விட்டு எரியும் "தீ" என்ற விஸ்வரூபத்திற்கு.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:19 am

தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்ய விரும்பாத இவர் பேச்சை நம்ப தமிழக மக்கள் தயார் இல்லை. சட்டம் ஒழுங்கை காப்பதில் ஜெயலலிதா வல்லவர் என்ற கருத்து பொதுவாக இருப்பதால் நல்ல முடிவு வரும் என நம்பலாம் .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 4 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum