தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

4 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 26, 2013 5:12 pm

First topic message reminder :

விஸ்வரூபம் -கமல் மீது இஸ்லாமிய அமைப்புகள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன...?

சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததாக இதற்கு முன்பு குற்றச்சாட்டுக்குள்ளான கமல்ஹாசன் இப்போது இஸ்லாமியர்களின் குமுறலுக்குள்ளாகியுள்ளார்.

பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...





நமாஸ் செய்து விட்டு கொலை

விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்



தீவிரவாதிகளின் கையேடா திருக்குரான்..?

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.



கழுத்தை அறுப்பதை அப்பட்டமாக காட்டுகிறார்கள்

தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.



மசூதிகள் தீவிரவாதிகளின் புகலிடமா?

மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்



அமைதிப் புறாக்களையும் விடவில்லை கமல்

அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.



தமிழர்களை இழிவுபடுத்தியுள்ளார்

முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

மொத்தத்தில் முஸ்லீம்கள் என்றால் தவறானவர்கள், மோசமானவர்கள், முரட்டுத்தனமானவர்கள், எதையும் செய்யத் துணிபவர்கள், தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போல இப்படத்தில் காட்டியுள்ளார்.எனவேதான் இந்தப் படத்தை எதிர்க்கிறோம் என்று கூறியுள்ளனர் இஸ்லாமிய அமைப்பினர்.

[You must be registered and logged in to see this link.]


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 8:58 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:40 am

இந்த விஸ்வரூபம் விவகாரத்தில் கமல் சற்று முன் எசரிகையாக இருந்திருக்க வேண்டும். இவருக்கு கருணாநிதி, ப சிதம்பரம் எல்லாம் நண்பர்கள் தான். ஆனால் ஜெயலலிதாவிற்கு இவர்கள் எதிரிகள். அரசியல் தெரியாது என்று சொல்பவர் கமல். ஆனால் புத்தக வெளயீட்டு விழாவில் அரசியல் பேச காரணம்?எல்லோருக்கும் தெறித்த உண்மை கமல் ஒரு திமுக அனுதாபி என்று."கூடா நட்பு கேடாய் விளையும் " என்பதற்கு செரியான உதாரணம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:41 am

தமிழக முதல்வர் மேல் இருந்த முழு நம்பிக்கை போய்விட்டது. காவேரி பிரச்சினைக்கு கூட இவ்வளவு வேகமாக கோர்ட் ல அப்பீல் செய்து கேள்விப்படவில்லை. ஆனால் இந்த படத்தை தடை பண்ண சொல்லி அவசரம் காண்பிக்கும்போதே இதில் அரசு பக்கம் எங்கோ தவறு இருப்பதை உணர முடிகிறது. கமல் சார், உங்களுக்கு ஓன்று சொல்லிக்கொள்ள விரும்பதமிழ் மக்களை நம்புங்கள். உங்களை நாங்கள் கைவிட மாட்டோம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெரும். நாங்கள் வெற்றிபெற வைப்போம். நான் 10$ டிக்கெட்டை 50$ குடுத்து கூட வாங்கி பார்க்க ரெடி.ஆனால் நீங்கள் ஓன்று செய்யவேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:42 am

விஸ்வரூபம் தாமதமாக ரிலீஸ் ஆனாலும் நாங்கள் காசு கொடுத்துதான் படம் பாப்போம் திருட்டு வீசீடீயில் பார்க்கமாட்டோம், அதனால் கமலுக்கு நஷ்டம் வராது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:42 am

”விஸ்வரூபம் திரைப்படத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தடை செய்திருப்பதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆனால் அவர்கள் இதை முதல் முறையாகச் செய்யவில்லை. இது கடைசி முறையாக இருக்கவும் போவதில்லை. சென்ற சில மாதங்களாக எல்லையில் நம்மைக் காவல் காக்கும் நம் வீரர்களின் தலைகள் கொய்யப் பட்ட பொழுதும், சென்னையில் சாலைகள் மறியல் செய்யப் பட்டு அராஜகம் நடந்த பொழுதும், ஓவைசி என்றொரு பயங்கரவாதி இந்துக்களை அழித்து விடுவேன் என்று கொக்கரித்த போதும் இணையத்தில் பெரும்பாலான நண்பர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு பிடித்த ஒரு சினிமா நடிகரின் படத்துக்கு தடை வந்த பொழுது மட்டும் அனைவரும் பொங்கி எழுகிறார்கள். சரி இப்பொழுதாவது உணர்ச்சி வந்திருக்கிறதே என்று ஆறுதல் பட வேண்டியதுதான். ஒரு சினிமாவையும், சினிமா நடிகரையும், படைப்புச் சுதந்திரத்தையும் விட நம் தேசமும், அதன் வீரர்களும், சுதந்திரமும் முக்கியம் என்ற உணர்வு இப்பொழுதாவது அனைவருக்கும் வரட்டும். கமலஹாசன் இந்துக்களின் உணர்வுகளை பல முறை புண்படுத்தியுள்ளார். இப்பொழுதாவது அவர் இந்து மதத்தினரின் சகிப்புத்தன்மைக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.”
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:43 am

கமல் ஒன்று செய்யலாம். படத்தில் முஸ்லிம் பெயர்களை வேறு மத பெயர்களாக வைத்துவிடலாம். ஆப்கானிஸ்தானில் எதற்கு ஆறுமுகம் வரானு யார் கேட்கபோகிறார்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:43 am

மக்களே கவனிக்க: நேற்று மாலை உச்ச நீதி மன்றம் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் தமிழகத்திற்கு எதிராக வழங்கிய தீர்ப்புக்கு இன்னும் மேல் முறையீடு செய்யவில்லை... ஆனால் நேற்று இரவு பத்து மணிக்கு வந்த இடைக்கால தீர்ப்புக்கு நேற்றிரவே மேல் முறையீடு ...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:44 am

பொதுஜன அளவிலும், இணையத்திலும் கமல்ஹாசன் என்ற திரைப்படக் கலைஞரின் கலை சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழர்கள் ஒட்டுமொத்தமாக பொங்கி எழுந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அந்தக் குரல்கள் தமுமுக, தவ்ஹீத் ஜமாத் மற்றும் இன்னபிற தமிழக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை நேரடியாக எதிர்த்து எழுகின்றன என்னும் போது உண்மையில் என்ன நடக்கிறது என்றே நமக்குப் புரியவில்லை. தான் “கலாசார தீவிரவாதத்திற்கு” உட்படுத்தப் படுவதாக புலம்பி கமலஹாசன் எழுதும் கடிதத்திலும் சரி, அவரது அடுத்தடுத்த அறிக்கைகளிலும் சரி கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மிரட்டல் விடுக்கும் அராஜக இஸ்லாமியர்களையும், வன்முறையாளர்களையும் கண்டித்து ஒரு வாசகம் இல்லை. மாறாக, ”நான் என்றைக்குமே இஸ்லாமியர்களின் நலனை விரும்புபவன் தான், நான் உங்கள் சேவகன் ரொம்ப காசு செலவழிச்சு படம் எடுத்து விட்டேன் மன்னிச்சு கருணை காட்டுங்க கனவான்களே” என்ற ரீதியில் கூழைக் கும்பிடு போடுகிறார் இந்த சுயமரியாதைக் காகிதப் புலி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:45 am

அதிமுக மட்டுமல்ல... எந்தக் கட்சியும் கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடவில்லை... சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்துவிடுவோமோ என்ற பயம்... நமது நாட்டில் இப்போது பெரும்பான்மையினர்தான் எதற்கும் பயப்பட வேண்டியுள்ளது... இதுவே இந்துக்களை இந்தக் கதை மையமாகக் கொண்டிருந்தால் தமிழக அரசு இவ்வளவு தூரம் இந்தப் படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா... வாய்ப்பே இல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:46 am

ஒரு படத்தின் இயக்குனருக்கும் ஒரு சமூகத்தினருக்கும் ஏற்பட்ட உரசலை நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தன் மீது வலிய போய் திருப்பிக்கொண்டுள்ளது தமிழக அரசு. அந்த சமூகத்தின் காவல்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளின் மீது போக இருந்த அதிருப்ப்தியை தன்மீது வாங்கிக்கொண்டுள்ளது ஜெயா அரசு. ஜெயா யானை பலம் கொண்டவர்தான் பல செய்கைகளிலும், என்ன யானை சிலசமயம் தன் தலை மீது தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:46 am

திரு கமல் அவர்களே. தமிழராகிய நீங்கள். நீங்கள் ஏன் வெளியேற வேண்டும்.. தமிழரல்லாதவர்கள்.. ஆட்சியில் இருப்பதால் தான் இந்த பிரச்சினையே.. இவர்கள் விரைவில் வெளியேறுவார்கள்.. பொறுத்திருங்கள்... நாமே வெல்வோம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:46 am

அடுத்த தேர்தலில் எனது ஓட்டு அ.தி.மு.க விற்கு இல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:47 am

நாட்டில் எவ்ளோ பிரச்சனைகள் இருக்கும் போது எதற்காக வீண் பிடிவாதத்தில் மேல் முறையீடு செய்கிறார் இவர் ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:47 am

கமலஹாசன் இந்த படத்திற்காக பணம் செலவுசெய்து விளம்பரபடுத்த தேவையில்லை , சிரும்பான்மையுனரே விளம்பரபடுதிவிட்டார்கள் , இவர்களின் 5,10 ஒட்டுகளுக்காக பிரச்சனையை பெரிதுபடுத்தியது வருத்தமான விஷயம் , படம்பார்க்க விரும்பாத என்னைபோன்ற பலரை தியேட்டர் சென்று படம்பார்க்க தூண்டிவிட்டிர்கள் , இதுபோன்ற பல காரணங்களால் இந்தபடம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் ஐயம் இல்லை ,
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:48 am

குறிப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து இந்த அம்மா தவறான பாதையில் ஆட்சி அதிகாரத்தை செயல் படுத்துகின்றது , இப்போ தமிழ் நாட்டில் கிலோ கணக்காக தங்கம் கொள்ளை அடிக்கபடுகின்றது ,சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கின்றது இதை எல்லாம் மக்கள் மறக்க இம்மாதிரி முட்டாள் தனமான முடிவுகளால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வும். ,ஆட்சியில் யாரவது முன்னேறினால் பிடிக்காது. உடனே வழக்கு பாய்ந்து விடும். இது அரசியலும் மட்டும் அல்ல சினிமா துறை உட்பட ,வரும் தேர்தலில் திமுக வும் வேண்டாம் இந்த ஆதிமுக வும் வேண்டாம் .மக்கள் சிந்திக்க வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:48 am

rekha - singapore,சிங்கப்பூர்
30-ஜன-201311:48:38 IST Report Abuse

மிகவும் வருத்தமாக இருக்கிறது. திரு.கமல் அவர்கள் நடத்தப்படும் விதத்தைப் பார்த்தால் நாமெல்லாம் எந்த மூலைக்கு என்று தோன்றுகிறது. நல்ல புகழும், நிறைய ரசிகர்களும் இருக்கும் இவருக்கே இந்த நிலைமையா ? எனக்குத் தெரிந்த வரையில் மேடையில் அவர் எதையாவது சொல்லிவிட்டு, செய்துவிட்டு பின் இல்லை, நான் அப்படி சொல்லவில்லை, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சப்பைகட்டு கட்டியதில்லை. யாருடைய மனமும் புண்படும்படியும் பேசியதில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைக் கூட மிக நாசூக்காக நான் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன் என்று சொன்னவர். எந்த படத்தில் ஐயரும், முதலியும், நாயுடுவும், நாய்க்கமாரும் பாம் வைக்கிறார்கள். எல்லா படத்திலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரே செய்வது போல்தான் காண்பிக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் எல்லா படங்களையும் தடை செய்யவேண்டும். கமல் படத்திற்கு மட்டும் என்ன ஓர வஞ்சனை. எத்தனையோ குடும்பங்களில் மற்ற மதத்தை சேர்ந்தவர்களோடு சகோதர பாசத்தோடு பழகுகிறார்கள். அவர்கள் மத்தியில் எத்தனை தர்ம சங்கடத்தை இது ஏற்படுத்தும். குழந்தைகளின் மனதில் இது நஞ்சை விதைக்கும், அவர்கள் நமக்கு வேண்டாதவர்களோ என்று எண்ணவைக்கும். ஒருவேளை கமல் ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும்போதும் அதை ஆதரித்து ஏதாவது அறிக்கை விட்டுவிட்டு பின் வேறு கட்சி வரும்போது அதை ஆதரித்து பேசி இருந்தால், மேடையில் வைத்து எதாவது பேசி விட்டுப் பின் நேரில் சென்று விளக்கம் கொடுத்திருந்தால், அரசியல் காழ்புணர்ச்சி காரணம் என்று கூறலாம். ஒருவேளை இதை எல்லாம் செய்யத் தெரியாததினால் தான் அவருக்கு இந்த கொடுமை போலிருக்கிறது. ஒரு மேடை நிகழ்ச்சியில் கமல் அவர்களை அறிமுகம் செய்யும் பொது திரு விவேக் கூறினார், இது ஒரு குதிரை மிக வேகமாக ஓடும், அப்பப்போ கொஞ்சம் நின்னு மூச்சு வாங்கிக்கொள்ளும் என்று. எனக்கு தெரிந்து குதிரை ஓடினாலும் ஓடாவிட்டாலும் அது குதிரைதான், குதிரை கழுதை ஆகாது. அன்புள்ள கமல் சார் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், சிங்கப்பூர் திரையில் உங்களைக் காணும் ஆவலில் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:49 am

rajasekaran - madurai,இந்தியா
30-ஜன-201311:48:01 IST Report Abuse

இது ஒரு படம் , இதை படமாக பார்க்க வேண்டும் , சமுதாய சீர் கோலிவு என்பது நாட்டின் நடப்பு எதிரானது , இந்த பிரச்சனை அவளவு ஒன்னு பெரிய விஷயமும் இல்லை , நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக நெறைய விஷயம் தினமும் நடக்கிறது , அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முட்டாள் தனமாக எதிர் கொள்வது கேளிக்கை யாக இருக்கின்றது .
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:49 am

Pandiyarasu - malayalapatti-perambalur,இந்தியா
30-ஜன-201311:42:48 IST Report Abuse

ஆட்சி பொறுப்பு ஏற்று அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை விட்டுவிட்டு ஜெயலலிதா அம்மா தேவை இல்லாமல் இதுபோன்ற வழக்குகளை தவிர்க்க வேண்டும். கர்நாடக அரசை எதிர்த்து நீதி மன்றம் போனபோது வரவேற்றோம். சமச்சீர் கல்வி ஏழை குழந்தைகளின் கல்விதரம் மேம்படும் என்று நினைத்த போது அமல்படுத்த விடாமல் நீதி மன்றம் சென்று பின்னடைவை சந்தித்தீர்கள். அதே போல விஸ்வரூபம் சினிமாவை எதிர்க்கும் வுங்களின் போக்கை கண்டிக்கிறோம். தமிழக அரசு நடுநிலைமையோடு எல்லா பிரச்சனைகளையும் அனுகவேண்டும்படி கேட்டுகொள்கிறோம். வீதிதோறும் நீங்கள் திறந்து விட்டிருக்கும் சாராயக்கடையை அடைத்தாலே வன்முறை பாதியாக குறைந்துவிடும். அதை விட்டு வீணாக அடக்குமுறை அரசியல் வீணான வெறுப்பையே வுண்டாக்கும். வுங்களின் ஈகோவை களைந்துவிட்டு பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் காரியம் செய்தால் வுங்களையும் MGR இடத்தில் மக்கள் வைக்கிறோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:50 am

ABGajendraarajan - coimbatore,இந்தியா
30-ஜன-201311:29:21 IST Report Abuse

தனிமனித சுதந்திரம் வேண்டும் தனிமனிதன் தனது கருத்தை சொல்லமுடியவில்லை என்றால் மக்கள் ஆட்சி எதற்கு ? விலைவாசி உயர்வு, மின் தடை என பல மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது இந்த அரசிற்கு இந்த படம் ஒரு பிரச்சனையா ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:50 am

jeyakumar.M - tirunelveli,இந்தியா
30-ஜன-201311:27:08 IST Report Abuse

ஆல் தி பெஸ்ட் KAMAL சார் , இறுதி தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் , இருக்க வேண்டும் . ஜெயலலிதா வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதிலடியை சந்திப்பார் . சாதாரண மக்கள் இத மறக்கலாம் அனால் உங்கள் ரசிகர்கள் நாங்கள் மறக்க மாட்டோம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:51 am

madurai mani bharathi - madurai,இந்தியா
30-ஜன-201311:23:42 IST Report Abuse

மக்களே நேரிடியாக இந்த ஆட்சியின் கெட்ட நோக்கத்தை பார்த்து விட்டார்கள். இந்த சினிமா நடிகன் கமலஹாசனுகே இந்த நிலை என்றால் சாதாரண குடிமக்களின் நிலை என்னவென்று யோசித்து பாருங்கள்..... கலைஞர் ஆட்சியில் சினிமா தொழில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது நிறைய புதிய புதிய வெளி நாட்டு கம்பனிகள் திறக்கப்பட்டன...... இந்தம்மா ஆட்சியில் சினிமாத்துறை முடக்கம் தொழில் துறையில் சருக்கல்..... தனி நபர் பிழைப்பில் மூக்கை நுழைப்பது...... கலாச்சார மற்றும் மத தீவிரவாதத்தை தூண்டிவிடுவது....... ச்சே... ச்சே.... இந்த நாய் வால நிமிர்தாலும் நிமிர்கலமே தவிர இந்தம்மாவின் குணத்தை மாற்ற முடியாது..... கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கு போல இதற்கெல்லாம் விரைவில் வரக்கூடிய MP தேர்தலில் விளைவை அறுவடை செய்யலாம்..... இளைய தளபதி விஜையும், செல்லம்மாவின் இணைவர்களின் ஒருவரான சரத்குமார் போன்றவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?...... ""மதம் மனிதர்களை பிரிக்ககூடியது"" ஒரு சினிமா தியேட்டரில் அந்த கூரையின் கீழ் அனைத்து மக்களும் ஜாதி, மதம், மொழி, இனம் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக ஒருவருக்கு ஒருவர் முகம் தெரியாமல் போனாலும் முகம் மலர்ந்து ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும் போது ""இந்தியாவின் ஒருமை பாட்டை"" அங்கே காணலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:51 am

mario john - ny,யுனைடெட் கிங்டம்
30-ஜன-201311:21:59 IST Report Abuse

ஒரு மனிதன் உயிர் வாழ 3 முக்கியமான அவசியங்கள் : 1 - உணவு (தமிழ் நாட்டில் தண்ணி தட்டுப்பாடு. ஆகவே உணவு பட்டாகுறை ஏற்படும் நிலை), 2 - உறைவிடம் ( மின்சாரம் இல்லை. ஆகவே உறைவிடம் பயனில்லை ) 3- மருந்து மட்டும் சுகாதார சுழ்நில்லை( டென்குவல் மனிதர்கள் சாவு ). தமிழ் நாடு அரசு இவற்றை முதலில் கவனித்து மக்களை காப்பாற்ற வேண்டும். ஆனால் தமிழ் நாடு அரசு மக்களை திசை திருப்பி வோட்டை பெற முயற்சிக்கிறது. நாம் (Yougster ) சிந்தித்து செயல் படும் நேரம் இது, திரவிட கட்ட்சிகளை தூக்கி எறிந்து இனி ஒரு விதி செய்வோம் அல்லது ( தமிழ் இனி மெல்ல சாகும் sorry தமிழன் இனி மெல்ல சாவன் )
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:52 am

மனசாட்சி - gobichettipalayam,இந்தியா
30-ஜன-201311:12:07 IST Report Abuse

தடை நீக்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசு வழக்கறிஞர் திரு.நவநீதகிருஷ்ணனின் வாதத்தில் அவரின் கருத்துக்கள் மிகவும் வழுவிழந்து இருப்பதை நன்றாக உணர முடிந்தது. குறிப்பாக தணிக்கைத் துறையின் மேல் அவர் கூரிய குற்றச்சாட்டுக்கள். இந்த வழக்கைப் பொருத்தவரை நான் அரசுக்கு எதிரான எண்ணத்தில் இருந்தாலும், பொதுவாக பார்க்கும் போது ஒரு அரசு தலைமை வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தை தெளிவாக எடுத்துரைக்க வேணடும். ஆனால் இவர் அப்படி செய்து இருப்பதாக‌ தோன்றவில்லை. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இந்தத் தடையைப் பொருத்தவரை புலிவாலைப் பிடித்த கதையாகவே அரசு இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:53 am

K.Urkavala - tirunelveli,இந்தியா
30-ஜன-201311:09:04 IST Report Abuse

இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்து தன்னுடைய சுய விருப்பு வெறுப்புக்காக, அவசர கோலத்தில், அடாவடித்தனமாக நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டுதான் இருக்கிறது. சமசீர் கல்வி விவகாரத்தில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கதையாக இருக்கிறது. இந்த படத்திற்கு எதிராக புகார்கள் வந்த உடன், கமல் தரப்பு நியாத்தையும் கேட்டு அதன் பின் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அதைவிட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று படத்திற்கு தடை விதித்துவிட்டு, நீதி மன்றம் தடையை நீக்கியபின்னும், காழ்ப்புணர்ச்சியோடு மேல் முறை ஈடுசெய்வதில் என்ன நியாயம் இருக்க முடியும். தணிக்கை துறை சான்றிதழ் அளித்த பின் என் தடை செய்யவேண்டும், இதில் அரசியல் லாபம் மட்டுமே தெரிகிறது. இது ஒரு வகை கட்ட பஞ்சாயத்து தான்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:54 am

Sekar Sekaran - jurong-west,சிங்கப்பூர்
30-ஜன-201311:08:53 IST Report Abuse

ஒரு தனி நபரின் வருமானம் பாதிக்கப்படுகின்றதே என்கிற கவலையை விட..ஓர் சமூகம்..மைனாரிட்டி சமூகத்தின் மீதான அக்கறையைத்தான் இந்த அம்மாவின் அரசு கவலை கொள்கின்றது..நூறு கோடி முதலீடு செய்தவர்..ஏதோ இந்த நாட்டு மக்களுக்காக முதலீடு செய்வதாக நினைத்துகொண்டு கனலை கக்குகின்றனர். நான் கமலின் ரசிகனாக இருந்த போதும்..அந்த சினிமாவை தியேட்டரில் சென்று பார்ப்பதாய் எண்ணி உள்ளேன். ஆனால் அதனை விட..இன்றைய சூழலில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாய் காட்டிக்கொண்டு பணம் சம்பாதிப்போர் அதிகமாய் உள்ளனர்..அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கமலும் செய்துவிட, அதனைத்தான் இந்த அம்மாவின் அரசாங்கம் தடுக்க நினைக்கின்றது.இங்கே வந்து இதுதான் சமயம் என்று அம்மாவை வசைபாடும் கூட்டம்..குவாட்டர்களின் கூடாரத்திலிருந்து வந்தவர்கள் என்று சரியாய் தெரிகின்றது. ஓர் தனி நபரின் வருமானத்தை விட ஓர் சமூகத்தின் அந்தஸ்து மிக முக்கியம்..பணம் பண்ண நினைப்போர் அதனை சிந்திக்க மாட்டார்கள்..அவர்களின் குறிக்கோள் பணம் பணம் மட்டுமே..ஏன் ஓர் சாதியை தாக்குவதாக நினைத்த கூட்டம் எவ்வளவு நடிகர்கள் வீட்டு முன்னர் போராட்டம் நடத்தியிருந்தனர்..இப்போது தாக்கப்படும் சமூகம் அமைதி காப்பது அம்மாவின் நடவடிக்கையால்தானே தவிர கமலின் மீதான பச்சாதாபம் இல்லை. ஏன் இதே கமல் அந்த சமூக தலைவர்களிடம் கோர்ட்டார் சொன்னது போல பேசி..சுமூகமாய் தேவையே இல்லாத காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளிய்டலாமே..பின்னர் அரசாங்கத்தின் வேலை குறையுமே..நூறு கோடி ரூபாய் போட்டவர்...ஆயிரம் கோடிகளை அப்படியே சுளையாய் அமுக்க பார்த்தார் என்று எண்ணலாம்தானே? என்னவோ இந்த நூறு கோடி ரூபாய் மூலம் நாட்டிற்கு மிகப்பெரிய ஆதாயம் வருவது போல் அல்லவா இங்கே கருத்துரைப்போர் அம்மாவை தாக்கி கருத்துரைக்கின்றனர். பல பிரச்சினைகளை சந்திக்கும் வேலையில் தனி நபரின் வருமானம் போகின்றதே என்கிற கவலை எதற்கு? இப்போதெல்லாம் ஓர் வித பேஷன்..ஓர் சமூகத்தை தீவிரவாதிகளாய் காட்டினால் மேலை நாடுகளில் வரவேற்ப்பு அள்ளிகொள்ளும்...அவார்டுக்கு பரிந்துரைக்கப்படும் என்பது போல எண்ணிக்கொண்டு தேவையிலாமல் அந்த சமூகத்தை தாக்குகின்ற போக்கு சரியல்ல. எந்த சமூகத்தில் தீவிரவாதிகள் இல்லை..ஏன் குறிப்பிட்டு அவர்களை நம்மிடமிருந்து பிரிக்க முயல்கின்றனர்? தீவிரவாதிகளை இவர் எடுக்கும் படங்கள் கூட உருவாக்கிவருகின்றன..கமலைபோன்று இனி யாரும் இந்த தமிழகத்தில் இப்படிப்பட்ட படங்களை எடுக்க ஆயிரம் முறை யோசிப்பார்கள்..அதுவும்கூட சரியான நடவடிக்கையே..சமூக பிரச்சினைகள்..எவ்வளவோ இருக்க எதற்க்காக இப்படிப்பட்ட சமூகம் சார்ந்த பிரச்சினை உள்ள படங்களை எடுக்க துணியவேண்டும்..? அம்மாவின் அரசு அணைத்து மக்களுக்கும் பாதுகாப்பும்..போற்றி பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசு..தனி நபருக்கான அரசாங்கம் அல்ல..அது காக்கை கூட்டத்தின் நடுவே அமர்ந்து காக்கைகளின் கரையல்களை கானமாக எண்ணிக்கொண்டு செயல்பட்ட கருணா அரசாங்கத்தோடு போயிற்று...இப்போதெல்லாம்..மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு அம்மாவின் அரசு..பேத்துவோர் பினாத்துவோர்..சினிமாவின் முன்னின்று சென்று அதனை செய்யட்டும்..நூறு கோடி முதலீடு போட்டவரே அமைதி காக்கின்றார்...இந்த அல்லகைகளின் கூச்சல்..அல்போன்சாவையே மிஞ்சுகின்றது.. வியாபாரிக்கும்..மன வேதனை படுவோருக்குமான போராட்டம்..அதிலே மனம் நோகடிக்கப்பட்டவர்கள் பக்கம் தாயுள்ளம்..புரியாதவர்களை பற்றி..அவகளின் கூச்சல்கள் பற்றி கவலையில்லை..இந்த கூச்சல்களை விட ஆயிரம் மடங்கு கூச்சல்களை கேட்டவர்கள்..இதெர்க்கெல்லாம்..??
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 31, 2013 1:55 am

mirudan - guduvaancherri,இந்தியா
30-ஜன-201310:57:39 IST Report Abuse

கமல் ஒரு ஜென்டில்மேன் என்று நிரூபித்து இருக்கிறார், பா.ம.க கட்சியை கருணாநிதி அழித்து விட்டார், திமுகாவை அழிக்க ஜெயலலிதாவிற்கு அல்வா மாதிரி நில அபகரிப்பு வழக்குகள் கிடைத்தது, கிடைத்த வாயுப்புகளை தவற விட்டு இன்று திமுகாவை மறுபடியும் வளர விட்டு கொண்டு இருக்கிறார், சரி போகட்டும். நிர்வாகத்தையாவது சரியாக செய்கிராரா என்றால் அதுவும் இல்லை, ஏதோ குருட்டு அதிசயத்தில் முதல்வராக மூன்றாவது முறையாக வந்தும் தன்னை திருத்தி கொள்ள மறுக்கிறார், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உண்டாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது, திரு. கமலஹாசன் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு - Page 6 Empty Re: விஸ்வரூபம் - கருத்துக்கள், நிகழ்வுகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum