தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

4 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 5:12 pm

First topic message reminder :

விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?

சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...





நமாஸ் செய்து விட்டு கொலை

விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்



தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.



கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.



மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?

மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்



அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்

அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.



தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்

முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.

[You must be registered and logged in to see this link.]


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:58 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:57 am

Ashok - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜன-201310:51:22 IST Report Abuse

எது எப்படியோ.. கமல் என்ற ஒரு உழைப்பாளிக்கு நாம் செய்ய வேண்டியது இந்த படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றி பெற செய்வதே... இலவச விளம்பரம் செய்து படத்தை அதிகம் நபர் தியேட்டரில் பார்க்க உதவிய உள்ளங்களுக்கு நன்றி... போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பா.. எனது நண்பர் அமெரிக்காவில் படம் மிகப்பெரிய வெற்றி என சொன்னார்.. தமிழகத்தில் வெற்றியை 4 நாள் தள்ளிபோட்டுவிட்டனர்.. எனது நண்பர் சொன்னது:: சவுண்ட் எபெக்ட் ஹாலிவுட் தரத்தை மிஞ்சுகிறது.. போடோக்ராபி எக்சலண்ட்..மிக வித்தியாசமான படம்.. தியேட்டரில் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கிறது.. நல்ல படத்தை நல்ல முறையில் ரசிக்க தியேட்டரில் பார்ப்போமே.. அதோடு நல்ல நடிகனை ஊக்குவிப்போம்.. படத்தை தியேட்டரில் பார்த்து வெற்றி பெற செய்வோம்.. ஜைஹிந்த்..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:59 am

T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
30-ஜன-201310:47:06 IST Report Abuse

இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....ஜெயா செய்துள்ளது அப்பட்டமான மிரட்டல் வேலை. அவரது அரசியல் வாழ்வில் பெரிய சறுக்கல், சொல்லப்போனால் மூக்குடைப்பு.. ஆனால், அதே சமயம் பாட்சா, ரஜினி .... விஸ்வரூபம், கமல் ........வாய்ஸ் வரும் அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று கணக்கு போட வேண்டாம். ஏற்கனவே, இந்த மாதிரி வாய்ஸ் கொடுக்கப் போய்தான் தி.மு.க. திரும்ப ஆட்சிக்கு வந்து.........டில்லி வரைக்கும் கொடி கட்டி பறந்து, லட்சம் கோடிகளில் ஊழல் என்று புதிய பரிணாமத்தை அரசியல் வானில் புகுத்தினர்.........ஜெயா செய்த தவறுக்கு, இந்த லட்சம் கோடிகளில் புரளும் கேடிகளை திரும்பவும் வாழ வைக்க வேண்டாம். தவிர, கமல் என்ற கலைங்கனை பிடிக்கும் தமிழக மக்களுக்கு, கமல் என்ற தனிப்பட்ட மனிதனை, அவரின் குழப்பத்தனமான சிந்தனைகளை அறவே பிடிக்காது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:00 am

mirudan - guduvaancherri,இந்தியா
30-ஜன-201310:38:32 IST Report Abuse

கருணாநிதிக்கு ஒரு காலனியை ஏற்படுத்தும் அளவிற்கு குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு என்று குடும்பம் இல்லை. மிடாசில் வரும் வருமானம் போதும் போதும் என்ற அளவிற்கு இருக்கும் பொழுது, ஜெயா டிவியை விட வேறு டீவி அதிக விலை கொடுத்து கமலின் படத்தை வாங்க விரும்பும் பொழுது ஒரு சாராசரி மனிதன் கூட செய்யும் செயலை தான் கமல்ஹாசன் செய்து இருக்கிறார். ஜெயலலிதாவின் தனிப்பட்ட பகையை முஸ்லீம் சமுதாயத்தின் மீது சுமத்தி அதற்க்கு அரசு அதிகாரிகளை பயன்படுத்தி அதிகார துஸ்பிரயோகம் செய்து இருக்கிறார். இதற்க்கு அல்லக்கை ஜபருல்லா போன்றவர்கள் பலி கடா ஆகி இருக்கிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:01 am

G.Prabakaran - chennai,இந்தியா
30-ஜன-201310:26:59 IST Report Abuse

என்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் கூறியது இந்த விஸ்வரூப படத்தை எதிர்த்தவர்கள் பெரும்பாலானோர் வெறும் லெட்டெர் பேட் கட்சி நடத்தும் சில இஸ்லாமிய குழுக்கள் தான். இங்கும் இந்த படம் வெளி இட்டால் அண்டை மாநில முஸ்லிம் மக்களை போல் பெரும்பாலான முஸ்லிம் மக்களும் இங்கும் படத்தை பார்த்திருப்பார்கள் என கூறினார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:02 am

G.Prabakaran - chennai,இந்தியா
30-ஜன-201310:21:31 IST Report Abuse

ஜெயாவின் பழி வாங்கும் ஆணவ போக்கினால் கமல் மற்றும் ரஜினி ரசிகர்களின் வாக்குகளை இழப்பது நிச்சயம். இவர் இப்படியே இன்னும் எத்தனை நாட்களுக்கு வியாஜ்ய பிரியராகவே இருப்பார். எதற்கெடுத்தாலும் நீதி மன்றத்தை நாடி பல குட்டுகள் வாங்கியும் தெளிவு பிறக்க வில்லையே. சமச்சீர் கலவி தொட்டு இது வரையிலும் அவர் தொடுத்த வழக்குகளில் உதைப்பட்டது தான் மிச்சம். எனக்கு தெரிந்து சமீபத்தில் தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றம் செய்யும் வழக்கு மட்டுமே அவர் பெற்ற வெற்றி என நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:02 am

Kelvin - chennai,இந்தியா
30-ஜன-201310:16:33 IST Report Abuse

சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாது என 144 தடை உத்தரவு போட்ட தலைவிக்கு ( சொல்லிக்கலாம் ) தமிழ் நாட்டை ஆளும் அளவிற்கு யோக்கிதை, திறமை, திராணி இல்லை. எனவே அடுத்த தேர்தலில் நான் அவருக்கு ஓட்டு போட மாட்டேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:03 am

சொற்களஞ்சியம் - தமிழ்நாடு,இந்தியா
30-ஜன-201310:14:19 IST Report Abuse

இருப்பினும் ஒன்று மற்றும் புரியவில்லை. தணிக்கை துறையின் சான்று தவறானது மற்றும் அதிகாரிகள் போலியானவர்கள் என்றும் வாதிடப்பட்டுள்ளது. அப்படியானால் 6 மாதமாக ஏன் தடை கோரி வழக்கு தொடுக்கவில்லை. கொடுமையிலும் கொடுமை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:03 am

Dhanabal - thoothukudi,இந்தியா
30-ஜன-201310:14:08 IST Report Abuse

விஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதித்து, நீதிமன்றத்தில் அரசு எடுத்து வைக்கும் வாதங்களை பார்த்தால் சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையிலேயே தடை விதித்ததாக கருத இடமளிக்கிறது. மின்வெட்டு, காவிரி நதி நீர், மாநில முழுமையும் வரலாறு காணா வறட்சி என எவ்வளவோ பிரச்சனைகள் தமிழகத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இப்படத்தின் மீது அரசு தலையிட்டிருக்க வேண்டியதே இல்லை. தேவையற்ற தலையீடு காரணமாக தமிழக மக்களிடையே வீண் அவப்பெயரையே அரசு சம்பாதித்துள்ளது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:04 am

karun - chennai,இந்தியா
30-ஜன-201310:12:30 IST Report Abuse

ஜெ இஸ்லாமியர்களுக்கு என்றும் ஆதரவாக இருந்ததில்லை.1999-இல் சென்னை கடற்கரையில் நடந்த பொது கூடத்தில் "பிஜேபி யுடன் நான் கூட்டணி வைத்ததற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்" என்று சொன்னவர் 2004-இல் பிஜேபி யுடன் கூட்டணி வைத்து தோல்வி கண்டார்.பிஜேபி+AIADMK "மறைமுக" உறவு தெரிந்ததே. எல்லாம் 40 க்கு-40 பன்ற வேலை. ஒரு வேளை இவங்க "புது டெல்லி" சென்றால்[?] நாடு தங்குமா? [Wo]Man proposes Aandavan disposesVoters,think "thrice" before ing votes.A Leader should lead the Country NOT to "lame" the Country.Jai Hind.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:05 am

சொற்களஞ்சியம் - தமிழ்நாடு,இந்தியா
30-ஜன-201310:10:36 IST Report Abuse

144 தடை உத்தரவு போடும் அளவுக்கு இஸ்லாமியர்கள் என்ன வன்முறையாளர்களா?...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:06 am

Khalil - chicago,யூ.எஸ்.ஏ
30-ஜன-201310:02:34 IST Report Abuse

கருத்து சுதந்திரம் பற்றி பேசும் எனது அருமை மாற்று மத சகோதரர்களே நீங்கள் கவனிக்க மறந்த விஷயம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றவர் மனதை காயபடுத்துவதோ அல்லது சமுதாயத்தில் ஒரு விஷ கருத்தை விதைப்பதோ தவறு என்பதைத்தான். இப்பொழுது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவோர் சற்றே சிந்தியுங்கள் 1. Damm படத்தை ஏன் எதிர்த்தார்கள்? கருத்து சுதந்திரம் என்று விட்டு இருக்கலாமே? 2. Fire படத்தை ஏன் எதிர்த்தார்கள்? கருத்து சுதந்திரம் என்று விட்டு இருக்கலாமே? 3. Da-Vinci-Code படத்தை ஏன் எதிர்த்தார்கள்? கருத்து சுதந்திரம் என்று விட்டு இருக்கலாமே? 4. Kutrappathirikkai படத்தை ஏன் தடை செய்தார்கள்? கருத்து சுதந்திரம் என்று விட்டு இருக்கலாமே? 5. இன்று வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் பாரதிராஜா, குமுதம் இதழில் "ஒரு நடிகையின் கதை" என்ற தொடர் வெளியானபோது ஏன் எதிர்த்தார்? கருத்து சுதந்திரம் என்று விட்டு இருக்கலாமே? இன்னும் இது போன்று பல நிகழ்வுகள். இந்த பிரச்னையில் சிலர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் உளப்பூர்வமாக இதை எதிர்க்கும் அமைப்புகளும் தனி மனிதர்களும் உண்டு. ஒரு உண்மையான முஸ்லிம் இந்த படத்தின் சொல்லபடுகின்ற செய்திகள் மூலம் மனதளவில் நிச்சயம் பாதிப்பு அடைகிறான். 1. இறை வேதம் Quran அனாவசியமாக காட்சி அமைப்பில் பொருத்துவதன் நோக்கம் என்ன? 2. எங்களது தொழுகையையும் அனாவசியமாக காட்சி அமைப்பில் பொருத்துவதன் நோக்கம் என்ன? 3. படத்தின் தலைப்பை அரபி எழுத்துக்கள் போன்ற தோற்ற அமைப்பில் அமைத்ததின் நோக்கம் என்ன? கமல் நஷ்டம் அடைவதால் முஸ்லிம்களுக்கு எந்த லாபமும் இல்லை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற எண்ணம் தவறு என்று அவரும் அவருக்கு support செய்யும் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை எதிர்கிறோம். இந்த படம் வெளி வந்தாலும் இனியாவது இது போன்று மற்றவர் மனதை புன்படுத்தியும், மதத்தை கேலி செய்தும் படம் எடுப்பது நிச்சயம் நிறுத்தப்படும் என்று நம்புவோமாக.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:09 am

Sri Kumaar - erode,இந்தியா
30-ஜன-201309:42:24 IST Report Abuse

ஒரு நல்ல தீர்ப்பு, அதிகாரவர்க்கம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை முறியடித்த வழக்கு, தனிப்பட்ட முறையில் நான் கமல் ரசிகர் இல்லை. ஆனால் தனி ஒரு மனிதனின் உழைப்பை முடக்குவதில் எனக்கு உடன் பாடில்லை. எத்தனை முஸ்லிம் நண்பர்கள் தங்கள் சமுகத்தில் உள்ள வறியவர்களுக்கு உதவிகொண்டுள்ளனர் . எந்த ஒரு மனிதனாலும் ஒரு மதத்தை இழிவு படுத்திவிட முடியாது அவன் அப்படி இழிவு படுத்துவதாக நினைத்தல் அவன்தான் இழிவுபடுவனே தவிர அந்த மதம் இல்லை. மதவாத கூட்டமெல்லாம் இன்னொரு மதத்தை வம்பிளுக்கிரதிலேயே இங்கு கருத்து பதித்து வந்தன...நான் பலமுறை எழுதினேன் இப்பொழுது புரிந்தததா இது மதப்பிரச்சனையல்ல ஜெயா என்ற அகங்காரம் பிடித்த ஒரு தனி நபரின் மானப்பிரச்சனை என்று...எதற்கெடுத்தாலும் மதவாதம் பேசுபவர்கள் தேசத்துரோகிகளாகவே எண்ண வேண்டும்...இங்கு இந்து முஸ்லீம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறான். மஞ்சள் காமாலை பிடித்த மதவாதிகளுக்கு மட்டுமே எல்லாவிசயத்திலும் மதம் பேச தோணும்.....இந்த ஜவஹீருல்லாஹ் ஆதிமுக ஆதரவு பெற்ற எம்.எல்.ஏ. துப்பாக்கி படத்தை நிறுத்த கோசம் போட்டவர்கள் எப்படி சமரசமானார்கள்...விஸ்வரூபத்துக்கு மட்டும் ஏன் விச்வரூபமெடுக்கிரார்கள்.... ஒரே மாதத்தில் இரட்டைவேடம் படைத்தது அவன். தடை வைத்தது நீ அரசு, ஒப்படைத்தது அவர்களிடம். வினி யோகஸ்தர்கள் இருக்கட்டும், படைப்பிலே குறை கண்டவர்கள் கறை நெஞ்சம் உடையவர்களே இந்தியாவில் புரை ஓடி இருக்கும் உண்மை நிலை கண்டும் வால் எனும் நீதி இன்னும் உறைக்குள் தான் இருக்கிறது, சீண்டுவது எந்த வகைனும் சரி, தீவிரவாதத்தை இனி இந்தியா முழுவதும் வெறுக்க வேண்டும். அரு வருக்க தக்கவன் தீவிரவாதி. அவன் எந்த ரூபத்தில் வந்தாலும் சரி விஷ்வ ரூபம் அவர்களுக்கு ஒரு சவுக்கடி, அரபு நாட்டில் தண்டனை பெற்றவர்களுக்கு கொடுக்கபடும் சவுக்கடி போல் தான் தீவிரவாதிகளுக்கும் கொடுக்கப்படும் சவுக்கடி, உடலால் கொடுக்க படுவது அல்ல, அப்பாவி ஜனங்கள் எத்தனையோ பேரு தங்கள் குடும்பத்தினரை இல்ழந்து இன்றும் அவதி உள்ளகக படும் கொடுமை நடக்கிறது, உலகின் விஷ்வரூபம் படத்தை தடை செய்ய யார் நீ, உண்மையை கூறும் எதையும் வாய்மையே வெல்லும் என்ற தமிழக அரசின் ஏற்புட தன்மை இந்த அரசால் எபோழுதும் போல் ஸ்டிக்கர் ஓட்ட பட்டது, கருப்பு ஸ்டிக்கர், உண்மைகள் சோற்றில் மறைத்த பூசணி போல் இருக்கும் பட்சத்தில் நீ என்ன எவன் மறைத்தாலும் விஷ்வ ரூப உண்மைகள் மறையாது, அது ஏற்க்கனவே உலகின் மீது படிந்த கறை, மார்க்கங்கள் எந்த இடத்திற்கு அழைத்து செல்லும் என்பதை உலகம் அறிந்து விட்டது, இந்தியாவின் மீது எதனை ரத்த கறைகள் அதனையும் எந்த தீவிரவாதிகளால் ஏற்பட்டன, இந்தியா இன்னும் மறக்க வில்லை, சுதந்திரத்துக்கு பின் தீவிரவாதம் என்கிற பெயரில் நுழைவது சுதந்திரத்திற்கும் முன் எப்படி நுழைந்தது, இதையெல்லாம் மூடி மறைக்கவே இந்தியாவை மத சார்பின்மை என்று சமுகத்தின் மதகுகளை மூடி விட்டனர், இந்திய ஒரு பாகிஸ்தான் அல்ல, ஒரு இலங்கை அல்ல, இங்கு உள்ள சுதந்திரம் தவறாக புரிந்து கொள்ள படுமானால் இனொரு சுதந்திரத்தை நோக்கி இந்தியா நகரும், உலகின் தீவிரவாதிகலே இந்தியாவின் பக்கம் மூச்சு கூட விடாதே, இங்கு உனக்கு ஆதரவு பேச்சு என்பது கொசு மனிதனின் ரத்தத்தை குடிக்கும் முன் விடும் சபதம் போன்றது, இங்கு அரசு சரியில்லை எனிவே தான் டெங்கு தொல்லை, வாக்கு சிதறக்கூடாது பதறி போய் விடும் இவர்களது எண்ணம், படம் வெளியானால் தீவிரவாதம் வெடிக்குமா இங்கு, என்ன மிரட்டுகிறார்களா, யாரிடம், கமல் அவர்களே டி டி ஹெச்சில் எபொழுது வெளியிடுகிறீர்கள், உலகமே பார்க்கும் அல்லவா, சுத்தமில்லாத சினிமா அரங்குகளை விட எங்கள் வீடுகளில் நாங்களே பார்க்கலாம் அல்லவா, தீவிரவாதிகள் எங்கும் நிறைந்து விட்டனர், அவர்களை தவிர்ப்பது நீங்களோ நாங்களோ அல்ல, அரசுக்கு இல்லாத அக்கறை பாதிக்க பட்ட ஆன்மாக்களுக்கு இல்லாத அக்கறை வாழ்ந்து வரும் அமைதி எண்ணம் கொண்ட நமக்கு பார்த்தோம் ரசித்தோம் சிந்தித்தோம், இனி எவாறு உலகின் போக்கு உள்ளது என்பதை அறிவோமாக. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் முயற்சி தோல்வி அடைந்து உள்ளது. இஸ்லாமை பயன்படுத்தி பயம் காட்ட செய்யும் அனைத்து செயல்களும் இஸ்லாமிர்களை மேலும் தனிமை படுத்திவிடும். ஜனநாயகத்தை பயன்படுத்தி தங்கள் சமுகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டியது அதன் தலைவர்களுக்கு உள்ள முக்கிய கடமை. இஸ்லாமிய அடிபடைவதிகள் இனியும் அரசியல்வாதிகளை நம்பாமல் உண்மையாக தங்கள் மக்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுங்கள்.இயேசு கிரிசுதுவை மோசமாக சித்தரித்து எடுத்த டாவின்சி கோட் என்ற திரை படத்தை எந்த அமெரிக்க ஐரோபிய நாடுகளும் தடை செய்யவில்லை. எனெனில் அது ஒரு தனி மனிதனின் எண்ணம். அதை பார்ப்பதும் பார்க்காததும், ஏற்பதும், ஏற்று கொள்ளாததும் அவர் அவரின் விருப்பம். அதை விடுத்தது படத்தை தடை செய்ய முயன்றால் அதற்கு விளம்பரம் கொடுப்பதுடன் அதில் என்னதான் இருக்கிறது என்று அனைவரின் ஆவலையும் அது தூண்டி விடுகிறது. அப்படி என்ன நடக்காததை கமல் காண்பித்து விட்டார். 150 பேரை கொடூரமாக கொன்ற கசபுக்கு கூட நாம் வக்கீல் வைத்து வாதாட அனுமதி வழங்கினோம். ஆனால் மத சட்டம் என்ற மோசடி பெயரில் அரபு நாடுகளில் எந்த ஒரு குற்றவாளிக்கும் தன தரப்பு நியாங்களை எடுத்து சொல்ல அனுமதிக்காமல் மிருகத்தனமாக நடு ரோட்டில் வைத்து தலையை வெட்டுவதை இங்கிருக்கும் மக்கள் ஏற்று கொள்கிறார்களா. சென்ற மாதம் ஒரு அப்பாவி தமிழ் முஸ்லிம் பெண்...அதுவும் 17 வயதே நிரம்பிய பெண்ணை இப்படித்தான் தலையை வெட்டினார்கள். அதை கேட்க துப்பில்லை. வீண் விளம்பரத்திற்காக போராட வந்து விட்டார்கள். இந்த அரசு இந்த படத்தை தடை செய்ததில் எதோ அரசியல் உள் நோக்கம் உள்ளதாகவே தெரிகிறது. ஆப்பை தேடி பொய் உட்காருகிறார்கள். கமல் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. அவரை இப்படி கேவலபடுத்துவது இந்த அரசுக்கு நல்லதல்ல. சென்சர் போர்டு அனுமதி வழங்கிவிட்ட பிறகு அதை தடை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை. 144 தடை உத்தரவு போடும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டதா. அப்படி என்றால் அதை கட்டு படுத்த முடியாத இந்த அரசு எதற்கு. மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்றாத மாநில அரசை உடனடியாக கலைக்க வேண்டும். விலைவாசி உயர்வு, மின் தடை என பல மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது இந்த அரசிற்கு இந்த படம் ஒரு பிரச்சனையா ? இதில் இருந்தே தெரிகிறது இதில் உள்ள அரசியல் நோக்கங்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 2:11 am

Senthamilan - sydney,ஆஸ்திரேலியா
30-ஜன-201309:08:42 IST Report Abuse

இந்த தீர்ப்பை போராடிய இஸ்லாம் அமைப்புகள் ஏற்று கொண்டாலும், ஜெயா அரசு விடுவதாய் இல்லை. காரணம் என்னவென்றால், இப்படத்தின் உரிமை ஜெயா டிவிக்கு கிடைக்கவில்லை. கமலை மிரட்டி இப்படத்தை வாங்க முயன்றது ஜெயாவின் டிவி. ஆனால் கிடைக்கவில்லை. மேலும் கமல் ஒரு பேட்டியில் சிதம்பரம் ஒரு தமிழனாக பிரதமராக தகுதி உள்ளவர் என்று கூறியதை ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஜெயா அரசு பழி வாங்குகிறது என்பதே உண்மை. ஏற்கனவே பொய் வழக்குகள் / அவதூறு வழக்குகள் என்று மக்களின் பணத்தை வீணடித்து மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் மேலும் இப்படி ஏதாவது நயவஞ்சக நாடகம் ஆடி மக்களை திசை திருப்புவதை ஜெயா இன்னும் விடவில்லை. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தீருப்புக்கு பின்னரும் விடாமல் எதிர்ப்பு தெரிவித்து, அரசு வக்கீல் மேல் முறையீடு செய்ய நீதிபதி தர்மாராவ் வீட்டிற்கே இரவோடு இரவாக சென்றார். நீதிபதி காலையில் நீதிமன்றத்தில் முறையிடுமாறு சொல்லியுள்ளார். என்ன ஒரு அகம்பாவம். இப்படி ஒரு தனிப்பட்ட பிரச்னையை பெரிதாக எடுத்துக்கொண்டு அதற்காக மக்கள் பணத்தை வீணடிக்கும் ஜெயாவின் கீழ்த்தரமான குணத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். போராடிய இஸ்லாம் அமைப்புகள் கூட ஒரு காரணத்தை வைத்து போராடின. அவர்களிடம் படத்தை பற்றி பொய் பிரச்சாரத்தை சிலர் பரப்பியதாக அந்த அமைப்பின் சிலரே கூறியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. தீர்ப்பு பற்றி எந்த ஒரு செய்தியும் ஜெயா டிவியில் வெளிவரவில்லை என்பதன் காரணம் இதுதான். ஆகவே இந்த பிரச்னையின் உண்மையான மூல காரணம் வெளிவந்தால் விஷயம் முழுதாக விளங்கும். படம் தரமான படம். இஸ்லாமியருக்கு எதிராக எந்த காட்சியும்/வசனமும் இல்லை. ஆனால் மனிதனின் கீழ்த்தரமான குணம் என்னவெல்லாம் செய்கிறது.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:55 am

“உலகநாயகன் டைரக்‌ஷனில் இலவசமாக நடிக்க ரெடி” : கமலுக்கு தோள் கொடுக்க தயாராகும் ரஜினி!


“எனது நண்பன் கமலுக்கு ஆண்டவன் எனும் நீதிமன்றத்தில் நிச்சயம் ஜெயிப்பான்” என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியிருக்கிறார்.





‘விஸ்வரூபம்’ படத்துக்கு மீண்டும் தமிழ்நாட்டில் தடை
விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது 40
ஆண்டுகால நண்பன் கமலுக்கு ஆதரவும், ஆறுதலும் கூறியிருக்கிறார் சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி - கமல் இருவரும் திரையுலகில் மரியாதைக்குரிய போட்டியாளர்களாகவும், நிஜத்தில் நட்புக்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.
இருவருமே
தங்களுக்குள் வரும் நெருக்கடி கால கட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவிகளை
செய்துகொள்வார்கள். அந்தளவுக்கு நிஜத்தில் கமலுடன் நட்பு பாராட்டி வரும் ரஜினி இப்போது கமலுக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறாராம்.

“ஒரு மதச்சார்பற்ற இடத்தில் நான் இருக்க ஆசைப்படுகிறேன். அது
இந்தியாவில் எங்கு இருக்கிறதோ அங்கு செல்வேன், அல்லது மதச்சார்பு இல்லாத வெளிநாட்டில் போய் குடியேறுவேன் என்று தமிழகத்தை விட்டு வெளியேறுவேன்”
என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட ரஜினி 'ஆண்டவன் எனும்
நீதிமன்றத்தில் என் நண்பன் நிச்சயம் ஜெயிப்பான்' என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு கஷ்டமான சூழ்நிலை வந்தபோது என் நண்பன் கமல் எனக்கு ஆதரவாக இருந்தான். அதேபோல அவனுக்கு வந்திருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவருடைய டைரக்‌ஷனில் நான் இலவசமாக நடிக்க தயாராக இருக்கிறேன்
என்று கூறியிருக்கிறார்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 3:24 pm

[You must be registered and logged in to see this link.]

மனித குலம் செம்மைபடவே மதங்கள் தோன்றியதாக படிக்கிறோம். ஆனால் மனித குலத்தையே அது நாசம் செய்யுமெனில் அப்படிப்பட்டமதத்தின் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படுமென்பது உலக வரலாறு. அதுபோல் நம் மாநிலத்தில் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது.
விஸ்வரூபம் திரைப்படத்தை பற்றி இஸ்லாமியர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் ஏன் ஒரே மாதிரியிருக்கிறது? ஒற்றுமையா அல்லதுஇவர்கள் சார்ந்த மதம் விமர்சனங்களை தாங்காத அளவிற்கு பலகீனமானதா? இவர்கள் ஏன் மதம் சார்ந்த பிரச்சனைகளில் மட்டும் இப்படிஒற்றுமையாக ஒன்றுகூடுகிறார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாமிய தீவிரவாதிகளால் இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட பயங்கரவாதசெயல்களுக்கு எதிராக ஒன்று கூடவில்லை?
இந்த பயங்கரவாத செயல்களால் ஏற்படாத சேதாரம் விஸ்வரூபம் படத்தால் இஸ்லாமிற்கு எற்படும் என நம்புவது விநோதமாகப் படவில்லையா? இவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளும் நேரம் வந்துவிட்டதைத்தான் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகள்காட்டுகிறது.
முன்பு போன்று இவர்களுடைய செயல்களை பற்றி விமர்சிக்கவோ, எழுதவோ வாய்ப்புகள் இல்லாமலிருந்திருந்தால் இவர்கள் சார்ந்த மதம்எந்த விமர்சனத்திலும் சிக்கியிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அல்லது மதங்கள் உருவானகாலத்திலிருந்து இப்பொழுதிருக்கும் அளவிற்கு கருத்து பரிமாற்றம் நடப்பது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் என்பதை அனைவரும்உணரவேண்டும்.
மத குருக்கள் முன்பு சொன்னதை யாரும் எதிர்த்து கேள்விகேட்கவோ அல்லது விமர்சனம் செய்யவோ சில வருடங்களுக்கு முன்புவரைவாய்ப்பே கிடையாது. ஆனால் இன்று அப்படியா? எதை செய்தாலும் அதை கழட்டி மாட்டும் அளவிற்கு வாய்ப்புகள் உருவாகிவிட்டது.பெரியார் பிறந்த மண் இது. ஒரு சதவீதம் பகுத்தறிவு இருந்தாலே போதும் ஆராய்ந்து சொல்ல.
இங்கிருக்கும் பள்ளிவாசல்களில் ஏதாவது தீவிரவாத செயல்கள் நடப்பதுபோல் கமல் படத்தில் கட்சிகள் இருப்பின் அதை நீக்க சொல்லலாம்.அதுபோன்று எதுவுமே இல்லாத இந்தப்படத்தை தடை செய்ய சொல்வதும், அவர்களின் பேச்சை கேட்டு மாநில அரசே செயல்படுவதும்தவறுதானே? இவர்களால் சட்டம் ஒழுங்கு கெடுமென முன்வைக்கும் வாதமும் தவறானதாகவே படுகிறது.. இதுபோன்ற கோரிக்கைகளுக்குசெவிசாய்ப்பதும், இவர்களை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பதும் பின்வரும் காலங்களில் மற்ற சமூக மக்களையும் இதே போல செயல்படதூண்டாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? இது ஒரு தவறான முன்னுதாரணமேயன்றி வேறல்ல.
அமெரிக்க தூதரக தாக்குதலில் இவர்கள் ஈடுபட்ட போதே இவர்களின் சேட்டைகளுக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்க வேண்டும்.
இஸ்லாமிய கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றும் அல்லது பின்பற்றிய எந்த நாடும் அமைதியாகவே இல்லை என பொதுவான கருத்துமுன்வைக்கப்படுதை எந்த ஒரு அடிப்படைவாத முஸ்லிமும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதில்லை. மனுஷ்யபுத்திரன் போன்றவர்களைதிட்டுவதுபோலவே எல்லா விமர்சகர்களையும் கடுமையாக திட்டுவதே அவர்களின் பதில்.
தமிழகம் எப்பொழுதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறது. பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் ஊரில் ஒருமுஸ்லிம் மளிகைக்கடையோ அல்லது கறிக்கடையோ வைத்திருப்பார். அவரிடம் இந்துக்களோ அல்லது மற்ற மதத்தினரோ எந்தவேற்றுமையும் காட்டுவது கிடையாது. ஆனால் சமீப காலமாக தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படித்த இஸ்லாமியர்களில்பலரும் இணைதள ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்கள் சிறிது சிறிதாக அவர்களின் சிந்தனைகள் எல்லைதாண்டி பாசத்தை பொழிவதைவெளிக்காட்டுகிறது. சிந்தனைக்கு எல்லை வேண்டாம்... ஆனால் இவர்களில் பலருடைய சிந்தனையே எல்லைதாண்டி இருப்பவர்களுக்குஎனும்போதும் அது ஆரோக்கியமான தமிழகமாக நம் மாநிலம் தொடர்ந்து இருப்பதை அவர்கள் விரும்பவில்லையோ எனத் தோன்றுகிறது.
விஸ்வரூபம் படத்தின் தற்போதைய நிலை நாளை எல்லா படைப்புகளுக்கும் வருமென்பதை மறுப்பதிற்கில்லை. இனி வில்லன் வேடத்திலிருப்பவரின் பெயரோ அல்லது தோற்றமோ ஒரு மதத்தை பிரதிபலிப்பதாக இருக்ககூடாது. கதாநாயகி முத்தம் கொடுப்பதோ, காதல்காட்சியில் நடிப்பதோ கண்டனத்திற்கு உள்ளாகும். ரஜினி பறந்து பறந்து சண்டையிட்டாலும் பிரச்சனையாகும். முகவரி தேட இனி எல்லாபடத்தையும் எதிர்க்க புற்றீசல் போல் பல அமைப்புகள் முண்டியடிக்கும்.
சினிமாக்காரர்கள் இனி இதுபோன்ற அமைப்புகளுக்கு தங்களுடைய படங்களை திரையிட்டுக்காட்ட வேண்டிய சூழல் ஏற்படாது என யாரும் உத்திரவாதம் கொடுக்கமுடியாது.
அமெரிக்க தூதரக தாக்குதலுக்குப் பிறகு தமிழக இஸ்லாமிய இயக்கங்களுக்கு விஸ்வரூபம் திரைப்படம் அவர்களின் இருப்பைதொடர்ந்து உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்ள ஒரு காரணமாகத்தான் தெரிகிறது. இனி வரும் காலங்களில் ஏதாவது ஒரு காரணத்தைசொல்லி போராட்டம் என்ற பெயரில் கடுமையான தலைவலியை மக்களுக்கும், அரசுக்கும் அவர்கள் தொடர்ந்து கொடுப்பார்கள் என்றேதோன்றுகிறது. இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரபு நாடுகளிலும், மலேசியா, ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடகாவில் இந்ததிரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இஸ்லாமிய இயக்கங்களின்அனைத்து தொடர்புகளையும் விரிவாக ஆராய வேண்டிய நேரம் வந்து விட்டதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகிறது. தமிழகத்தின் நிம்மதி இவர்களால் கெடும் நிலை வருவதற்கு முன்பே விழித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
இவர்களின் செயல்பாடு கருத்து சுதந்திரத்திக்கு எதிரானது என அனைத்து தரப்பிலிருந்தும் குரல்கள் கேட்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடருமேயானால் அது முஸ்லிம் மக்களுக்கும் மற்ற சமூக மக்களுக்குமிடையே தேவையில்லாத வெறுப்பையும் இடைவெளியையுமே ஏற்படுத்தும்.
உணர்ந்துசெயல்படுங்கள் தோழர்களே. விமர்சனத்தை அறிவோடு ஆராய்ந்து பதில் சொல்லுங்கள். அதைவிடுத்து இஸ்லாமிய பெரியவர்களே அசிங்கமாக திட்டி பதில் சொல்வது அநாகரீகமாகவே தெரிகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 3:28 pm

விஸ்வரூபம் படத்தின் மீது அரசு விதித்துள்ள தடை சரியானதுதான் - சோ
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார்.

கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார்.

நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும்.

ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்," என்றார்.

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 3:31 pm

ஜெயா டிவிக்குப் படத்தை விற்காததால் விஸ்வரூபத்திற்குத் தடையா?... ஜெ. விளக்கம்

சென்னை: ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் விற்க முன்வராததால்தான் நான் படத்தைத் தடை செய்தேன் என்பது அபத்தமான குறறச்சாட்டு. ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது...

விஸ்வரூபம் விவகாரத்தில் என்னைத் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். நான் ஒரு தனியார் டிவிக்கு ஆதரவாக,அதாவது ஜெயா டிவிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள்.

ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயா டிவியின் நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. அது அதிமுகவின் ஆதரவு டிவி, அவ்வளவுதான். ஜெயா டிவி நிறுவனத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிலையில் படத்தை அடிமாட்டு விலைக்கு ஜெயா டிவிக்கு விற்காகததால்தான் நான் கோபமடைந்து தடை செய்ததாக கூறுவது அபத்தானது, தவறானது.

இப்படி என்னை ஜெயா டிவியுடன் இணைத்துப் புகார் கூறிப் பேசியவர்கள் மீதும், அதை செய்தியாக வெளியிட்டவர்கள் மீதும் நான் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஜெயலலிதா.

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Thu Jan 31, 2013 7:40 pm

தன்
அப்பனின் விருப்பத்திற்கிணங்க "ஹாசன்" எனும்
அப்பனின் முஸல்மான் நண்பனின்
பெயரை
இன்றளவுக்கும் தங்களது பெயருக்கு பின்னால்
சுமந்து கொண்டிருக்கும்
குடும்பம் இந்த கலைஞனுடையது ..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 7:54 pm

அ.இராமநாதன் wrote:தன்
அப்பனின் விருப்பத்திற்கிணங்க "ஹாசன்" எனும்
அப்பனின் முஸல்மான் நண்பனின்
பெயரை
இன்றளவுக்கும் தங்களது பெயருக்கு பின்னால்
சுமந்து கொண்டிருக்கும்
குடும்பம் இந்த கலைஞனுடையது ..

புதிய தகவல்... அவருக்கே இந்தச் சோதனையா? அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:00 pm

நன்றி Swathi Swamy மின்னஞ்சல்.

என் அன்புக்குரிய குழும உறவுகளான பலருக்கு தெரியும் கமல் ரஜனி என்று இரண்டு நடிகர்களிடமும் , கடவுள் பெயரில் வியாபாரம், அரசியல், வன்முறை செய்பவர்களிடமும் எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது என்பது.

நான் என் கடவுளை விட இந்து மதம் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகளைப் பார்த்து தான் கடவுள் நம்பிக்கையையே விட்டேன்... இஸ்லாமிய அன்பர்கள் என்னை நம்ப வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை...ஈழத்தில் இருக்கும் போது வெறும் 6 வயதில் என்னை பார்த்தவர்கள் ஆண்டாள் மாதிரியும் மீரா மாதிரியும் தான் இந்த பிள்ளை வரப் போகுது என்று சொல்லுமளவுக்கு சைவப்பழமாக இருந்தவள்...என் பெரியம்மாவோடு சேர்ந்து விரதமிருப்பதும், கோவிலில் அடியழிப்பதுமாய் வளர்ந்தவள்....என்றைக்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ, என்றைக்கு பம்பாயில் நெருல் என்ற இடத்தில் எங்கள் கண் முன்னால் இஸ்லாமிய இளைஞனை சிவசேனாவினர் தீயிட்டு உயிரோடு எரித்தனரோ அன்றைக்கு என் மதத்தைச் சார்ந்தவர்களை நான் வெறுத்தவள்...இந்து என்ற அடையாளத்தை நான் துறக்கக் காரணமே இந்தியா தான். குழுமங்களிலேயே சங்கர் அண்ணா உட்பட பலரோடு எத்தனையோ தடவை கடவுளை மறுத்து வாதாடியிருக்கிறேன்

அதனால் தமிழக, ஹாலிவூட் அல்லது வேறு எந்த தேசத்தினதும் எந்தவொரு சினிமாநடிகர்களின் ரசிகை அல்லாத, ஒரு குறிப்பிட்ட மதம் சார்பானவளாக இருக்க விரும்பாத ஒருத்தியாக தான் இதை எழுதத் தொடங்குகிறேன். .

கமல் என்ன தான் கறுப்புச் சட்டை கருத்துகளை அள்ளிவிட்டாலும் அதை நான் எப்போதும் நம்பியதில்லை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் அப்பட்டமாக அவர் தனது காழ்ப்புணர்ச்சியை தன் முகபாவங்களாலும் , நறுக்கென்ற ஓரிரு வசனங்களாலும், எள்ளல் சிரிப்பாலும் காட்டியதையும் கவனிக்கவும் தவறவில்லை...

அதனாலேயே விஸ்வரூபம் படத்திலும் தனது காழ்ப்புணர்ச்சியை காட்டியிருக்கிறார் போலிருக்கிறது என்றே நான் தீவிரமாக நம்பினேன். அதனாலேயே இந்தப் படத்தை பார்த்தேயாக வேண்டும் என்று ஆக்கினைப் படுத்தி என் பிராணநாதரை இழுத்துக் கொண்டு தியேட்டருக்கு போய் நேற்று இரவுக் காட்சி யாக நியுயேர்ஸியில் ஒரு தியேட்டரில் விஸ்வரூபம் படத்தை பார்த்தேன். $14.00டாலர் . படி $28.00டாலரும், நாச்சோ சிப்ஸுக்கு $8.00 டாலருமாக $32.00 டாலர் . போச்சு..!!

32.00 டாலர்??? ம்ஹும்... ரெண்டு சட்டை வாங்கியிருக்கலாம் அல்லது பசங்களுக்கு வீடியோ கேம் வாங்கியிருக்கலாம் அல்லது ஒரு வாரத்துக்கு மளிகைச் சாமானாவது வாங்கியிருக்கலாம் என்று மனது கணக்குப் பார்த்தாலும் "எப்ப பார் எனகு முன்பாகவே படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதும் இலங்கை இந்திய இணைய உறவுகளையும் ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்...அதுவும் தம்பி மருதமூரானை நினைத்துப் பார்த்தேன்...ஆஹா..தம்பிக்கு நான் விமர்சனம் எழுதி படிக்கும் விதியை விஸ்வரூபம் மூலம் எழுதி வைத்த கமலுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இந்த விசயத்துக்காக நன்றி சொல்ல தோன்றியது... அடிதான் விழும் ஓ

என்னைப் பொறுத்தவரை எந்த சிங்களவரும் ஈழத்தமிழன் எவரைப் பார்த்தாலும் கொட்டியா என்று சொல்லும் உணர்வு தான் இந்த விசயத்தில் விஸ்வரூபத்தைப் பற்றிய எதிர்ப்பின் உணர்விலும் பார்த்தேன். அந்த உணர்வோடு தான் நேற்றிரவு இந்தப் படத்தை பார்க்க என்னவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் பார்த்தேன்.

இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்குள்ளேயே சில சந்தேகங்கள்...................சில கேள்விகள்.....!
.
கமலின் முந்தையை படங்களில் பல இடங்களில் அவர் நாசூக்காக காட்டும் பிரிவினையையும் காழ்ப்புணர்ச்சியையும் அவதானித்திருக்கிறேன். தென்னாலியில், மன்பதன் அம்பில் ஈழத்தமிழரை அவர் கையாண்ட விதத்தில் எனக்கு மிகப் பெரியளவில் மாற்றுக்கருத்திருக்கிறது இன்று வரை. அதே போல் உன்னைப் போல் ஒருவன் படத்திலும் அவருடைய அந்த நாசுக்கான இகழ்சி சுருக்கென்று நெஞ்சைக் குத்தியிருக்கிறது எனக்கு...தசாவததாரம் ஒரு படி அதிகம் ...ஆனால் என்ன ஆச்சரியமோ எனக்கு இந்தப் படத்தில் அவர் இஸ்லாமிய சகோதரர்களையும், அமெரிக்காவையும் ஒரே நேரத்தில் ஆரத் தழுவ முனைந்திருப்பதாகவே தோன்றியது. அது அவரின் பொய்யான வெளிப்பாடாகவே இருந்தாலும் கூட ….!

நான் கமலையோ அல்லது ஜெயலலிதாவின் அரசியல் சூழ்சியையோ , இஸ்லாமிய மதப் பிரதிநிதிகளையோ கருத்தில் கொள்ளாமல் வெறுமனே விஸ்வரூபம் என்ற படத்தின் கதைய மட்டும் என்னுடய சிற்றிவுக்கு எட்டிய அளவில் கிரகித்துக் கொண்டதில் சில கேள்விகள் அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டன......................

அவையாவன...:

இந்தியாவில் இருக்கும் இஸ்லாம் மத சகோதர சகோதரிகளிடம் தேசபக்தி இருக்குமா இல்லையா?? அவர்கள் இந்தியாவை தங்கள் தாய்நாடாக போற்றுகிறார்களா இல்லையா?? இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்பது பெரும்பாலானோரின் பதிலாக இருக்குமானால் அவர்களிடம் எனக்கு இன்னொரு கேள்வி இருக்கிறது. தேசபக்தி உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் காவல்துறையிலோ, இராணுவத்திலோ அல்லது உளவு நிறுவனத்திலோ கடமையாற்ற முற்படுவார்களா மாட்டார்களா?? இந்தக் கேள்விக்கும் ஆம் என்று பதில் சொல்பவர்களிடம் நான் இன்னும் சில கேள்விகள் கேட்க நினைக்கிறேன்... அப்படிப்பட்ட, நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட களத்தில் கடமையாற்றும் அவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவார்களா இல்லையா?? உளவுத் துறையில் கடமையாற்றுபவர்கள் பயங்கரவாதிகளிடம் ஊடறுத்துச் சென்று வேவு பார்ப்பார்களா இல்லையா???

இவை எல்லாவற்றுக்கும் அன்பான இஸ்லாமிய சகோதரர்களின் பதில் ஆம் என்றால் விஸ்வரூபம் படத்தின் கதை தளமும் அந்த ஆம் என்ற பதிலைப் பின்னிச் சுற்றி அமைக்கப்பட்டதே...என்ன அப்படி ஒரு கதையை எழுதி, இயக்கி, நடித்தவரை நீங்கள் கலைஞராக பார்க்காமல் உங்களை சிறுமைப்படுத்த நினைக்கும் ஒரு பிரிவினரின் பிரதிந்தியாகவோ அடையாளமாகவோ பார்த்துவிட்டீர்கள்...அல்லது அப்படி பார்க்கும் வண்ணம் உங்களை வேறு ஏதோ ஒரு சக்தி உருவாக்கிவிட்டது !

படத்தை இன்று நியுயெர்ஸியின் ஒரு திரையரங்கில் இரவு 8 மணிக் காட்சியில் பார்த்தேன்.

ஏதோ ஒருவகையில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியரான உளவுத்துறை அதிகாரி ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான்.அல்கொய்தா தீவிரவாதிகளுக்குள் புனித போராளி (ஜீஹாத் ந்னு தான் எனக்கு அந்த வார்த்தை கேட்டது. சரியான உச்சரிப்பா என்று தெரியவில்லை) யாக புகுந்து அல்கொய்தா போராளிகளுடன் பயிற்சி பெற்று உமர் என்ற ஒரு தலைமைப் போராளியின் நம்பிக்கைக்குரியவனாகிறார். அங்கிருந்தவாறு அமெரிக்க இராணுவத்தினருக்கு துப்பு கொடுத்து போராளிகள் பதுங்கியிருக்கும் கிராமங்களை முற்றுக்கையிட்டு அல்கொய்தா போராளிகளை அழிக்க துணை போகிறார். அந்த போராளிகளுக்கும் அமெரிக்க இராணுவத்தினருக்குமிடையிலான சண்டையில் இவருடைய உயிருக்கு கூட எந்தப் பாதுகாப்புமில்லை. இந்த சண்டையில் போராட்டத் தலைவனின் குடும்பம் முழுவதும் அழிக்கப்படுகிறது. தலைவனுக்கும் உளவாளியாக கதாநாயகன் இயங்குவது தெரிய வர அமெரிக்கர்களை அழிக்கும் திட்டத்துடன் தலைவனும், அவனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்ற உளவாளியும் நியுயோர்க்கில் குடியேறுகிறார்கள். பாதிக்கதை ஆப்கானிஸ்தானிலும் பாதிக் கதை அமெரிக்காவிலுமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் பற்றிய கதை இது.

என்னுடைய கேள்வியும் சந்தேகமும் என்னவென்றால்...........................

இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென்பதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவை. இவை...................

தாக்குதல்களுக்கு செல்லும் முன் தீவிரவாதிகள் தொழுதுவிட்டு போகிறார்கள்..
பயங்கரவாதி உமர் மதுரையிலும் கோவையிலும் மறைந்திருந்ததாக சொல்வது.
குர்ரானை பயங்கரவாதிகள் வைத்திருப்பதோ தாக்குதல்களின் பின்னணியில் குர்ரானை காண்பித்ததோ...(மன்னிக்கவும் இந்தக் காரணம் எனக்கு சரியாகப்புரியவில்லை)

இப்போது இந்தக் காரணங்களையிட்டு என்னுடைய கேள்விகள்....

தீவிரவாதியோ பயங்கரவாதியோ நல்லவனோ கொடையாளியோ போராளியோ எவனாயினும் அவனவன் தத்தமது கடவுளை வணங்கும் உரிமை உள்ளவர்கள் தானே?? அதுவும் தலிபான், அல்கொய்தாவைச் சேர்ந்தவர்கள் தம்மை புனித போராளிகள் என்று தானே நம்புகிறார்கள்?? தாங்கள் செய்யவிருக்கும் தாக்குதல்கள் எதுவும் தங்கள் மதத்துக்காகவும் ,தம் மதத்தைச் சார்ந்த மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராகத் தானே அவர்கள் கருதுகிறார்கள்?? அப்படி நம்பும் அவர்கள் தங்கள் போர் வெற்றி பெற வேண்டுமென்று இறைவனை தொழுவது தவறா?? எந்தவொரு மனிதனும் தன்னுடைய மரணத்தின் நொடி தெரியப்படுமிடத்தில் தன் குல தெய்வத்தை பிராத்திக்காமல் இருப்பானா என்பது கேள்விக்குறியே..! அப்படிப் பார்க்கையில் மதத்துக்காகப் போராடும் இவர்கள் போருக்கு போகும் முன் தொழுகை நடத்துவதாக காண்பிப்பது தவறா??
தமிழ் படம் எடுப்பதால் தமிழில் வசனங்கள் இருக்கவும் வேண்டும் அவை நம்பத் தகுந்தவையாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ் நாட்டில் தீவிரவாதிகளின் தலைவன் மறைந்திருந்ததாக சொல்லலாம் . இல்லை அந்த நோக்கில் இந்தக் காட்சி அமைக்கப்படவில்லையென்றே வைத்தாலும் கூட இந்தியாவில் எங்குமே பயங்கரவாதிகள் மறைந்திருக்கமாட்டார்கள் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா?? யாரோ ஒரு பயங்கரவாதி (முல்லா உமர்) இங்கே மறைந்திருந்தார் என்பதற்கான ஆதாரங்களை வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில் எவருமே மறைந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் கடமையும் இருக்கிறதல்லவா??
குர்ரானை அத்தனை பெரிய பிரமாண்டமான படத்தில் எந்த இடத்தில் காண்பித்தார்கள் என்பதை தான் கவனிக்கத் தவறிவிட்டேன். :( ஆனால் ஒரு இந்து வெறியனிடம் பகவத் கீதையும், கிறிஸ்தவ கலகக்காரனிடம் பைபிளும் , இஸ்லாமிய ஜிகாத் போராளியிடம் குர்ரானும் இருப்பது தவறென்றோ அவர்களை வைத்திருக்கக் கூடாது என்றோ உங்களால் சொல்ல முடி்யுமா?? ?

எல்லாவற்றையும் விட என் மனதைக் குடைவது ..................... இந்தப் படத்தில் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை மட்டுமல்ல இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சார்ந்த இஸ்லாமியச் சகோதரனையும் இழிவாகவோ, பயங்கரவாதியாகவோ காட்டவில்லை. இந்திய இஸ்லாமிய உளவாளியே அல்கொய்தாவின் பயங்கரவாதத்தை முறியடிப்பதாகத் தான் காட்டப்பட்டிருக்கிறது. இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?? இந்த எதிர்ப்பு அல்கொய்தாவையோ அல்லது தலிபானையோ ஆதரிப்பது போலாகாதா??? என்பது தான்...

மற்றபடி என்னால் கமலின் முந்தைய படங்களில் அவதானித்த நாசூக்கான இகழ்வைக் கூட இந்தப் படத்தில் காணமுடியவில்லை. பின்லாடனின் மறைவை அமெரிக்கர்கள் தீபாவளி போல் கொண்டாடியதாக சொல்வது கொஞ்சம் அதிகப்படியான சினிமாத் தனம்.....! சந்தோசப்பட்டவர்கள் உண்டு தான் எனினும் அந்தளவுக்கு கொண்டாடியதை நான் இங்கு அவதானிக்கவில்லை. படத்தில் அரக்கனைக் கொன்றால் கொண்டாடமாட்டார்களா என்று ஒரு கேள்வியும் அங்கு வைக்கப்படுகிறது. பயங்கரவாதத்தையும் , பின்லாடனையும் வெறுக்கும் இஸ்லாமிய மக்கள் இந்த வசனத்தை ஆதரிப்பார்களா எதிர்ப்பார்களா??

இந்தப் படம் எந்தவகையில் ஹாலிவூட் தரம் என்று என்னால் சீர்தூக்கிச் சொல்ல முடியவில்லை... ஆனால் மிகப்பிரமாண்டமான அளவில் அதிக செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். என்பதில் ஐயமில்லை.

ஒருவகையில் கணவன் மீது ஆர்வமிழந்து போகும் மனைவி, இன்னொரு ஆணிடம் ஈர்க்கப்படுவதும், கணவனை விட்டு விலக நினைப்பதும், அதற்கு முன் கணவனை வேவு பார்த்து அவனிடம் ஏதாவது தவற்ருந்தால் தன்னுடைய குற்றவுணர்வில்ருந்து மீளலாம் என்று நினைப்பதும், ஒரு கட்டத்தில் கணவனின் சுயரூபம் தெரிய வர பிரமிப்பதும் எனக்கு என்னவோ ஆர்னோல்ட் நடித்த True Lies படம் தான் நினைவுக்கு வந்தது. அதில் கூட இப்படி தான் இஸ்லாமிய தீவிரவாதக் கூட்டத்திடம் கணவரும் மனைவியும் அகப்படுவார்கள். ஆங்கிலப்படத்தில் கணவன் தான் மனைவியை வேவு பார்ப்பார். எனக்கென்னவோ அந்தப் படத்தின் கதையை வைத்து திரித்து கமல் கதை பண்ணியிருப்பது போல ஒரு தோற்றம். அந்த படம் காமெடியும் ஆக்‌ஷனும்..அதையே கமல் உயிர்ப்புடன் யதார்த்தமும் ஆக்‌ஷனும் கலந்து தந்திருப்பதாக நினைக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் எதிர்ப்பும், தடையும் முதலில் ஆர்னோல்டுக்கு போட்டிருக்க வேண்டும்.

குறை சொல்ல முடியாத முதல் பிரமிப்பு காமிரா தான்...
ஆப்கானின் அடர்ந்த நெடிய மலைத்தொடர்களும்...பாலை மணல்வெளியும் அப்பப்பா..............ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் தோன்றி மறையும் உணர்வைத் தந்தது என்றால் மிகையாகாது. அதே போல் அமெரிக்க இராணுவத்திற்கும் அல்கொய்தாவினருக்குமிடையிலான போர் காட்சிகளும், வெடித்துச் சிதறும் கிராமம், மனிதர்கள், NYPD யின் கார் சேஸிங்குக்கும் என்ன சொல்வதென்றே தெர்யவில்லை..அத்தனை சிறப்பு.. மனுஷன் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் .

அதுவும் 24 மணி நேரமும் எந்த நிமிடம் எங்கு குண்டு வெடிக்கும் எங்கு ஆயுதங்கள் வெடிக்கும் என்று சொல்ல முடியாத பயங்கரவாதமும், ஆயுதப் போராட்டமும் நடக்கும் ஒரு மண்ணில் அந்த மண்ணில் நடக்கும் காட்சிகளையே படம் எடுப்பது என்பது எத்தனை ரிஸ்கான விசயம் ??? உண்மையிலேயே ஆப்கானிஸ்தானில் தான் இவை படமாக்கப்பட்டனவா???? அல்லது ஏதும் கம்பியூட்டர் கிராபிக்கா அல்லது இந்தியாவின் ஏதேனும் பகுதிகளா...?? என்று எனக்கு தெரியாது.

இரண்டாவது கமலின் அந்த கதக் நடன பாட்டு. அந்தப் பாட்டு எடுக்கப்பட்ட விதம் இணையத்தளத்தில் பார்த்த போது உண்மையிலேயே கமல் மீது பரிதாபம் வந்தது..ஒரு பாட்டுக் காட்சியை நிறைவாக எடுக்க இந்த மனுஷன் எத்தனை விதமான முயற்சிகள், ஈடுபாடு, களைப்பு என்று எத்தனையை எல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. அத்தனையும் ஒரு 4 நிமிஷம் வருமா அந்தப் பாடல்...?? அத்தனை எத்தனிப்பும் உழைப்பும் அந்த 4 நிமிஷத்தை மனதில் அழுத்தமாக பதித்துவிட்டு தான் போகும் எதிரிகளுக்கு கூட...முகத்தில் ததும்பும் சிங்காரரசம் உண்மையான பெண்ணுக்கே வருமா என்று சந்தேகம் வர வைக்கிறது..அப்பப்பா...


வழமையான கமலின் முத்தக் காட்சியோ டூயட் பாடலோ கதாநாயகனின் அல்லது கதாநாயகியின் அல்லது வில்லனின் கனவில் கூட வரவில்லை...என்பது கமலின் மசாலா இரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். கதக் நடனப் பாட்டைத் தவிர மற்ற எந்தப் பாடலும் கதாநாயக நாயகியின் வாயசைப்பில் வரவில்லை...எல்லாமே பின்னணியில் தான். நிறைய அரபிக் வசனங்களும் குர்ரான் ஓதலும் படத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வேறு என்ன ...வேறு என்ன???
கமல் ஏதாவது படத்தில் எந்த மதத்தையாவது கிண்டல் செய்தே தீருவேன் என்று இருக்கிறாரோ என்னமோ ....இந்தப் படத்தில் பிராமணப் பெண்ணான தன் மனைவிக்கு கோழி ரோஸ்ட் மிகவும் பிடிக்கும் என்று சமைப்பதும் அதை ருசி பார்க்கச் சொல்லி தன் கதக் நடன மாணவி ஒருவரைப் பார்த்து “பாப்பாத்தியம்மா முதல்ல நீயே டேஸ்ட் பண்ணிப் பார்த்து உப்பு காரம் போதுமான்னு சொல்லு” என்று சொல்வதையும் வைத்து இந்துமதத்தையும் பிராமணர்களையும் கிண்டல் பண்ணியதற்காக அடுத்ததாக RSS இயக்கத்தினரோ அல்லது பாஜக வோ கோர்ட் வாசல் படி ஏறினால் கமல் என்ன செய்வாரோ தெரியவில்லை...!

அடுத்து இன்னொரு விசயமும் நான் கிரகித்துக் கொண்டது .... முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம்....ஆனாலும் அதையும் இங்கே தரவே விரும்புகிறேன்...தேவர்மகன் படத்திலிருந்து (ஒருவேளை அதற்கு முன்னதாகக் கூட இருக்கலாம் ஆனால் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியது தேவர்மகன் காலத்திலிருந்து தான் )கமலின் ஆஸ்கார் கனவை அவருடைய சீரியஸான படங்களில் அவர் எடுக்கும் முயற்சிகள் வெளிக்காட்டி வருகின்றன என்று சொன்னால் அது பிழையாகாது அல்லவா?? அந்தக் கனவை நனவாக்க இந்த படம் மூலமும் முயற்சி செய்திருக்கிறாரோ என்றும் யோசிக்க வைத்ததற்கு காரணம் அமெரிக்காவுக்கு நிறைய கூழ் அடித்தால் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது போல்......பல காட்சிகள்...கூடவே...அமெரிக்கர்கள் பெண்களையும் குழந்தைகளையும் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று செண்டிமெண்ட் வசனம் வேறு...

எல்லாவற்றையும் விட காமெடி இந்திய பிரதமர் போனில் பேசுவது , அமெரிக்காவையே இந்திய உளவாளி காப்பாற்றுவது போன்ற லாஜிக்.... அடிதான் விழும் ஓ

எல்லையில் இருக்கும் காவலர்கள் தலையையே பக்கத்து வீட்டுக்காரன் கொய்து கொண்டு போவது தெரியாமல் இருப்பதை இப்படி ஒரு காட்சியை பார்த்ததும் நினைத்தன் விளைவு .............தியேட்டரில் சத்தமாக சிரித்தவள் நானாகத் தான் இருக்கும்...! பின்லாடனை, The beheading of journalist of Daniel Pearl க்கு ஒப்பான காட்சி, அல்கொய்தாவின் மரணதண்டணை முறை போன்ற நிஜங்களை , புனித போருக்காக தன் பிள்ளைகளை தாரை வார்க்க தயாரான திவிரவாத தலைவன், ஒரு குழந்தையாவது படித்து இந்த சூழலை விட்டு விலக வேண்டுமென்ற தவிப்புடன் ,கணவனுக்கு பயந்த தன் ஆசைகளையும் ,கனவையும் தன் முகத்தை மூடும் துப்பட்டாவின் பின்னால் மூடிவைக்கும் தீவிரவாதத் தலைவனின் மனைவியும், அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலில் குடும்பமே அழிந்து போன பின் மகனை அவன் விருப்பப்படி படிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கலாம் என்று தீவிரவாதத் தலைவன் அரற்றுவதும்...இயல்பாக இருந்ததை மறுக்க முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் தலைக்கு மேலே பறக்கும் விமானங்களையும், இராணுவ உடைகளையும், குண்டு வீச்சுகளையும், குண்டுவீச்சில் அழிந்து கிடந்த கிராமத்தையும் , அங்கு எரிந்து கருகிக் கிடந்த மக்களையும் படத்தில் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னாலும் ஈழத்தின் நினைவுகளோடு போராட வைத்து தூங்கவிடாமல் கரைச்சல்படுத்திக் கொண்டிருந்தன என்று சொன்னால் யாரும் நம்புவீர்களோ என்னமோ ஆனால் ஈழத்தமிழர்கள் யாராவது இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் நான் சொல்வதை நம்புவார்கள்...!


படம் பார்க்கும் முன்பு அமெரிக்காவில் படம் பார்த்துவிட்டு எழுதப்பட்ட மற்றவர்களின் விமர்சனங்களை படித்தேன் தம்பி கானா பிரபா அவர்களின் விமர்சனம் உட்பட....

படம் பார்த்த பின்பு மற்றவர்களின் விமர்சன வசனக்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை...கானா பிரபாவின் கடைசி வரிகளைத் தவிர...
இங்கேதான் மேலே நான் சொன்ன என் வாழ்வில் கடந்து போன சிங்களப் பையன் லக்மால் ஐயும் துணைக்கு அழைக்கிறேன். ஆப்கானிஸ்தான் என்ன பாகிஸ்தான் என்ன அதையும் கடந்து இந்தியா, இலங்கை என எங்கிருந்து வந்தாலும் தாடி வைத்துத் தொப்பி வைத்த எந்த இஸ்லாமியனையும் தீவிரவாதி என்ற ஒரே முத்திரையோடு சமூகம் பார்க்கத் தொடங்கிவிட்டது. வெறுமனே படம் என்று ஒதுக்குமளவுக்கு கமல் போன்ற மூத்த படைப்பாளியின் இப்படியானதொரு படைப்பைக் கடந்து போய்விடமாட்டார்கள். படைப்பாளியின் சுதந்திரம் என்று என்னதான் நாம் தாராள மனம் கொண்டு இயங்கினாலும், இதே படைப்பு நேர்மை நாம் சார்ந்த எல்லா விடயங்களிலும் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் நியாயமாக ஒலிக்குமா என்பதே என் ஆதங்கம்.

தம்பி கானா பிரபா சொல்வது போன்ற மனநிலையில் இருப்பதால் தான் இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறார்கள் என்றால் மூன்றாம் மனிதர்களாக தள்ளிநின்று அவர்களுக்காக பரிதாபப்படவும் அவர்கள் பக்கம் நின்று அவர்களை அரவணைக்கவும் மட்டும் போதாது. அவர்களுடைய அந்த மனநிலையை களைய வைக்க வேண்டிய கடமையும் ஒரே நாட்டுக்குள் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டுமென்ற இலக்கு இருக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இருக்க வேண்டும்...அந்த கடமையை உணராமல் ஆதீக்க வெறியுடன் நடக்க முற்பட்டால் என்ன நடக்கும் என்று அனுபவித்த சிறுபான்மையினராக இருந்து என்னால் உணரமுடிகிறது..அதனால் தான் என்னால் கமலின் கருத்துரிமை என்ற ஒன்றைப் பார்க்கிலும் ஒரு சமூகத்தின் உணர்வுகளில் விழுந்துவிட்ட இரணம் சீழ் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமாக இருக்கிறது. அந்த இரணத்தை ஆற்ற வேண்டுமென்ற கடமையை மறந்துவிட்டு அந்த இரணத்தின் சீழை தமக்கு சாதகமாக்க முனையும் அரசியல்வாதிகள் விரட்டப்பட வேண்டியவர்கள்..எந்த வகையில் விரட்ட வேண்டுமென்ற தீர்வையும் இன்னொரு சினிமா மூலம் தேடாமல் சுயசிந்தனையுடன் தேட வேண்டியது குடிமக்களின் கடமை.

மேலோட்டமாக இத்தனையும் விபரித்திருப்பது என் பார்வைக் கோணத்தில் கிடைத்த விஸ்வரூபம் மட்டுமே! உண்மையில் என்னுடைய அறிவுக்கு இதற்கு மேல் ஆராயமுடியவில்லை. ஒருவேளை இதை விட நுணுக்கமாக காழ்ப்புணர்ச்சியோ அல்லது வெறுப்போ இருக்கிறதா என்று என்னால் கண்டுபிடிக்க இயலாதது எனது அறிவின்மையாக இருக்கலாம். ஆனாலும் நானும் என் கருத்தை பகிர்வதால் எந்த கேடும் வராது என்றே நம்புகிறேன்.

தவிர தமிழக மக்களிடம் உள்ள பெரிய குறைபாடு சினிமாவை ஒரு எண்டர்டெய்ண்ட்மெண்டாக பார்ப்பதில்லை. நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பிடுவதும் நடிகர்களை தலைவர்களாக தலைக்கு மேல் வைத்து கூத்தாடுவதும் தான் இன்றைக்கு ஒரு ப்டத்தை பொழுது போக்காக பார்க்காமல் சமூகத்தை பிளக்கும் காரணியாக பார்க்கும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் வளர்த்திருக்கிறது. அந்த மனோபாவத்தை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு திரையுலகமும் அரசியலும் இன்று உங்களையே பந்தாடுகின்றனர்.

ஹாலிவூட்டிலும் இதை விட மோசமாக இஸ்லாமிய இனத்தவரை சித்தரிக்கும் படங்களை எடுக்கிறார்கள். இந்தியர்களை கிண்டல் செய்து முழு நீளப்படமே எடுத்திருக்கிறார்கள்.. விடுதலைப் புலிகளை பல படங்களில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களாக வசனங்களில் புகுத்தியிருக்கிறார்கள்...இந்துக்களை கேலி செய்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு உரிய இயேசு கிறிஸ்துவைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.. எல்சபெத் மஹாராணியை லெஸ்லி நெல்ஸன் என்ற நடிகர் தனக்குக் கீழே அகப்பட்டுக் கிடப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார் ஒரு படத்தில்.அப்படி மிகச் சுதந்திரமாக தமக்குத் தோன்றியதை படமாக்கும் ஹோலிவூட் படங்களை... ஏன் நம்மால் எதிர்க்க முடியவில்லை...?? அது இயலாத காரியம்

.கனக்க ஏன் சமீபத்தில் எகிப்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ இனத்தவர் எடுத்த படத்துக்கு எத்தனையோ போராட்டம் நடந்ததே...ஒபாமா வரை அந்த படத்தையிட்டு எச்சரிக்கை விடப்பட்டதே....என்ன பலன்?? ஒபாமாவும் சரி ஹாலிவூட்டும் சரி அதைக் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா??? இல்லை!

ஆனால் யூ-டியூப் முதல் அகில உலகம் முழுக்க இன்று துள்ளாட்டம் ஆடும் gangnam style பாடல் அமெரிக்கர்களை கிண்டல் செய்யும் பாடலாம். ஒவ்வொரு நாளும் அந்தப் பாடலை அமெரிக்காவின் அத்தனை வானொலியும், அத்தனை தொலைக்காட்சியும் ஒலிபரப்பிக் கொண்டு தான் இருக்கிறன.. ஆனால் அந்தப் பாடலைப் பாடிய பாடகர் ஒரு நாள் அமெரிக்கர்களிடம் அந்தப் பாடலில் அவர் அவர்களை கிண்டல் செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். என்ன நடந்தது ஏது நடந்தது என்று விபரம் எனக்கு தெரியாது.

ஆக................Hollywood தரத்துக்கு படம் வேண்டும் என்று திரையுலகை எதிர்பார்க்கும் மக்கள் முதலில் தங்கள் இரசனையையும், அலட்சிய மனோபாவத்தையும் அமெரிக்க மக்கள் மாதிரி் தமக்குள் வளர்த்திருக்க வேண்டும். திரைப்படத்துறையை அங்கே வெறும் எண்டர்டெய்ன்மெண்ட் மீடியாவாக மட்டுமே பார்கிறார்கள். ஆனால் எங்களவர்கள் தான் சமூகப் போராளிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சினிமாவை பார்த்து மறுமலர்ச்சி அடைகிறார்கள். சினிமா நடிகர்களை தேவ தூதர்களாகவும், மீட்பராகவும் வணங்குகிறார்கள். இத்தனை காலத்தில் பெரியார் வழியில் போனவர்களைப் பார்க்கிலும் ரஜனிக்கு பின்னால் போனவர்கள் தானே அதிகம்??? -கனக்க ஏன் பெரியாரின் கருத்துகள் கூட சினிமா மூலம் தானே பரப்பப்பட வேண்டியதாயிருந்தது...??

என்னுடைய மனநிலையை நான் இன்னும் விரிவாக சொன்னால் என் மீது அன்பு வைத்திருக்கும் குழும சகோதரர்கள் பலருக்கு என் மேல் வெறுப்பு வரக் கூடும்..ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை... நான் சினிமாவை வெறும் கூத்தாகவும் நடிகர் நடிகைகளை கூத்துக் கட்டுபவர்களாகவும் மட்டுமே பார்க்கிறேன். அதனாலேயே சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதை கேலிக்குரியதாகவும், அவர்களையும் அவர்கள் மேடைகளில் பேசுவதை யும் ஒரு பொருட்டாக எடுக்கவும் விரும்புவதில்லை.. என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசும் குழும சகோதரர்களுக்கு கூட தெரியும் சமீபத்தில் ஈழ விவகாரத்தில் வீர வசனம் பேசும் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் நான் எந்தளவுக்கு வெறுக்கிறேன் என்று.....

என்னை கமலோ ரஜனியோ அல்லது மற்ற நடிகர் நடிகைகளோ தங்கள் படத்தில் சொல்லும் கருத்துகளால் மாற்றிவிட முடியாது. ஈர்க்கவும் முடியாது. நான் சார்ந்திருக்கும் எதையும், நான் விரும்பும் எவரையும் இவர்களால் என்னிடமிருந்து பிரிக்க முடியாது. இவர்களை நான் என்றைக்கும் கொண்டாடப் போவதில்லை. இவர்கள் எனக்கு யாரோ ஒரு மூன்றாவது நபர்களே...வெறும் அரிதாரம் பூசும் கூத்துக் கட்டும் கலைஞர்கள்...எனக்கு போரடிக்கும் போது இவர்களுடைய கூத்துகளை போட்டுப் பார்க்கிறேன். அவ்வளவே....!

அதனால் இவர்கள் என்னையோ என் உணர்வுகளையோ காயப்படுத்த முடியாது. அந்த விசயத்தில் சினிமாவை நான் வென்றவள்..!

இந்தப் படத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களும் ,தடைகளும், கோர்ட் வழக்குகளும் இல்லாமல் இருந்திருந்தால் 10 நாட்கள் கூட திரையரங்குகளில் தங்கியிருந்திருக்குமா என்பது சந்தேகமே.... ஏன் எனில் இந்த படத்தின் தொழில்நுட்பம் முதல் தயாரிப்பு வையிலான உயரக தராதரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் தமிழக சினிமாரசிகர்களின் பெரும்பான்மையிடம் இருக்குமா என்பது கேள்விக்குறி. வழமையான தென்னிந்திய திரைப்படங்களின் பெண்களை கவர்வதற்கான சென்டிமென்ட் காட்சிகளோ , கண்ணீர் மல்கும் இடங்களோ அல்லது காலரி டிக்கட் வரிசைகளை நிரப்பிக் கொன்டு தமது அபிமான நடிகர்களுக்கு ஆரத்தி காட்டும் அப்பாவி ரசிகர்களுக்கான வழமையான தமிழ் படத்தின் எந்தவொரு சாயலும் இல்லாத ஒரு ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங் என்று சொல்லுமளவுக்கு படம் இருக்கிறது. இந்தியாவின் எந்தப் பாகமும் ஊரும் மக்களும் இந்தப் படத்தின் முக்கிய அம்சங்கள் இல்லை . முழுக்க முழுக்க தலிபான், அல்கொய்தா , ஆப்கானிஸ்தான் என்று அத்தனையும் இந்தியாவுக்கு வெளியால் இருக்கும் ஆனால் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை பற்றிய கதைக் களமும், படமும் தான் இது!! இன்னும் சொல்லப் போனால் பிளாஸ்மா டிவி , 3டி டிவி என்று அகன்ற டிவிகளுடன் வீட்டிலேயே போஸ் போல் நல்ல சவுன்ட் ஸிஸ்டங்களுடன் இருக்கும் மேல்தட்டு வர்க்க மக்கள் கூட டிவிடி வரட்டு வீட்டிலேயே அகன்ற திரையில் பார்த்துவிடலாம் என்று தட்டிக் கழித்துவிட்டுப் போகக் கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் தவிர்த்து இன்று இந்தப் படத்தை ஊர் விட்டு ஊர் போயாவது போய் பார்க்க வேண்டுமென்ற அளவுக்கு மக்களை வெறி கொள்ள வைத்தவை படத்தின் கதையோ கமலோ அல்ல. தமிழ அரசின் தடை மட்டுமே!! கமலுக்கு கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது. அதை மறைமுகமாக எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டங்களும் தடையும் வழங்கியிருக்கிறது. அடிதான் விழும் ஓ

பிற்குறிப்பு: என்னவரிடம் படம் முடிந்ததும் அபிப்பிராயம் கேட்டேன் “படம் எப்படி..?” என்று..மிகவும் அசதியுடன் கேட்டார் ”நீங்கள் என்ர நித்திரையைக் கெடுத்து என்ன அல்கொய்தா ட்ரெயினிங் காட்டவா கூட்டி வந்தனியள்?” என்றார். அப்போது தான் புரிந்தது எந்தவித சார்பும் இல்லாத, சினிமா அதிகம் பார்க்காத, சினிமாவினதும் அரசியல் கட்சிகளினதும் சூழ்ச்சி அரசியல் புரியாத அப்பாவியான என்னவரை பலவந்தப்படுத்தி இந்தப் படத்தை பார்க்க வைத்த பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் என்னை சும்மா விடாது...என்று,,! அடிதான் விழும் ஓ இப்போது அதற்காக மட்டுமே கவலைப்படுகிறேன். அடிதான் விழும் ஓ

Latest News: விஸ்வரூபத்தை வெளியிட முஸ்லீம் பேரவை வேண்டுகோள்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:02 pm

Latest News: விஸ்வரூபத்தை வெளியிட முஸ்லீம் பேரவை வேண்டுகோள்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:17 pm

அன்பு சகோதர் கமலுக்கு, ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம் திறந்த மடல்...

Posted by: Siva
Published: Thursday, January 31, 2013, 16:27 [IST]

கோவை: விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக.

நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை. உங்களின் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது. இப்படங்கள் குறித்து உங்களோடு கலந்துரையாடி எங்கள் குமுறல்களை கொட்டினோம். நீங்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை.

நினைவிருக்கிறதா கமல் அவர்களே? முன்பு ஒரு முறை நீங்கள் அமெரிக்கா சென்றபோது உங்கள் பெயரில் ஹசன் என்ற பெயர் ஒட்டி இருப்பதைப் பார்த்து முஸ்லிம் எனக் கருதி உங்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு அவமானப்படுத்தியதை மறந்துவிட்டீர்களா? உங்களைப் போன்றே புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானுக்கும், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இதே போன்ற அவமானங்கள் 'முஸ்லிம்' என்ற காரணத்திற்காக நடந்தது.

முஸ்லிம் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்படுகிறான், தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரங்கள்.

இந்நிலையில் நேற்று காலை (30-01-2013) நீங்கள் அளித்த பேட்டியை கோவையில் இருந்தவாறு எமது கட்சியின் மாநாட்டுப் பணிகளுக்கு மத்தியில் பார்த்தேன். மிகவும் உருக்கமாக இருந்தது. உங்கள் மீது இரக்கம் ஏற்படும் வகையிலும் அனுதாபத்தை திருப்பும் வகையிலும் தங்கள் வார்த்தைகள் இருந்தது. உங்களை யார் தமிழ்நாட்டை விட்டு போகச் சொன்னது? உங்களை மிரட்டுவதும், உருட்டுவதும் யார்? பின்னணி என்ன? அது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

தங்கள் மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை உண்டு. நீங்கள் எங்களின் சகோதரர். அநீதியாக நீங்கள் யாராலும் பாதிக்கப்பட்டால் நீதியின் பொருட்டு உங்களுக்கு அரணாக இருப்போம். கவலைப்படாதீர்கள். ஆனால் உண்மையான பிரச்சனை என்ன என்பதை திசை திருப்பி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு துணை போய் விடாதீர்கள். எங்களின் கோரிக்கை எங்களையும், எங்கள் குர்ஆனையும், வணக்க வழிபாடுகளையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்பதே!

நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை? பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை? ஈராக்கில் அமெரிக்காவினால் 6 லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏன் படம் எடுக்கவில்லை?

இப்படி பல துயர நிகழ்வுகள் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் படமாக எடுக்காமல் அமெரிக்காவை திருப்திப்படுத்தி, இந்தியர்களை கேவலப்படுத்தி, அதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி ஒரு படம் எடுத்தது ஏன்? இது தேவையா?

30-1-2013 அன்று உங்கள் படம் வெளியான சில தியேட்டர்களின் மீது சில விஷமிகள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்; பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இப்படி தமிழ்நாடு முழுக்க உங்களுக்கு எதிராக, வேறு ஏதோ காரணங்களுக்காக யார் யாரோ செய்யும் எதிர்ப்புகளுக்கு எங்கள் சமூகத்தை காரணமாக்கக் கூடாது. எங்களுக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உங்களை சரிப்படுத்துவது தான் எங்களுக்கு நோக்கம்; எதிர்ப்பது அல்ல.

தமிழ்நாடு எங்கும் விஸ்வரூபத்தை முன் வைத்து ஒரு பதற்றம் உருவாக்கப்படுகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

உங்களுக்கும், அந்த பெரிய இடத்து தொலைக்காட்சிக்கும் இடையே நடந்த வணிக மோதல்கள் மற்றும் ப.சிதம்பரம் பிரதமராக வேண்டும் என்று நீங்கள் பேசியது போன்றவையெல்லாம் இப்பொழுது உங்களுக்கு எதிராக அரசியல் வடிவம் பெறுகிறது. இதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை.

நல்லவேலையாக 30-01-2013 மறுபடியும் விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு உங்களை ஹாருண் எம்.பி., தேசிய லீக் பசீர், முஸ்லிம் லீக் ஜைனுல் ஆபுதீன் ஆகியோர் சந்தித்திருக்கிறார்கள். என்ன பேசினீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில காட்சிகளையும், வசனங்களையும் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நீக்கப்போவதாகவும், முஸ்லிம்களுக்கும், எனக்கும் உள்ள பிரச்சனை இதன் மூலம் தீர்ந்துவிட்டதாகவும். நீங்கள் பேட்டியளித்துள்ளீர்கள். இதை கூட்டமைப்பு எப்படி அணுகப்போகிறது என்று தெரியவில்லை. எது எப்படி ஆயினும் இப்பிரச்சனை சுமூகமான முறையில் முடிக்கப்பட வேண்டும்.

எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின்னால் கூட நாங்கள் அமைதி வழியிலேயே அனைத்தையும் சந்திக்கிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதை உங்கள் ரசிகர்களுக்கும் சொல்ல வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இப்பிரச்சனையைக் காரணம் காட்டி பதற்றம் உருவாவதை யாரும் விரும்பவில்லை. அதே சமயம் உங்கள் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் எங்களையும் புரிந்து கொண்டு எங்களோடு சகோதரனாக வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். உங்களுக்கு இறைவன் நேர்வழி (ஹிதாயத்) காட்ட வேண்டும் என பிரார்த்திக்கிறோம். உங்கள் கடன் தீரவும், நீங்கள் அமைதியைப் பெறவும், இம்மண்ணிலேயே வாழவும் ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பானாக.

நாம் எல்லோரும் இந்தியர்கள்; தமிழர்கள். ஒருவரை ஒருவர் மதிக்கும் சகோதரர்கள் என்பதை உணர்ந்து அன்பையும், நேசத்தையும் கட்டிக் காப்போம்.

இப்படிக்கு,

உங்கள் முஸ்லிம் சகோதரன்

தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:28 pm

'அரசியல் பழிவாங்கல்களை முடிவுக்கு கொண்டு வர தமிழகத்துக்கு இயக்கம் தேவை'

Posted by: Mathi
Updated: Thursday, January 31, 2013, 15:26 [IST]

-ராதா ராதாகிருஷ்ணன்


பெங்களூர்: விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தடை போன்ற அதிகரித்துவரும் அரசியல் பழிவாங்கல்களை முடிவுக்கு கொண்டுவர தமிழகம் புது விஸ்வரூபமெடுக்க வேண்டும் என்று தகவல் தொடர்பியலாளரான ராதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கட்டுரையில், கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடையின் பின்னணி தொடர்பாக எராளமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் நிஜம் என்ன என்பதை கற்பனை கதைகளால் மறைத்துவிட முடியாது.

விஸ்வரூபம் திரைப்படத்துக்கான தடை என்பது இந்த நாட்டின் சகிப்புத் தன்மை எப்படி குறைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அண்மைக்காலமாக நடிகர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இலக்கு வைக்கப்பட்டு கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. மதச்சார்பற்ற மாண்புகள் கொண்ட ஒரு ஜனநாயக குடியரசில் இத்தகைய போக்குகள் ஆரோக்கியமானது அல்ல.

தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் மிகவும் அதிகரித்தே இருக்கின்றன. தமிழகத்தில் திரை உலகத்தை சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகளாக உருவெடுப்பதும் ஏன் முதல்வர் பதவியில் அமருவதும் நடந்து கொண்டு இருக்கிறது. 1960களுக்குப் பிந்தைய காலத்தில் திமுகவும் அதிமுகவும் ஏராளமான கதாநாயன்கள், வில்லன்கள், நகைச்சுவை நடிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி கட்சி சார்ந்து அரசியல் இருக்கும் திரை உலகத்தினர் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது வேட்டையாடப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதான் கடந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி ஏன் எதிர்காலத்திலும்கூட இது தொடரவே செய்யப் போகிறது. தற்போது பிரபல நடிகரான கமல்ஹாசன் இப்படி புதிய பலிகடாவாகியிருக்கிறார்.

நான் ஒன்றும் கமல்ஹாசனின் ரசிகை அல்ல. இருப்பினும் வித்தியாசமான படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன். இதில் சில வெற்றி பெற்றுள்ளன. சில தோல்வியைத் தழுவி இருக்கின்றன. ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடகராக அவர் பன்முகங்களை வெளிப்படுத்தியவர். ஆமிர்கானுக்கு முன்பாகவே திரைப்பட தயாரிப்புகளில் புதுமைகளைப் புகுத்தியவர் கமல்ஹாசன்.

ரசிகர்களின் மனோநிலை என்ன என்பதை உணர்ந்து அதை திரையில் படைக்கக் கூடியவர் கமல்ஹாசன். தமிழ்த் திரை உலகில் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டவர் வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரத்துக்கு அரசியலின் பெயரால் நெருக்கடியை கொடுத்திருப்பது தமிழகத்துக்கு மாபெரும் அவமானம். கமல்ஹாசனே சொல்வதைப் போல தனது சொத்து முழுவதையும் விற்று ரூ100 கோடி அளவில் முதலீடு செய்து விஸ்வரூபத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவரது திரை உலக சகாக்கள் பலரும் கூட அவரிடமிருந்து விலகி இருக்கவே செய்கின்றனர். எங்கே தாங்களும் இலக்கு வைக்கப்பட்டு விடுவோமோ என்று அவர்கள் அச்சப்படுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டி எழுப்பினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமமான உரிமைகள் இருக்கின்றன என்பதை நிலைநாட்டினார் அவர். அவரது அரசியல்தான் தமிழகத்து அரசியலை ஒழுங்கமைத்தது. அத்தகைய ஒரு தேவை தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரிக்கும் அரசியல் பழிவாங்கல்கள், வேட்டையாடுதல்களை முடிவுக்குக் கொண்டு வர அத்தகைய ஒரு இயக்கம் தற்போது அவசியம் என்று கூறியுள்ளார் ராதா ராதாகிருஷ்ணன்

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by அ.இராமநாதன் Thu Jan 31, 2013 8:29 pm

ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால்,
அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்,"

-
சோவின் கருத்தும் ஏற்கத்தக்கதே...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 8:34 pm

அ.இராமநாதன் wrote:ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால்,
அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்,"

-
சோவின் கருத்தும் ஏற்கத்தக்கதே...

ஐயா இதைப் படியுங்கள் அசந்துவிடுவீர்கள்...

நான் நினைத்திருந்தால் விஸ்வரூபத்தை நிரந்தரமாக தடை செய்திருப்பேன்- ஜெ.

Posted by: Sudha
Published: Thursday, January 31, 2013, 14:09 [IST]

சென்னை: நான் நினைத்திருந்தால் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசின் சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1995ன் கீழ் நிரந்தரமாக தடை செய்திருக்க முடியும். ஆனால் எனக்கு எந்தவிதமான பகைமை உணர்வும் இல்லை என்பதால்தான் சிஆர்பிசி 144 சட்டத்தின் கீழ் தடை செய்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 என்று ஒன்று உள்ளது. அச்சட்டத்தின் 7வது பிரிவி்ன் கீழ் மாநில அரசுக்கு ஒரு திரைப்படத்தைத் தடை செய்யும் முழு அதிகாரமும் உள்ளது. அந்த சட்டப் பிரிவின் கீழ்தான் டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்தது.

எனது அரசு நினைத்திருந்தால், நான் நினைத்திருந்தால், விஸ்வரூபம் படத்தை நான் நேரடியாக அந்த சட்டப் பிரிவின் கீழ் தடை செய்திருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. சிஆர்பிசி 144 சட்டப் பிரிவின் கீழ்தான் தடை செய்தேன்.அதுவும் கூட 15 நாட்களுக்குத்தான்.

இதன் மூலம் நான் எந்தவிதமான உள்நோக்கத்துடன் நான் செயல்படவில்லை என்பதை உணர முடியும். இந்தப் படத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நானோ, எனது அரசோ செயல்படவில்லை என்பதையும் உணர முடியும் என்றார் ஜெயலலிதா

[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 7 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum