தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கூடங்குளம் வரமா ?சாபமா ?
+8
jeba
சிசு
கலைநிலா
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
mravi
தங்கை கலை
12 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கூடங்குளம் வரமா ?சாபமா ?
கூடங்குளம் வரமா ?சாபமா ?
First topic message reminder :
கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...
கூடங்குளம் அணு யூலை நமக்கு உண்மையாகவே ஒரு வரப் பிரசாதமா இல்லை சாபக் கேடா?
ராமனதான் அய்யா ,கலை நிலா அண்ணா உங்கள் கருத்தை அறிய ஆர்வமாகி யுள்ளேன் ...
தளிர் அண்ணா இதைப் பற்றி நமக்கு நிறைய கட்டுரைகளில் கதைத்துள்ளார் ,,
அனைவரும் தங்கள் கருத்தை கதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ...
நாகை ச.பால முரளி அய்யவிர்க்கும் கவிக்கா அண்ணாவிர்க்கு நன்றி இந்த தலைப்பு உருவாக காரணமாக இருந்ததற்க்கு...
Last edited by கலை on Tue Oct 25, 2011 1:20 pm; edited 2 times in total
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:டமில் ஐயா... உங்களின் ஆலோசனையை செயல்படுத்திவிட்டேன் ஆனால் அது கொஞ்சம் பெரிசா இருக்கு இதனை மாற்றம் செய்ய முடியுமா?
மிக்க நன்றி ஐயா. மீண்டும் தனிமடல் பாருங்கள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
நன்றி டமில் அய்யா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
[You must be registered and logged in to see this image.]டமில் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தினமணியில் வெளியானகொஞ்சம் நீண்ட கட்டுரை..
பொறுமையாக வாசிக்கவும்
------------------------------------------------------
தேவைதானா கூடங்குளம்?
>கே.எஸ். இராதாகிருஷ்ணன்
First Published : 19 Oct 2011 01:18:21 AM IST
-
தமிழக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளத்தில்
நிறுவப்படும் அணுமின் நிலையத்தை நிறுத்த வேண்டும் என்று
கடிதம் எழுதினார்.
தமிழக அமைச்சரவையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்
கூடி அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.
பிரதமரின் தூதராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி
கூடங்குளத்துக்குச் சென்று அங்கு போராடும் மக்களைச் சந்தித்துப்
பேசினார்.
ஐ.நா. கூட்டம் முடிந்து பிரதமர் நாடு திரும்பியபின் போராட்டக்
குழுவினரைச் சந்திப்பார் என அவர் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக
இந்த மாதம் ஏழாம் தேதி பிரதமருடனான சந்திப்பு நடைபெற்றது
.தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில், சில அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் கூடங்குளம் போராட்டக் குழுவினரும், தில்லியில்
பிரதமரைச் சந்தித்தபொழுது, பராமரிப்புப் பணிகள்தான்
கூடங்குளத்தில் நடைபெறுகிறது என்று பிரதமர் கூறி இருப்பது
அதிர்ச்சி அளிக்கிறது.
இன்னும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கப்படாமல்
இருக்கும்பொழுது, அங்கு பராமரிப்புப் பணிக்கு என்ன தேவை என்று
ஏன் யாரும் கேள்வி எழுப்புவதில்லை?
இடிந்தகரையில், இந்தத் திட்டத்தை எதிர்த்து 12 நாள்கள், 127 பேர்
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, தினமும் 10,000-க்கு
மேல் மக்கள் திரளாகப் போராடியதைத் தாற்காலிகமாக
நிறுத்துவதற்குத்தான் மத்திய, மாநில அரசுகள் இப்படிப் பசப்பு
உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனவா?
1985-ல் திட்டமிடப்பட்டு, 1988-ல் ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக
இருந்தபொழுது ராஜீவ் காந்தி கோர்பச்சேவ் ஒப்பந்தத்தில் ரஷியத்
தொழில் நுட்பம் மூலம் அணுமின் உற்பத்திக்குக் கூடங்குளம்
திட்டம் கையெழுத்திடப்பட்டது.
அப்பொழுதே போராட்டங்கள் எழுந்தன. அந்தச் சூழலை அறிந்து
பிரதமர் ராஜீவ் காந்தி தொடக்க விழாவுக்கு வரமுடியாத நிலையும்
ஏற்பட்டது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அமைந்த ஆளுநர் ஆட்சியில் அன்றைய
பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணங்களை பலமுறை
மேற்கொண்டார். இந்தப் பிரச்னை வரவிருக்கும் சட்டப்பேரவைத்
தேர்தலில் காங்கிரஸூக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பயந்து
சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்தது.இந்தப் பிரச்னையில்
உள்ள அபாயங்களை அறியக் குழு அமைத்து முடிவுக்கு வரவேண்டும்
என 1989-ல் அமைந்த திமுக அரசு குறிப்பிட்டது.
இதற்கிடையில் சோவியத் யூனியன் சிதறுண்டு பல்வேறு நாடுகளாகப்
பிரிந்தது. இதனால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.கிடப்பில்
போடப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை, 1996-ல் ஐக்கிய
முன்னணி அரசு அமைந்த பிறகு மீண்டும் உயிர் பெற்றது. 1997-ல்
தேவெ கௌட பிரதமராக இருந்தபொழுது, இரண்டாவது ஒப்பந்தம்
கையொப்பமானது.
அதற்குப் பிறகு பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின.
ரூ.13,500 கோடித் திட்ட மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி
செய்ய திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்பட இருந்தது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கும்பொழுது மக்களின்
கருத்துகளை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது
மட்டுமல்லாமல், இதுகுறித்தான முழு விவரங்களை மக்களுக்குப் பு
ரிதலோடு சொல்லவுமில்லை.
கூடங்குளம் வட்டார மக்களுக்கு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு
கிடைக்குமென்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர்
கிடைக்குமென்றும் உறுதிமொழிகள் கூடங்குளம் அணு உலை
நிர்வாகத்தால், இவ்வட்டார மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.
ஆனால், அது எதுவும் நடைபெறவில்லை.உள்ளூரைச் சேர்ந்த வெறும்
35 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள்
எல்லாம் வடபுலத்தைச் சேர்ந்தவர்கள்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீரும் வரவில்லை.
சமீபத்தில் அப்பகுதி மக்களிடம் பேரிடர் வகுப்புகள் நடத்தப்பட்ட
பொழுது, ஆபத்து வந்தால் மூக்கு, கண், காது ஆகியவற்றை அடைத்துக்
கொள்ளுங்கள். முடிந்தால் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுங்கள்
என சொல்லியபொழுதுதான், அங்குள்ள மக்கள் பீதியுடன் விழித்துக்
கொண்டனர்.
அதன் பின்தான் முச்சந்தி, டீக்கடை பிரசாரமாக இருந்த நிலை மாறி,
போர்க் குணத்தோடு பொதுமக்கள் எழுந்தனர். அதற்குப் பிறகுதான்
கூடங்குளம் பகுதி மக்களின் உரிமைக்குரல் சென்னை கோட்டைக்கும்,
தில்லி செங்கோட்டைக்கும் கேட்கத் தொடங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாவது தலைமுறையின்
தொழில்நுட்பத்தால் இத்திட்டம் நிறுவப்படுவதால் ஆபத்து இல்லை
என்று இந்த அணுமின் நிலைய இயக்குநர் பாலாஜி கூறினாலும்,
அது வெறும் ஒப்புக்குச் சொல்கிற வாதமாகத்தான் உள்ளது.
வேறு சில அணு விஞ்ஞானிகளும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளைச் சொன்னாலும், இயற்கையை
எதுவும் விஞ்ச முடியாது என்பதுதான் நியதி.
கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும்
.சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு
ஏற்பட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னால் 3,50,000 பேர் அங்கிருந்து
வெளியேறினர். 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர் வீச்சால்
லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.
புற்றுநோய் வந்து தொடர்ந்து மரண வாயில்வரை சென்றவர்கள் பலர்.
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைவிட 40 மடங்கு
செர்னோபில் கதிர்வீச்சு அதிகமானது.
செர்னோபில் கதிர் வீச்சு தாக்கம் இன்றும் உக்ரைனில் உள்ளது. அந்த
நாட்டில் பெறப்பட்ட தொழில் நுட்பம் நமது நாட்டுக்கு மட்டும் எப்படிப்
பாதுகாப்பாக இருக்கும்? இந்த நாசகார சக்தியை நாமே நமக்காக
வாங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி
.உலக அளவில் நாடுகள் அணு உலை வேண்டாம்; முடிந்த அளவு
காற்றாலை, சூரிய சக்தி, கடல், குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க
முடியுமா என நினைக்க ஆரம்பித்துவிட்டன.
சுவீடன், பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பல்கேரியா, சுவிட்சர்லாந்து,
கிரீஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அணு உலைகளைத்
தவிர்க்க வேண்டுமென கூறுகின்றன.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அணு உலைத் திட்டத்துக்குத்
தாங்கள் கொண்டிருந்த ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு
வந்துள்ளன.
20 ஆண்டுகள் கட்டமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து,
1000 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலைகளினாலான
மின் உற்பத்தி வெறும் 4 சதவீதம் என்பதற்காக ஜெர்மனி 2022-க்குள்
அனைத்து அணு உலைகளையும் மூட முடிவு செய்துவிட்டது.
அப்படிப்பட்ட ஆபத்தான அணு உலைகளை நாம் மட்டும் அமைக்க
வேண்டுமா?கடந்த 2011 மார்ச்சில் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட
சுனாமியால் யுரேனியம் உருகி, கதிர் வீச்சு ஏற்பட்டு கடல் நீரில் அணு
உலைகள் மூழ்கிய பின்னும் வெப்பத்தின் தாக்கத்தால் மனித இனம்
அழிந்ததை மறக்க முடியுமா?
இன்றுவரை கதிர்வீச்சால் புகுஷிமாவில் மக்கள் தொடர்ந்து பலியாகி
வருகின்றனர் என்ற செய்தி வந்தவண்ணம் உள்ளது. விஞ்ஞானத்தில்
மேம்பட்ட நாடுகளே பாதிக்கப்படும்பொழுது, நமக்கு அபாயகரமான
இந்தச் சூழல் தேவைதானா என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி.
கூடங்குளம் அணு உலையில் 3.5 சுற்றளவு கொண்ட உருளைகளில்
யுரேனியம் அடைக்கப்பட்டு உலைகளின் மத்தியில் வைக்கப்படுகின்றது.
அதிலிருந்து அணு பிளப்பதால் அதிக வெப்பம் வெளிப்படும்.
இந்த வெப்பத்தை நீரில் செலுத்தி, அதிலிருந்து ஜெனரேட்டரில் உள்ள
மின்காந்தக் கம்பிகள் மூலம் மின்சாரம் பெறப்படும். ஓர் அணு
பன்மடங்கு பிளந்துகொண்டே இருப்பதால், யுரேனியம் உள்ள
உலையிலிருந்து அதிகமாக வெப்பம் உருவாகும்.
தற்போது இந்த உலைகளைக் குளிர்விப்பதற்காகத் திரவ உலோகம்
பயன்படுத்தப்படும்.இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய
கழிவுகள் வெளியேறும். யுரேனிய உருளை சுமார் 18 மாதங்களுக்கு
ஒருமுறை மாற்றியாக வேண்டும். இவற்றால் கதிரியக்கம் ஏற்படும்.
அதனால் அந்தக் கழிவுகளை எங்கே விடுவது என்கிற கேள்வி எழுகிறது.
அவற்றை ஒன்று மண்ணில் புதைக்க வேண்டும் அல்லது கடலின்
ஆழத்தில் கொண்டு போய்விட வேண்டும்.
இருப்பினும்கூட, அதன் தாக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து
கொண்டே இருக்கும். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.ஒருபக்கம்
அணு ஆலை வெடித்தாலோ, சேதமானாலோ பெரும் ஆபத்து
உண்டாகும்.
அதேபோல இந்த ஆலை செயல்பட ஆரம்பித்தால் வெளியேறும்
அணுக் கழிவுகளாலும் பெரும் பிரச்னை ஏற்படும்.
முதலில் அணுக் கழிவுகள் ரஷியாவுக்குக் கொண்டு செல்லப்படும்
எனவும், பின்னாளில் அது இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் எனக்
கூறுகின்றனர். இது சாத்தியமானதாகத் தெரியவில்லை.
ஏதோ ஒப்புக்குச் சமாதானம் செய்யக் கூறப்படும் வார்த்தைகளாகத்தான்
தெரிகிறது.
வெளியேறும் 900 டன் கழிவுகளைப் பாதுகாப்பது பெரும்பாடாகும்.
இதை 24,000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால்,
மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். சாதாரண சின்ன அளவு
புளூட்டோனியத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களுக்குப் புற்றுநோய்
மட்டுமல்லாமல், வேறு ஆபத்துகளும் ஏற்படும் என்கிறார்கள்.
இந்தக் கழிவுகளை பலமான கான்கிரீட் தொட்டிகள் அமைத்து பூமிக்குக்
கீழே புதைத்தாலும் கதிரியக்கம் தணியும் என்று உறுதியாகச் சொல்ல
முடியாது. ஒருபக்கம் அணு உலையால் பயங்கர விபத்து ஏற்படுவதற்கு
ஏராளமான வாய்ப்புகள்; மறுபக்கத்தில் அணு உலை செயல்பட்டு
அதனால் வரும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள்.இப்படிப் பிரச்னைகளை
நாம் வலியப்போய் விலைகொடுத்து வாங்கத்தான் வேண்டுமா என்பதற்குச்
சரியான பதில் கிடையாது
நெல்லை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை
ஓரத்திலிருந்து சுரண்டை வரை நில அதிர்வுகளும், பூமிக்குக் கீழ் வெப்பப்
பாறைக் குழம்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள்
உள்ளன.
அவ்வாறு நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூடங்குளத்துக்கும் சேர்ந்துதான்
அந்தப் பாதிப்பு வரும்.நான்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மனும்,
மகேந்திரகிரியில் உள்ள அணு மின் சம்பந்தமான கேந்திரமும் அருகில்
உள்ளன.இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் அதனால் கூடங்குளத்தில் நிறுவப்படும்
அணுமின் நிலையம் புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல பாதிக்கப்படும் அபாயம்
நிறையவே உள்ளது.
அதன் தொடர் பாதிப்பு, வடக்கே மதுரை, தெற்கே இலங்கை, மேற்கே
திருவனந்தபுரம், மேற்குத் தொடர்ச்சி மலை என மீள முடியாத
சோகத்துக்கு நாம் ஆள்பட நேரிடும். போபாலில் யூனியன் கார்பைடு
நிறுவனத்தில் நடந்த நச்சுவாயுக் கசிவிலிருந்து இன்றுவரை நாம் மீள
இயலவில்லை என்பதை நாம் எப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியும்?
தொலைவிலிருந்து அணு உலை குறித்து ஆயிரம் சமாதானங்கள்
சொல்லலாம். கூடங்குளத்தில் நடைபெற்ற சாதாரண சோதனை
ஓட்டத்துக்கே அந்த வட்டார மக்கள் பயந்தனர். குழந்தைகள் கதறி
அழுதனர். இப்படி தினமும் சகிக்க முடியாத சத்தம் கேட்டால் எப்படி
மக்கள் கூடங்குளம் பகுதியில் வாழ முடியும்?
மேற்கு வங்கத்தில் ரஷிய நாட்டின் அணு மின் நிலையம் வருவதை
மம்தா பானர்ஜி நிறுத்திவிட்டார்.
கேரளத்தில் மக்கள் எழுச்சியால் அணு மின் நிலையம் வருவது
தடைப்பட்டது.
ஆந்திரத்திலும், மகாராஷ்டிரத்திலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள
எழுந்தவண்ணம் உள்ளன. அவ்வாறு இருக்கும்பொழுது நாம் மட்டும்
கூடங்குளத்துக்கு ஆமாம் சாமி போடுவது சரிதானா?
அதெல்லாம் போகட்டும். தங்களது மாநிலத்தில் அணுமின் நிலையம்
அமைந்து அதன் பாதிப்பை எதிர்கொள்ளக் கேரளமோ, கர்நாடகமோ,
ஆந்திரமோ தயாராக இல்லை.
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கத் தமிழகம்
ஏற்றுக்கொண்டு, தென் மாவட்ட மக்களின் நல்வாழ்வை அந்த அணு
உலைகளில் ஏற்படும் பாதிப்பு பல தலைமுறைகளைப் பாதிக்கும்
ஆபத்தை வலிந்து ஏற்றுக் கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம்.
அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் முழுமையாகத் தமிழகத்துக்கு
மட்டுமானதாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை.
தென்னக மாநிலங்களுடன் நாம் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.அதாவது,
கூடங்குளத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும். பாதிப்பு தமிழகத்துக்கும்,
தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கும் மட்டும். எப்படி இருக்கிறது கதை?
பொறுமையாக வாசிக்கவும்
------------------------------------------------------
தேவைதானா கூடங்குளம்?
>கே.எஸ். இராதாகிருஷ்ணன்
First Published : 19 Oct 2011 01:18:21 AM IST
-
தமிழக முதல்வர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளத்தில்
நிறுவப்படும் அணுமின் நிலையத்தை நிறுத்த வேண்டும் என்று
கடிதம் எழுதினார்.
தமிழக அமைச்சரவையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்
கூடி அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது.
பிரதமரின் தூதராக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி
கூடங்குளத்துக்குச் சென்று அங்கு போராடும் மக்களைச் சந்தித்துப்
பேசினார்.
ஐ.நா. கூட்டம் முடிந்து பிரதமர் நாடு திரும்பியபின் போராட்டக்
குழுவினரைச் சந்திப்பார் என அவர் உறுதியளித்ததன் தொடர்ச்சியாக
இந்த மாதம் ஏழாம் தேதி பிரதமருடனான சந்திப்பு நடைபெற்றது
.தமிழக அமைச்சர் ஒருவர் தலைமையில், சில அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் கூடங்குளம் போராட்டக் குழுவினரும், தில்லியில்
பிரதமரைச் சந்தித்தபொழுது, பராமரிப்புப் பணிகள்தான்
கூடங்குளத்தில் நடைபெறுகிறது என்று பிரதமர் கூறி இருப்பது
அதிர்ச்சி அளிக்கிறது.
இன்னும் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் தொடங்கப்படாமல்
இருக்கும்பொழுது, அங்கு பராமரிப்புப் பணிக்கு என்ன தேவை என்று
ஏன் யாரும் கேள்வி எழுப்புவதில்லை?
இடிந்தகரையில், இந்தத் திட்டத்தை எதிர்த்து 12 நாள்கள், 127 பேர்
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது, தினமும் 10,000-க்கு
மேல் மக்கள் திரளாகப் போராடியதைத் தாற்காலிகமாக
நிறுத்துவதற்குத்தான் மத்திய, மாநில அரசுகள் இப்படிப் பசப்பு
உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனவா?
1985-ல் திட்டமிடப்பட்டு, 1988-ல் ஒன்றுபட்ட சோவியத் யூனியனாக
இருந்தபொழுது ராஜீவ் காந்தி கோர்பச்சேவ் ஒப்பந்தத்தில் ரஷியத்
தொழில் நுட்பம் மூலம் அணுமின் உற்பத்திக்குக் கூடங்குளம்
திட்டம் கையெழுத்திடப்பட்டது.
அப்பொழுதே போராட்டங்கள் எழுந்தன. அந்தச் சூழலை அறிந்து
பிரதமர் ராஜீவ் காந்தி தொடக்க விழாவுக்கு வரமுடியாத நிலையும்
ஏற்பட்டது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் அமைந்த ஆளுநர் ஆட்சியில் அன்றைய
பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணங்களை பலமுறை
மேற்கொண்டார். இந்தப் பிரச்னை வரவிருக்கும் சட்டப்பேரவைத்
தேர்தலில் காங்கிரஸூக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பயந்து
சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்தது.இந்தப் பிரச்னையில்
உள்ள அபாயங்களை அறியக் குழு அமைத்து முடிவுக்கு வரவேண்டும்
என 1989-ல் அமைந்த திமுக அரசு குறிப்பிட்டது.
இதற்கிடையில் சோவியத் யூனியன் சிதறுண்டு பல்வேறு நாடுகளாகப்
பிரிந்தது. இதனால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.கிடப்பில்
போடப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை, 1996-ல் ஐக்கிய
முன்னணி அரசு அமைந்த பிறகு மீண்டும் உயிர் பெற்றது. 1997-ல்
தேவெ கௌட பிரதமராக இருந்தபொழுது, இரண்டாவது ஒப்பந்தம்
கையொப்பமானது.
அதற்குப் பிறகு பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின.
ரூ.13,500 கோடித் திட்ட மதிப்பீட்டில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி
செய்ய திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் செயல்பட இருந்தது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்கும்பொழுது மக்களின்
கருத்துகளை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பது
மட்டுமல்லாமல், இதுகுறித்தான முழு விவரங்களை மக்களுக்குப் பு
ரிதலோடு சொல்லவுமில்லை.
கூடங்குளம் வட்டார மக்களுக்கு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு
கிடைக்குமென்றும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர்
கிடைக்குமென்றும் உறுதிமொழிகள் கூடங்குளம் அணு உலை
நிர்வாகத்தால், இவ்வட்டார மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.
ஆனால், அது எதுவும் நடைபெறவில்லை.உள்ளூரைச் சேர்ந்த வெறும்
35 பேருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்கள்
எல்லாம் வடபுலத்தைச் சேர்ந்தவர்கள்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீரும் வரவில்லை.
சமீபத்தில் அப்பகுதி மக்களிடம் பேரிடர் வகுப்புகள் நடத்தப்பட்ட
பொழுது, ஆபத்து வந்தால் மூக்கு, கண், காது ஆகியவற்றை அடைத்துக்
கொள்ளுங்கள். முடிந்தால் அவ்விடத்திலிருந்து வெளியேறி விடுங்கள்
என சொல்லியபொழுதுதான், அங்குள்ள மக்கள் பீதியுடன் விழித்துக்
கொண்டனர்.
அதன் பின்தான் முச்சந்தி, டீக்கடை பிரசாரமாக இருந்த நிலை மாறி,
போர்க் குணத்தோடு பொதுமக்கள் எழுந்தனர். அதற்குப் பிறகுதான்
கூடங்குளம் பகுதி மக்களின் உரிமைக்குரல் சென்னை கோட்டைக்கும்,
தில்லி செங்கோட்டைக்கும் கேட்கத் தொடங்கியது.
கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாவது தலைமுறையின்
தொழில்நுட்பத்தால் இத்திட்டம் நிறுவப்படுவதால் ஆபத்து இல்லை
என்று இந்த அணுமின் நிலைய இயக்குநர் பாலாஜி கூறினாலும்,
அது வெறும் ஒப்புக்குச் சொல்கிற வாதமாகத்தான் உள்ளது.
வேறு சில அணு விஞ்ஞானிகளும் இதே கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளைச் சொன்னாலும், இயற்கையை
எதுவும் விஞ்ச முடியாது என்பதுதான் நியதி.
கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும்
.சோவியத் நாட்டில் உக்ரைனின் செர்னோபிலில் அணு உலை வெடிப்பு
ஏற்பட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னால் 3,50,000 பேர் அங்கிருந்து
வெளியேறினர். 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கதிர் வீச்சால்
லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.
புற்றுநோய் வந்து தொடர்ந்து மரண வாயில்வரை சென்றவர்கள் பலர்.
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைவிட 40 மடங்கு
செர்னோபில் கதிர்வீச்சு அதிகமானது.
செர்னோபில் கதிர் வீச்சு தாக்கம் இன்றும் உக்ரைனில் உள்ளது. அந்த
நாட்டில் பெறப்பட்ட தொழில் நுட்பம் நமது நாட்டுக்கு மட்டும் எப்படிப்
பாதுகாப்பாக இருக்கும்? இந்த நாசகார சக்தியை நாமே நமக்காக
வாங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி
.உலக அளவில் நாடுகள் அணு உலை வேண்டாம்; முடிந்த அளவு
காற்றாலை, சூரிய சக்தி, கடல், குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க
முடியுமா என நினைக்க ஆரம்பித்துவிட்டன.
சுவீடன், பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பல்கேரியா, சுவிட்சர்லாந்து,
கிரீஸ், ஸ்லோவேனியா போன்ற நாடுகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் அணு உலைகளைத்
தவிர்க்க வேண்டுமென கூறுகின்றன.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அணு உலைத் திட்டத்துக்குத்
தாங்கள் கொண்டிருந்த ஆதரவு நிலையை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு
வந்துள்ளன.
20 ஆண்டுகள் கட்டமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து,
1000 ஆண்டுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அணு உலைகளினாலான
மின் உற்பத்தி வெறும் 4 சதவீதம் என்பதற்காக ஜெர்மனி 2022-க்குள்
அனைத்து அணு உலைகளையும் மூட முடிவு செய்துவிட்டது.
அப்படிப்பட்ட ஆபத்தான அணு உலைகளை நாம் மட்டும் அமைக்க
வேண்டுமா?கடந்த 2011 மார்ச்சில் ஜப்பானின் புகுஷிமாவில் ஏற்பட்ட
சுனாமியால் யுரேனியம் உருகி, கதிர் வீச்சு ஏற்பட்டு கடல் நீரில் அணு
உலைகள் மூழ்கிய பின்னும் வெப்பத்தின் தாக்கத்தால் மனித இனம்
அழிந்ததை மறக்க முடியுமா?
இன்றுவரை கதிர்வீச்சால் புகுஷிமாவில் மக்கள் தொடர்ந்து பலியாகி
வருகின்றனர் என்ற செய்தி வந்தவண்ணம் உள்ளது. விஞ்ஞானத்தில்
மேம்பட்ட நாடுகளே பாதிக்கப்படும்பொழுது, நமக்கு அபாயகரமான
இந்தச் சூழல் தேவைதானா என்பதுதான் இன்றைக்குள்ள கேள்வி.
கூடங்குளம் அணு உலையில் 3.5 சுற்றளவு கொண்ட உருளைகளில்
யுரேனியம் அடைக்கப்பட்டு உலைகளின் மத்தியில் வைக்கப்படுகின்றது.
அதிலிருந்து அணு பிளப்பதால் அதிக வெப்பம் வெளிப்படும்.
இந்த வெப்பத்தை நீரில் செலுத்தி, அதிலிருந்து ஜெனரேட்டரில் உள்ள
மின்காந்தக் கம்பிகள் மூலம் மின்சாரம் பெறப்படும். ஓர் அணு
பன்மடங்கு பிளந்துகொண்டே இருப்பதால், யுரேனியம் உள்ள
உலையிலிருந்து அதிகமாக வெப்பம் உருவாகும்.
தற்போது இந்த உலைகளைக் குளிர்விப்பதற்காகத் திரவ உலோகம்
பயன்படுத்தப்படும்.இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய
கழிவுகள் வெளியேறும். யுரேனிய உருளை சுமார் 18 மாதங்களுக்கு
ஒருமுறை மாற்றியாக வேண்டும். இவற்றால் கதிரியக்கம் ஏற்படும்.
அதனால் அந்தக் கழிவுகளை எங்கே விடுவது என்கிற கேள்வி எழுகிறது.
அவற்றை ஒன்று மண்ணில் புதைக்க வேண்டும் அல்லது கடலின்
ஆழத்தில் கொண்டு போய்விட வேண்டும்.
இருப்பினும்கூட, அதன் தாக்கம் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து
கொண்டே இருக்கும். அதனால் பெரும் பாதிப்பு ஏற்படும்.ஒருபக்கம்
அணு ஆலை வெடித்தாலோ, சேதமானாலோ பெரும் ஆபத்து
உண்டாகும்.
அதேபோல இந்த ஆலை செயல்பட ஆரம்பித்தால் வெளியேறும்
அணுக் கழிவுகளாலும் பெரும் பிரச்னை ஏற்படும்.
முதலில் அணுக் கழிவுகள் ரஷியாவுக்குக் கொண்டு செல்லப்படும்
எனவும், பின்னாளில் அது இங்கேயே மறுசுழற்சி செய்யப்படும் எனக்
கூறுகின்றனர். இது சாத்தியமானதாகத் தெரியவில்லை.
ஏதோ ஒப்புக்குச் சமாதானம் செய்யக் கூறப்படும் வார்த்தைகளாகத்தான்
தெரிகிறது.
வெளியேறும் 900 டன் கழிவுகளைப் பாதுகாப்பது பெரும்பாடாகும்.
இதை 24,000 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால்,
மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். சாதாரண சின்ன அளவு
புளூட்டோனியத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களுக்குப் புற்றுநோய்
மட்டுமல்லாமல், வேறு ஆபத்துகளும் ஏற்படும் என்கிறார்கள்.
இந்தக் கழிவுகளை பலமான கான்கிரீட் தொட்டிகள் அமைத்து பூமிக்குக்
கீழே புதைத்தாலும் கதிரியக்கம் தணியும் என்று உறுதியாகச் சொல்ல
முடியாது. ஒருபக்கம் அணு உலையால் பயங்கர விபத்து ஏற்படுவதற்கு
ஏராளமான வாய்ப்புகள்; மறுபக்கத்தில் அணு உலை செயல்பட்டு
அதனால் வரும் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள்.இப்படிப் பிரச்னைகளை
நாம் வலியப்போய் விலைகொடுத்து வாங்கத்தான் வேண்டுமா என்பதற்குச்
சரியான பதில் கிடையாது
நெல்லை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை
ஓரத்திலிருந்து சுரண்டை வரை நில அதிர்வுகளும், பூமிக்குக் கீழ் வெப்பப்
பாறைக் குழம்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள்
உள்ளன.
அவ்வாறு நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூடங்குளத்துக்கும் சேர்ந்துதான்
அந்தப் பாதிப்பு வரும்.நான்குநேரியில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மனும்,
மகேந்திரகிரியில் உள்ள அணு மின் சம்பந்தமான கேந்திரமும் அருகில்
உள்ளன.இயற்கை பாதிப்பு ஏற்பட்டால் அதனால் கூடங்குளத்தில் நிறுவப்படும்
அணுமின் நிலையம் புகுஷிமாவில் ஏற்பட்டதுபோல பாதிக்கப்படும் அபாயம்
நிறையவே உள்ளது.
அதன் தொடர் பாதிப்பு, வடக்கே மதுரை, தெற்கே இலங்கை, மேற்கே
திருவனந்தபுரம், மேற்குத் தொடர்ச்சி மலை என மீள முடியாத
சோகத்துக்கு நாம் ஆள்பட நேரிடும். போபாலில் யூனியன் கார்பைடு
நிறுவனத்தில் நடந்த நச்சுவாயுக் கசிவிலிருந்து இன்றுவரை நாம் மீள
இயலவில்லை என்பதை நாம் எப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியும்?
தொலைவிலிருந்து அணு உலை குறித்து ஆயிரம் சமாதானங்கள்
சொல்லலாம். கூடங்குளத்தில் நடைபெற்ற சாதாரண சோதனை
ஓட்டத்துக்கே அந்த வட்டார மக்கள் பயந்தனர். குழந்தைகள் கதறி
அழுதனர். இப்படி தினமும் சகிக்க முடியாத சத்தம் கேட்டால் எப்படி
மக்கள் கூடங்குளம் பகுதியில் வாழ முடியும்?
மேற்கு வங்கத்தில் ரஷிய நாட்டின் அணு மின் நிலையம் வருவதை
மம்தா பானர்ஜி நிறுத்திவிட்டார்.
கேரளத்தில் மக்கள் எழுச்சியால் அணு மின் நிலையம் வருவது
தடைப்பட்டது.
ஆந்திரத்திலும், மகாராஷ்டிரத்திலும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகள
எழுந்தவண்ணம் உள்ளன. அவ்வாறு இருக்கும்பொழுது நாம் மட்டும்
கூடங்குளத்துக்கு ஆமாம் சாமி போடுவது சரிதானா?
அதெல்லாம் போகட்டும். தங்களது மாநிலத்தில் அணுமின் நிலையம்
அமைந்து அதன் பாதிப்பை எதிர்கொள்ளக் கேரளமோ, கர்நாடகமோ,
ஆந்திரமோ தயாராக இல்லை.
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கத் தமிழகம்
ஏற்றுக்கொண்டு, தென் மாவட்ட மக்களின் நல்வாழ்வை அந்த அணு
உலைகளில் ஏற்படும் பாதிப்பு பல தலைமுறைகளைப் பாதிக்கும்
ஆபத்தை வலிந்து ஏற்றுக் கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம்.
அதிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் முழுமையாகத் தமிழகத்துக்கு
மட்டுமானதாக இருக்குமா என்றால் அதுவும் இல்லை.
தென்னக மாநிலங்களுடன் நாம் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.அதாவது,
கூடங்குளத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும். பாதிப்பு தமிழகத்துக்கும்,
தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கும் மட்டும். எப்படி இருக்கிறது கதை?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
நன்றி அய்யா உங்கள் பகிர்வுக்கு ....
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் கூடங்குளம் அணு உலை அந்த இடத்தில் ஆரம்பித்து விட்டார்களா அதாவது திறப்பு விழா மட்டும் பாக்கியா ?
இல்லை எனில் இனிமேல் தான் அந்த ப்ராஜக்ட் அங்கு வரப் போகிறதா ?
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் கூடங்குளம் அணு உலை அந்த இடத்தில் ஆரம்பித்து விட்டார்களா அதாவது திறப்பு விழா மட்டும் பாக்கியா ?
இல்லை எனில் இனிமேல் தான் அந்த ப்ராஜக்ட் அங்கு வரப் போகிறதா ?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கூடங்குளத்தின் தற்போது நிலை என்ன ?
சொல்லுங்களேன் உண்மையாவை தைரியமல் கேர்க்கிறேன்
சொல்லுங்களேன் உண்மையாவை தைரியமல் கேர்க்கிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கூடங்குளம் அணுமின் திட்டம் குறித்த மக்களின்
அச்சத்தைப் போக்குவதற்காக 15 பேர் கொண்ட
வல்லுனர் குழுவை அமைத்து மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
-
இந்த குழு அறிக்கையை எதிர்நோக்கலாம்...!!
-
இதில் அட்மின் யூஜின் ஊர்க்காரரும் இருக்கிறார் என
கருதுகிறேன்
அச்சத்தைப் போக்குவதற்காக 15 பேர் கொண்ட
வல்லுனர் குழுவை அமைத்து மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
-
இந்த குழு அறிக்கையை எதிர்நோக்கலாம்...!!
-
இதில் அட்மின் யூஜின் ஊர்க்காரரும் இருக்கிறார் என
கருதுகிறேன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
வல்லுனர் குழுவின் பெயர் விபரம் தெரிய வாய்ப்புள்ளதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
ராமநாதன் அய்யவிர்க்கு நன்றி ,,,
யுஜின் அண்ணா கூடங்குளம் திட்டம் எந்த அளவுக்கு உள்ளது அண்ணா ?
கட்டுமானப் பணிகள் ,,ஆள் எடுப்பு அதாவது உங்கள் ஊருக்கு ஆர்கில் உள்ளதால் கொஞ்சம் சொல்லுங்களேன் ,,,
கட்ட்மானப் பணிகள் முடிவடைந்து vittathaa
யுஜின் அண்ணா கூடங்குளம் திட்டம் எந்த அளவுக்கு உள்ளது அண்ணா ?
கட்டுமானப் பணிகள் ,,ஆள் எடுப்பு அதாவது உங்கள் ஊருக்கு ஆர்கில் உள்ளதால் கொஞ்சம் சொல்லுங்களேன் ,,,
கட்ட்மானப் பணிகள் முடிவடைந்து vittathaa
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தளிர் அண்ணா உங்களது கருத்தையும் கதையுங்களேன் ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
மன்னிகவும் கலை, அது திருநெல்வேலி மாவட்டத்தில் தான் உள்ளது எங்களது பக்கத்து மாவட்டம், நான் இருப்பது தக்கலை, சரியான தகவல் கிடக்கவில்லை, விசாரித்து எழுதுறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
நன்றி யுஜின் அண்ணா ,,,,
அண்ணா விசாரித்து எழுதுவீர்கள் என நம்புகிறேன் ,,,
வாக்களிக்கும் மலர்களும் தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து .....
அண்ணா விசாரித்து எழுதுவீர்கள் என நம்புகிறேன் ,,,
வாக்களிக்கும் மலர்களும் தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கவிக்கா என்று வாரீங்க நாம நேரில் போய் பார்க்கலாமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:அண்ணா நீங்கள் உங்கள் கருத்தை பதிஉங்கொள் ,,,நான் ஏற்கனவை எனது கருத்தை கதைத்து விட்டேன்தமிழன் wrote:கலை wrote:டமில் அண்ணா தங்களது கருத்து எண்ணவூ
தங்கள் கருத்து என்னவோ?
எங்கே, எப்போது உங்கள் கருத்தை சொன்னீர்கள் அக்கா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தங்களது கருத்து என்ன டமில் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:தங்களது கருத்து என்ன டமில் அண்ணா
தங்களது கருத்து என்ன என்று சொல்லுங்கள் அக்கா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
டமில் அண்ணா கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவமும் இல்லை வயதும் பத்தாது அண்ணா ...
தங்களது கருத்தை கதையுங்களே டமில் அண்ணா
தங்களது கருத்தை கதையுங்களே டமில் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
கலை wrote:டமில் அண்ணா கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவமும் இல்லை வயதும் பத்தாது அண்ணா ...
தங்களது கருத்தை கதையுங்களே டமில் அண்ணா
என்னை விட பெரியவர்களான தங்களுக்கே வயது பத்தாது எனில் நான் மட்டும் எப்படி சொல்ல முடியும் அக்கா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
டமில் அண்ணா அப்புடிலாம் சொல்லப் புடாது ... தோட்டத்தின் அனைத்து மலர்களின் கருத்தையும் நான் எதிர்ப் பார்க்கிறேன் ,,,தமிழன் wrote:கலை wrote:டமில் அண்ணா கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவமும் இல்லை வயதும் பத்தாது அண்ணா ...
தங்களது கருத்தை கதையுங்களே டமில் அண்ணா
என்னை விட பெரியவர்களான தங்களுக்கே வயது பத்தாது எனில் நான் மட்டும் எப்படி சொல்ல முடியும் அக்கா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
வாக்களித்த மலர்களும் ,வாக்களிக்கும் மலர்களும் தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
தளிர் அண்ணா உங்கள் கருத்து என்ன அறிய ஆர்வமாக இருக்கிறேன் ...
கருத்தினை பதிவு செய்யுங்களேன்
கருத்தினை பதிவு செய்யுங்களேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அணு உலை குறித்து ...
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
------------------------
அறிவியலின்
ஆபத்து
அணுஉலை
அரிசி உலை உயிர் வளர்க்கும்
அணு உலை உயிர்களைப்
பறிக்கும்
அதனைத் தொலை
உயிருக்கு உலை
அணு உலை
நன்மையை விட
தீமையே அதிகம்
அணு உலை
கூட்டமாகக் கொல்லும்
கொடிய வில்லன்
கூடங்குளம் அணு உலை
பற்றி எரிந்தால்
அணைக்கவே முடியாது
அணுஉலை
கொள்ளியால்
தலைச் சொரிதல்
அணுஉலை
ஆதாயத்தை விட
ஆபத்தும் அழிவும் அதிகம்
அணுஉலை
உயிர் இனங்களை மட்டுமல்ல
புல் பூண்டுகளை அழிக்கும்
அணுஉலை
அயல்நாடுகளில்
அங்கீகரிக்கவில்லை
அணுஉலை
அக்கம் பக்கம்
அழிவு நிச்சியம்
அணுஉலை
வேண்டாம் வேண்டாம்
கூடங்குளம்
ரத்தக்குளமாகிட
உலை வைக்காமல்
உண்ணாவிரதம்
அணுஉலை மூட
ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு வேண்டாம்
மூடுக அணுஉலை
--
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
------------------------
அறிவியலின்
ஆபத்து
அணுஉலை
அரிசி உலை உயிர் வளர்க்கும்
அணு உலை உயிர்களைப்
பறிக்கும்
அதனைத் தொலை
உயிருக்கு உலை
அணு உலை
நன்மையை விட
தீமையே அதிகம்
அணு உலை
கூட்டமாகக் கொல்லும்
கொடிய வில்லன்
கூடங்குளம் அணு உலை
பற்றி எரிந்தால்
அணைக்கவே முடியாது
அணுஉலை
கொள்ளியால்
தலைச் சொரிதல்
அணுஉலை
ஆதாயத்தை விட
ஆபத்தும் அழிவும் அதிகம்
அணுஉலை
உயிர் இனங்களை மட்டுமல்ல
புல் பூண்டுகளை அழிக்கும்
அணுஉலை
அயல்நாடுகளில்
அங்கீகரிக்கவில்லை
அணுஉலை
அக்கம் பக்கம்
அழிவு நிச்சியம்
அணுஉலை
வேண்டாம் வேண்டாம்
கூடங்குளம்
ரத்தக்குளமாகிட
உலை வைக்காமல்
உண்ணாவிரதம்
அணுஉலை மூட
ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு வேண்டாம்
மூடுக அணுஉலை
--
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அய்யா அப்படியேனில் நமது நாட்டில் உள்ள அணு உலைகள் அனைத்தையும் மூடி விட வேண்டும் அல்லவா ?
கூடங்குளம் மக்களுக்கு ஒரு நியாயம் கல்பாக்கத்துக்கும் ,மும்பைக்கும் ஒரு நியாயமா ?
அனைத்தையும் மூடினால் நம் நிலை என்னவாகும் ?
கூடங்குளம் மக்களுக்கு ஒரு நியாயம் கல்பாக்கத்துக்கும் ,மும்பைக்கும் ஒரு நியாயமா ?
அனைத்தையும் மூடினால் நம் நிலை என்னவாகும் ?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
நாட்டின் மின் உற்பத்தியில் அணு உலை மூலம்
பெறப்படுவது 3 விழுக்காடு மட்டுமே...
-
அதனால் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை..!
பெறப்படுவது 3 விழுக்காடு மட்டுமே...
-
அதனால் பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை..!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கூடங்குளம் வரமா ?சாபமா ?
அணு உலை மூலம்
பெறப்படுவது 3 விழுக்காடு மட்டுமே...
உண்மை அய்யா ....
அய்யா இன்னும் சில வருடங்களுக்குப் பின் நமது மின்சாரத் தேவை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது ,,,,ஏன் இப்போது கூட நாம் மின்சாரப் பிரச்ச்நயில் தான் இருக்கிறோம் ,,,,,
அய்யா ஏற்கனவை செயல் பட்டு கொண்டிருக்கும் அணு ய்லையின் பயநீட்டு திறன் 500 க்கும் குறைவான மெகா வாட்ச் அல்லவா அய்யா
இப்போ நம்ம கூடங்குளம் திட்டம் 1000 மெகா வாட்ச் இல்லயா ?
இதனால் 3% என்பது கணிசமாக யுயர்ந்து நம்து மீந்தஎவையை பூர்த்தி செயீஉம் எனக் கருதுகிறேன்
பெறப்படுவது 3 விழுக்காடு மட்டுமே...
உண்மை அய்யா ....
அய்யா இன்னும் சில வருடங்களுக்குப் பின் நமது மின்சாரத் தேவை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது ,,,,ஏன் இப்போது கூட நாம் மின்சாரப் பிரச்ச்நயில் தான் இருக்கிறோம் ,,,,,
அய்யா ஏற்கனவை செயல் பட்டு கொண்டிருக்கும் அணு ய்லையின் பயநீட்டு திறன் 500 க்கும் குறைவான மெகா வாட்ச் அல்லவா அய்யா
இப்போ நம்ம கூடங்குளம் திட்டம் 1000 மெகா வாட்ச் இல்லயா ?
இதனால் 3% என்பது கணிசமாக யுயர்ந்து நம்து மீந்தஎவையை பூர்த்தி செயீஉம் எனக் கருதுகிறேன்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?
» வரமா..?
» கூடங்குளம் வேண்டுமா வேண்டாமா ?
» விரக தாபமா... இறையின் சாபமா...?
» கூடங்குளம் போராட்டம்
» வரமா..?
» கூடங்குளம் வேண்டுமா வேண்டாமா ?
» விரக தாபமா... இறையின் சாபமா...?
» கூடங்குளம் போராட்டம்
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|